ராங்கால் அதிர வைக்கும் அமித்ஷா வீடியோ! மோடிக்குப் பதில் யோகி! - ஆர்.எஸ்.எஸ். பிளான்! சீமான் உதார்! தூண்டிவிட்டது யார்? வசமாக சிக்கும் வார்ரூம் புள்ளிகள்! பா.ஜ.க. பரபரப்பு!

ff

"ஹலோ தலைவரே, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களமிறங்கிவிட்டது என்ற தகவல் பா.ஜ.க.வைப் பதட்டப்படுத்துகிறது.''”

"ஆமாம்பா, நம்பமுடியாத தகவலா இருந்தாலும் அதுதான் உண்மைன்னு பா.ஜ.க. சீனியர்கள் அடிச்சி சொல்றாங்க.''”

"உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடி மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதும் ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை இழந்துவிட்டதாம். அதனால் மோடிக்கு பதில் உ.பி. முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத்தை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறதாம். இந்த சூழலில் மோடிக்கு எதிரான பி.பி.சி. ஆவணப்படமும், மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தை வெடவெடக்க வைக்கும் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையும் வெளியே வர, இவற்றின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது என்கிற பேச்சு, பா.ஜ.க. சீனியர்களிடமே அடிபடுகிறது. அடுத்து பா.ஜ.க. தரப்பில் பெரும் சூறாவளியை எழுப்பக்கூடிய ஒரு ஆவணப்படம் வெளிவர இருக்கிறதாம். அதில் இந்த இருவரின் மோசமான நடத்தைகள் தோலுரிக்கப்படுவதோடு, இங்கே அண்ணாமலை வெளியிடும் வார்ரூம் படங்கள் போல, அமித்ஷா குறித்த அதிரடி அம்சங்களும் இருக்குமாம். ஆர்.எஸ்.எஸ். தரப்பின் இந்த அதிரடி மூவ்கள், பா.ஜ.க. தலைமையை பதறவைத்திருக்கிறதாம்.''”

"கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்துடும். அப்படியிருக்கும்போது, இப்படிப்பட்ட செய்திகளை சுவர் வச்சு மறைக்க முடியுமா? அது வெடிச்சி தானா வரட்டும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி முடிவெடுப்பதில் தானும் குழம்பி, கட்சிக்காரர்களையும் அண்ணாமலை குழப்போ குழப்புன்னு குழப்பறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தானே தேர்தல்ல நிற்பதற்கான ஏற்பாடுகளை ஆரம்பத்தில் செய்த அண்ணாமலை, ரகசியமாக ஒரு சர்வேயை நடத்தி, அங்கே நின்னா தனக்கு டெபாஸிட் கூடத் தேறாதுன்னு தெரிஞ்சதும் இந்தத் தேர்தல்ல பா.ஜ.க.வே நிற்க வேணாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டார். அதனால்தான் க

"ஹலோ தலைவரே, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களமிறங்கிவிட்டது என்ற தகவல் பா.ஜ.க.வைப் பதட்டப்படுத்துகிறது.''”

"ஆமாம்பா, நம்பமுடியாத தகவலா இருந்தாலும் அதுதான் உண்மைன்னு பா.ஜ.க. சீனியர்கள் அடிச்சி சொல்றாங்க.''”

"உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடி மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதும் ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை இழந்துவிட்டதாம். அதனால் மோடிக்கு பதில் உ.பி. முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத்தை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறதாம். இந்த சூழலில் மோடிக்கு எதிரான பி.பி.சி. ஆவணப்படமும், மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தை வெடவெடக்க வைக்கும் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையும் வெளியே வர, இவற்றின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது என்கிற பேச்சு, பா.ஜ.க. சீனியர்களிடமே அடிபடுகிறது. அடுத்து பா.ஜ.க. தரப்பில் பெரும் சூறாவளியை எழுப்பக்கூடிய ஒரு ஆவணப்படம் வெளிவர இருக்கிறதாம். அதில் இந்த இருவரின் மோசமான நடத்தைகள் தோலுரிக்கப்படுவதோடு, இங்கே அண்ணாமலை வெளியிடும் வார்ரூம் படங்கள் போல, அமித்ஷா குறித்த அதிரடி அம்சங்களும் இருக்குமாம். ஆர்.எஸ்.எஸ். தரப்பின் இந்த அதிரடி மூவ்கள், பா.ஜ.க. தலைமையை பதறவைத்திருக்கிறதாம்.''”

"கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்துடும். அப்படியிருக்கும்போது, இப்படிப்பட்ட செய்திகளை சுவர் வச்சு மறைக்க முடியுமா? அது வெடிச்சி தானா வரட்டும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி முடிவெடுப்பதில் தானும் குழம்பி, கட்சிக்காரர்களையும் அண்ணாமலை குழப்போ குழப்புன்னு குழப்பறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தானே தேர்தல்ல நிற்பதற்கான ஏற்பாடுகளை ஆரம்பத்தில் செய்த அண்ணாமலை, ரகசியமாக ஒரு சர்வேயை நடத்தி, அங்கே நின்னா தனக்கு டெபாஸிட் கூடத் தேறாதுன்னு தெரிஞ்சதும் இந்தத் தேர்தல்ல பா.ஜ.க.வே நிற்க வேணாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டார். அதனால்தான் கடந்த 31ஆம் தேதி நடந்த பா.ஜ.க.வின் பெருங்கோட்டப் பொறுப்பாளர் கள் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சமிக்ஞைகளை நம் டெல்லித் தலைமை நமக்குக் கொடுக்குதுன்னு, கட்சியின் தேசியத் தலைமை மீது பழியைப் போட்ட அவர், "நாடாளுமன்றத் தேர்தல்தான் நம் இலக்கு. ஆனால், சிலர் மேலிடத்திற்கு தகவல் அனுப்பி குழப்பிக்கிட்டு இருக்காங்க. அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெசேஜ் டெல்லியிலிருந்து வருது. நாம் போட்டியிடவில்லை என்பதால் அ.தி.மு.க.வில் யாரை ஆதரிக்கலாம்? அல்லது யாரையுமே ஆதரிக்காமல் விட்டுவிடலாமா? என்ற கோணத்திலும் யோசித்து நாம் குழம்பவேண்டி இருக்கிறது' என்று பகிரங்கமாகவே தன் நிலையை ஒத்துக்கொண் டிருக்கிறார் அண்ணா மலை.''”

"தேர்தல்ல நிற்கச் சொல்லி பா.ஜ.க. தேசியத் தலைமையைக் குழப்பு கிறார்கள் என்று அண்ணா மலை யார்மீது குற்றம் சுமத்துகிறார்?''”

rr

"இதுபற்றியும் பா.ஜ.க. தரப்பிலேயே விசாரிச்சேங்க தலைவரே, பா.ஜ.க.வின் அமைப்புச் செய லாளரும், ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதிநிதியுமான கேசவவிநாயகம் உள்ளிட்ட சிலர்தான், பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை வலியுறுத்தினார்களாம். இவர்கள் ஏன் இப்படி வலியுறுத்துகிறார்கள்னு அண்ணாமலை விசாரித்தாராம். அப்போது, இடைத்தேர்தலில் பா.ஜ.க.வைப் போட்டியிட வைத்து, அதில் கிடைக்கும் நெகட்டிவ் ரிசல்ட்டைக் காட்டி, தனது மாநிலத் தலைவர் பதவியைக் காலி செய்யும் நோக்கோடுதான் கேசவவிநாயகம் உள்ளிட்ட சீனியர்கள், கட்சியை தேர்தலுக்குத் தூண்டுகிறார்கள் என்று தெரிந்துகொண் டாராம். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளரான பி.எல். சந்தோஷை தொடர்புகொண்டு, "என் பதவியை காலி செய்ய கேசவவிநாயகம் போன்றவர்கள் சதி செய்கிறார்கள். அதனால் உண்மைக்குப் புறம்பான தகவலைத் தந்து மேலிடத்தைக் குழப்புகிறார்கள். அவர்களை நம்பி பா.ஜ.க. இடைத் தேர்தலில் நின்றால், கிடைக்கும் ரிசல்ட்டுக்கு நான் பொறுப்பாக முடியாது' என்று சொன்னாராம். இந்தத் தகவல் கட்சித் தலைமையில் உரியவர்களுக்குப் போய் சேர்ந்துவிட்டதாம்.''”

"இதன்பின் பா.ஜ.க. மேலிடத்தின் முடிவு?''”

rr

"சந்தோஷ் மூலம் அண்ணாமலையின் பயத்தை அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் தெரிந்துகொண்டார்களாம். எனவே, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர் பான முடிவை, அண்ணாமலையையே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். இதனால் தேர்தல் டென்ஷனில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டார் அண் ணாமலை. அதைத் தொடர்ந்துதான் கட்சிப் பொறுப் பாளர்கள் கூட்டத் தில் பேசிய அவர், கேசவவிநாயகம் உள்ளிட்ட தனது எதிரிகளின் திட்டத் துக்கு செக் வைக்கும் விதமாக, "இடைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை' என்று அறிவித்திருக் கிறார். இடைத்தேர் தல் விசயத்தில் ஒவ் வொருநாளும் ஒவ்வொரு ரியாக் சனை கொடுத்துவரும் அண்ணாமலை, அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு என்ற முடிவை வெள்ளிக்கிழமை வாக்கில் அறிவிப்பார் என்கிறார்கள்.''”

"மு.க.அழகிரி தரப்பு உற்சாகத்தில் இருக்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த உதயநிதி, தனது பெரியப்பா மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசி வாங்கி, பலரையும் ஆச்சரியத் தில் ஆழ்த்தினார். அங்கே விருந்து சாப்பிட்ட உதயநிதி, அழகிரியின் மகன் துரைதயாநிதி யுடன் அன்பு பாராட்டினார். மீண்டும் அவர் களுக்குள் நெருக்கம் உருவாகிவிட்டதில் அழகிரி தரப்பு வெகுவாக உற்சாகம் அடைந்திருக்கிறது. வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் துரை தயாநிதிக்கு சீட் வழங்கப்படும் என்கிற தகவல் அவர்கள் மத்தியில் உலவுகிறது. எனவே விரைவில் துரை தயாநிதியை கட்சிக்குள் உதயநிதி கொண்டுவந்துவிடுவார் என் கிறார்கள் தென்மாவட்ட உடன்பிறப்புகள்.''”

