காவல்துறையில் போலீஸார் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தான் அவர்களுக்கு "ஹோம் கார்டு' எனப்படும் ‘ஊர்க்காவல்படை’உதவியாக இருந்துவருகிறது. ஆனால், வட்டிக்கு விடும் ஃபைனான்ஸியர்கள், கட்டட காண்ட்ராக்டர்கள், தொழிலபதிர்கள், கல்வி வியாபாரிகள் என ஊர்க்காவல்படை உயர் அதிகார பதவிகளை பிடித்துக்கொண்டு காவல்துறை உயரதிகாரிகளையே ஓவர்டேக் பண்ணும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து, ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களிடம் விசாரித்தால் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
போலீஸுக்கு சமம்
ஊர்க்காவல் படையில் பத்து விதமான பதவிகள் உள்ளன. அதில், ஹோம்கார்டு என்பவர் காவல்துறையிலுள்ள கிரேடு-2 போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமமானவர். அடுத்து, அசிஸ்டெண்ட் செக்ஷன் லீடர் என்பவர் கிரேடு-1 போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமம். செக்ஷன் லீடர் என்பவர் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் அதாவது ஏட்டுக்கு சமம். அசிஸ்டெண்ட் பிளாட்டூன் கமாண்டர் என்பவர் எஸ்.எஸ்.ஐ. எனப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு சமம். பிளாட்டூன் கமாண்டர் என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சமம். கம்பெனி கமாண்டர் என்பவர் இன்ஸ்பெக்டருக்கு சமம். டிவிஷனல் கமாண்டர் என்பவர் மாநகரத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் மற்றும் மாவட்ட டி.எஸ்.பி.க்கு சமம். டெபுடி ஏரியா கமாண்டர் என்பவர் அடிஷனல் துணை கமிஷனர் எனப்படும் கூடுதல் துணை கண்காணிப்பாளருக்கு சமம். ஏரியா கமாண்டர் என்பவர் மாநகர துணை கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி.க
காவல்துறையில் போலீஸார் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தான் அவர்களுக்கு "ஹோம் கார்டு' எனப்படும் ‘ஊர்க்காவல்படை’உதவியாக இருந்துவருகிறது. ஆனால், வட்டிக்கு விடும் ஃபைனான்ஸியர்கள், கட்டட காண்ட்ராக்டர்கள், தொழிலபதிர்கள், கல்வி வியாபாரிகள் என ஊர்க்காவல்படை உயர் அதிகார பதவிகளை பிடித்துக்கொண்டு காவல்துறை உயரதிகாரிகளையே ஓவர்டேக் பண்ணும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து, ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களிடம் விசாரித்தால் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
போலீஸுக்கு சமம்
ஊர்க்காவல் படையில் பத்து விதமான பதவிகள் உள்ளன. அதில், ஹோம்கார்டு என்பவர் காவல்துறையிலுள்ள கிரேடு-2 போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமமானவர். அடுத்து, அசிஸ்டெண்ட் செக்ஷன் லீடர் என்பவர் கிரேடு-1 போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமம். செக்ஷன் லீடர் என்பவர் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் அதாவது ஏட்டுக்கு சமம். அசிஸ்டெண்ட் பிளாட்டூன் கமாண்டர் என்பவர் எஸ்.எஸ்.ஐ. எனப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு சமம். பிளாட்டூன் கமாண்டர் என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சமம். கம்பெனி கமாண்டர் என்பவர் இன்ஸ்பெக்டருக்கு சமம். டிவிஷனல் கமாண்டர் என்பவர் மாநகரத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் மற்றும் மாவட்ட டி.எஸ்.பி.க்கு சமம். டெபுடி ஏரியா கமாண்டர் என்பவர் அடிஷனல் துணை கமிஷனர் எனப்படும் கூடுதல் துணை கண்காணிப்பாளருக்கு சமம். ஏரியா கமாண்டர் என்பவர் மாநகர துணை கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கு சமம். அசிஸ்டெண்ட் கமாண்டர் கார்டு என்பவர் மாநகர ஜாயிண்ட் கமிஷனர் மற்றும் மாவட்ட டி.ஐ.ஜிக்கு சமம் என பத்துவிதமான பதவிகள் உள்ளன.
