துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது ராஜ்பவன். கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018 ஏப்ரலில் நியமித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு நேரடியாக சூரப்பா கடிதம் எழுதியது, அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய எடப்பாடி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்பட்டது என சூரப்பாவுக்கும் அரசுக்குமிடையே அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே மோதல்கள் வெடித்தன.
இந்த நிலையில்தான், சூரப்பாவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிசனை அமைத்தது எடப்பாடி அரசு. உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை (எண்:138) இந்த விசாரணைக்கு உத்தரவிடுகிறது. கடந்த பிப்ரவரி 21-ந்தேதி திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் 200 கோடி ஊழல் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு எழுதிய புகார் இதற்கு அடிப்படையாக உள்ளது. துணைவேந்தர் சூரப்பா, டெபுடி டைரக்டர் சக்திநாதன் ஆகியோர் மீது ஊழல், தற்காலிக ஆசிரியர்கள் தேர்வில் 80 கோடி ரூபாய் லஞ்சம் என புகார்கள் பூதாகரமாக உள்ளன. வரதராஜன் என்பவர் அளித்த புகாரில், போலி சான்றிதழ்கள் மூலம் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு. சிண்டிகேட் ஒப்புதலில்லாமல் கூடுதல் பதிவாளர் நியமனம். உறுப்பு கல்லூரிகளுக்கு உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலம் தனது மகளை அண்ணா பல்கலைக் கழகத்தில் நியமித்திருக்கிறார் சூரப்பா என ஆதிகேசவன் என்பவரின் புகார் தெரிவிக்கிறது. செமஸ்டர் தேர்வு மற்றும் மறு கூட்டல் விவகாரங்களி லும் தவறுகள் நடந்துள்ளது என்பதையும் அர சாணை சுட்டிக்காட்டியுள்ளது. 3 மாதத்தில் அறிக்கை சமர்பிக்கும் வகையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சூரப்பா பதவி விலகலை ஏற்கனவே வலியுறுத்திய அரசியல் கட்சிகள் இப்போது வலுப்படுத்தியுள்ளன. அத்துடன், பிப்ர
துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது ராஜ்பவன். கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018 ஏப்ரலில் நியமித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு நேரடியாக சூரப்பா கடிதம் எழுதியது, அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய எடப்பாடி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்பட்டது என சூரப்பாவுக்கும் அரசுக்குமிடையே அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே மோதல்கள் வெடித்தன.
இந்த நிலையில்தான், சூரப்பாவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிசனை அமைத்தது எடப்பாடி அரசு. உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை (எண்:138) இந்த விசாரணைக்கு உத்தரவிடுகிறது. கடந்த பிப்ரவரி 21-ந்தேதி திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் 200 கோடி ஊழல் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு எழுதிய புகார் இதற்கு அடிப்படையாக உள்ளது. துணைவேந்தர் சூரப்பா, டெபுடி டைரக்டர் சக்திநாதன் ஆகியோர் மீது ஊழல், தற்காலிக ஆசிரியர்கள் தேர்வில் 80 கோடி ரூபாய் லஞ்சம் என புகார்கள் பூதாகரமாக உள்ளன. வரதராஜன் என்பவர் அளித்த புகாரில், போலி சான்றிதழ்கள் மூலம் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு. சிண்டிகேட் ஒப்புதலில்லாமல் கூடுதல் பதிவாளர் நியமனம். உறுப்பு கல்லூரிகளுக்கு உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலம் தனது மகளை அண்ணா பல்கலைக் கழகத்தில் நியமித்திருக்கிறார் சூரப்பா என ஆதிகேசவன் என்பவரின் புகார் தெரிவிக்கிறது. செமஸ்டர் தேர்வு மற்றும் மறு கூட்டல் விவகாரங்களி லும் தவறுகள் நடந்துள்ளது என்பதையும் அர சாணை சுட்டிக்காட்டியுள்ளது. 3 மாதத்தில் அறிக்கை சமர்பிக்கும் வகையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சூரப்பா பதவி விலகலை ஏற்கனவே வலியுறுத்திய அரசியல் கட்சிகள் இப்போது வலுப்படுத்தியுள்ளன. அத்துடன், பிப்ரவரியில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், 7 மாதங்களாக என்ன பேரம் நடந்தது என எடப்பாடி அரசை நோக்கி கேள்வி எழுப்பி யுள்ளார் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன், ’""அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசுக்கு இருக்கும் அதிகாரம் அனைத்தையும் பறிக்கும் வகையில் மத்திய அரசுக்கு ஆதரவாக இயங்குகிறார் சூரப்பா. மாநில அரசின் அதிகாரத்தை சூரப்பா மதிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து மூலம் தமிழர்களுக்கான இடங்களை பிற மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கிறார் சூரப்பா. அவர் தனது பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.
