Advertisment

இந்தியா முழுவதும் சமூக நீதி! - பெரியார் மண் பற்றி நெகிழ்ந்த முதல்வர்

stalin

றைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஈரோடு வருகை தந்தாலோ அல்லது ஈரோட்டைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் "ஈரோடு எனது குரு குலம்' என பெருமை பொங்க கூறுவார். பகுத்தறிவுச் சுடரொளி தந்தை பெரியாரின் கொள்கை, அறிவுக்கரங்களை பிடித்து ஈரோட்டில் வாழ்ந்ததைத்தான் கலைஞர் அப்படி கூறிவந்தார். அதன்வழி வந்த தற்போதைய முதல்வரும் கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் "ஈரோடு, திராவிட இயக்கத்திற்கும் எங்களுக்கெல்லாம் தாய் வீடு'' என புகழுடன் கூறியிருக்கிறார்.

Advertisment

stalin

முதல்வராக மு.க.ஸ்டா-ன் பொறுப்பேற்ற பின், முதன்முத லாக புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மாவட்ட ஆட்சி

றைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஈரோடு வருகை தந்தாலோ அல்லது ஈரோட்டைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் "ஈரோடு எனது குரு குலம்' என பெருமை பொங்க கூறுவார். பகுத்தறிவுச் சுடரொளி தந்தை பெரியாரின் கொள்கை, அறிவுக்கரங்களை பிடித்து ஈரோட்டில் வாழ்ந்ததைத்தான் கலைஞர் அப்படி கூறிவந்தார். அதன்வழி வந்த தற்போதைய முதல்வரும் கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் "ஈரோடு, திராவிட இயக்கத்திற்கும் எங்களுக்கெல்லாம் தாய் வீடு'' என புகழுடன் கூறியிருக்கிறார்.

Advertisment

stalin

முதல்வராக மு.க.ஸ்டா-ன் பொறுப்பேற்ற பின், முதன்முத லாக புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் திறப்புவிழா என முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் 10-ந் தேதி நடைபெற்றது.

Advertisment

இதில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய திட்டங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, காணொலி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தற்போது கொரோனோ பரவல் காலம் என்பதால் ஈரோட்டுக்கு நான் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறேன். வைரஸ் தொற்று பரவல் குறைந்த பிறகு எங்களுக்கெல்லாம், திராவிட இயக்கத்தின் தாய்வீடான ஈரோட்டுக்கு நேரில் வந்து மக்களை சந்திப்பேன். ஏனென்றால் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த மண்... தலைவர் கலைஞரின் குருகுலம் ஈரோடு.

மக்கள் நேரிடையாக பயன்பெறும் வகையில் பல திட்டப் பணிகளை இன்று துவக்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சத்தி சாலையில் உள்ள சி.என்.சி. காலேஜ் எனப்படும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுகிறது'' என தெரிவித்தார். விழாவில் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் "உச்ச நீதிமன்ற வழங்கிய ஞஇஈ பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளது. இதற்காக தி.மு. கழகம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றி யாக கருதுகிறேன். தி.மு.க.வின் லட்சியப் பயணம் என்றென்றும் தொடரும்'' என்றவர்...

"நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்ற நொடியிலிருந்து தொடர்ந்து மக்கள் பணி செய்து வருவதாக ஆளுநர், தனது உரையில் குறிப்பிட்டு என்னை பாராட்டினார். ஆமாம் அப்படித் தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களையெல்லாம் பழக்கி வைத்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்களை, தந்தை பெரியார் எப்படி பழக்கி வைத் திருந்தார் என்று எங்களிடம் அவர் அடிக்கடி கூறுவது, "யானை தனது குட்டியை எப்படி பழக்குமோ அப்படித்தான் மக்களிடம் கொள்கைகளை எடுத்துரைக்க, மக்கள் தொண் டாற்ற தந்தை பெரியார் என்னை பழக்கினார்' என்பார். அதுபோல் யானைக்குட்டிகளாக மக்கள், சமூக, இயக்க பணியாற்ற கலைஞர் எங்களை பழக்கி வைத் துள்ளார். இந்தியா முழுவதும் சமூகநீதியை நிலைநாட்டுவதே என் வாழ்நாள் லட்சியம்'' என நெகிழ்ச்சியுடன் ஸ்டாலின் பேசியது, திராவிட இயக்கத் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

nkn190122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe