Advertisment

சிக்கும் சிவசங்கர் பாபா! பாலியல் வலையில் மாட்டியவர்கள் கதறல்

sivasankarbab

த்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவின் காம லீலைகள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியதுமே, தேசிய குழந்தைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையைத் தொடங்கின.

Advertisment

sivasankar baba

ஜூன் 11-ந் தேதி சிவசங்கர் பாபா நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்றும், வெளி மாநிலத்தில் இருக்கிறார் என்றும் செய்திகள் கசிகின்றன. பாபாவுக்கு நெருக்கமானவர்களோ, அவர் இன்னமும் அந்தப் பள்ளி வளாகத்தில்தான் இருக்கிறார். தனது நெடுங்கால அரசியல் தொடர்புகள் மூலமாக, விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பிப்பதற்கான வேலைகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக் கிறார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதற்காக மெனக்கெடுகிறார்கள் என்கிறார்கள்.

sivasankar baba

Advertisment

பள்ளியில் தற்போது படிக்கும் பலரும் மிகவும் பயந்துள்ள நிலையில், முன்னாள் மாணவ-மாணவியர் பலரும் தங்களுக்கு நேர்ந்ததை -பார்த்ததை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 20 ஆண்டு களாக இதே விபரீதங்களுடன்தான் அந்தப் பள்ளி நிர்வாகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். பாபாவின் பக்தர் களாக இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு நேரும் தொ

த்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவின் காம லீலைகள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியதுமே, தேசிய குழந்தைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையைத் தொடங்கின.

Advertisment

sivasankar baba

ஜூன் 11-ந் தேதி சிவசங்கர் பாபா நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்றும், வெளி மாநிலத்தில் இருக்கிறார் என்றும் செய்திகள் கசிகின்றன. பாபாவுக்கு நெருக்கமானவர்களோ, அவர் இன்னமும் அந்தப் பள்ளி வளாகத்தில்தான் இருக்கிறார். தனது நெடுங்கால அரசியல் தொடர்புகள் மூலமாக, விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பிப்பதற்கான வேலைகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக் கிறார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதற்காக மெனக்கெடுகிறார்கள் என்கிறார்கள்.

sivasankar baba

Advertisment

பள்ளியில் தற்போது படிக்கும் பலரும் மிகவும் பயந்துள்ள நிலையில், முன்னாள் மாணவ-மாணவியர் பலரும் தங்களுக்கு நேர்ந்ததை -பார்த்ததை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 20 ஆண்டு களாக இதே விபரீதங்களுடன்தான் அந்தப் பள்ளி நிர்வாகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். பாபாவின் பக்தர் களாக இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு நேரும் தொந்தரவுகளை வெளியே சொன்னாலும், அவை பக்தி மணத்தில் மறைக்கப்பட்டு விடுகின்றன. யார் இந்த அக்கிரமத்தை வெளியே கொண்டுவருவார் கள் என மாணவர்கள் தவித்துக்கொண்டிருந்த நிலையில், நக்கீரனில் வந்த கவர் ஸ்டோரி அவர் களுக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. நக்கீரன் ஆசிரியர் பேசிய யூ-டியூப் வீடியோ பல லட்சக் கணக்கானவர்களைச் சென்று சேர்ந்ததாலும், மற்ற வலைத்தளங்களின் செய்திகளும் மக்களிடம் பாபா நிர்வாகத்தின் பள்ளியை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகள் ஆணையத்தின் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் மாணவர்களிடம் உருவாகியுள்ளது.

நக்கீரனில் செய்தி வெளியானதுமே சிவசங்கர் பாபா தன்னுடைய பள்ளி வெப்சைட்டை முடக்கிவிட்டார். விசாரணையை எதிர்கொள் வதிலும் பள்ளி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருவதால், மாணவிகள் வருகைக்குப்பிறகே முழுமையான விசாரணை என ஆணையத்தின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

sivasankar baba

இந்நிலையில், சிவசங்கர் பாபாவால் பாதிக்கப் பட்ட அப்பள்ளியின் பல மாணவ மாணவிகள் ஆணயத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் ஆன பிரதிமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "சிவசங்கர் பாபா பள்ளியின் முன்னாள் மாணவி நான். இந்தப் பள்ளியில் சேர்ந்த முதலே பாடத்தை நடத்துவதைவிட, சிவசங்கர் பாபாதான் நமக்கு கடவுள் கிருஷ்ணர் என்ற புரமோஷன்தான் செய்வார்கள். இந்தப் பள்ளியைப் பொறுத்தவரை, அனைத்து ஆசிரியர்களும் மற்றும் ஊழியர்களும் சிவசங்கர் பாபாவை பகவான் கிருஷ்ணர் என்றே சித்தரித்து அழைப்பார்கள். பாபா ஒரு மாணவியை அடைய நினைத்துவிட்டாலே, அந்த மாணவியை கோபிகா என்று அழைப்பார். அந்த மாணவி மீது பாபா தனி கவனம் செலுத்துவார், முதலில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு சாக்லேட் கொடுப்பார். பரிசுப் பொருட்கள் எல்லாம் கொடுப்பார். மெல்ல அந்த மாணவியை தன் பக்தர்கள் மூலம் பகவான் கிருஷ்ணர் என்று நம்பும் அளவு மூளைச்சலவை செய்வார்.

