kuthoo

மாநகராட்சி யள் அழகிரி!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மாநகராட்சியின் ஐம்பது கடைகள் உள்ளன. தலா 10 ஆயிரத்து 500 ரூபாய் வாடகை வசூலித்துக்கொண்டிருந்தார்கள். கடந்த மாதம் வாடகையை 13 ஆயிரத்து 500 ஆக உயர்த்திவிட்டார்கள்.

இவற்றில் மூன்று கடைகளில் மு.க.அழகிரியின் ராயல் வீடியோ கேஸட் மற்றும் ஜவுளிக்கடை இயங்கியது. இப்போது மூன்று கடைகளும் தயா ரத்த பரிசோதனைக்கூடமாக மாறியுள்ளன. வாடகை உயர்வை எதிர்த்து மு.க.அழகிரி மட்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Advertisment

மு.க.அழகிரியின் தீவிர விசுவாசி ஒருவர் நம்மிடம், ""கலெக்டர் அலுவலகம் 30 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. அண்ணனைச் சீண்டிப் பார்க்கிறார்கள். அண்ணன் அனுமதித்தால், மாநகராட்சியில் யாரெல்லாம் பாக்கி வைத்திருக்கிறார்களோ, லிஸ்ட்டை எடுத்து போஸ்டர் அடித்து மதுரை முழுக்க ஒட்டுவோம்'' என்கிறார்.

-ஷாகுல்

அமைச்சர் யள் ஆணையர்!

Advertisment

கோவையில் எதிர்பார்த்ததைப்போல, ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்ததால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மனநிறைவு. அதைப் பார்த்த கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவையை விடச் சிறப்பாக திருப்பூரில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்தார்.

திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில கம்பெனிகளிடம் "ஸ்பான்சர்' பிடிக்கும் வேலை ஒருபுறம் வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. மற்றொருபுறம் திருப்பூர் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் உள்ள நான்கு உதவி ஆணையர்களிடமும் கணிசமாக வசூலிக்க வேண்டுமென்ற உத்தரவு அமைச்சர் தரப்பிலிருந்து வந்ததாம். அது மட்டுமின்றி மாநகராட்சி ஆணையர் அசோகனுக்கும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் அமைச்சர் ஆட்கள்.

"யோவ்... கால்நடைத் துறைக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்?'' இது ஆணையரின் கேள்வி.

""ஒன்பது வருடமா ஒரே இடத்தில் இருந்து கோடிகோடியா குவித்தது நீர்தானே?'' இது ஜல்லிக் கட்டுத்துறை. அமைச்சரும் ஆணையரும் வாடிவாசலில் இறங்கத் தயாராகிவிட்டார்களாம்.

-அருள்குமார்

ஸ்கூல் Vs பெற்றோர்.!

வேலூர், வள்ளலார் பகுதியில் இயங்குகிறது சாந்திநிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி. சொந்தமாக விளையாட்டுத் திடல் இல்லாத இப்பள்ளியின் விளையாட்டு விழா, பாகாயம் சி.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.

பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வுக்காக... பலூன்களில் "ஹீலியம் க்யாஸ்' நிரப்பிக்கொண்டிருந்தார் கணபதி என்பவர். திடுமென... க்யாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. +2 மாணவன் ஜிதேஷ்குமார் தலை பிளந்து மூளை சிதறி இறந்தான். இன்னொரு மாணவன் நவீன், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். லாட்ஜ் ஊழியர் ஒருவரின் மகனான நவீனுக்கு தலையில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இந்த மாணவர்களுக்காக காவல்துறையோ, பள்ளிக் கல்வித்துறையோ விசாரணை நடத்தவில்லையாம். பள்ளி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

-து.ராஜா

ந.செ.தம்பி Vs டி.எஸ்.பி.!

பெரம்பலூர் அ.தி.மு.க. ந.செ. ராஜபூபதியின் தம்பி ரகுபதிக்கு தானொரு மன்மதன் என்ற மிதப்பு. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை ஒருவருடமாக பின்தொடர்ந்து, முன்நடந்து டார்ச்சர் செய்தும் பார்த்திருக்கிறார்... அந்த மாணவி காறித்துப்பிவிட்டார். ஆத்திரமடைந்த ரகுபதி, அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே நுழைந்து கையைப் பற்றித் தரதரவென இழுத்துவிட்டார். மாணவியின் அலறல் தெருவையே வரவழைத்துவிட்டது.

எல்லோரும் சேர்ந்து ஆளும்கட்சி ந.செ.வின் தம்பியை காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். வழக்குப்பதிவு செய்கின்ற நேரத்தில் மா.செ.வும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலையிட்டு, ரகுபதியை தப்பிக்க வைத்தார். அந்த மாணவியின் அப்பாவோ, ""நானொரு டி.எஸ்.பி. என்ன பிரயோஜனம்? அவன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே'' புலம்பிக்கொண்டிருக்கிறார்.

-ஜெ.டி.ஆர்.

டோல்பிளாசா யள் போலி கார்டு!

உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி டோல்பிளாஸாவில் காரை நிறுத்திய நபர், கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜின் அடையாளஅட்டையைக் காட்டினார். கேஷியருக்கு சந்தேகம். டோல்பிளாசா மேலாளர் சத்தியநாராயணாவிடம் சென்றது அடையாள அட்டை. அந்தக் காரை நெருங்கிய மேலாளர் ""எம்.பி. இருக்கிறாரா?'' என்று கேட்டார். இல்லை... அடுத்த ஐந்து நிமிடத்தில் எம்.பி. பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து டோல்பிளாஸாக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கும்பலில் இதுவும் ஒன்றெனத் தெரிந்துகொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். அடையாள அட்டை மோசடி கும்பலை கைது செய்தது போலீஸ்.

இப்படிப்பட்ட போலி அடையாள அட்டைகளை தயாரித்து செக்போஸ்ட்டுகளை, டோல்பிளாஸாக்களை ஏமாற்றும் மோசடி ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் டோல்பிளாஸா ஊழியர்கள்.

-எஸ்.பி.எஸ்.

தேர்வுகள் Vs மனஅழுத்தம்!

தமிழக கல்வித்துறையும் "தி லெட்' என்ற அமைப்பும் இணைந்து உருவாக்கிய "தேர்வு அழுத்த மீட்புத் திட்டத்தை 14-02-18 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தத் திட்டம் என்ன செய்யும்?

""2018-ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் மனஅழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றை நீக்குவதோடு தமிழகம் முழுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் செய்யப்போகிறதாம்.

மனநல ஆலோசகர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்திக்க, ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கிறார்கள். தமிழகம் முழுக்கப் பயணிக்கிறார்கள்.

வாட்ஸ்-அப் 7373002426, முகநூல் Tamilnadu Govt Exam Relief, டுவிட்டர் @ TN School Edu Dept ஜிமெயில் [email protected] ஆகிய முகவரிகளில் தொடர்புகொண்டால் போதுமாம்.

-பரமேஷ்