ராங்கால் ஒற்றை சீட்! கமல் கனவு பலிக்குமா? பழனி பக்தர்களை திகைக்க வைத்த தீர்ப்பு!

rr

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட் டுப் பயணத்தில் இருக்கும் இந்த நேரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் மாற்றம் பரபரப்பா நடந்திருக்கு.''”

"ஆமாம்பா, அது குறித்து கோட்டை அதிகாரிகள் மத்தியிலேயே திகைப்பைப் பார்க்க முடியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் இந்த நேரத்தில், காவல்துறையில் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ்.ஸை, தெற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், தெற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் ஐ.பி.எஸ்.ஸை வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருக்கு. பொதுவாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றல் உத்தரவு என்பது உள்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ். பெயரில் வெளியிடப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்தமுறை போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் பனீந்தரரெட்டியின் பெயரில் இந்த உத்தரவு வெளியிடப் பட்டிருக்கு. அதுமட்டுமல்ல, அந்த உத்தரவில், அவர் பெயருக்குக் கீழே, உள்துறையின் முழு கூடுதல் பொறுப்பு அவரிடம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம்தான் கோட்டை வட்டாரத்தைத் திகைப்பிலும் பரபரப்பிலும் ஆழ்த்தி இருக்கு.''”

rr

"எதனால் இந்த வினோதமான திடீர் நடவடிக்கைகள்?''”

"இதுகுறித்து, கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, உள்துறை செயலாளர் அமுதா கடந்த திங்கட்கிழமை முதல் விடுமுறையில் இருக்கிறார். அடுத்த வாரம் திங்கள் கிழமை பணியில் சேர்வார். அதனால்தான் பனீந்தரரெட்டியிடம் உள்துறையை கூடுதல் பொறுப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி உயரதிகாரி ஒருவர் விடுமுறை யில் செல்லும்போது, அவர் வகித்த பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் கூடுதலாக ஒப்படைப்பது வழக்கம்தான் என்றாலும், உள்துறைச்செயலாளர் அமுதா விடுமுறையில் சென்றிருப்பதையும், அவர் பொறுப்பு பனீந்திர ரெட்டியிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டி ருப்பதையும் முறைப்படி வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததோடு, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு டூரில் இருக்கும்போது, இப்படி அதிகாரிகளை எதற்காக இவ்வளவு அவசரமாக மாற்றணும்?ங்கிற சந்தேகத்தை அதிகாரிகள் பலரும் எழுப்பறாங்க.''”

"இதேபோல் சமீபத்தில் சர்

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட் டுப் பயணத்தில் இருக்கும் இந்த நேரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் மாற்றம் பரபரப்பா நடந்திருக்கு.''”

"ஆமாம்பா, அது குறித்து கோட்டை அதிகாரிகள் மத்தியிலேயே திகைப்பைப் பார்க்க முடியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் இந்த நேரத்தில், காவல்துறையில் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ்.ஸை, தெற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், தெற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் ஐ.பி.எஸ்.ஸை வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருக்கு. பொதுவாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றல் உத்தரவு என்பது உள்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ். பெயரில் வெளியிடப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்தமுறை போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் பனீந்தரரெட்டியின் பெயரில் இந்த உத்தரவு வெளியிடப் பட்டிருக்கு. அதுமட்டுமல்ல, அந்த உத்தரவில், அவர் பெயருக்குக் கீழே, உள்துறையின் முழு கூடுதல் பொறுப்பு அவரிடம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம்தான் கோட்டை வட்டாரத்தைத் திகைப்பிலும் பரபரப்பிலும் ஆழ்த்தி இருக்கு.''”

rr

"எதனால் இந்த வினோதமான திடீர் நடவடிக்கைகள்?''”