sivasankar baba

இந்தப் பள்ளியில் ஒரு மாணவி தேர்வு எழுதப்போனால் அவர்களை கட்டிப்பிடித்து வாயில் முத்தம் கொடுத்து அனுப்புவது சிவசங்கர் பாபாவின் வழக்கம். அதேபோல தேர்வு எழுதினால் விடைத்தாளில் கூட அவரின் கட்டளைப்படி பிள்ளையார் சுழிக்குப் பதில் எஸ்.எஸ்.எஸ் (சங்கரம் சிவ சங்கர்) என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே மாணவிகளுக்கு மார்க் கிடைக்கும். பாபாவுக்கான லவுன்ஞ்சில் எந்த நேரமும் வெளிநாட்டு மதுபானம் இருக்கும். சிவசங்கர் பாபாவிடம் சிக்காமல் தப்பிக்க நினைக்கும் மாணவிகள் ஒரு சில வழிகளைக் கையாள்வதும் உண்டு. “"இன்னைக்கு நான் அவுட்'” என்று மாணவிகள் சொன்னால், அவர்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த ஒன்றுதான், காமுகன் சிவசங்கர் பாபாவிடமிருந்து தப்பிப்பதற்கான வழி என்பதால், பாபா இருக்கும் இடத்திற்கு கூப்பிடும்போதே, "நான் அவுட்' என்று பரிதாபமாகச் சொல்லித் தப்பிக்கும் மாணவிகள் உண்டு'' என்று விரிவாகப் பேசினார்.

இந்நிலையில், ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வெளிப்படுத்தியுள்ள புகாரும் அதிர்ச்சிகரமாக உள்ளது. "எனக்கு தற்போது வயது 17, பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியில் 2012-ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்பில் சேர்ந்து 2020-ஆம் ஆண்டு வரை பதினோறாம் வகுப்புவரை படித்து வந்தேன். இந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா ஆரம்பத்தில் என் மீது மிகுந்த அன்புடன் நடந்து கொள்வார். அவ்வப்போது எனக்கு சாக்லேட், பழம் மற்றும் சில சமயம் பரிசுப்பொருட்கள் கூட தருவார். 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு படிக்கும்போது சிவசங்கர் பாபா மீது மிகுந்த பக்தியுடன் கூடிய மரியாதையை வைத்திருந்தேன்.

தொடர்ச்சியாக சிவசங்கர் பாபா பேசும் ஆன்மிக செற்பொழிவுக்கு (சத் சங்) செல்வேன். அப்பா போல நினைத்திருந்த அவரை ஒரு கட்டத்தில் கடவுள் போல நினைத்தேன். அங்குள்ள எல்லோரும் அவரை கடவுள் என்றே நம்பினார்கள். நானும் அப்படியே நம்பினேன். மற்றவர்கள் போலவே அவரை வழிபட்டேன். சில நேரங்களில் கட்டிப்பிடிப்பார், நானும் அப்பா போல நினைத்துக்கொண்டேன்.

2020 கோரோனா நேரத்தில் அரசு ஊரடங்கு (லாக் டவுன்) அறிவித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டனர். அந்த வேளையில் சிவசங்கர் பாபா அவருடன் கூட இருக்கும் பக்தர்களின் செல்போன் மூலம் ஆன்லைனில் வருவார். வீடியோ சாட்டிங்கில் சேட் செய்வார். அந்த நேரங்களில் மாணவிகள் எல்லோரும் டிக்டாக் செய்து அனுப்புமாறு அவர் கூறுவார். நாங்கள் அனுப்புவதற்கு ஆரம்பத்தில் சாதாரணமாக கமெண்ட் செய்வார். ஒரு கட்டத்தில் அவருக்கு நான் அனுப்பிய டிக்டாக்கிற்கு ஆபாசமாக ரெட்டை அர்த்தத்தில் மின்னஞ்சல் வழியாக பதில் அளித்திருந்தார். முதலில் நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகுதான் அது தவறானது என புரிய வந்தது.

என்னுடைய பள்ளித்தோழி வேதிகாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசியப்படுத்தி நெருக்கமாக்கிவிட்டார். கடந்த 2020, மே மாதம் வேதிகாவை வைத்துக்கொண்டே சிவசங்கர் பாபா படுத்தபடி வீடியோ சாட்டிங்கில் வந்தார். நானும் வழக்கம் போலவே பேசினேன். சிவசங்கர் பாபா, "வீட்டில் தனி அறையில்தான் இருக்கிறாயா?''னு கேட்டார். நானும் ஆமாம்னு சொன்னேன். அப்போது வேதிகாவை வைத்து என்னிடம் பேச வைத்தார். சிவசங்கர் பாபாவுக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், உன்னோட டாப்ஸை கழட்டச் சொல்லுறார்னு சொல்ல வைத்தார். எனக்கு ஒன்றுமே புரியல திடீர்னு அதிர்ச்சி யாயிட்டேன்.

அப்பாவைப் போலவும் கடவுள் போலவும் மதிப்பு வச்சிருந்தவரே இப்படியானு எதுவும் புரியாம யோசிச்சிக்கிட்டிருந்தேன். மீண்டும் மீண்டும் ஆடையை கழட்டச் சொல்லி தொல்லை கொடுத்தார்கள். நான் தொடர்பைத் தூண்டிச் சுட்டேன். அதற்கான போட்டோ ஆதாரம், இ-மெயில் ஆதாரம், ஸ்கிரீன் ஷாட் ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது.

மேலும் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி யில் எங்களுக்கு நடப்பதைப் போல பல மாணவிகளிடம் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, நான் கடவுள் என்று சொல்லி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தனது செல்வாக்கான தொடர்புகளால் தப்பிக்க நினைக்கும் சிவசங்கர் பாபா மீதான விசாரணை கடுமை யானால் மட்டுமே எதிர் காலத்தில் மாணவிகள் சீரழிவதைத் தடுக்க முடியும்.

nkn130621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe