ராங்கால்- எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்! அதிரடிக்கு பதிலடி! தி.மு.க. அட்டாக்!

dd

"ஹலோ தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைவைத்து, தி.மு.க. அரசோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது பவர் யுத்தத்தை ஆரம்பிச்சிருக்கு.''”

"ஆமாம்பா, தி.மு.க.வும் அதுக்கு பதிலடி கொடுக்குற விதத்தில், அடிச்சி விளையாட ஆரம்பிச்சிடுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, ’ஓடுறவனக் கண்டா தொரத்துறவனுக்குத் தொக்குங்குற’ கதையா, இங்க இருக்கும் தி.மு.க. அரசை, பழைய அ.தி.மு.க. அரசைப்போல் தனக்கு ஏவல் பண்ணும் அரசாக மாற்றிவிடணும்னு, டெல்லி நினைத்தது. ffஅதுக்காகத்தான் அது கவர்னர் மூலமா தனது இடைஞ்சல் அஸ்திரத்தைத் தொடர்ந்து பிரயோகம் பண்ணி வந்தது. தி.மு.க. அரசோ, அடிபணிவதற்கு பதிலா, அந்த கவர்னருக்கே எல்லா வகையிலும் ஆப்பு வச்சி, டெல்லியின் ஆதிக்க மனோபாவத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் மீது கைவைத்தால், அது பதறிப்போய் இறங்கி வந்துடும்னு நினைச்சி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டெல்லி, தன் பலப்பிரயோ கத்தைக் காட்டி இருக்கு. ஆனால், ஸ்டாலின் தலைமை யிலான சுயமரியாதை ரத்தம் பாயும் தி.மு.க. அரசோ, டெல்லியைத் திருப்பியடிக்க ஆரம்பிச் சிடிச்சி.'' ”

"ஆமாம்பா, முதல்கட்டமா ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு தி.மு.க. அரசு. கடிவாளம் போட்டுருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, இதுவரை ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபி.ஐ., எந்தக் கேள்வியும் இல்லாமல் தமிழகத்துக்குள் சுதந்திரமாக நடமாடி வந்தது. தான் குறிவைக்கும் நபர்கள் மீதெல்லாம் அது விருப்பம்போல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. முதற்கட்டமாக, தமிழகத்தில் சி.பி.ஐ.க்கு இருந்த சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், மாநில அரசைக் கேட்காமல் அது தமிழ்நாட்டிற்குள் எதையும் செய்யக் கூடாதுங்கிற அதிகார வரம்பை, ஸ்டாலின் அரசு ஏற்படுத்தி இருக்கு. இதன்மூலம் தங்கள் தரப்பு மீதும் சி.பி.ஐ. பாய முடியாதபடி அதன் கையில் விலங்கு பூட்டி, தற்காப்பு அரணை தி.மு.க. அரசு ஏற்படுத்திக்கொண்டுவிட்டது. அதோடு, தமிழகம் முழுக்க இருக்கும் பா.ஜ.க.வினர் மீதான வழக்குகளை எல்லாம் தூசு தட்டும்படி, இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் காவல்துறைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கு. அந்த வகையில் ஆருத்ரா விவகாரத் தில் சிக்கியிருக்கும் ஹரீஸ் உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர் கள் மீதான பிடி இறுகப் போகுது. பா.ஜ.க.வுக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் தொடர் பான ஒரு வில் லங்கத்தையும் தி.மு.க. அரசு தற்போது கையில் எடுக்கப்போகுது.''”

"அ.தி.மு.க. தரப்புக்கும் ஷாக் கொடுக்க தி.மு.க. அரசு தயாராகுதே?''”

stalin

"உண்மைதாங்க தலைவரே, செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கையைக் கண்டு பூரிச்சிப்போய

"ஹலோ தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைவைத்து, தி.மு.க. அரசோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது பவர் யுத்தத்தை ஆரம்பிச்சிருக்கு.''”