"இதுகுறித்து, கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, உள்துறை செயலாளர் அமுதா கடந்த திங்கட்கிழமை முதல் விடுமுறையில் இருக்கிறார். அடுத்த வாரம் திங்கள் கிழமை பணியில் சேர்வார். அதனால்தான் பனீந்தரரெட்டியிடம் உள்துறையை கூடுதல் பொறுப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி உயரதிகாரி ஒருவர் விடுமுறை யில் செல்லும்போது, அவர் வகித்த பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் கூடுதலாக ஒப்படைப்பது வழக்கம்தான் என்றாலும், உள்துறைச்செயலாளர் அமுதா விடுமுறையில் சென்றிருப்பதையும், அவர் பொறுப்பு பனீந்திர ரெட்டியிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டி ருப்பதையும் முறைப்படி வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததோடு, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு டூரில் இருக்கும்போது, இப்படி அதிகாரிகளை எதற்காக இவ்வளவு அவசரமாக மாற்றணும்?ங்கிற சந்தேகத்தை அதிகாரிகள் பலரும் எழுப்பறாங்க.''”

"இதேபோல் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு காவல்துறை அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட இடமாறுதலையும் சக அதிகாரிகளே விமர்சிக் கிறாங்களே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னையில் மத்திய புலனாய்வுப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜன், இப்போது கொளத்தூர் காவல்துறை துணை ஆணையராக மாற்றப் பட்டிருக்கிறார். இவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. இவர் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்ட எஸ்..பி. யாக இருந்தபோது, அங்கு சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் அடாவடியாக அறைந்து, அவரது செவித்திறனைப் பாதிக்கச் செய்ததால், பெரும் சர்ச்சை வளையத் தில் சிக்கினார். இதன்பின் பொள்ளாச்சியில் பெண் களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரத்தின் போது, பாதிக் கப்பட்ட பெண்களின் முகவரியை மீடியாக் களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதன் மூலம், நீதிமன்றத்திடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். இதனால் அவரை காவல்துறை தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தது. அப்படிப் பட்ட அவருக்கு இப்போது கிடைத்திருக்கும் மாறுதலுக்குக் காரணம், ஒரு சீனியர் அமைச்சர் தானாம். அவரது மாற்றல்தான் சக அதிகாரிகள் மத்தியில் விமர்சனங்களை உருவாக்கிக்கிட்டு இருக்குது.''”

"கமலின் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லையே?''”

kamal

"கமலின் மக்கள் நீதி மய்யம், தி.மு.க. கூட்டணியில் இணையவிருப்பதாக கடந்த 1 வருடமாக செய்திகள் பரவி வந்தன. ஆனாலும் தேர்தல் நெருங்கி விட்ட நிலையிலும் தி.மு.க. கூட்டணிக்குள் ம.நீ.ம. கட்சி இன்னும் அதிகாரப் பூர்வமாக நுழையவில்லை. சமீபத்தில் நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில், "தி.மு.க. கூட்டணிக்குள் நாம் செல்லும்பட்சத்தில் 3 சீட்டுகள் கேட்க வேண்டும், கிடைக்கவில்லை யெனில் 2 சீட்டுகள் கண்டிப்பாக வேண்டும். 1 சீட்டுதான் என்றால், கூட்டணி வேண்டாம்' என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். கமலும் இதே கான்செப்ட்டில்தான் இருக்கிறார் என்கிறார்கள். "1 சீட்டை வாங்கி, நான் மட்டும் நின்றால் அது நன்றாக இருக்காது. 2 சீட்டையா வது கேட்டு வாங்கவேண்டும்' என்பதுதான் அவ ரது நிலைப்பாடாம். ஆனால் தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, கமல் கட்சிக்கு ஒரு சீட் தான். அதிலும் அவர் நின்றால்தான் அதுவும் சாத்தி யம்’என்கிறார்கள். இந்த நிலை மாறுமா என்பது தெரியவில்லை.''”

