கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாதுமலை -திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பரந்து விரிந் துள்ளது. இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டுநாடு ஊராட்சிகளின் 32 கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்கள், ஊர்நாட்டாமைகள், நெல்லிவாசல் புலியூர் கிராமத்தில் மார்ச் 24-ஆம் தேதியும், புங்கம்பட்டுநாடு பெரும் பள்ளி கிராமத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதியும் அடுத் தடுத்து கூட்டம் போட்டவர்கள், "இன்னும் எத்தனை தலைமுறைக்கு தான் நாம் இப்படி போராடிக்கொண்டேயிருப்பது, போராட்டம்தான் வாழ்க்கையா? என கோபக் குரல்களில் பேசி யிருக்கிறார்கள்.

vv

கூட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தசீலன், "இங்குள்ள 32 கிராமங்களின் சாலைகள் படுமோச மாக உள்ளன. நெல்லிப்பட்டு கிராமத்திலிருந்து நெல்லிவாசல் செல்லும் 4 கி.மீ. சாலை, கொத்துனூர், நடுவூர் கிராமங்களிலிருந்து புங்கம்பட்டுக்கு செல்லும் 1 கி.மீ இணைப்புச் சாலை, சேர்க்கனூர் முதல் கொடூமம்பள்ளி வரையுள்ள 6 கி.மீ மண் சாலை, சிங்காரப்பேட்டை முதல் நெல்லிவாசல் வரையிலான 15 கி.மீ. சாலை, புதூர் முதல் காவலூர் வரையிலான 35 கி.மீ சாலை, நடுக்குப்பம் முதல் விளங்குப்பம் வரையிலான சாலைகள் மண்சாலை களாகவே உள்ளன. இதனை தார்ச்சாலையாக மாற்றவேண்டும் எனக் கேட்பதற்கு காரணமே, புதூர்நாடு, நெல்லிவாசல்நாட்டில் மட்டுமே மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளி களுக்கு 32 கிராமங்களைச் சேர்ந்த பெரும் பாலான பிள்ளைகள் தினமும் நடந்துதான் வருகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையம் புதூர்நாட்டில் மட்டுமே உள்ளது. வேலைக்கு செல்பவர்களும் தங்களது கிராமங்களிலிருந்து முதன்மை கிராமங்களுக்கு வந்து மினி லாரி, டாடா ஏசி வாகனங்களில் ஏறிச்சென்று மலையைவிட்டு இறங்கி வேலைக்கு, கல்லூரிக்கு செல்கிறார்கள்.

சாலை சரியாக இருந்தால் இங்கு பேருந்து வரும், நாங்களும் பள்ளிக்கு, மருத்துவமனைக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்லமுடியும். சாலை சரியாக இல்லாததால் பேருந்துகள், மினி ஆட்டோக்கள் எதுவும் வருவதில்லை''’என்றார்.

Advertisment

vv

தொடர்ந்து நம்மிடம் பேசிய உதயகுமார், "சிங்காரப்பேட்டை டூ காவலூர், மலையாண்டி பட்டி டூ நெல்லிப்பட்டு, நடுக்குப்பம் டூ விளங் குப்பம், கொடூமம்பள்ளி டூ சேர்க்கனூர் சாலைகள் வனத்துறையின்கீழ் உள்ளன. அச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் மாற்றி ஒப்படைக்கவேண்டும் என்பது எங்கள் பிரதான கோரிக்கை. அதற்கு காரணம், தார்ச்சாலை அமைக்கச் சொல்லி நாங்கள் போராட்டம் நடத்தினால் ஊரக வளர்ச் சித்துறை, மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதி வனத்துறைக்கு அனுப்பப்படுகிறது. வனத்துறை டெண்டர் விட்டு சாலைகளைப் போடறாங்க.

vv

Advertisment

ஒரு பெருமழைக்கே அந்தச் சாலைகள் குண்டும்குழியுமாக மாறிவிட்டன. எங்களின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு போடப்பட்ட சாலைகள் இப்போது குண்டுங்குழியுமாக இருக் கின்றன. இந்தச் சாலைகளை சீரமைக்கச் சொன் னால் வனத்துறை, அது எங்கள் வேலையில்லை என்கிறது. சாலை போடச்சொல்லி 2 அல்லது 3 ஆண்டுக்கு ஒருமுறை போராட்டம் நடத்துகிறோம், இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனாலயே வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்ப டைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். சிங்காரப்பேட்டை டூ காவலூர் வரை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ரோடு போடப்பட்டு பேருந்து கள் இயக்கப்பட்டு 22 கிராம மக்கள் பயனடைந் தனர். அந்த சாலையை வனத்துறை பராமரிக்காத தால் கடந்த 30 ஆண்டுகளாக பேருந்து இயக்கப்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டத்துக்குப் பின்பு மீண்டும் அச்சாலை போடப்பட்டது. அரசு பேருந்து இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்டபோது, சாலைகள் டேமே ஜானதால் பேருந்து இயக்கமாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். அதற்காக மீண்டும் போராடு கிறோம். நெடுஞ்சாலைத்துறையிடம் சாலைகளை ஒப்படைத்தால், சாலை போடப்பட்டு 5 ஆண்டு களானால் எந்த கோரிக்கையும் இல்லாமல் மீண்டும் புதியதாக சாலை அமைப்பார்கள், சாலையை பராமரிப்பார்கள். இப்படி மாற்றித்தருவது சேலம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கல்வராயன் மலைப் பகுதிகளில் நடந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளிலுள்ள சாலைகள் பரா மரிப்பினை வனத்துறையிடம் ஒப்படைத்தது. அந்தச் சாலைகள் வனத்துறைக்கு சொந்தமானதல்ல, வரு வாய்த்துறைக்கு சொந்த மானது என்பதால் மாற்றப் படுகிறது. அந்த மலைகளில் ஆபத்தான விலங்குகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. அங்கேயே மாற்றித்தந்துள்ளார்கள். இங்கு அப்படி எதுவும் இல்லை. ஆனால் இங்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக நாங்கள் போராடிக்கொண்டே இருக்கவேண்டுமா?'' என கேள்வியெழுப்பினார்.

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ சரவணன் (தி.மு.க.), “"ஜம்னாமத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பல கிரா மங்களில் சாலையமைக்க வனத்துறை விதிகள் தடையாக இருக்கின்றன. அதனைச் சரிசெய்து மக்களுக்கு சாலை அமைக்கவேண்டும் என கலெக் டருக்கு கடிதம் தந்ததும், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்துள்ளனர் அதிகாரிகள்'' என்கிறார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வனத் துறை சட்டங்கள் வன மக்களுக்கு எதிராக இருக் கின்றன. அவர்களை வனத்திலிருந்து விரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடு இருப்பதால் வனத்துறையினர் மலைமக்களுக்கு எதிராகவே இருக்கின்றனர்''’என்கின்றனர்.