இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பனிப்போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ’ட்வீட்’ மூலம், இ.பி.எஸ். ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட பொறுப்பாளராக உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த ஓ.பி.ரவீந்திரநாத், இரண்டு தினங்களுக்கு முன், ராஜேந்திரபாலாஜி ஆலோசனைக் கூட்டம் நடத்திய அதே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆய்வு மாளிகையில், அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்தது, சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக, எதிரணியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் இன்பத்தமிழன், மாவட்ட பொறுப்பாளர் நடத்திய கூட்டத்தில் "ஆப்சென்ட்' ஆகிவிட்டு, இப்போது ரவீந்திரநாத்தை சந்தித்தது, இம்மாவட்ட உட்கட்சிப் பூசலை பளிச்சென்று காட்டியிருக்கிறது. அங்கே ஒன்றிய தலைவர் ஒருவர் ""ராஜேந்திரபாலாஜியை நீக்கிவிட்டு அடுத்த மாவட்ட செயலாளராக என்னை ஆக்கவேண்டும்...''’என்று ரவீந்திரநாத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, ஏதோ ஒரு முக்கிய வேண்டுதலுக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் - செண்பகத்தோப்பில் உள்ள தன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்ற ரவீந்திரநாத், வனபேச்சியம்மனுக்கு சாற்றுவதற்காக வஸ்திரம் அளித்துவிட்டு தரிசித்தார். அதெல்லாம் சரிதான்.. ஆனால்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கும்பலாகச் சென்று அவர் வழிபட்டதுதான், கடும் விமர்சனத் துக்கு வழிவகுத்துவிட்டது.
“ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கோவில் பூஜைகளில், பக்தர்கள் என்ற பெயரில் யாரையும் அனுமதிக் கக்கூடாது என்று இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், ""ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட ஆளும்கட்சியினரை, ஆண்டாள் கோவிலுக்குள் அனுமதித்தது யார்? அவருக்காக பூஜையெல்லாம் நடந்திருக்கிறதே? மக்களுக்கு ஒரு நீதி? ஆளும்கட்சியின ருக்கு ஒரு நீதியா?'' என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர் ஒருவர் முன்வைத்த கேள்வியை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் இளங்கோவனிடம் கேட்டோம்.
""இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. நான் விடுப்பில் இருக்கிறேன். மக்கள் பிரதி நிதியான ஒரு எம்.பி. வரும் போது ‘வரக்கூடாது’ என்று எப்படி தடுக்க முடியும்? எம்.பி. போன்ற மக்கள் பிரதிநிதிகள், ஊரடங்கு காலத்தில், ஆண்டாள் கோவில் போன்ற பெரிய கோவில்களுக்கு வருவதைத் தவிர்க்கவேண் டும்''’என்றார்.
இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட் பாடெல்லாம் வெறும் பேச்சளவில்தானே இருக்கிறது!
-ராம்கி