"செய்தித்துறை கட்டுப்பாட்டில் ஒரு உண்மையறியும் குழுவை அரசு நியமித்திருக் கிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, செய்தித்துறையின் கீழ் உண்மை அறியும் குழு ஒன்றை தி.மு.க. அரசு உருவாக்கியிருக் கிறது. சோசியல் மீடியா மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிவதற்கான குழுவாம் இது. யாராவது பொய்ச் செய்திகளைப் பரப்பினால், அதனைக் கண்டறிந்து அரசுக்கு இந்தக் குழு தெரிவிக்கு மாம். அதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம். இந்தக் குழுவின் திட்ட அதிகாரியாக வானதி வேம்பர் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் என்கிறார்கள். இப்படி ஒரு குழுவே அவசியமற்றது என்று விமர்சிக்கும் அதிகாரிகள் தரப்போ, இந்த வானதிக்கு சோசியல் மீடியாக்களில் எந்த அனுபவமும் இல்லை. எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், இந்தப் பணியை எந்த அடிப்படையில் செய்யப்போகிறார்? இப்போதே அவர், கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டி ருக்கும் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு செய் தித்துறை பி.ஆர்.ஓ.க்களை மிரட்டி வருவதாக புகார்கள் வருகின்றன. முக்கியமானவர்களின் பரிந்துரையே ஒருவருக்கு தகுதியாகிவிடுமா? ’என்றெல்லாம் கேட்கிறார்கள்.''”

"என்னப்பா, பழனி கோயில் தொடர்பான தீர்ப்பு, பக்தர்கள் மத்தியிலேயே பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்திவருதே?''”

rr

"பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆகம விதிகளின்படி கோயில் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, ‘இந்து அல்லாதவர் கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்கிற அறிவிப்புப் பலகையை, கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், மாற்று மதத்தினர் தரிசனம் செய்ய விரும்பி னால், பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என்கிற உறுதி மொழியைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அழுத்தமாகத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பழனி பக்தர்களோ, பண்டாரங்கள் உருவாக்கிய அந்தக் கோயிலில் அவர்களே பூஜைகளை நடத்திவந்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் மன்னரிடம் செல்வாக்கைப் பெற் றிருந்த ஒரு பிராமணர்தான் இந்தக் கோயிலின் நடைமுறைகளை மாற்றி, அர்ச்சகர்கள் பூஜை செய்ய வழிவகுத்துவிட்டார். அதிலும் உறுதி மொழி பற்றியெல்லாம் தீர்ப்பு வந்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லைன்னு அதிர்ச்சி விலகாமலே சொல்றாங்க.''”

"பா.ஜ.க. அமர்பிரசாத்ரெட்டி காவல் துறையுடன் கண்ணாமூச்சு ஆடிக்கொண்டு இருக்கிறாரே?''”

"பா.ஜ.க. பெண் நிர்வாகி ஆண்டாள் மற்றும் அவர் தங்கை தேவி ஆகியோரை ஆளனுப்பித் தாக்கிய வழக்கில், அக்கட்சியின் நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டியைத் துரத் திக்கொண்டு இருக்கிறது போலீஸ். மோடியை வரவேற்க ஆள் திரட்டிய விவகாரத்தில், அமர் சொல்லியதன் பேரில் அவரது டிரைவர் ராஜேஷ் உள்ளிட்ட ஒரு டீம்தான் இந்த தாக்கு தலை நடத்தியதாம். சென்னை கமிஷனரான சந்தீப்ராய் ரத்தோர் தலையிட்டதன் பேரில் இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. காவல்துறை தேடுவதையறிந்த அமர், பெரிய கூட்டம் உள்ள இடத்தில் போய் இருந்துகொண்டார். அங்கே போய் அவரை கைது செய்தால், பிரச்சினையாகிவிடும் என காவல்துறையினர் தயங்க, அடுத்து அவர் ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். அங்கு போலீஸ் டீம் தேடிச் சென்றபோது, போலீ ஸில் இருந்தே கிடைத்த தகவலால் அவர், அங்கிருந்தும் தப்பி, குஜ ராத் பக்கம் போய் விட்டாராம். பெண் நிர்வாகி விவகாரத்தில் அட்டாக் பண்ணச் சொன்ன அமர்பிரசாத்தே, அவர்களுக்கு பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தாராம். இதையறிந்த காவல்துறையினர், ’இது என்ன கில்லாடித்தனம்?’ என்று திகைத் துப் போயிருக்கிறார்களாம்.''”

