ராங்கால் சீண்டிய பவன் கல்யாண்! உதய் நச் பதிலடி! ஓ.பி.எஸ் - சீமான் ரகசிய சந்திப்பு! விறுவிறு பின்னணி!

ss

"ஹலோ தலைவரே, தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் முழுதாக மக்களிடம் போய்ச் சேரணும்னு முதல்வர் ஸ்டாலின் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.''”

"ஆமாம்பா, வரவேற்கத்தக்க நட வடிக்கைதானே இது.''”

"உண்மைதாங்க தலைவரே, துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி, தமிழக அரசின் சிறப்புத் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக ஏற்றிருக்கிறார். எனவே, உதயநிதிக்கு துணையாக, அரசின் நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு 13 அமைச்சர் களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கோவைக்கு செந்தில்பாலாஜி, நெல்லைக்கு கே.என்.நேரு, தேனிக்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு எ.வ.வேலு, தர்மபுரிக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என கூடுதல் பொறுப்பை அமைச்சர்கள் ஏற்கின்றனர். அதேபோல் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு யார் பொறுப்பு அமைச்சர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட, அறிவிக்கப்படாத மாவட்டங்களை, அந்தந்த மாவட்ட அமைச்சர்களே கவனிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதாம் முதல்வர் அலுவலகம். இன்னும் 15 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், இவர்கள் மூலம் அரசின் அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் மக்களை முழுதாகச் சென்றடைய வேண்டும் என்று திட்ட மிடப்பட்டிருக்கிறது.''”

rr

"சரிப்பா, ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் கடுமையாகச் சீண்டியும் உதயநிதி அமைதி காக்கிறாரே?''”

"ஓராண்டுக்கு முன்பே, சனாதனத்துக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி, இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார் உதயநிதி. அவர் துணை முதல்வரான நிலையில், அவரது சனாதன எதிர்ப்பினை கண்டிக்கும் வகையில் வரிந்துகட்டிய, நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன்கல்யாண், சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகத் தாக்குதலையும், சாபத்தையும் விட்டார். இதைத் தொடர்ந்து, பவனின் ஆதரவாளர்கள், உதயநிதியின் போஸ்டரை கீழே போட்டு அவர் உருவத்தை மிதித்துச் செல்லும் காட்சியினை, சமூக வலைத் தளங்களில் பரப்பியபடியே கொக்கரித்தனர். இது தி.மு.க.வினரையும், இளைஞரண

"ஹலோ தலைவரே, தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் முழுதாக மக்களிடம் போய்ச் சேரணும்னு முதல்வர் ஸ்டாலின் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.''”

"ஆமாம்பா, வரவேற்கத்தக்க நட வடிக்கைதானே இது.''”

"உண்மைதாங்க தலைவரே, துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி, தமிழக அரசின் சிறப்புத் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக ஏற்றிருக்கிறார். எனவே, உதயநிதிக்கு துணையாக, அரசின் நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு 13 அமைச்சர் களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கோவைக்கு செந்தில்பாலாஜி, நெல்லைக்கு கே.என்.நேரு, தேனிக்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு எ.வ.வேலு, தர்மபுரிக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என கூடுதல் பொறுப்பை அமைச்சர்கள் ஏற்கின்றனர். அதேபோல் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு யார் பொறுப்பு அமைச்சர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட, அறிவிக்கப்படாத மாவட்டங்களை, அந்தந்த மாவட்ட அமைச்சர்களே கவனிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதாம் முதல்வர் அலுவலகம். இன்னும் 15 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், இவர்கள் மூலம் அரசின் அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் மக்களை முழுதாகச் சென்றடைய வேண்டும் என்று திட்ட மிடப்பட்டிருக்கிறது.''”

rr

"சரிப்பா, ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் கடுமையாகச் சீண்டியும் உதயநிதி அமைதி காக்கிறாரே?''”

"ஓராண்டுக்கு முன்பே, சனாதனத்துக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி, இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார் உதயநிதி. அவர் துணை முதல்வரான நிலையில், அவரது சனாதன எதிர்ப்பினை கண்டிக்கும் வகையில் வரிந்துகட்டிய, நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன்கல்யாண், சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகத் தாக்குதலையும், சாபத்தையும் விட்டார். இதைத் தொடர்ந்து, பவனின் ஆதரவாளர்கள், உதயநிதியின் போஸ்டரை கீழே போட்டு அவர் உருவத்தை மிதித்துச் செல்லும் காட்சியினை, சமூக வலைத் தளங்களில் பரப்பியபடியே கொக்கரித்தனர். இது தி.மு.க.வினரையும், இளைஞரணி யினரையும் கொதிப்பில் ஆழ்த்தியது. பவனின் நோக்கம் இரு மாநிலங்களுக்கும் இடையில் பதட்டத்தை ஏற்படுத்துவதுதான் என்பதைப் புரிந்துகொண்ட உதயநிதியோ, கொந்தளித்த தங்கள் தரப்பினரை அமைதிப்படுத்தி னார். அதோடு, என் புகைப்படத்தை மிதிப்பவர்கள், நன்றாக மிதிக்கட்டும். இதன் மூலம் அவர்களின் முதிர்ச்சியின்மை அம்பலப் பட்டிருக்கிறது. அவர்களின் அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்யமுடியாது. இதன்மூலம் அவர்கள் கால்களாவது சுத்தமாகட்டும் என்று நறுக் சுருக் பாணியில் பதிலடியும் கொடுத்திருக்கிறார் உதயநிதி.''”

"விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெரும் சங்கடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

"தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தபோதும், அதை மறந்து அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், லாட்டரி மார்டின் மருமகனுமான அர்ஜுன் ரெட்டி அண்மைக் காலமாகத் தொடர்ந்து, கடுமையாக விமர்சித்துவருகிறார். துணை முதல்வர் நியமனம் குறித்த செய்திகள் வந்தபோது, அவர் உதயநிதியை சினிமாவில் இருந்து வந்தவர் என்று மறைமுகமாகச் சாடினார். அப்போதே அதற்கு தி.மு.க.வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் மெரினா விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்தும், தி.மு.க. அரசுக்கு கவனம் இல்லை என்று அர்ஜுன் ரெட்டி குற்றம் சாட்டினார். இப்படி தொடர்ந்து அவர் தி.மு.க.வைக் குறிவைத்துக் கணை தொடுப்பது அறிவாலயத் தரப்பை கொதிப்படைய வைத்திருக்கிறது. இவர் இப்படி தி.மு.க.வுக்கு எதிராக வரிந்துகட்டுவதும், அதைத் தங்கள் கட்சியிலேயே இருக்கும் சிலர் ஆதரிப்பதும் திருமாவளவனை ரொம்பவே சங்கடப்படுத்தி வருகிறதாம்.''”

"அ.தி.மு.க. இணைப்புக்கு உதவுங்கள் என்று மோடியிடம் கேட்க, ஓ.பி.எஸ். டெல்லி சென்றதாக பேச்சு அடிபடுகிறதே?''”

"தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்று பரிதவிக்கும் பா.ஜ.க.,அ.தி.மு.க.வை பலப்படுத்த ஆசைப்படுகிறது. அதற்கு அ.தி.மு.க. கூடாரத்திற்குள் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்ட மாஜி அ.தி.மு.க.வினர் அனை வரையும் ஓரணியில் இணைக்க அது விரும்புகிறது. இதை ஒத்துக்கொள்ளாத எடப்பாடிக்கு எதிராக, அ.தி.மு.க.வில் ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கவும் அது திட்டமிடுகிறது.அதற்குத் தோதாக, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க. சீனியர்கள் 6 பேரைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் பா.ஜ.க. கொண்டு வந்திருக் கிறது என்கிறார்கள்.இந்த நிலையில்தான், பா.ஜ.க., அ.தி.மு.க. தொடர்பாக அஜெண்டாவைத் துரிதப்படுத்தி, தங்களை அதில் ஐக்கியமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள ஓ.பி.எஸ். டெல்லி சென்றிருக்கிறாராம். அங்கே, மருத்துவ மனையில் இருக்கும் தனது இரண்டாவது மகனைப் பார்த்த அவர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.''”