"ஆமாம்பா, தி.மு.க.வும் அதுக்கு பதிலடி கொடுக்குற விதத்தில், அடிச்சி விளையாட ஆரம்பிச்சிடுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, ’ஓடுறவனக் கண்டா தொரத்துறவனுக்குத் தொக்குங்குற’ கதையா, இங்க இருக்கும் தி.மு.க. அரசை, பழைய அ.தி.மு.க. அரசைப்போல் தனக்கு ஏவல் பண்ணும் அரசாக மாற்றிவிடணும்னு, டெல்லி நினைத்தது. ffஅதுக்காகத்தான் அது கவர்னர் மூலமா தனது இடைஞ்சல் அஸ்திரத்தைத் தொடர்ந்து பிரயோகம் பண்ணி வந்தது. தி.மு.க. அரசோ, அடிபணிவதற்கு பதிலா, அந்த கவர்னருக்கே எல்லா வகையிலும் ஆப்பு வச்சி, டெல்லியின் ஆதிக்க மனோபாவத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் மீது கைவைத்தால், அது பதறிப்போய் இறங்கி வந்துடும்னு நினைச்சி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டெல்லி, தன் பலப்பிரயோ கத்தைக் காட்டி இருக்கு. ஆனால், ஸ்டாலின் தலைமை யிலான சுயமரியாதை ரத்தம் பாயும் தி.மு.க. அரசோ, டெல்லியைத் திருப்பியடிக்க ஆரம்பிச் சிடிச்சி.'' ”

"ஆமாம்பா, முதல்கட்டமா ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு தி.மு.க. அரசு. கடிவாளம் போட்டுருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, இதுவரை ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபி.ஐ., எந்தக் கேள்வியும் இல்லாமல் தமிழகத்துக்குள் சுதந்திரமாக நடமாடி வந்தது. தான் குறிவைக்கும் நபர்கள் மீதெல்லாம் அது விருப்பம்போல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. முதற்கட்டமாக, தமிழகத்தில் சி.பி.ஐ.க்கு இருந்த சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், மாநில அரசைக் கேட்காமல் அது தமிழ்நாட்டிற்குள் எதையும் செய்யக் கூடாதுங்கிற அதிகார வரம்பை, ஸ்டாலின் அரசு ஏற்படுத்தி இருக்கு. இதன்மூலம் தங்கள் தரப்பு மீதும் சி.பி.ஐ. பாய முடியாதபடி அதன் கையில் விலங்கு பூட்டி, தற்காப்பு அரணை தி.மு.க. அரசு ஏற்படுத்திக்கொண்டுவிட்டது. அதோடு, தமிழகம் முழுக்க இருக்கும் பா.ஜ.க.வினர் மீதான வழக்குகளை எல்லாம் தூசு தட்டும்படி, இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் காவல்துறைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கு. அந்த வகையில் ஆருத்ரா விவகாரத் தில் சிக்கியிருக்கும் ஹரீஸ் உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர் கள் மீதான பிடி இறுகப் போகுது. பா.ஜ.க.வுக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் தொடர் பான ஒரு வில் லங்கத்தையும் தி.மு.க. அரசு தற்போது கையில் எடுக்கப்போகுது.''”

"அ.தி.மு.க. தரப்புக்கும் ஷாக் கொடுக்க தி.மு.க. அரசு தயாராகுதே?''”

stalin

"உண்மைதாங்க தலைவரே, செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கையைக் கண்டு பூரிச்சிப்போயிருக்கும் அ.தி.மு.க. எடப்பாடி மீதும் கோபம் கொண் டிருக்கிறது தி.மு.க. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பல வகையிலும், அன்றைய முதல்வர் எடப்பாடியின் பெயர் அடிபட்டது. குறிப்பாக, சயான் உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பே எங்களை க்ரைமில் களமிறக்கியது எடப்பாடிதான்னு ஏற் கனவே பகிரங்கமாக சொல்லியிருந்தனர். இருந்த போதும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு இந்த விவகா ரத்தை அவசரகோலத்தில் கையாளாமல், விசாரணை தன் பாதையில் போகட்டும்னு இதுநாள்வரை தி.மு.க. அரசு, அமைதியாக இருந்தது. இப்போது பா.ஜ.க.வின் பினாமி போலவே தன்னைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடிக்கு அதிரடி ஷாக் கொடுக்கும் வகையில், கொடநாடு வழக்கை அதிரடி பாணியில், வேறொரு விசாரணைக் குழு மூலம் விசாரிக்கலா மாங்கிற ஆலோசனையிலும் தி.மு.க. இறங்கியிருக்கு. இதற்கிடையில் தங்களுக்கு நேரெதிராகவே செயல்படும் அண்ணாமலையை பா.ஜ.க. தட்டி வைக்காததில் எடப்பாடிக்கும் வருத்தம் இருக்கிறது. குறிப்பாக மாஜி மந்திரி ஜெயக்குமாருக்கு, தன் மகனின் வடசென்னைத் தொகுதியைக் குறிவைத்தி ருக்கும் பா.ஜ.க. மீது ஏகக் கடுப்பாம்.''”

