தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள மதி வேந்தனிடம் கொடுப்பதற்காக தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களோடு காத்திருக்கிறார் கள்.
முதல்வரின் உத்தரவுப் படி... கன்னியாகுமரி வள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம் உள்பட முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கவனிக்கப் படாமல் சிதைவடைந்திருக்கும் சுற்றுலாத் தலங்களை சீரமைப்பதில் கவனமாக இருக்கிறார். மக்கள் பக்கமும் அவர் கவனம் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொகுதியில் உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத் துவர் மாயவன். தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுள் ஒரு வர். இவருடைய மகன் மதிவேந்தன். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர். எம்.பி.பி.எஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்றது தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்து நின்று, கடுமையானப் போட்டியில் 2000 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்று, கொங்கு எல்லையில் சூரிய வெளிச்சத்தைப் பரவவிட்டார்.
வயதில் இளையவரான மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கினார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந்ததியர் சமூகத்திற் குப் பிரதிநிதித்துவம் அளிப்பதும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான ராஜேஷ் குமாருக்கு முதல்வரின் வீடு வரை நீளும் செல்வாக்கும்தான் மதிவேந்தனுக்கு அமைச் சர் பதவி கிடைக்கக் காரணம் என்கிறார் கள் கழக உடன் பிறப்புகள்.
"நாமக்கல் கிழக்கு மா.செ. வான ராஜேஷ் குமார், மறைந்த பேராசிரியர் அன் பழகன் மூலமாக முதல்வரின் குடும்பத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அப்படியே உதயநிதியுடனும் ஒட்டிக்கொண்டார். ராஜேஷ்குமாரின் தாத்தா காலத்தில் இருந்தே அவருடைய குடும்பம் தி.மு.க.வில்தான் இருக்கிறது. இதனால், கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்க, ராஜேஷ்குமாருக்கு மா.செ. பதவி தேடி வந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக ராஜேஷ்குமார் நிய மிக்கப்பட்டார். மூன்று தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, மேலிடத்தின் "குட்புக்'கில் இடம் பிடித்தார்.
சட்டமன்றத் தேர்தலின்போது நாமக்கல் அல்லது திருச்செங்கோட்டில் போட்டியிட நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சீட் கேட்டிருந்தார். நாமக்கல் கிடைக்கவில்லை. திருச்செங்கோடு, கூட்டணிக்கு கொடுக்கப்பட்டது. அதற்குக் கைமாறாக கட்சி மேலிடம், அவர் கை காட்டிய மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கியது. மேலும், ராஜேஷ்குமாரையும் ராஜ்யசபா எம்.பி. ஆக்கியது.
அமைச்சர் என்னவோ மதிவேந்தன்தான் என்றாலும் மாவட்டத்தில் செல்வாக்கு ராஜேஷ் குமாருக்குத்தான். மா.செ. அனு மதியுடன்தான் பொதுநிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்கிறார். நிர்வாகிகள் ஏதேனும் கோரிக்கைகள் வைத்தாலும்கூட எல்லாமே மா.செ.தான் என ராஜேஷ்குமாரை பார்க்கச் சொல்லி விடுவார் அமைச்சர். அந்தளவுக்கு அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார் மா.செ.
தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும்போது ராசிபுரம் தொகுதிக்குள் வீடு எடுத்து தங்கியிருந்தார் மதிவேந்தன். கிளினிக்கும் நடத்தி வந்தார். வெற்றி பெற்றவுடன் பழையபடி நாமக்கல்லுக்கே சென்றுவிட்டார். இதனால் ராசிபுரம்வாசிகள் உடனடியாக கோரிக்கை மனு கொடுக்க இயலவில்லை. ராசிபுரம் பயணியர் மாளிகையில் அமைச்சசரை சந்திக்க முடியும். அவசரம் என்றால் மா.செ.வை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்.
ராசிபுரம் பாலப்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் 35 வருஷமாக கிளைச் செயலாளராக இருந்தவர் சுந்தர ராஜன். அவர்தான் அந்தநாளில் அப்பகுதி யில் கட்சியை வளர்த்தவர். 25 உறுப்பினர் கள் சேர்த்து 12.50 ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர். ஒரு விபத்தில், அவருடைய வலது கால் செயல் இழந்து விட்டது. அவர், தனக்கு அரசு சார்பில் ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரி, சமீபத்தில் குறுக்கபுரம் கிராமத்தில் கட்சி சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவின்போது அமைச்சரிடம் மனு கொடுத்தார். அந்த கோரிக்கை மனு, எங்கெங்கோ முட்டி மோதி சுந்தரராஜனிடமே திரும்பி வந்துவிட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழும் இன்னும் ராசிபுரத்தில் அமைச்சர் கோரிக்கை மனுக்களைப் பெற வில்லை. அமைச்சருக்கு மா.செ. கடிவாளம் போடுவதால் தான் இந்த நிலை'' என குமுறுகின்றனர் உடன்பிறப்புகள்.
நாமக்கல் தி.மு.க.வில் மற்றொரு தரப்பினர் கூறுகையில், "தி.மு.க. அரசின் 100 நாள் நிறைவு விழாவின்போது ராசிபுரம் நகரில் பட்டப்பகலில் மாவட்ட சிறுபான்மை யினர் அணி நிர்வாகி ஜாபர் அலி மீது, ராசிபுரம் நகரச்செய லாளர் சங்கர் தாக்குதல் நடத்தினார். ராசிபுரத்தில் உள்ள டாஸ்மாக் பார், கேபிள் வசூல் எல்லாமே சங்கர் வசமே ராஜேஷ்குமார் ஒப்படைத்துவிட்டார். இதை விமர்சனம் செய்ததால்தான் சங்கருக்கு கோபம் வந்து, ஜாபர் அலியை தாக்கினார். இதுகுறித்து அவர் மா.செ. மட்டுமின்றி கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் யாருமே கண்டுகொள்ள வில்லை. மா.செ.வின் வலதுகரமான ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், அவருடைய மருமகன் சத்யா, நகர செயலாளர் சங்கர் ஆகியோர் கொடி கட்டிப் பறக்கின்றனர்
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பு மா.செ., கட்சிக்காரர்கள் வீட்டில் கல்யாணம் என்றால் 2 கிராம் தங்கம் கொடுப்பார். தொண்டர்கள் வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால் இறுதிச்சடங்கு செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் தருவார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த செயல்பாடுகளை அடியோடு நிறுத்திவிட்டார். ஏகப்பட்ட செலவு செய்துவிட்டார் போலும் என்கின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் பெற நாமும் ஒரு மாதத்திற்கும் மேலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஒருவழியாக, அமைச்சரின் உதவியாளர் என்ற பெயரில் நவ. 1ம் தேதி ஒருவர், நம்மை தொடர்பு கொண்டு பேசினார். "அண்ணன் மீட்டிங்கில் இருந்தால் போனை எடுத்து பேச மாட்டார். மிஸ்டு கால் பார்த்தால், நேரம் இருக்கும்போது அவரே லைனில் வருவார்'' என்று மட்டும் சொன்னார். மா.செ., லைனில் சிக்கவே இல்லை.
நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க.வின் வெற்றி என்பது கொங்கு மண்டலத்தில் எதிர்கால வெற்றிக்கான நுழை வாயில். நகராட்சி தேர்தல் வரஇருக்கிறது. அடுத்து, நாடாளு மன்றத் தேர்தல் என பல களங்கள் உள்ளன. மாவட்டக் கட்சி நிர்வாகம் கலங்கலாக இருக்கிறது. எப்போது தெளி யும். எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தி.மு.க.வினர்.