"ஓ.பி.எஸ். மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் பற்றி விரும்பத்தகாத செய்திகள் கிளம்பு கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது காயத்ரிதேவி என்ற பெண் பாலியல் புகார் கொடுத்து, அவரது முகத் திரையைக் கிழித்தார். இது அவர் குடும்பத்திற்குள் பிரச்சினை எழுப்பியது. இதனால் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ரவீந்திரநாத், தனது மனைவி ஆனந்தியிட மிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறார். இந்த நிலையில், அரசியலில் பா.ஜ.க. தன்னைக் கைவிடாது என்று கருதியிருந்த ரவீந்திரநாத், அது கண்டுகொள் ளாததில் ரொம்பவே அப்செட்டானார். இதனால் ஜெய்ப்பூரில் டேரா போட்ட அவர், அங்கு மோசமான பழக்க வழக்கங்களில் மூழ்கி, எல்லை மீறி ஆட்டம் போட்டுவந்தாராம். இதற்கிடையே சொத்தைப் பிரித்துத் தரும்படி, அவர் ஓ.பி.எஸ்.ஸை வலியுறுத்திவந்தாராம். இது தொடர்பாக அவர் அதிக டார்ச்சர்களைத் தந்ததால் மனம் நொந்துபோன ஓ.பி.எஸ்., அவரை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்குச் செல்வதாகவும் கூறுகிறார்கள்.''”

ff

"அதைவிடப்பா, பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு எதிராக ஒரு தொழிலதிபர் களத்தில் அதிரடியாக இறங்கியிருக்கிறாரே?''”

"தென்காசி மாவட்டத்தின் கடையம் பகுதியில் தோட்டம், தொறவு, பண்ணை வீடு என வைத்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு. ஸோகோ என்னும் ஐ.டி. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக் கிறார். பிரதமர் மோடி வரை இவ ரது நட்பு நீண்டதன் விளைவாக,தேசிய பாதுகாப்பு கவுன் சிலின் உறுப்பின ராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக் கிறார்.கவர்னர் ரவி இவரது நெருங்கிய நண்பராம். அவர்,தென்காசிப் பகுதிக்கு வந்தால், இவரைச் சந்திக்காமல் செல்லமட்டார் என்கிறார்கள். கடந்த எம்.பி.தேர்தலில் தனக்கு வேண்டப்பட்ட பா.ஜ.க.வின் ஸ்டார்ட் அப் பிரிவின் மாநில நிர்வாகி ஆனந்தனுக்காக தென்காசி எம்.பி. சீட்டைப் பெற்றுத் தரக் களமிறங்கிய ஸ்ரீதர் வேம்பு, தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு எம்.பி. தொகுதி களின் செலவுகளையும் தான் ஏற்கத் தயார் என்றாராம். இதைப் பார்த்த மாநில பாஜக நிர்வாகி,ஆனந்தனுக்கு சீட் கொடுக்கவிடாமல் செய்துவிட்டாராம்.''”

"’ஏன்?''”