"அதிரடியான ரெய்டு நடவடிக்கைகளைப் பார்த்தும் கூட, மிச்சமிருக்கும் மாஜி மந்திரிகள் திருந்தலையேப்பா?''”

"நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுதுங்க தலை வரே, உலக வங்கியின் நிதி உதவியுடன் மேலூர் டூ திருப்பத்தூர் சாலைப் பணிகள் நடைபெற்றன. இதற்கு கிராவல்மண் ஒப்பந்தம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சாய் கிரிதம் இன்பிரா பிரைவேட் லிட். மற்றும் எஸ்பில் ஆகிய நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சாலைப்பணி கள் எப்போதோ நிறைவடைந்த நிலையில், போலியாக ரமேஷ் என்பவரின் பெயரில் அதே திட்டத் திற்கு மண் எடுப்பதாகக் காட்டிக்கொண்டு, சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயல் பெரிய கண்மாயிலிருந்து சட்டவிரோதமாக ஏறத்தாழ ஒன்னே முக்கால் லட்சம் கன அடிக்கு மேல், கிராவல் மண்ணை சுரண்டி எடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர். இதை வெவ்வேறு பணிகளுக்கு விற்று கல்லா கட்டி வந்தார். இதுகுறித்து லோக்கல் தி.மு.க. தரப்பு புகார் எழுப்பியதையடுத்து, தற்போதைய கலெக்டர் ஆஷாஅஜித், விஜயபாஸ் கர் தரப்பு அங்கே மண் எடுப்பதைத் தடுத்து நிறுத்திவிட்டார். இந்த மண் திருட்டு மூலம் ஏறத்தாழ 5 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, புதிய லீலையில் இறங்கியிருக் கும் விஜயபாஸ்கர் மீது, அதிரடி நடவடிக்கை பாயும் என்கிறது அதிகாரிகள் தரப்பு.''”

"ஒருவழியாக மாநில தகவல் ஆணையத்துக் குப் புதிய தலைமை ஆணையர் நியமிக்கப்பட்டி ருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, நீண்ட மாதங்களாக நிரப்பப்படாமல் காலியாகவே இருந்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணை யர் பதவி இப்போது நிரப்பப்பட்டிருக்கிறது. இதன்படி ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஷகில் அக்தரை நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், ஆணையத்தின் ஆணையர் களாக ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், பிரியா குமார், டாக்டர் திருமலை முத்து, டாக்டர் செல்வராஜ் ஆகிய 4 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த ஆணை யத்தின் தலைமை ஆணையராக தலைமைச் செயலாளர் இறையன்பு நியமிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தனக்கு அதில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துவிட்டதால், அந்த நாற்காலி ஷகீல்அக்தருக்குக் கிடைத்திருக்கிறது.''

"ஏற்கனவே இதன் தலைமை ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். இருந்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, தலைமை ஆணைய ராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால், கடந்த ஆண்டு இந்தப் பதவியில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், இத்தனை நாளாக தலைமை ஆணையர் நியமிக்கப்படாமலே இருந்தது. அதனால், ஆணையத்தின் விசாரணைக்கு வந்த பல வழக்குகள் தேங்கிவிட்டன. இந்த நிலை யில் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், தமிழ்ச்செல்வன், பிரதாப் குமார், முத்துராஜ், தனசேகரன், ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக் காலமும் சில மாதங்களுக்கு முன்பு முடிந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் எடப்பாடி ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.''”

