அமைச்சர் வீட்டில் கிரிவலம்
காஞ்சிபுரம் மாவட்ட சுரங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஆர்.பெருமாள் ராஜா, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செல் வாக்காக வலம்வந்தவர். அவர்மீது அப்போதே ஏகப்பட்ட ஊழல் புகார்கள் கிளம்பின. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி வந்ததும், காஞ்சிபுரம் மாவட்ட கல்குவாரி ஒப்பந்ததாரர்களின் நலவாழ்வு சங்கத் தலைவர் க.தனசேகர், பெருமாள்ராஜா மீதான ஊழல் புகார்களைத் திரட்டி, முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அந்த ஊழல் அதிகாரியை, விழுப்புரம் மாவட்டத்திற்குத் தூக்கி யடித்தது தமிழக அரசு. இதில் திகைத்துப்போன அவர், "மீண்டும் நான் காஞ்சி புரத்துக்கு வந்தே தீருவேன்' என்று, சக ஊழியர்களிடம் சவால் விட்டார். விட்டதைப் பிடித்துவிடவேண்டும் என்ற வேகத்தோடு, இப்போது துறை அமைச்சரான துரைமுருகனின் வீட்டை கிரிவலம் வந்துகொண்டிருக்கிறாராம். இந்த நிலையிலும் அசராத பெருமாள்ராஜா, தனக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினருக்கு காண்ட்ராக்ட் தரச்சொல்லி, அங்குள்ள அதிகாரிகளுக்கு பிரஷர் கொடுத்துக்கொண்டி ருக்கிறாராம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்
விஸ்வஹிந்து பரிஷத்தில் ஊழல் திமிங்கிலம்!
அண்மையில் ஓய்வுபெற்ற ஒன்றிய அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஏ.பி.பி.பாண்டே மீது ஏகத்துக்கும் புகார்கள் சுழன்றடித்த நிலையில், வருமான வரித்துறை முன்னாள் தலைமை ஆணையரான டி.பி.கர், ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு புகார் கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதி, மேலும் பரபரப்புச் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தப் புகாரில், பாண்டே இன்போஸிஸ் நிறுவனத்துக்கு விசுவாசமாக நடந்துகொண்டார் என்றும், அதன் விளைவாக வருமானவரித் துறையின் இணையப் பக்கங்களை கையாளுதல் போன்ற பெரிய பெரிய டெண்டர்களை, அதற்கான விதிமுறைகளை மீறி இன்போஸிஸுக்கு அவர் வழங்கியதாகவும், அது குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் 1380 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட்ராக்டுகள் இன்போஸிசுக்கு வழங்கப்பட்டி ருக்கிறதாம். அதை வழங்கிய நேரத்திலும் பாண்டேயின் மனைவி நமிதா ஷகாயும், அமெ ரிக்காவில் வசிக் கும் அவரது மக னும் இன்போஸி ஸின் நீண்ட கால வியாபார பங்குதாரர்களாக இருந்தார்களாம். அதேபோல் ஏ.பி.பாண்டேயின் பினாமிகளாகச் செயல்படும் ரவிபிரகாஷ், அபய் குமார், ராமன் பாண்டே ஆகி யோரும், அவர் மூலம் ஏகத்துக்கும் சொத்துக்களைச் சேர்த்திருப்ப தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாண்டேவோடு தொடர்புடைய முஸாபர்பூர் அநாதை இல்லத்தில், பெண் குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட கொடுமைகளையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி நினைவூட்டியிருக்கிறாராம் டி.பி. கர். இந்தக் கடிதத்தின் நகல்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, நிதியமைச்சகம் உள்ளிட்டவற்றுக்கும் அனுப்பி, பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார். புகார் செய்த டி.பி.கர்., இப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒடிசா மாநிலத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கீரன்
தி.மு.க. சேர்மனுக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி!
தி.மு.க.வைச் சேர்ந்த புனிதா ராணி, திருச்சி மாவட்டம், தொட்டியம் யூனியன் சேர்மனாக பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 15.07.2021 அன்று நடந்த யூனியன் கூட்டத்தில், வழக்கமாக நடைபெறும் கூட்ட அறையை ஏன் மாற்றினீர்கள் என்று கூறி துணை சேர்மன் சத்திய மூர்த்தி, பிரச்சனை செய்துள்ளார். மேலும், சேர்மன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரையும் மற்றொரு பெண் கவுன்சிலர் சித்ரா என்பவரையும் தகாத வார்த்தைகளால் சாடியுள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 10 கவுன்சிலர்களுடன் கூட்டத்தைவிட்டு சத்தியமூர்த்தி வெளி யேறினார். இதனால் மீதமிருந்த 8 கவுன்சிலர்களுடன் மட்டும் கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் சித்ராவின் மாமனார் முத்து என்பவரை தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கவேல் தாக்கியதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்ததில், தொட்டியம் யூனியன் துணை சேர்மனாக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான தியாகராஜனின் சகோதரி மகன். தற்போது தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், தனது சகோதரி மகனை சேர்மனாக நியமிக்க தியாகராஜன்தான் சில விஷயங்களைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், தற்போது இருக்கும் பெண் சேர்மன், அமைச்சர் கே.என். நேருவால் நியமிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தலைமையிடம் புகார் அளிக்க உள்ளதாக சேர்மன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். முத்து தாக்கப்பட்ட விவரம் அறிந்த தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, வழக்கு எதுவும் கொடுக்க வேண்டாமென அவரைச் சமாதானப் படுத்தியுள்ளார்.
-துரை. மகேஷ்