சீனியர்களுக்கு உதவும் தி.மு.க. உடன்பிறப்பு!
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சேந்தங்குடி கடைவீதியில் உள்ள டீக்கடைக்கு பெரியவர் ஒருவர் வருகிறார். டீ குடித்துவிட்டு, வேட்டியில் முடிந்து வைத்திருந்த 10 ரூபாயை எடுத்து டீக்கடைக்காரரிடம் கொடுக்கிறார். ""என்ன பெருசு இந்த மாசம் பென்சன் வந்துருச்சு போல''’என்ற டீக்கடைக்காரரின் கேள்விக்கு, ஆமாய்யா பெத்த புள்ளங்களே கைவிட்டப்ப, அந்தப்புள்ள உதவுது, நல்லாருக்கணும் அந்த மகராசன்''’என வாழ்த்திவிட்டுக் கிளம்பிய அந்தப் பெரியவரை இடைமறித்து, ""அப்படி யாரு உங்களுக்கு உதவுறது?'' எனக் கேட்டோம்.
""எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் தி.மு.க.காரனா இருக்கேன். இந்த குத்தாலம் பக்கத்துல இருக்கும் மாதிரிமங்கலம் கண்ணையனை மயிலாடுதுறை பகுதில தெரியாத தி.மு.க.காரர்களே இருக்க முடியாது. அந்த கண்ணையனோட மகன் புகழரசன்தான் என்னை மாதிரி கஷ்டஜீவன்களுக்கும் மாசா மாசம் 600 ரூபாய் அனுப்ப
சீனியர்களுக்கு உதவும் தி.மு.க. உடன்பிறப்பு!
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சேந்தங்குடி கடைவீதியில் உள்ள டீக்கடைக்கு பெரியவர் ஒருவர் வருகிறார். டீ குடித்துவிட்டு, வேட்டியில் முடிந்து வைத்திருந்த 10 ரூபாயை எடுத்து டீக்கடைக்காரரிடம் கொடுக்கிறார். ""என்ன பெருசு இந்த மாசம் பென்சன் வந்துருச்சு போல''’என்ற டீக்கடைக்காரரின் கேள்விக்கு, ஆமாய்யா பெத்த புள்ளங்களே கைவிட்டப்ப, அந்தப்புள்ள உதவுது, நல்லாருக்கணும் அந்த மகராசன்''’என வாழ்த்திவிட்டுக் கிளம்பிய அந்தப் பெரியவரை இடைமறித்து, ""அப்படி யாரு உங்களுக்கு உதவுறது?'' எனக் கேட்டோம்.
""எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் தி.மு.க.காரனா இருக்கேன். இந்த குத்தாலம் பக்கத்துல இருக்கும் மாதிரிமங்கலம் கண்ணையனை மயிலாடுதுறை பகுதில தெரியாத தி.மு.க.காரர்களே இருக்க முடியாது. அந்த கண்ணையனோட மகன் புகழரசன்தான் என்னை மாதிரி கஷ்டஜீவன்களுக்கும் மாசா மாசம் 600 ரூபாய் அனுப்புவாரு. காலைல ரெண்டு இட்லி, டீ, மதியம் வர்க்கி, டீன்னு அந்த மகராசன் புண்ணியத்துல வண்டி ஓடுது''’என்றார் பெரியவர் பாலு. பெருஞ்சேரி ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துரைக்கண்ணுவுக்கு மூணு ஆண் பிள்ளைகள் இருந்தும் கவனிப்பார் யாருமில்லாததால் ஆடு மேய்த்து பிழைப்பை ஓட்டுகிறார். பெரியாரின் தொண்டராக தி.மு.க.வின் பற்றாளராக இருக்கும் இவருக்கும் இவரைப் போன்ற இன்னும் பல தி.மு.க. சீனியர்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறார் புகழரசன்.
கலைஞர் பெயரிலான இந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சிக்கு ஒருவர் வீதம் முதலில் 30 பேருக்கும் இப்ப 50 பேருக்கும் மாதம்தோறும் 600 ரூபாய் அனுப்பி என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். தளபதி பெயரில் மருத்துவ சிகிச்சைக் காக என்னால் முடிந்த உதவிகளையும் செய்கிறேன்’’ என்றார் வக்கீல் புகழரசன்.
-செல்வகுமார்
கொண்டைக் கடலையையும் விடல!
தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கி வருகிறார்கள். முதலில் கிராமப்புறங்களில் கொண்டு வரப்பட்ட கொண்டைக் கடலைத் திட்டம் , இந்த டிசம்பரில் இருந்து நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன்பின்தான் ஏகப்பட்ட ரேஷன் கடைகளில் இருப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டு, வெளி மார்க்கெட்டில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையும் ஆரம்பமானது.
கடந்த வாரம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கொண்டைக் கடலை வாங்கப் போனார்கள் மக்கள். "ஸ்டாக் இல்லை மக்களே' என கையைவிரித்தார் ரேஷன் கடைக்காரர். ""எப்பவுமே பதினஞ்சாந் தேதிக்கு மேலதான ஸ்டாக் இல்லைன்னு பல்லவி பாடுவீங்க, இப்ப என்ன மாசம் பொறந்ததுமே சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க''’என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
"அட நான் சொல்ற ஸ்டாக் இங்கதான் இல்ல, ஆனா வேற எங்கேயோ இருக்கு...'’’ ஏழைகள் மீது பரிதாபப்பட்டு ஒருசிலரிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டார் அந்த ஊழியர்.
நாம் விசாரித்தவகையில் ""வெளி மார்க்கெட்டில் தரமான கொண்டைக்கடலை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வண்டுகளும் புழுக்களும் குடியிருக்கும் ரேஷன்கடை கொண்டைக் கடலையை வாங்கி, ஒரு அலசு அலசி காய வைத்து கிலோ 30-க்கோ 40-க்கோ சௌகரியம் போல விற்கிறார்கள், அதனால் சிலர் ரொம்ப சௌகரியமாகவே இருக்கிறார்கள்'' என்கிறார் சிவில் சப்ளை கார்ப்பரேஷனின் ஊழியர் ஒருவர்.
-மகேஷ்
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…
மதுரையிலிருந்து போடி அகல ரயில்பாதை திட்டத்தில், மதுரை டூ உசிலம்பட்டி ட்ராக்கில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரமும் ரெடி. அதற்கான சோதனை ஓட்டத்தில், ஆண்டிப் பட்டி கணவாய் வரையிலான 11 கிலோமீட்டர் தூரம் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கணவாய் மலைப் பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ரயிலை காண ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர். ஆண்டிப்பட்டிக்கு வந்த ரயிலை ரவீந்திரநாத்குமார் எம்.பி மலர் தூவி வரவேற்றார்.
அதன்பின் பத்திரிகையாளரிடம் ரவீந்திர நாத் குமார் எம்.பி., "பத்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள் நடை பெற்றது. நான் வெற்றி பெற்றதும் பிரதமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை அணுகி கோரிக்கைவிடுத்தேன். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது ஆண்டிப்பட்டி வரையிலான 58 கிலோமீட்டர் தூரம் பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் போடிவரை ரயில் ஓடும். தேனியிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான ரயில் சேவை தொடங்குவது பற்றியும் முடி வெடுக்கப்படும்''’என்றார்.
ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டி, முத்தனம்பட்டி, க.விளக்கு, புதூர் உள்பட கிராமங்களிலிருந்து ரயில் பார்க்க வந்த மக்கள், எம்.பி.யையும் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
-சக்தி