Skip to main content

டெல்லியின் பச்சைப் பொய்! எதிர்க்காத தமிழக அரசு! -காவிரி கைவிரிப்பு!

Published on 11/03/2018 | Edited on 12/03/2018
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகத் தெளிவாக இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளர் யு.பி.சிங் கூட்டிய கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

US President Joe Biden meets Prime Minister Modi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இதனையொட்டி இன்று நண்பகல் 12.35 மணியளவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டெல்லி வருகிறார். அதேபோல் பிற்பகல் 01.40 மணியளவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வருகிறார். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு முதல் முறையாக டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்பு முதல் முறையாக ஜோ பைடன் டெல்லி வருகிறார். மேலும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலாவால், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டிலியனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர். டெல்லிக்கு வருகை புரிந்த சர்வதேச தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

US President Joe Biden meets Prime Minister Modi
கோப்புப்படம்

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜோ பைடன் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் இந்தியாவில் இருக்கிறார். அதே சமயம் அதிபர் ஜோ பைடன் இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

 

 

Next Story

காவிரி நதிநீர் விவகாரம்; டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

minister duraimurugan went to delhi fot cavery issue

 

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் சந்திக்கிறார். அப்போது அமைச்சர் துரைமுருகன் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளார்.

 

அமைச்சர் துரைமுருகன் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் நிலை குறித்து பேச முடியாது.அதே போன்று கர்நாடகத்திற்கு சென்றும் காவிரி குறித்து பேச முடியாது. அவ்வாறு பேசுவதும் சட்டப்படி தவறு. காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க  அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு, அதன் பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளைச் சந்திப்பேன்” என் தெரிவித்துள்ளார்.

 

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.