உயர்கல்வி வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, ""தமிழகத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் இலக்கு. அதனை கவர்னர் பன்வாரிலால் மூலமாகவும் துணைவேந்தர்கள் மூலமாகவும் நிறைவேற்றி வருகிறது. இதனாலேயே கடந்த இரண்டரை வருடங்களாக சூரப்பாவுக்கும் உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கும் மோதல்கள் வலிமையடைந்தே வந்துள்ளன.
அதிகாரமிக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் சேர்மனாக சூரப்பாவும், உறுப்பினர்களாக உயர்கல்வியின் முதன்மைச் செயலாளர், தொழில்துறையின் முதன்மைச் செயலாளர், கூடுதல் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். சிண்டிகேட்டில் அரசு தரப்பில் முன் வைக்கும் எந்த கருத்துருவுக்கும் சூரப்பா ஒத்துழைப்பதில்லை. இதனால் பல்கலையில் அரசு தரப்பில் கொண்டுவர நினைக்கும் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதில்லை. முதல்வர் எடப்பாடியையும் உயர்கல்வி அமைச்சர் அன்பழகனையும் சூரப்பா மதிப்பதில்லை. செமஸ்டர் தேர்வுகளை ஆன்-லைனில் நடத்த விடப்பட்ட டெண்டரை தனக்கு தெரிந்த பெங்களூர் கம்பெனிக்கு எடுத்துத் தந்துள்ளார் சூரப்பா. புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எடப்பாடியை சந்தித்து இதுகுறித்து விவாதித் துள்ளார் அன்பழகன். பழைய புகார்களையும் நினைவூட்ட, விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்தது. துணைவேந்தரை கவர்னர் நியமிப்பதால் அந்த பதவிக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரமிருக்கிறதா என சட்டத்துறையிடமும் கருத்து கேட்டு, சாதகமான பதில் பெற்றே அரசாணை அமைக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடந்தால், சூரப்பா மட்டுமின்றி, மத்திய அரசும் ராஜ்பவனும் அண்ணா பல்கலைக்கழ கத்தை ஆட்டிப்படைத்த விவகாரங்களும் அம்பல மாகும்'' என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.
சூரப்பாவுக்கு எதிரான விசாரணை கமிஷன் குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அருள் அறத்திடம் நாம் பேசியபோது, ""அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் இல்லாத சூழலை உருவாக்கி, ரோல் மாடலாக இருந்தார் சூரப்பா. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை ஆதார மற்றது. சம்மந்தப்பட்ட அரசாணையை அரசு திரும்பப்பெற வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.
இதே கருத்தினை முன்வைக்கும் பல்கலைக் கழகத்தின் பேராசிரி யர்கள்,’’கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த எதிர்மறை குற்றச்சாட்டுகளும் நிர்வாகத்தில் கிடையாது. விசாரணை கமிஷன் அரசாணையில் உள்ளது போல சூரப்பாவுக்கு முந்தைய காலத்தையும் விசாரிக்க வேண்டும். முந்தைய துணைவேந்தர்கள் காலத்தில்தான் பேப்பர் சேசிங், தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கியது, மறு கூட்டலில் அதிக மதிப்பெண் போட்டது, ஃபவுண்டர் கோட்டா-இண்டஸ்ட்ரியல் கோட்டா-என்.ஆர்.ஐ. கோட்டா உள்பட அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் புரையோடிப் போயிருந்தன. இவைகளில் தொடர்புடைய பலரும் சிக்கி, உமா, சீனிவாசலு, தமிழ்பொறை உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் ஆனார்கள். அப்போதெல்லாம் ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரா சிரியர்கள் மற்றும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இண்டலக்சுவல் பேட்டன் உரிமையை பெற்றுத்தருவதற்கான வழிமுறைகளில் உதவி செய்கிறார் சூரப்பாவின் மகள். கௌரவ பதவியாக இதனை செய்கிறாரே தவிர, சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யவில்லை. இதில் முறைகேடு இல்லை. ஆனால், முன்னாள் துணைவேந்தர்களான மன்னர் ஜவகர், பாலகுருசாமி ஆகியோர் தங்களது மனைவியரை பல்கலைக்கழகத்தில் நியமித்து சம்பளம் வழங்கியிருக்கிறார்கள்.
