குமரி மாவட்டத்திலுள்ள 38 காவல் நிலையங்களிலும் மந்திரி மனோ தங்கராஜ் மீது பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்க விருக்கிறது. மண்டைக்காடு கோவில் அறநிலையத் துறையின் கீழிருந்தாலும் திருவிழாவின்போது கோவிலிலுள்ள பூஜை காரியங்களைத் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளை ஹைந்தவ (இந்து) சேவா சங்கம்தான் நடத்திவருவது வழக்கம். திருவிழாவின்போது இந்து சமய மாநாட்டை இந்த ஆண்டு அறநிலையத்துறை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது பா.ஜ.க. மற்றும் ஹைந்தவ சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கு அதிர்ச்சியை யும் ஆத்திரத்தையும் ஏற்படுத்த 15-ம் தேதி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதானார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணன், “"1932-ல் உருவாக்கப் பட்ட ஹைந்தவ சேவா சங்கம் 1936-ல் இருந்தே மண்டைக்காடு திருவிழாவின்போது 86 ஆண்டு களாக இந்து சமய மாநாட்டை நடத்திவருகிறது. இந்த சூழ்நிலையில் திடீரென்று இந்த ஆண்டு சமய மாநாடு நடத்தக்கூடாது என்று அமைச்சர் மனோதங்கராஜ் அறநிலையத்துறை அதிகாரி களைத் தூண்டிவிட்டு எதற்காக தடை விதிக்க வேண்டும். அவரை ஒரு பிரிவினர் பின்னாலிருந்து தூண்டிவிட்டு மதமோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள்'' என்றார்.
இதுகுறித்து தி.மு.க. குமரி கி.மா. பொருளாளர் கேட்சனிடம் கேட்டபோது, “"மண்டைக் காடு திருவிழாவின்போது சமய மாநாடு எனச்சொல்- பக்தர்களிடம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுபோல் இவர்கள் நடத்தும் திருவிளக்கு பூஜைகளிலும் வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது. சமய மாநாடு என விளம்பரம் செய்வதன் மூலமும் கணிசமாக ஆதாயம் பார்க்கிறார்கள். இதனால்தான் சமய மாநாட்டை அறநிலையத்துறை நடத்தும் என்று கூறியுள்ளது. சமய மாநாடு நடத்தக்கூடாது என்று அறிவிக்கவில்லை.
குமரி மாவட்டத்தில் காலகாலமாக இரவு முழுக்க கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டுவந்த சரஸ்வதி பூஜையை அ.தி.மு.க. அரசு இரவு 9 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று தடை விதித்தது. இது இந்துக்கள் மனதைப் புண் படுத்தவில்லையா? பொன் ராதாகிருஷ்ணன் ஏன் அப்போது போராடவில்லை? இதெல்லாம் தெரிந்தும் இப்படிப் பேசுகிறார்கள்''” என்றார்.
மண்டைக்காடு கோவில் திருவிழாவையே நடத்தக்கூடாதென அரசு சொல்வதாக மாவட் டம் முமுவதும் வதந்தியைப் பரப்பி தி.மு.க. மீது அதிருப்தியை ஏற்படுத்திவருகிறார்கள்.