"பா.ஜ.க.வில் ஸ்ரீதர் வேம்பின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக மாநில நிர்வாகி, இப்படி ஆனந்தனுக்கு பிரேக் பிடித்தாராம். இதில் கடுப்பான ஸ்ரீதர் வேம்பு, பாஜக மாநிலத் தலைவரின் பதவியைப் பறித்து ஆனந்தனுக்குக் கொடுக்கும் நோக்கத்தில் விறுவிறுப்பாகக் களப்பணிகளைச் செய்துவருகிறாராம். அந்த வகையில்தான் அவர் கவர்னரை வர வழைத்து சங்கரன் கோவில் போதை ஒழிப்புக்கான விழிப்புப் பேரணியை நடத்தி னாராம்.இது பாஜக மாநில நிர்வாகி தரப்பை பதட்டப்படுத்தி வரு கிறதாம். இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரன் தரப் பிடமிருந்து கைப் பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில், சம்மன் கொடுக்கப் பட்ட பா.ஜ.க.வின் மற்றொரு நிர்வாகி யான கேசவவிநாயகம் அதிலிருந்து தப்பிக்க கண்ணாமூச்சு ஆடி வந்தார். கடைசியில் உச்சநீதிமன்றமே விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட, வேறு வழியின்றி விசாரணைக்கு அவர் ஆஜரானார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட 260 கேள்விகளில் பலவற்றுக்கு கேசவவிநாயகம், முன்னுக் குப் பின் முரணாக பதிலளித்திருக் கிறாராம். இதனால், அவர் கைதாக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இதுபோன்ற பிரச்சினைகளால் கமலாலயத் தரப்பே சுதியிழந்து போயிருக்கிறதாம்.''”

"அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பா ஓ.பி.எஸ். ஒரு முக்கிய கட்சித்தலைவரை சந்தித்துப் பேசியிருக் காராமே?''

"ஆமா தலைவரே, ஏற்கெனவே தினகரனை நம்பி கட்சியை விட்டுச்சென்ற நிலையில், அ.தி.மு.க.வை உடைத்து தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வையே நாசம் செய்து வைத்திருப்பதாக தினகரன் மீது சசிகலா கோபத்தில் இருக்கிறாராம். அதேபோல், அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ். போன்றோரை இணைப்ப தற்கு, நான் பொதுச்செயலாளராக இருக்கும்வரை ஒத்துக்கொள்ள மாட்டேனென்று எடப்பாடி சொன்ன தால், அவரையே அப்பதவியிலிருந்து தூக்குவது குறித்தும் சசிகலா தரப்பு திட்டம் தீட்டி வருகிறதாம். இந்நிலை யில், கடந்த புதன்கிழமையன்று, ஆழ்வார்பேட்டையிலுள்ள க்ரீன் ட்ரீ ஹோட்டலில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை, ஓ.பி.எஸ். சந்தித்து, ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறாராம். அதில், அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் என்னையும் இணைத்துக்கொண்டு செயல்படும்படி சசிகலாவிடம் அறிவுறுத்துங்கள். அப்ப டிச் செய்தால் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்று எடுத்துக்கூறுங்கள் என்று சீமானிடம் ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டிருக்கிறாராம்''

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். சீமானின் ஏதேச்சதிகாரப் போக்கை இனியும் சகிக்க முடியாது என்றபடி, நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலரும் அவரை விட்டு விலகிவருகின்றனர். இந்தநிலையில் கட்சியின் சீனியர்கள் சிலர், மாவட்டத் தலைவர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அவர்களை சமாதானப் படுத்துங்கள் என்று எடுத்துச் சொன்னார்களாம். சீமானோ, "போறவன் போகட்டும். கட்சி என் கட்சி. எனக்காகத்தான் மக்கள் ஓட்டு போடுகிறார்கள்' என்று காட்டமாகவே சொல்லிவிட்டாராம். இதனால் கட்சியின் சீனியர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் களாம். சீமானை விட்டு விலகிய வர்களில் பலரும் நடிகர் விஜய் கட்சியில் இணைய விரும்பி, தற்போது அவருக்குத் தூது விட்டி ருக்கிறார்களாம்.''”

tt

nkn121024
இதையும் படியுங்கள்
Subscribe