பல்கலையில் ஊழல்களுக்கு முதல்வர் அலுவலகமும், உயர்கல்வி அமைச்சகமும் சூரப்பாவை கைப்பாவையாக பயன்படுத்த திட்டமிட்டது. இதற்கு சூரப்பா இடம் கொடுக்கவில்லை. தனது பதவிக்காலம் முடிவடைய 5 மாதங்கள் இருப்பதால், அதற்குள் பணி நியமனங்களை முடித்து விடவேண்டும் என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் சூரப்பா. அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சிக்காலமும் முடிவடைய இருப்பதால், இந்த நியமனங்கள் மூலம் தேர்தல் செலவுகளுக்காக 100சி வரை சம்பாதிக்க திட்டமிடப்பட்டது அதனால், அந்த நியமனங்களை அரசுதான் பூர்த்தி செய்யும் என அண்மையில் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை சூரப்பா நிராகரித்தார். அந்த கோபம்தான் அவருக்கு எதிராக கமிஷனை அமைக்க வைத்திருக்கிறது. பல்கலையின் துணை பதிவாளர்(பெர்சனல்) ஷிபுதான் தனக்கு எதிராக அரசிடம் போட்டுக் கொடுப்பதை சூரப்பா கண்டுபிடித்திருக்கிறார்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஊழல்களுக்கு எதிராக போராடி வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் நாம் பேசியபோது, ""பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. அதனை குறிவைத்து ஆட்சியாளர்கள் இயங்குகிறார்கள். தற்போதைய எடப்பாடி அரசும் இதில் விதிவிலக்கல்ல. பொதுவாக, துணைவேந்தர் நியமனங்கள் முதலமைச்சரின் விருப்பபடிதான் நடக்கும். ஆனால், சூரப்பா விசயத்தில் எடப்பாடியின் விருப்பம் நிறைவேறவில்லை. காரணம், உயர்கல்வியை காவிமயமாக்கும் அரசியலில் சூரப்பாவின் நியமனம் பாஜகவின் சாய்ஸ். இருந்தாலும், சூரப்பாவை நம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என ஆட்சியாளர்கள் திட்டமிட்டதும், நடக்கவில்லை. இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் டெண்டர்கள், பணி நியமனம், பதவி உயவு என பல வழிகளில் கிடைத்து வந்த பல நூறு கோடிகள் கட் ஆனதில் அரசு மேலிடத்துக்கு அதிர்ச்சி. பொதுவாக, எடப்பாடி அரசுக்கு பணம் கிடைக்கும் வழிகளை தடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. தலைமையின் அரசியல். அந்த வகையில், பல்கலையிலிருந்து இதுநாள் வரை கிடைத்து வந்த வருவாய்க்கு கவர்னர் மற்றும் துணைவேந்தர் மூலமாக தடை போட்டது பா.ஜ.க. இப்படி,ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு சூரப்பா கடிவாளம் போட்ட தால், அரசுக்கும் சூரப்பாவுக்குமிடையே மோதல்கள் நீடித்தன.
அதேசமயம், பல்கலைக்கு உயர் அந்தஸ்து வழங்குவதில் தன்னிச்சையாக செயல்பட்டது, அரியர்ஸ் மாணவர்களுக்கு பாஸ் என்கிற எடப்பாடியின் முடிவுகளை எதிர்த்தது என அந்த மோதல்கள் விரிவடைந்தன. அரசுக்கு கிடைத்த புகார்களின் உண்மைத்தன்மையை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்தாலே விசாரணை கமிசன் அமைக்கும் முதல்வர் எடப்பாடி, ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆதாரங்களுடன் பல புகார்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதற்கு ஏன், விசாரணை கமிசன் அமைக்கவில்லை? சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அரசு கூறினால் அதில் அரசுக்கும் பங்குண்டு. ஏனெனில், சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் அவர் ஊழல் செய்திருக்க முடியாது. அதனால், சூரப்பாவை விசாரணைக்கு உட்படுத்தினால் சிண்டிக் கேட்டில் உள்ள அரசு உயரதிகாரிகளையும் உட்படுத்த வேண்டும்'' என்கிறார் அதிரடியாக!
இந்த நிலையில், கவர்னரை சந்திக்க விரும்பியுள்ளார் சூரப்பா. அதனை யறிந்து சூரப்பாவை தொடர்புகொண்ட கவர்னர் பன்வாரிலால் இதுகுறித்து விசாரிக்க, ""எனது நிர்வாகத்தில் ஒரு பைசா ஊழல் நடந்திருந்தாலும் அதற்கான தண்டனையை ஏற்கத் தயார்'' என சூரப்பா சொல்ல, அவரை சமாதானப்படுத்திய கவர்னர், ""உங்களை குற்றம் சுமத்தினால் அது என்னை குற்றம் சொல்வது போல. என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் உங்களை அசிங்கப்படுத்துவதன் மூலம் என்னை எதிர்க்க நினைக்கிறார் முதலமைச்சர். நான், பார்த்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.
இதற்கிடையே, தனது கவனத்துக்கு வராமல் விசாரணை கமிசன் அமைக்கப் பட்டதில் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருக்கும் கவர்னர், சூரப்பாவுக்கு எதிராக வந்த புகார்களுக்கான ஆதாரங்களை ராஜ்பவனுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டி ருக்கிறார். எடப்பாடி அரசுக்கு எதிராக பிரதமரிடம் ஊழல் கோப்புகளை சமீபத்தில் ஒப்படைத்தார் கவர்னர். அதற்கு போட்டி யாக, கவர்னரின் சிஷ்யரான சூரப்பாவுக்கு எதிராக விசாரணை கமிசனை அமைத்து கவர்னரோடு மோதத்துவங்கி விட்டார் முதல்வர் எடப்பாடி என்கிறது கோட்டை வட்டாரம்.
-இரா.இளையசெல்வன்