மேலும், ஐ.ஜி. (Inspector General of Police) பதவி காவல்துறையிலுள்ள சமுத்திரபாண்டியன் ஐ.பி.எஸ்ஸுக்கும், ஏ.டி.ஜி.பி. (Additional Director General of Police) பதவி கருணாசாகர் ஐ.பி.எஸ்.ஸுக்கு கூடுதல் பணியாக வழங்கப்பட்டுள்ளது.
டெபுடி கமிஷனரான ஃபைனான்ஸியர்
ஹோம்கார்டு டூ டிவிஷனல் கமாண்டர் வரையிலான பதவிகளில் இருப்பவர்கள் அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு படிப்படியாக பதவி உயர்வு பெற்று வருவார்கள். ஆனால், டெபுடி ஏரியா கமாண்டர்கள், ஏரியா கமாண்டர்கள், அசிஸ்டெண்ட் கமாண்டர்கள் ஜெனரல்கள் என 8 டூ 10 வரையிலான உயர் பதவிகளில் இருப்பவர்கள் பயிற்சியும் எடுக்காமல் எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் வியாபாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் பணம் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். இதிலிருந்தே, ஊர்க்காவல் படையின் லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம். இவர்கள், காவல்துறை உயரதிகாரிகளைப்போலவே காக்கி உடைகளை அணிந்துகொண்டும் ஏ.சி., டி.சி. என்று சொல்லிக்கொண்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டும் கெத்தாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்படி, காவல்துறை டெபுடி கமிஷனர்கள் போல சென்னையில் கிழக்கு மண்டலத்தின் ஏரியா கமாண்டராக (Area Commander) இருப்பவர் கல்வி வியாபாரி விக்டோ ப்ளாக்கா, மேற்கு மண்டலத்துக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர் சந்திரசேகர் உமாபதி, தெற்கு மண்டலத்துக்கு டைல்ஸ் வியாபாரி சுகுமார், வடக்கு மண்டலத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ஃபைனான்ஸியர் சஞ்சய் பன்சாலி என நியமித்துவிட்டார்கள் மாநகர காவல்துறை ஆணையர்கள்.
முறைகேடு பதவி
இதைவிடக்கொடுமை, ஊர்க்காவல் படையில் உள்ள பெண்கள் தங்களது பிரச்சனைகளையும் புகார்களையும் தெரிவிக்க நான்கு மண்டலங்களுக்கும் ஏரியா கமாண்டர்களுக்கு துணையாக டி.ஏ.சி. எனப்படும் 4 டெபுடி ஏரியா கமாண்டர்கள் பதவி உருவாக்கப்பட்டது. பெண்களுக்குத்தான் இந்த பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. மேலும், ஊர்க்காவல் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று, படிப்படியாக பதவி உயர்வு பெற்று செல்பவர்களுக்குத்தான் இந்தப் பதவி கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், கிழக்கு மண்டலத்துக்கு ..............................யும், மேற்கு மண்டலத்துக்கு பள்ளி நடத்தக்கூடிய கல்வி வியாபாரி செங்குட்டுவனையும், தெற்கு மண்டலத்துக்கு கட்டட காண்ட்ராக்டர் இளங்கோவனையும், வடக்கு மண்டலத்துக்கு ஜெயலலிதாவின் அலுவலக பணியாளராக இருந்த பிரபாகரனையும் டி.ஏ.சிக்களாக (Deputy Area Commander) முறைகேடாக நியமித்திருக்கிறார்கள். இவர்களின் பதவிக்கு பரிந்துரை செய்கிறவர்களும் ஏரியா கமாண்டர்கள்தான். இதில், வடக்கு மாவட்ட ஏரியா கமாண்டர் பிரபாகரனைத் தவிர மீதமுள்ள மூன்றுபேரும் ஊர்க்காவல் படையில் எந்தவிதமான ஆரம்பக்கட்ட பயிற்சியும் எடுக்காமல் இந்தப் பதவியை பிடித்தவர்கள்.