"இந்த ஆணைய நியமன விவகாரத்திலும் கவர்னர் ரவி, தனது ஜவ்வு மிட்டாய் வேலையைக் காட்டினாரே?''”

"ஆமாங்க தலைவரே, முதலில் இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று தகவல் ஆணையர்களுக்கான பட்டியலை தமிழக அரசு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. தலைமை ஆணையரின் தேர்வு பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறி, அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவைத்தார் கவர்னர். இந்த நிலையில், இறையன்புவின் முடிவுக்காக காத்திருந்த முதல்வர், கடைசியில் அவர் விரும்பாததால், தலைமை ஆணையர் பதவிக்கு ஷகீல்அக்தரை செலக்ட் செய்து, அவர் பெயரோடு மீண்டும் பட்டியலை கவர்னரின் பார்வைக்கு அனுப்பிவைக்கச் செய்தார். இதன் பிறகும் அந்தக் கோப்பினை ஒரு மாதம் வரை ஜவ்வாய் இழுத்துக் கிடப்பில் போட்டுவைத்திருந்த கவர்னர் ரவி, கடந்த 13 ஆம் தேதிதான், அந்த ஃபைலில் கையெழுத்திட்டு அனுப்பினார். இப்படித்தான் தகவல் ஆணையத்தின் நியமனம் நடந்திருக்கு. இனி இதில் தேங்கியிருக்கும் வழக்குகள் விரைவில் ஃபைசல் ஆகும்ங்கிற நிம்மதிப் பெருமூச்சு, ஆணையத் தரப் பிடமிருந்து எழுந்திருக்கு.''”

"ஆனாலும் இந்த நியமனம் குறித்த சர்ச்சையும் சுழன்றடிக்குதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, நியமிக்கப்பட்டி ருக்கும் புதிய ஆணையர் களில் ஒருவரான பிரியா குமார், பலரும் நினைப் பதுபோல் பெண்ணல்ல. இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த பிரதாப்குமாரின் சகோதரர் ஆவார். இந்த பிரதாப், அ.தி.மு.க. மாஜி மந்திரி ஜெயக்குமாருக்கு நெருக்க மானவர். அ.தி.மு.க.வில் கவுன்சிலராகவும், மண்டல குழுத் தலைவராகவும் இருந்தவர். ஜெயக்குமாரின் சிபாரிசில் டி.என். பி.எஸ்.சி.யின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டபோது, அரசியல்வாதி களுக்கு அதில் இடமில்லை என்று, அவர் நீக்கப்பட்டார். அப்படிப்பட்ட வரைத் தான் தகவல் ஆணையராக எடப்பாடி அரசு அப்போது நியமித் தது. இப்போது அவர் சகோதரரான பிரியாகுமார், ஆணையராக ஆக்கப் பட்டிருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவியைக் கொடுப்பது ஏன் என்ற கேள்விதான் இப்போது சர்ச்சையாக எழுந்திருக் கிறது.''”

"பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், பெரும் சிக்கலில் சிக்கவைக்கப் பட்டிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மலர்விழி, தர்மபுரியில் கலெக்டராக இருந்தார். அப் போது கிராம ஊராட்சிகளுக்கு தேவையான சொத்துவரி, குடிநீர்வரி உள் ளிட்ட பல்வேறு வரிகளுக்கான ரசீதுகளை அச்சடிக்கும் காண்ட்ராக்ட் டை, தனக்கு நெருக்கமான கிரெசண்ட் மற்றும் நாகா ட்ரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சட்டத்திற்கு புறம் பாக கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1 கோடி 31 லட்ச ரூபாய் அளவுக்கு மலர்விழி, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவானது. அதன் அடிப் படையில்தான், அவர் தொடர்பான இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. அதனால், அவரை சஸ்பெண்ட் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. மலர்விழியோ, தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், பல உண்மைகளை வெளிப்படையாகப் பேச தயாராகி வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.''”

rr

"அப்படி என்ன உண்மையை அவர் சொல்லப்போகிறாராம்?''’