"கோயம்பேடு பேருந்து நிலைய விவகாரம் இன்னும் சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?''”

"கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் காலி செய்து, அப்படியே கிளாம்பாக்கத்துக்கு பேக்கப் செய்துவிட்டனர். இருந் தும் இத்தனை நாளாய் கோயம் பேடு போய்ப் பழகிய பயணிகள், இன்னும் பழைய நினைப்பில் அங்கே சென்று அலைமோதிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையே பேருந்து நிலையம் இருந்த இடத்தில், பிரபல வர்த்தக நிறுவனமான ’லூலு மால்’ வரப்போவதாக ஒரு வதந்தியை சிலர் கிளப்ப, அதை உண்மை என்று நம்பி சீமானும் அன்புமணியும் இது குறித்து கண்டன முழக்கத்தையும் நடத்தினார்கள். ஆனால் உண்மையில் சென்னை எழும்பூர் பகுதியில் தினத் தந்தி அலுவலகத்துக்கு எதிரேயுள்ள ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் ஒன்றைத்தான் லூலு மாலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு தாரைவார்த் திருக்கிறது. இதை ஏற்கனவே நாம் பகிரங்கப்படுத்தி இருந்தோம். இப்போது அமைச்சர் சேகர்பாபுவும், கோயம்பேட்டில் லூலு மால் வரவில்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.''

"சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை தமிழ்கேள்வி செந்தில்வேல் சிறப்பாகத் தொகுத்து வழங்கினாராமே?''

rr

"ஆமாங்க தலைவரே, சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டை தமிழ்கேள்வி செந்தில்வேலும், கலைஞர் தொலைக்காட்சியின் திவ்யாவும் தொகுத்து வழங்கினர். லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குழுமியிருந்த அரங்கில், 25 பேருக்கு மேல் பேசவேண்டிய சூழலில், அனைவருக்கும் 10 நிமிடங்கள் என வகுத்து செந்தில்வேல் மிகச்சிறப்பான முறையில் தொய்வில்லாமல் நிகழ்ச்சியைக் கொண்டுசென்றார். ஒவ்வொருவரும் பேசி முடிக்கவும், அவர்கள் பேசிய கருத்தையொட்டி திராவிட இயக்க வரலாற்றுக் குறிப்பினை இவர் குறிப்பிட்டு நிகழ்ச்சி யைத் தொகுத்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சி நிறைவுபெற்றதும் அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வெல்லும் சனநாயகம் மாநாட்டையும் செந்தில்வேல் தொகுத்து வழங்கியிருக்கிறார்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைச் சொல் றேன். கனிமொழி எம்.பி.யை, மீண்டும் தூத்துக்குடி யிலேயே நிறுத்தவேண்டும் என்று தி.மு.க.வினர் பலரும் அறிவாலயத்துக்கு கோரிக்கை வைத்திருக் கிறார்கள். அதேபோல், காங்கிரஸுக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கினால் அங்கே கார்த்தி சிதம்பரம் மட்டும் களமிறங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மீறி நிறுத்தினால், அவர்கள் கட்சியினரே எதிர்ப்ப தால் வெற்றிக்கு கொஞ்சமும் உத்தரவாதம் இல்லை என்றும் அறிவாலயத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் அறிவாலயமும், இந்தமுறை எந்தக்கட்சிக்கும் உபரியாக ஒரு சீட்டைக் கூட ஒதுக்குவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறதாம்.''

nkn030224
இதையும் படியுங்கள்
Subscribe