சிக்னல் பேரழகி டீம் படும்பாடு!

ss

பேரழகி டீம் படும்பாடு!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் "பேரழகி'. சினிமாவை மையமாக வைத்து ஒளிப்பரப்பான இந்த தொடரை சரவணன் என்பவர் சேனலில் இருந்து பணம் பெற்று தயாரித்து வந்தார்.

இவர் மத்திய அரசின் விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமியின் மகன். 2019-ஆம் வருடம் டிசம்பர் மாதமே முடிந்த தொடரில் பணியாற்றிய நடிகர்-நடிகைகள், டெக்னிஷி யன்கள் பலருக்கு பணம் செட்டில் செய்யப்படாமல் இருக்கிறதாம். கொடுக்கப்பட வேண்டிய தொகை இருப்புநிதியாக சேனலில் இருந்தும் அதை வாங்கி பணியாற்றியவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் தயாரிப்பாளர் சரவணன் ஆர்வம் காட்டவில்லையாம்... யார் போன் செய்தாலும் எடுப்பதில்லையாம்.

ss

"கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியாக மீண்டுவர ஒவ்வொரு வரும் கடுமையாக போராடி வரும் நிலையில்... வரவேண

பேரழகி டீம் படும்பாடு!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் "பேரழகி'. சினிமாவை மையமாக வைத்து ஒளிப்பரப்பான இந்த தொடரை சரவணன் என்பவர் சேனலில் இருந்து பணம் பெற்று தயாரித்து வந்தார்.

இவர் மத்திய அரசின் விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமியின் மகன். 2019-ஆம் வருடம் டிசம்பர் மாதமே முடிந்த தொடரில் பணியாற்றிய நடிகர்-நடிகைகள், டெக்னிஷி யன்கள் பலருக்கு பணம் செட்டில் செய்யப்படாமல் இருக்கிறதாம். கொடுக்கப்பட வேண்டிய தொகை இருப்புநிதியாக சேனலில் இருந்தும் அதை வாங்கி பணியாற்றியவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் தயாரிப்பாளர் சரவணன் ஆர்வம் காட்டவில்லையாம்... யார் போன் செய்தாலும் எடுப்பதில்லையாம்.

ss

"கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியாக மீண்டுவர ஒவ்வொரு வரும் கடுமையாக போராடி வரும் நிலையில்... வரவேண்டிய பணத்தை வாங்கிக் குடுக்க மனமில்லாமல் இருக்கிறாரே தயாரிப்பாளர் சரவணன்' என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் "பேரழகி'யில் பணியாற்றியவர்கள். சின்னத் திரை சங்கங்களில் இது தொடர்பாக பல புகார்கள் இருந்தும், உட்பூசல்களால் சங்கம் முடங்கிப்போன காரணத்தால் எதுவும் பலனில்லையாம். "கலர்ஸ் டி.வி. நிர்வாகம் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்து நிலு வைத்தொகையை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு' என்கிறார்கள் ஊதிய நிலுவையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள்.

-கீரன்

கோரிக்கைகளுடன் ஆதரவு!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முன்னாள் வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர்அலி தலைமையில் மதுரை பிரெண்ட்ஸ் மஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். மக்கள் விரோத பா.ஜ.க., அ.தி.மு.க. தலை மையிலான கூட்டணிக்கு எதிராக, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென்று முடிவெடுத் திருக்கிறார்கள். குறிப்பாக, நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்கள்.

மேலும் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் மற்றும் 39 இஸ்லாமிய ஆயுள் தண்டனைக் கைதிகளையும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும், சென்னை தாஹிர்சாகிப் தெருவில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பள்ளியை மீண்டும் திறக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள். ஊழல்மயமாகிவரும் வக்பு வாரிய நிர்வாகத்தைத் தடுக்கும்விதமாக, வக்பு வாரியச் சொத்துக்களை முழுமையாகக் களஆய்வு செய்ய, வக்பு வாரிய மறுசீரமைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தவேண்டும். அக்குழுவின் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் அளித்து அதனை நடை முறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். இவை தவிர, மாநில சிறுபான்மை நலவாரியத்தை மனித உரிமை ஆணையத்திற்கு இணையான அதிகாரம் பெற்ற அமைப்பாக புனரமைக்க வேண்டுமென்றும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

-தில்

திராவிடப் புதுப்படை!

ss

கோவையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முன்னிலையில், "திராவிடன் அமைப்பு' என்ற அமைப்பின் தலைவர் கோவை பாபு உள்ளிட்ட சுமார் 1,000 பேர், தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந் நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ""சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு வழிநின்று தமிழர் களின் உரிமைகளை மீட்கவும், காக்கவும், ஸ்டாலின் தலைமையேற்று பணி செய்வதில் பெருமையடைகிறோம்'' என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும்படி செய்திருக்கிறார். தொடர்ந்து பேசியவர், ""திராவிட இயக்கப் பணிகளையும், தி.மு.க. அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வும், கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் இழந்துள்ள உரிமைகளை மீட் கவும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி யின் இறுதியில் கோவை பாபு வுக்கு வெள்ளிவாள் ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார். நடப்புத்தேர்தலில் கோவை மண்டலம்தான் தி.மு.க. வுக்கு சவாலானதாக இருக்கும் என்பதால், அங்கே தி.மு.க.வின் பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்றாக, இந்த திராவிடன் அமைப்பின் இணைப்பு விழா நடந்துள்ளது.

-அருள்குமார்

nkn240321
இதையும் படியுங்கள்
Subscribe