Advertisment

சிக்னல் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு! கலக்கத்தில் முதல்வர் மாவட்டம்!

s

கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு! கலக்கத்தில் முதல்வர் மாவட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், கொரோனா நோய்த்தொற்றுக்கு முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி பலியாகியுள்ளார். இறந்தவர் வசித்த பகுதிக்குள் வெளியாட்கள் செல்லமுடியாத வகையில் சீல்வைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, இதுவரை சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளவர்களில் 94 பேருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்களில் 125 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி யுள்ளது..

Advertisment

இந்நிலையில், சேலத்தில் முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஞாயிறன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலம் அம்மாபேட்டை 9ஆவது கோட்டத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் ஒருவரின் மனைவி, தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் சனிக்கிழமையன்று (ஜூன் 13) சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய்த்

கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு! கலக்கத்தில் முதல்வர் மாவட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், கொரோனா நோய்த்தொற்றுக்கு முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி பலியாகியுள்ளார். இறந்தவர் வசித்த பகுதிக்குள் வெளியாட்கள் செல்லமுடியாத வகையில் சீல்வைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, இதுவரை சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளவர்களில் 94 பேருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்களில் 125 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி யுள்ளது..

Advertisment

இந்நிலையில், சேலத்தில் முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஞாயிறன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலம் அம்மாபேட்டை 9ஆவது கோட்டத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் ஒருவரின் மனைவி, தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் சனிக்கிழமையன்று (ஜூன் 13) சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவரின் கணவர், அவருடைய மகன், மகள் ஆகியோருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சென்றுவந்த இடங்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கைதிகளைத் தொடத் தயங்கும் போலீஸ்!

விசாரணையின்போது கைதிகளை 'அன்பாக' நாலு தட்டுத் தட்டுவது காவல்துறையில் சகஜமானதுதான்.

signal

பல்வேறு குற்ற வழக்குகள் அல்லது சந்தேகத்தின்பேரில் விசாரிக்கும்போதும், வாக்குமூலம் எழுதி வாங்கும்போதும், கைகளுக்கு விலங்கிட்டு நீதிமன்றம், மருத்துவமனை, சிறைச்சாலைகளுக்கு அழைத்துச்செல்வது வரையிலும் அவர்களிடம் காவல்துறையினர் நெருங்கிச் செல்வது என்பது தவிர்க்கமுடியாதது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று அபாயம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், கைதிகளை முன்புபோல் நெருங்கிச்சென்று விசாரிப்பதைக் காவல்துறையினர் தவிர்த்துவருகின்றனர்.

சேலத்தில், பெண்களை ஆபாசப்படம் எடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக தாதகாப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் (35), அவ ருடைய கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் (28) ஆகிய மூவரை சேலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கைதுசெய்தனர். இவர் களில் முக்கிய குற்றவாளி யான லோகநாதனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்வது மற்றும் விசாரணையில் முக்கியப் பங்காற்றிய உதவி ஆணையர் ஈஸ்வரன், சேலம் நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் காவலர்கள் உள்பட 50 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும்நிலை ஏற்பட்டது. மகளிர் காவல்நிலையமும் இழுத்து மூடப்பட்டது. இதில், குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்ற அன்னதானப்பட்டி காவலர் ஒருவருக்கும் குற்ற வாளிகளிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டது மாநகர காவல்துறையினரை பெரும்பீதி அடையவைத்தது.

இச்சம்பவத்திற்கு முன்பே, இரும்பாலை காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த கைதி ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால், அந்தக் காவல்நிலையமும் மூடப்பட்டது. இதையடுத்து, திறந்தவெளியில் ஷாமியானா பந்தலமைத்து மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றுவந்தனர்.

வேறுசில மாவட்டங்களிலும் குற்றவழக்குகளில் கைதான சிலருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர், எக்காரணம் கொண்டு இனி கைதிகளை நெருக்கமாகச் சென்று விசாரிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

போலீசாரையும் அலறவிட்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா.

-இளையராஜா

பெண் ஊராட்சித் தலைவர்களின் கணவர்களுக்குத் தடை!

கடலூர் மாவட்டத்தில் பெண்கள் ஊராட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களது கணவர்கள் உறவினர்கள் தலையீடு இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றிபெற்று பதவியேற்றுள்ளனர். இப்பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் தனித்தனியாக கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட் டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்படி சுற்றறிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கடமைகளும் பொறுப்புகளும் தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டவர்களையே சேரும்.

விதிகளை மீறி செயல்படும் ஊராட்சி தலைவர் களின் கணவர் மற்றும் உறவினர்கள்மீது ஊரக உள்ளாட்சி சட்டத்தை மீறுவதாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்பிறகாவது உள்ளாட்சிகளில் வெற்றிபெற்ற பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்படுவார்களா? அப்படி செயல்படவிடுவார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

-எஸ்.பி.சேகர்

nkn200620
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe