சிக்னல் ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த‘பாசறை’ நிர்வாகி!

s

ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த‘பாசறை’ நிர்வாகி!

""யாகம்கிறாங்க... பூஜைங்கிறாங்க... எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிபாடுங்கிறாங்க... எங்கே? எதற்காக?''’ என்று கேட்டால், “""ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல... அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி ஹெலிகாப்டர்ல... எல்லாம் ஒரு வேண்டுதலுக் காகத்தான்...''’என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளுங்கட்சியினர்.

s

சில நாட்களுக்கு முன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., அதன்பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என, தொடர்ந்து ஆண்டாள் கோவிலில், சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டதும், தற்போது விஷ்ணுபிரபு வழிபட்டுச் சென்றதும், பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபுவை தொடர்பு கொண்டோம். ""2011-லிருந்து தமிழகத்தில் அம்மா ஆட்சிதான் நடக்குது. 2021-லும் அம்மா ஆட்சியே தொடரணும்னு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுதர்

ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த‘பாசறை’ நிர்வாகி!

""யாகம்கிறாங்க... பூஜைங்கிறாங்க... எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிபாடுங்கிறாங்க... எங்கே? எதற்காக?''’ என்று கேட்டால், “""ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல... அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி ஹெலிகாப்டர்ல... எல்லாம் ஒரு வேண்டுதலுக் காகத்தான்...''’என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளுங்கட்சியினர்.

s

சில நாட்களுக்கு முன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., அதன்பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என, தொடர்ந்து ஆண்டாள் கோவிலில், சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டதும், தற்போது விஷ்ணுபிரபு வழிபட்டுச் சென்றதும், பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபுவை தொடர்பு கொண்டோம். ""2011-லிருந்து தமிழகத்தில் அம்மா ஆட்சிதான் நடக்குது. 2021-லும் அம்மா ஆட்சியே தொடரணும்னு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுதர்ஸன ஹோமம் நடத்தினோம். அன்னதானத் துக்கும் ஏற்பாடு பண்ணுனோம். அவ்வளவுதான். அடுத்த முதல்வர் வேட்பாளர் யாருங்கிறது, கட்சி முடிவு பண்ணுற விஷயம். அதுக்குள்ள நான் போக விரும்பல'' என்று முடித்துக்கொண்டார்.

நான்கைந்து பேர் மட்டுமே பயணம்செய்ய முடியுமென்பதால், விஷ்ணுபிரபுவுடன் அவரது குடும்பத்தினர் மட்டும் ஹெலிகாப்டரில் வந்திருக் கின்றனர். கோயம்புத்தூரிலிருந்து கட்சியினர், முன்கூட்டியே காரில் வந்துவிட்டார்கள். இது ஒருபுறமிருக்க... அமரராகிவிட்ட ஜெயலலிதா படத்தைக் கோவிலில் வைத்து ஹோமம் நடத்தியது, அப்பட்டமான ஆகம விதிமீறல் என்கிறார்கள், ஆண்டாள் பக்தர்கள்.

சிறிய ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில், தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கி, வழிபாடு செய்தால், பெரியளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதை, விஷ்ணுபிரபு நன்றாகவே அறிந்து வைத்திருப்பார் போலும்!

-ராம்கி

இதெல்லாம் எதுக்கு! பகட்டைத் தவிர்த்த போலீஸ் எஸ்.பி.!

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா ஆய்வு நடவடிக்கை மேற்கொள்வதால், மாவட்டத் தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. அதன்படி, கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூர் காவல்நிலையமும் ஆய்வுக்குத் தயாரானது.

ss

புதிதாக கட்டப்பட்ட கிரகப் பிரவேச வீடுபோல, சீரியல் லைட் பளிச்சிட காவல் நிலையத்தில் அலங்கார ஏற்பாடுகளை செய்திருந்தார் இன்ஸ்பெக்டர் லாவண்யா. மேலும், பொம்மை வடிவிலான குப்பைத் தொட்டிகள், புகாரளிக்க வருபவர்கள் அமர்வதற்கு புதிய இருக்கைகள் என அசத்தி யிருந்தார்.

