பட்டா இங்கே! நிலம் எங்கே? குமுறும் நரிக்குறவர்கள்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகரின் ஒதுக் குப்புறமான இடத்தில்தான், நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். வயதானவர்கள், புதிதாக திருமணமானவர்கள், குழந்தைகள் என தார்ப்பாய், சிமெண்ட் ஷீட்டுகளால் தடுக்கப்பட்ட சிறு அறையில் நெருக்கியடித்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்த அவலத்திலிருந்து மீண்டுவர, தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு இவர்கள் கலெக்டரிடம் மனுக் கொடுத்திருந்தனர். இதனடிப்படையில், 2016ல், 52 பேருக்கும், பூம்பூம் மாடு வைத்து குறிசொல்லும் குடு குடுப்பைக்காரர்களுக்கும் தேத்தாம்பட்டு ஊராட்சி கல்லுமேடு பகுதியில், வீட்டு மனைப்பட்டா வருவாய்த்துறை அதிகாரிகளால் வழங்கப்பட் டது. பட்டா வழங்கப்பட்ட இடம் சமனற்ற பகுதியாக இருந்ததால், இந்த மக்களே அதை சீர்படுத்தினர்.
இந்நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களும் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து, நில அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் அரைகுறையாக அந்தப் பணிகளை நிறுத்திவிட்டனர். மேலும், அளவீடு செய்து நடப்பட்ட கற்களையும் மர்மநபர்கள் பிடுங்கி எறிந்துள்ளனர்.
இதுகுறித்து நரிக் குறவர் சமுதாயத்தினர் நம்மிடம், ""2016ல் பட்டா கொடுத்துவிட்டு, அதற்கான நிலத்தை முறையாக அளவீடு செய்து அடையாளம் காட்ட வில்லை. அதிகாரிகளிடம் நிலத்தை அளந்து அடை யாளம் காட்டச்சொல்லி, பலமுறை நேரிலும், மனுக் கொடுத்தும் முறையிட்டுப் பார்த்தோம். யாரும் கண்டு கொள்ளவில்லை. இனி எதற்கும் பயனில்லாத அந்தப் பட்டா சிட்டாவை கலெக் டரிடம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்க ளுக்கு'' என்கிறார்கள் வருத்தமான குரலில்.
பட்டா இங்கே, நிலம் எங்கே? என்கிற இவர்களின் குரல், அதிகாரிகளுக்கு எப் போதுதான் கேட்குமோ.
-எஸ்.பி.சேகர்
கிரிவலப்பாதையில் விரட்டியடிக்கப்பட்ட சாதுக்கள்! இ.பி.எஸ் என்ன ட்ரம்பா?
மாவட்டந்தோறும் அடிக்கும் விசிட்டின்படி, செப்டம்பர் 9ந் தேதி திருவண்ணாமலை வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்படியே கிரிவலம் செல்ல திட்டமிட்டார்.
இது ஏற்கனவே முடிவாகி இருந்ததால், கிரிவலப்பாதை முழுவதையும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 50 மீட்டருக்கு ஒரு போலீசார் என்ற கணக்கில் நிறுத்தப்பட்டு, போலீசாரின் எச்சரிக்கையின் பேரில் கடைகளும் அடைக்கப்பட்டன.
குடும்ப உறவுகளை விட்டுவிட்டு, அண்ணா மலையாரே கதி என கிரிவலப்பாதையின் நடைபாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் தங்கியுள்ளனர். தன்னார்வலர்களும், சில ஆசிரமங்களும் இவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். இவர்களையும், பிச்சைக் காரர்களையும் முதல்வரின் வருகையைக் காரணம்காட்டி, காவல்துறையினர் விரட்டியடித்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள், சாதுக்களுக்காக கொண்டுவந்த உணவினை அப்படியே எடுத்துச் சென்றனர்.
நாம் கிரிவலப்பாதையை சுற்றி வந்தபோது, எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் இருக்கும் திருநேர் அண்ணாமலை கோவில் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரேயொரு சாதுவை மட்டுமே பார்க்க முடிந்தது.
""பலத்த பாதுகாப்போடு காரில் கிரிவலம் செல்லும் முதல்வரை, சாதுக்கள் என்ன செய்யப் போகிறார்கள். யாசகம் பெற்று, சிவனே என்று கிரிவலப்பாதையில் இருப்பவர்களை எதற்காக விரட்டவேண்டும்'' என்று கேள்வியெழுப்புகிறார்கள் இந்து அமைப்பினர்.
""குஜராத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தபோது, ஏழைக் குடிசைகள் கண்ணில் படக் கூடாதென சுவர் எழுப்பியதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-து.ராஜா
படம் : எம்.ஆர்.விவேகானந்தன்
""வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின், அருகிலுள்ள மைதானத்தில் 9ந்தேதி அதிகாலை மூன்று மணியளவில் இரண்டுபேர் எதையோ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதைப் பார்த்து அந்தவழியே வந்த சிலர் சத்தம்போட்டதும், அவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்குவந்த போலீசார் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது, பாதி எரிந்த நிலையில் உயிரற்று கிடந்த சிசுவைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
சிசுவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கிய நிலையில், இந்தப் பகுதியில் சில தினங் களுக்கு முன்பு சங்கரகோமதி, 22 என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பே முறையற்ற உறவால் பிறந்த குழந்தை, வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் சங்கரகோமதியும், அவரது தாய் இந்திராணியும் சேர்ந்து தீயிட்டுக் கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சங்கரகோமதி, தாய் இந்திராணி, அவரது கணவர் சண்முகவேல் மூவரையும் கஸ்டடிக்குள் கொண்டுவந்த போலீசார், சங்கரகோமதியை மகப்பேறு வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஸ்பாட்டில் இருந்த மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங் பேசுகையில், ""இந்த சம்பவத்தில் குழந்தையைக் கொல் வதற்கு வேறு யாராவது உடந்தையாக இருக்கிறார்களா என்பதையறிய, தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. குழந்தையின் தாயார் மகப்பேறு வார்டில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு சிகிச்சை முடிந்ததும் விசாரணை தொடரும்'' என்றார்.
-பரமசிவம்
படம் : ப.ராம்குமார்