"கலைஞருக்கு பேனா சின்னம் வைத் தால் உடைத்தெறிவேன் என்று சொல்லி, பலரின் எதிர்ப்பைச் சம்பாதித் திருக்கிறாரே நாம் தமிழர் சீமான்?''”

"கலைஞரின் நினை விடத்தின் அருகில், வங்கக் கடலுக்குள் அவர் இலக்கிய மாண்பை போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தி.மு.க. அரசு முடிவெடுத்திருகிறது. இது தொடர்பாக 31ஆம் தேதி கலைவாணர் அரங் கத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் உள்ளிட்ட சிலர், கலைஞரின் நினைவாக வைக்கப்படும் பேனா நினைவு சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்போது சீமான், "கடலுக்குள் பேனா சின்னம் அமைத்தால், கடலில் உள்ள பவளப் பாறைகளுக்கு ஆபத்து, சுற்றுச்சூழல் கெட்டுப்போகும்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போனவர், திடீரென்று, ஒருபடி மேலேபோய் "கலைஞருக்கு கடலுக்குள் பேனா சின்னம் அமைத்தால், நான் அதை உடைப்பேன்' என ஏகத்துக்கும் பிளிறினார்.''”

ff

"இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தானே ஏற்பாடு செய்திருந்தது?''

"ஆமாங்க தலைவரே, ஆனாலும் கூட்டம் வேண்டுமென்றே பலவீனமாக, எல்லோ ரும் நுழையும் படி சில அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக சுற்றுச்சூழல் பற்றிய மதிப்பீட்டு ஆய் வறிக்கையின் அடிப்படையிலேயே கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கையின் மீதான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமை யில் மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களைக் கொண்டு நடத்தப்படுவதாகும். ஆனால், வெளியிடப் பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு ஆய் வறிக்கை தமிழில் இல்லை. இதனா லேயே பல சர்ச்சை கள் எழுகின்றன. இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடலுக்குள் பேனா சின்னம் அமைப் பதற்கு அனுமதி தந்துவிட்டு, சீமான் போன்றவர்களையும் மீனவர் அமைப்புகளையும் தூண்டிவிட்டு எதிர்ப்பு அரசியலை அவர்கள் மூலம் செய்கிறது. இந்த நுண்ணரசியலை புரிந்துகொண்டு தி.மு.க. அரசும் தி.மு.க.வும் இதை கவனமாக முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஒட்டுமொத்தத்தில், இந்தக் கூட்டத்தில் டெல்லிக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் சீமான் என்றும் சொல்கிறார்கள்.''”

"எடப்பாடி திடீர்னு தங்கள் இடைத் தேர்தல் வேட்பாளர் தென்னரசுன்னு அறிவித்திருக்கிறாரே..''”

"இரட்டை இலை சின்னத்தை இந்த இடைத்தேர்தலுக்கே வாங்கிவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இது குறித்து தேர்தல் ஆணையமும், ஓ.பி.எஸ்.ஸும் பதிலளிக் கும்படி உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. அன்று நீதிமன்றம் கொடுக்கும் இடைக்கால உத்தரவைப் பார்த்துவிட்டு, தங்கள் தரப்பின் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தார் எடப்பாடி. இந்த நிலையில்... "எங்கள் முடிவுக்காக அ.தி.மு.க. காத்திருக்கட்டும்'’ என நாராயணன் திருப்பதி மூலம் பா.ஜ.க. வாயை இளக்காரமாகத் திறக்க, அதை எடப்பாடி ரசிக்க வில்லை. அதனால் "பா.ஜ.க.வுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை' என்று காட்டுவதற்காகவே, திடீரென 1ஆம் தேதியே முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுதான் தங்கள் வேட்பாளர் என்று எடப்பாடி அறிவித்திருக்கிறாராம்.''”

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலை உன்மூலம் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், சென்னை சைபர் க்ரைமில், பா.ஜ.க.வின் வார் ரூம் செக்ஸ் லீலைகள் குறித்து புகார் கொடுத்துள்ளார். அப்போது அண்ணா மலையின் லீலைகள் பற்றியும், அவர் தூண்டுதலில் தன் படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டார்கள் என்றும், பா.ஜ.க.வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணையை நடத்தியிருக்கிறார் சைபர் க்ரைம் உதவி கமிஷனர் வேல்முருகன். காயத்ரி அவரிடம் பல்வேறு ஆதா ரங்களையும் கொடுத்துள்ளாராம். விரைவில் பா.ஜ.க. தரப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்போகிறதாம் போலீஸ்.''’

nkn040223
இதையும் படியுங்கள்
Subscribe