எஸ்.பி. ரவளிபிரியாவை வரவேற் பதற்காகவே சாலையில் இருந்து காவல் நிலைய படிக்கட்டு வரை சிவப்புக் கம்பளம் விரித்துவைத்து, டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் லாவண்யா உள்ளிட்ட போலீசார் வரிசையில் காத் திருந்தனர். காரைவிட்டு இறங்கிய எஸ்.பி.யிடம் டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக் டரும் மெகா சைஸ் பூங்கொத்தை நீட்டியபோது, அதை வாங்கமறுத்த எஸ்.பி. ரவளிபிரியா, ஆய்வுக்கு வந்தி ருக்கேன். இதெல்லாம் தேவையில்லை எனக் கூறியபடி, விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தை விட்டு தரையில் நடந்து சென்று காவல்நிலைய சுற்றுப்பகுதியை ஆய்வுசெய்தார்.

காவல்நிலைய கோப்புகளை ஆய்வுசெய்த அவர், அங்கிருந்து கிளம்பும்போது மாற்றுத் திறனாளிகள் வந்துசெல்லும் பாதையில் மண்ணைக் கொட்டி சமன் செய்யுமாறு வேண்டு கோள் விடுத்துச் சென்றார். காவல் நிலையத்தை ஆய்விட வந்த அதிகாரி யிடம் நல்லபெயர் வாங்குவதற்காக செய்யப்பட்ட அதகள ஏற்பாடுகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, கடமையைச் செய்துவிட்டு கிளம்பிய எஸ்.பி. ரவளிபிரியாவை பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

-சக்தி

நிலத்தை வித்து பணத்தைக் கட்டு! விவசாயியை மிரட்டிய கடன் வசூல் கும்பல்!

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் தவணை செலுத்த அவகாசம் கொடுத்தும் வங்கிகள் அதைக் கண்டு கொள்வதில்லை. அப்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த தேர்வழி கிராமத்தின் விவசாயியான தட்சிணாமூர்த்தி என்பவரிடம் கடன் வசூல் என்றபெயரில், கடுமையாக நடந்திருக்கிறது வசூல் கும்பல்.

s

இதுபற்றி நம்மிடம் பேசிய தட்சிணாமூர்த்தி, ""பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்துவந்தேன். இதற்காக கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தனியார் வங்கியில், ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் கடனாக வாங்கி னேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரூ.60 ஆயிரம் தவ ணையும் தவறாமல் கட்டிவந் தேன். தற்போது, கொரோனா காலமென்பதால், வருமானமே இல்லை. இந்நிலையில், செப் டம்பர் 10ந்தேதி பாலாஜி என்கிற அதிகாரி, வீட்டிற்கு வந்து தவணை கட்டச்சொல்லி ரவுடிபோல நடந்துகொண்டார். அரசு கூறியதுபோல இரண்டு மாதம் அவகாசம் கேட்டதற்கு, கேவலமான வார்த்தைகளால் பேசிவிட்டு, ""பணம் கட்ட வக்கில்லைனா நிலத்தை வித்து பணத்தைக் கட்டு'' என்று மிரட்டினார். ஊர் முன்னாடி எனக்கு அவமானமா போச்சு. கும்மிடிப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுத்தும் எந்தவித ஆக்ஷனும் இல்லை''’என்றார் பரிதாபமாக.

கும்மிடிப்பூண்டி எஸ்.ஐ. ராஜேந்திரனோ, ""சி.எஸ்.ஆர். கொடுத்திருக்கிறோம். இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம்'' என்றார். மாவட்ட எஸ்.பி. அரவிந்தனை லைனிலேயே பிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக வங்கி கலெக்ஷன் டீம் வினோத்திடம் பேசினோம். ""கடன் தவணை கட்டாதவர்களிடம் வசூல் செய்யறது எங்க வேலை. மொதல்ல அவருதான் தப்பா பேசியிருக்காரு. எங்க டெலிகாலர் போன்ல பேசினா நாங்க பொறுப்பில்ல'' என்றார் கனத்த குரலில்.

-அரவிந்த்

nkn300920
இதையும் படியுங்கள்
Subscribe