"மலர்விழி நிரபராதியாம். இந்த விவகாரத் தில் அவர் சில முக்கிய புள்ளிகளால் சிக்க வைக்கப் பட்டிருக்கிறாராம். ரசீது புத்தகங்களை அடித்த கிரெசண்ட் மற்றும் நாகா ட்ரேடர்ஸ் கம்பெனிகள், தர்மபுரியில் மட்டுமல்லாமல் மேலும் 10 மாவட்டங் களில் இந்த புத்தக ரசீதுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளனவாம். அதனால் அவற்றின் மாவட்ட கலெக்டர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் களாம். அப்படி இருக்க, அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, நிரபராதியான மலர்விழியை மட்டும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார்கள் என்று அவர் தரப்பு கொதிக்கிறது.''”

"அரசின் நில நிர்வாகத் துறையிலும் சலசலப்பு கேட்குதே?''”

"ஆமாங்க தலைவரே, நில நிர்வாகத் துறை யின் இணை ஆணையராக இருப்பவர் செந்தாமரை ஐ.ஏ.எஸ்.! இவருடைய மேலதிகாரியாக இருப்பவர் நில நிர்வாகத் துறையின் ஆணையர் நாகராஜன் ஐ.ஏ.எஸ்.! சட்டத்திற்குப் புறம்பாக, ஒரு உத்தரவை பிறப்பிக்கச் சொல்லி செந்தாமரைக்கு உத்தரவிட் டாராம் நாகராஜன். அதனை ஏற்க மறுத்தாராம் செந்தாமரை. இதனால், அவர் மீது கோபம் கொண்ட நாகராஜன், பெண் அதிகாரி என்பதாலும் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், மிக மோசமான தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வசைபாட, பிரச்சனை பூதாகரமானது. அதோடு தொடர்ந்து பலவகையிலும் நாகராஜன் அந்த செந்தாமரைக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம். இது குறித்த புகார், அரசுக்குச் சென்றிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் இப்படிப்பட்ட சாதி வன்மம் தலை யெடுப்பது பலரையும் கவலையில் ஆழ்த்துது. இந்த விவகாரமும் விரைவில் டெல்லி வரை போகும் என்கிறது கோட்டைத் தரப்பு.''”

"நானும் எனக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அரசியலில் எப்பவுமே லைம் லைட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாராம் சசிகலா. அதனால் தமிழகம் வந்த அமித் ஷாவை சந்தித்து, அரசியலில் தான் ஓர் அசைக்க முடியாத சக்தி என்று, தன் அரசியல் எதிரி களுக்குக் காட்ட அவர் விரும்பினார். அந்த சந்திப்பிற்காக பல்வேறு முயற்சி களை அவர் ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு மூலம் எடுத்தார். அமித்ஷா சென்னை வந்த அன்று இரவு, எப்படியும் சந்தித்துவிடலாம் என்று சொல்லி வந்த அமித்ஷாவும், கடைசி நேரத்தில், சந்திக்க நேரம் இல்லை என்று கைவிரித்துவிட்டார். இதில் சசிகலா பலத்த அப்செட்டாம்.''

_____________

இறுதிச் சுற்று!

ff

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணை யத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், செந்தில்பாலாஜியை 15-06-2023, வியாழக்கிழமை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளார் ஆணையத்தின் உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கண்ணதாசன். இது குறித்துப் பேசிய அவர், "மிகவும் சோர்வாக இருக்கிறார். அமலாக்கத்துறையினர் தன்னை தரதரவென இழுத்துச் சென்றதால் தலையில் அடிபட்டிருப்பதையும், தனக்கு இதய நோய் இருப்பதையும், தன்னை துன்புறுத்திய அதிகாரிகளின் பெயரையும் சொல்லியிருக்கிறார். இந்த விசயத்தில் ஆணையம் இறுதி முடிவெடுக்கும். நெஞ்சுவலி இருப்பதால் அவரால் அதிகம் பேச முடியவில்லை'' என்கிறார் கண்ணதாசன். இந்தநிலையில், "அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு குற்றவாளியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் நேரில் சந்தித்தது சட்டவிதிகளுக்கு முரணானது' என அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

- இளையர்

nkn170623
இதையும் படியுங்கள்
Subscribe