சனாதன ஆட்சியின் பெயரால் திருவிதாங் கூர் சமஸ்தானத்தில் அனுபவித்த கொடுமைகளை எதிர்த்து 1822-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தோள்சீலை உரிமைப் போராட்டம் நடந்தது. அந்த வீரமிக்க போராட்டத்தின் 200 ஆண்டுகள் நிறைவு விழா பொதுக்கூட்டம் மார்ச் 6-ஆம் தேதி நாகர் கோவிலில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி., கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
200 ஆண்டு களுக்கு முன் நடந்த இந்த போராட்டத்தை இப்போது எதற்காக நினைவுகூர வேண்டும்? சனாதன அதர்மத்தின் அடிப்படையிலேயே திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் மூலமாக மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை இப்போதுள்ள வாரிசுகள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்காகத் தான் 200-ஆவது ஆண்டு தோள்சீலை போராட்ட நிறைவுக் கூட்டம்’என்றனர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சி.பி.ஐ.எம்.மைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பேசும்போது, “"சனாதானத் தின் பெயரில் எவ்வளவோ கொடுமை செய்திருக் கிறார்கள். பெண்களின் மார்பகங்களுக்கே வரி போட்ட கொடுமை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. மனு சாஸ்திரத்தை அரசியல் சட்டமாக்கு வோம் என சொல்லுகிறார்கள். தமிழக, கேரள முதல்வர்கள் இருக்கும்வரை அவர்களின் திட்டம் நடக்கவே நடக்காது''’என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், "நாட்டில் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் குமரி மாவட்டத்தில்தான் மானத்தைக் காப்பாற்ற ஒரு வீரப்போராட்டம் நடந்திருக்கிறது. தாய்மையின் சின்னமான மார்பகத்தை மறைப்ப தற்கும் அதற்கு வரி போட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் 50 ஆண்டுகளாக நடந்த இந்தப் போராட்டத்தில் சாதித்துக் காட்டிய பெண்கள் புறநானூற்றுப் பெண்களைவிட வலிமையானவர் கள். தோள்சீலை உரிமைப் போராட்டத்தை முன்நின்று நடத் தியவர்கள் அறி வார்ந்த படிப் பாளிகளோ, பெரும் செல்வந்தர்களோ, உயர் குடியில் பிறந்தவர்களோ இல்லை. தெருக்களில் சாதாரணமாக நடக்கக்கூடிய பெண்கள், வயல்வெளிகளில் வேலைசெய்யும் பெண்கள், சமூகத்தின் அடித்தட்டில் உழைக்கின்ற மக்கள்...''” என்று சொல்லி, குமரியில் மானம் காக்க போராடிய பெண்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார், "தோள்சீலை போராட்டம் ஒரு உரிமைப் போராட் டம். இந்தப் போராட்ட வெற்றிக்கு நன்றி சொல்ல வேண்டியது மன்னர் திப்பு சுல்தானுக்குதான். அவர் கர்நாடகத்திலிருந்து கேரளா வழியாக குமரி வரும்போது பெண்கள் மார்பகத்தை மறைக்காமல் நடப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன காரணமென விசாரித்து அறிந்துகொண்டார். அடுத்து நான் வரும்போது பெண்கள் தோள்சீலை அணிந்து மார்பகத்தை மறைக்கவில்லை என்றால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது போர் தொடுப் பேன் என எச்சரித்தார். தோள்சீலை போராட்டத் தை நினைவுகூர்வதன் மூலம் மீண்டும் மனுதர்மம் எழுந்துவிடாமல் செய்யமுடியும்''’என வழிகூறினார்.
விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், "பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியது மட்டும் சுதந்திரப் போராட்டமல்ல. தோள்சீலை போராட்டமும் சுதந்திரப் போராட்டம்தான். பிறப்பால் மனிதர்கள் சமம் இல்லை என்பதுதான் சனாதன தர்மம். சனாதனம் எப்படி இருக்கும் என்பதற்கு தோள்சீலை போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு. டெல்லியில் இப்போது நடக்கும் ஆட்சியைப் போன்று அன்று திருவிதாங்கூர் ஆட்சி இருந்தது. சனாதன கும்பல்கள் தங்களின் சித்து விளையாட்டை தமிழ்நாட்டில் ஆரம்பித் திருக்கிறார்கள். இரண்டு முதல்வர்களும் இணைந்து செயல்படும் தருணம் ஏற்பட்டுள்ளது. சனாதனத்தை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் மாபெரும் புரட்சியாளராக மாறவேண்டும். 2024-ல் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது''’என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "உலகம் நாகரிகமாவதற்கு முன்பே ஆடை அணிகலன்கள் அணிந்து வாழ்ந்த இனம் தமிழினம். இடைப்பட்ட காலத்தில் மதம், ஜாதி, சாஸ்திர சம்பிரதாயத்தால் மனிதரை மனிதன் பாகுபடுத்திவிட்டான். வள்ளலாரும், அய்யா வைகுண்டரும், அயோத்தி தாச பண்டிதரும், தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவு தலைநிமிர வைத்திருக்கிறது. தோள்சீலை போராட்டத்திற்கு அய்யா வைகுண்டர் துணையாக இருந்தார். "தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்' என்று சொன்ன அவரின் தூண்டுதலால் 1859-ல் பெண்கள் தோள்சீலை அணியலாம் என்ற உத்தரவை உத்திரம் திருநாள் மன்னர் போட்டார். நமது சமூக நீதி போராட்டத்தைத் தொடர்வோம்''’என்றார்.
நிறைவுரை ஆற்றிய கேரள முதல்வர் பினராய் விஜயன், "கேரளாவின் மார் மறைக்கும் சமரசமும் தமிழ்நாட்டின் தோள்சீலை போராட்டமும் ஒன்றுதான். சனாதன தர்மத்தின் நாடு என்று அறிவித்த மார்த்தாண்டவர்மர் செய்ததைப் போன்று சனாதன தர்மம் என்ற பெயரில் சங் பரிவார் பழைய மன்னராட்சியைக் கொண்டுவரப் பார்க்கிறது''’என பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த பினராய் விஜயன், "வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்துகிறோம். அதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.