ஓ.பி.எஸ். கோட்டையில் ஓட்டை!
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி. மு.க.வும் சம பலத்துடன் ஜெயித்ததால், தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போதெல்லாம், கூட்டத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்து தேர்தலை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தது ஆளும் தரப்பு. ஒருவழியாக கோர்ட் தலையிட்டதன் பேரில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்தியபோதும் இரு கட்சிகளுமே சம பலம் காட்டியதால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் தலைவரானார்.
அதேபோல்தான் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் யூனியன் சேர்மனுக்கான தேர்தல் 2019-ல் நடந்தபோது 16 கவுன்சிலர்களில் 8 தி.மு.க., 6 அ.தி.மு.க., 1 அ.ம. மு.க., 1 தே.மு.தி.க. என ரிசல்ட் வந்தது. வெற்றி பெற்ற 8-ஆவது தி.மு.க. கவுன்சிலர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு ஜம்பானதால், தி.மு.க.வின் பலம் 7-ஆக குறைந் தது. கடந்த ஜன. 11-ஆம் தேதி யூனியன் தலைவர் தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க., தே.மு. தி.க. கவுன
ஓ.பி.எஸ். கோட்டையில் ஓட்டை!
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி. மு.க.வும் சம பலத்துடன் ஜெயித்ததால், தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போதெல்லாம், கூட்டத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்து தேர்தலை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தது ஆளும் தரப்பு. ஒருவழியாக கோர்ட் தலையிட்டதன் பேரில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்தியபோதும் இரு கட்சிகளுமே சம பலம் காட்டியதால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் தலைவரானார்.
அதேபோல்தான் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் யூனியன் சேர்மனுக்கான தேர்தல் 2019-ல் நடந்தபோது 16 கவுன்சிலர்களில் 8 தி.மு.க., 6 அ.தி.மு.க., 1 அ.ம. மு.க., 1 தே.மு.தி.க. என ரிசல்ட் வந்தது. வெற்றி பெற்ற 8-ஆவது தி.மு.க. கவுன்சிலர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு ஜம்பானதால், தி.மு.க.வின் பலம் 7-ஆக குறைந் தது. கடந்த ஜன. 11-ஆம் தேதி யூனியன் தலைவர் தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க., தே.மு. தி.க. கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால் தேர்தல் ரத்தானது.
இதேபோன்ற அக்கப்போர் மூன்றுமுறை நடந்ததால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப் போட்டார் தி.மு.க. கவுன்சிலர் தங்கவேல். நீதிமன்றத் தின் உத்தரவுப்படி, கடந்த 15-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடந்தது. தி.மு.க.வின் கவனிப்பால் அ.ம.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஆதரவளிக்க, யூனியன் சேர்மனாக வெற்றிவாகை சூடினார் தி.மு.க.வின் தங்கவேல்.
ஓ.பி.எஸ்.சின் கோட்டை யான பெரியகுளத்திலேயே ஓட்டை விழுந்ததால் ஷாக்காகி விட்டனர் ர.ர.க்கள், உற்சாக மாகிவிட்டனர் உ.பி.க்கள்.
-சக்தி
போலீசின் அநாகரீகம்! காங்கிரஸ் ஷாக்!
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான இளங்கீரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலை வராகவும் உள்ளார். பொதுமக்க ளின் பிரச்சனைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அடிக்கடி போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.
"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'’பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்துவரும் வாக்குறுதிகளையெல்லாம் மறுநாளே அரசாணையாக வெளியிட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி தான் விவசாயக் கடன் தள்ளுபடி. இதற்காக சமீபத்தில் விவசாய சங்கப் பிரமுகர்களுடன் சென்னை அறிவாலயம் சென்று ஸ்டாலினைச் சந்தித்து நன்றி சொன்னார் இளங்கீரன்.
இந்த நிலையில் தான் கடந்த 11-ஆம் தேதி வீரனந்த புரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஏழை மக்களின் வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரங்களுடனும் போலீஸ் பாதுகாப்புடனும் அதிகாரிகள் வந்தனர். மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார் இளங்கீரன். ஸ்டாலினை இளங்கீரன் சந்தித்தது காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா வுக்குப் பிடிக்கவில்லைபோல. போராட்ட ஸ்பாட்டில் இளங் கீரனின் சட்டையைப் பிடித்து இழுத்து கைதுசெய்து பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டார் ராஜா.
இளங்கீரனின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். காங்கிரஸ் தலைவர் அழகிரி ஷாக்காகி, "சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா மீது மாவட்ட காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'’என வலியுறுத்தியுள்ளார். பல விவசாய சங்கங்களும் இளங்கீரனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளன.
-காளிதாஸ்
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா! அ.தி.மு.க. ஷாக்!
ராஜ்யசபாவின் அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து கொண்டே பார்லிமெண்ட்டில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது தைரியமாக குற்றம்சாட்டிப் பேசியவர் சசிகலா புஷ்பா. அதன்பிறகு பல அதிரடி கூத்துக்களையும் அரங்கேற்றினார்.
தனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டி, பா.ஜ.க.வில் இணைந்த சசிகலா புஷ்பா, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். பழைய இருப்பிடமான அ.தி. மு.க.வில் இருக்கும் மேல்மட்ட வி.ஐ.பி.க்களுடனும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும் இப்போதும் பாசத்துடன் பழகிவருகிறார் சசிகலா புஷ்பா.
சென்னையிலும் டெல்லியிலுமே வாழ்ந்து பழகிவிட்ட சசிகலா புஷ்பா, தேர்தல் நெருங்கி வருவதால் தூத்துக்குடியிலேயே தங்க ஆரம்பித்துவிட்டார். மாவட்டத்திற்குள் இருக்கும் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் பா.ஜ.க.வின் லிஸ்டில் இருக்கிறது.
ஆனால் ஸ்ரீவைகுண்டத்தின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான சண்முகநாதனின் ஸ்ட்ராங் எதிர்ப்பு இருக்கும் என்பதால் தூத்துக்குடியும் திருச்செந்தூரும் கிடைக்கும் என்கிறார்கள் தாமரைத் தொண்டர்கள்.
இதற்கு அச்சாரமாகத் தான் கடந்த 12-ஆம் தேதி பா.ஜ.க.வின் சீனியர் தலைவரான இல.கணேசனை தூத்துக்குடிக்கு வரவழைத்து சக்தி கேந்திர பூத் கமிட்டிக் கூட்டத்தை நடத்தினார் சசிகலா புஷ்பா. கூட்டத்தில் பேசிய இல.கணேசனும் சசிகலா புஷ்பாவின் அருமை பெருமை களைப் பேசி, கிட்டத்தட்ட தூத்துக்குடி வேட்பாளராகவே அறிவித்துவிட்டார். இதனால் ஷாக்காகிவிட்டனர் மாவட்ட ர.ர.க்கள். ஆனால், மாவட்ட அ.தி.மு.க. புள்ளியும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனின் ஆசியும் சசிகலா புஷ்பாவுக்கு இருக்கிறதாம்.
-பரமசிவன்