இதையெல்லாம்விட மிகக்கொடுமையானது காவல்துறை ஜாயிண்ட் கமிஷனர்/ டி.ஐ.ஜி. பதவிக்கு சமமான அசிஸ்டெண்ட் கமாண்டர் ஜெனரல் பதவியில் இருப்பவர் ஹீரோ ஹோண்டா ஸ்பேர் பார்ட்ஸ் டீலரும் குருநானக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட்டுமான மஞ்சித் சிங். இவரது, மாமனார் ஹீரோஹோண்டா பைக் விற்பனை மெயின் டீலர். கன்னியாகுமரி மாவட்டத்தின் அசிஸ்டெண்ட் கமாண்டர் ஜெனரல் பிரகாஷ்குமாரும் ஹீரோஹோண்டா டீலர்தான். இப்படி, பல மாவட்டங்களிலும் ஹீரோஹோண்டா டீலர்கள் உயர் அதிகார பொறுப்பில் இருக்கிறார்கள்.
பர்சனல் வேலைகளில் ஹோம்கார்டுகள்
ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 25 நாட்கள் போலீஸுக்கு உதவியாக ட்யூட்டிகள் இருந்தன. 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால் தற்போது, ஐந்து நாட்கள்தான் ட்யூட்டி. ஒருநாளைக்கு 560 ரூபாய் சம்பளம் என 2017 நவம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. இதனால், ஊர்க்காவல்படை சேவையை ஒரு வேலையாக நினைத்து செய்துகொண்டிருந்த இளைஞர்- இளைஞிகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இதனை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படை உயர்பதவிகளிலுள்ள வியாபாரிகள் -தொழிலதிபர்கள் தங்களது பர்சனல் வேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ் செய்யவேண்டிய தபால் ட்யூட்டிக்கெல்லாம்கூட ஹோம்கார்டுகள் அனுப்பப்படுகிறார்கள். ஊர்க்காவல் படைக்கு சென்னை மாவட்டத்திற்கே தலைவரான அசிஸ்டெண்ட் கமாண்டர் ஜெனரல் மஞ்சித்சிங், தனது குருநானக் கல்லூரிக்கு செக்யூரிட்டி வேலைக்காக ஹோம்கார்டுகளை பயன்படுத்திவருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஹீரோஹோண்டா ஷோரூம் மும்பை பிரான்ஞ்சிலிருந்து சென்னைக்கு வந்தபோது போலீஸ் பந்தோபஸ்துபோல ஹோம்கார்டுகளை காக்கி யூனி ஃபார்மில் நிற்கவைத்தார். அவரது கல்லூரியில் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சி விழாவிலும் ஹோம்கார்டுகளை யூனிஃபார்முடன் போலீஸ்போல நிற்க வைத்தார்.
இப்படி, தொடர்ந்து தனது கல்லூரியில் நடக்கும் விழாக்களிலும்கூட போலீஸ் போல நிற்க வைக்கப்படுகிறார்கள் இந்த ஹோம்கார்டுகள். மேலும் ஏரியா பிளாட்டூன் கமாண்டர், பிளாட்டூன் கமாண்டர், கம்பெனி கமாண்டர், டிவிஷனல் கமாண்டர் பதவிகளில் இருப்பவர்கள் வேலைக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் வர, ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டர் ஜெனரல் மஞ்சித்சிங்கின் குருநானக் கல்லூரிக்கு விரைந்தோம்.…
கல்லூரிக்குள் நுழையும்போதே வெள்ளை நிற சட்டை, காக்கி பேண்ட், கருப்புக் கலர் ஷூ, ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி, கையில் வாக்கி டாக்கி என நுழைவாயிலிலிருந்து மஞ்சித்சிங்கின் அறைவரை மஃப்டி போலீஸ்போல் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் ஹோம்கார்டுகள். ஹோம்கார்டுகளை தனது பர்சனல் வேலைக்கு மஞ்சித்சிங் பயன்படுத்தி வருவது சீக்ரெட் கேமராவில் பதிவானது.
ஊர்க்காவல் படை குற்றச்சாட்டுகள் குறித்து மஞ்சித்சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது...“""உங்கள் கேள்விகளுக்கு கமிஷனர், ஏ.டி.ஜி.பி.தான் பதில் கொடுக்கவேண்டும். நான், எந்த ஹோம்கார்டையும் பர்சனல் ட்யூட்டிக்கு பயன்படுத்துவதில்லை''’என்றார் மறுப்பாக. தமிழ்நாடு ஹோம்கார்டு வெப்சைட்டே 'Service Unavailable' என்று முடங்கிக் கிடக்கிறது.
தோண்டத் தோண்ட ஊர்க்காவல் படை குறித்த புகார்கள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன.