போதை ஏற்றி பாலியல் கொடூரம்! தமிழகத்தில் பரவும் விஷ கலாச்சாரம்!

child

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்த கொடூர மிருகம். சென்னை பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்குக் குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்தது வட்டச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த இன்னொரு மிருகம். ""அவன் மெண்டல் சார். அதுக்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்கான். விட்டுடுங்க. அவன், சைடுலேர்ந்து என்ன வாங்கித்தரணுமோ வாங்கித்தர்றேன்'' என்று விசாரணை போலீஸிடம் ’பேரம்’ பேசியது. விசாரணை அதிகாரி எஸ்.ஐ. பாலு என்கிற மூன்றாவது மிருகம், "பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்குத்தான் அவமானம்' எனப் பாடம் எடுத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டது. 20 வருடங்களுக்கு முன்னால் நடந்த இக்கொடூர பாலியல் குற்றத்திலிருந்து தண்டிக்கப்படாமல் தப்பவைக்கப்பட்ட அந்த மிருகம் வேறு யாருமல்ல. தற்போது, அயனாவரத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட மிக முக்கியமான குற்றவாளியான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார்தான்.

child

கடந்த 15-ந்தேதி மாலை 6 மணிக்கு அரசு கே.எம்.சி. மருத்துவமனை மகளிர்நலப்பிரிவு பரபரப்பானது. அதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர்களோ, ""காவல்துறை வாகனங்களுக்கு நடுவே அழைத்துவரப்பட்டாள் சிறுமி நிர்பயா (பாலியல் வன்புணர்வுக்காளாகும் ஒவ்வொருவரும் நிர்பயாக்கள்தான். அதனால்தான் பெயர் மாற்றப்பட்டு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது). ’நான்கு நாட்களுக்கு முன்- அதாவது 11-ந்தேதி 10 பேர் ரேப்’ செய்திருக்கிறார்கள் என்ற காவல்துறையின் புகாருடன் வந்தவரை, மகப்பேறு மருத்துவர் கவிதாதான் மருத்துவ ரீதியாக பரிசோதித்தார். என்ன நடந்தது? என்று கேட்டபோது சிறுமி மௌனமாகவே இருந்திருக்கிறார். காவல்நிலையத்தில் எழுதிய புகாரைப் படித்துக் காண்பித்தபோது அதெல்லாம் உண்மைதான்’என்பதுபோல கண்கலங்கியபடி தலையசைத்திருக்கிறாள். பொதுவாகவே, பாலியல் வன்புணர்வு புகார்களின்போது பெண்களுக்குத் ‘திரை’ பரிசோதனையும் செய்யப்படும். திரை நன்றாக இருந்தால் கொடூரமான பாலியல் வன்புணர்வு (Sexual penetration) நடக்கவில்லை என்று சொல்வோம். இதற்கு, "ஹைமென்இண்டேக்ட்' என்று மருத்துவ ரீதியாக சொல்வார்கள். அதுவே, 12 வயது கு

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்த கொடூர மிருகம். சென்னை பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்குக் குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்தது வட்டச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த இன்னொரு மிருகம். ""அவன் மெண்டல் சார். அதுக்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்கான். விட்டுடுங்க. அவன், சைடுலேர்ந்து என்ன வாங்கித்தரணுமோ வாங்கித்தர்றேன்'' என்று விசாரணை போலீஸிடம் ’பேரம்’ பேசியது. விசாரணை அதிகாரி எஸ்.ஐ. பாலு என்கிற மூன்றாவது மிருகம், "பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்குத்தான் அவமானம்' எனப் பாடம் எடுத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டது. 20 வருடங்களுக்கு முன்னால் நடந்த இக்கொடூர பாலியல் குற்றத்திலிருந்து தண்டிக்கப்படாமல் தப்பவைக்கப்பட்ட அந்த மிருகம் வேறு யாருமல்ல. தற்போது, அயனாவரத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட மிக முக்கியமான குற்றவாளியான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார்தான்.

child

கடந்த 15-ந்தேதி மாலை 6 மணிக்கு அரசு கே.எம்.சி. மருத்துவமனை மகளிர்நலப்பிரிவு பரபரப்பானது. அதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர்களோ, ""காவல்துறை வாகனங்களுக்கு நடுவே அழைத்துவரப்பட்டாள் சிறுமி நிர்பயா (பாலியல் வன்புணர்வுக்காளாகும் ஒவ்வொருவரும் நிர்பயாக்கள்தான். அதனால்தான் பெயர் மாற்றப்பட்டு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது). ’நான்கு நாட்களுக்கு முன்- அதாவது 11-ந்தேதி 10 பேர் ரேப்’ செய்திருக்கிறார்கள் என்ற காவல்துறையின் புகாருடன் வந்தவரை, மகப்பேறு மருத்துவர் கவிதாதான் மருத்துவ ரீதியாக பரிசோதித்தார். என்ன நடந்தது? என்று கேட்டபோது சிறுமி மௌனமாகவே இருந்திருக்கிறார். காவல்நிலையத்தில் எழுதிய புகாரைப் படித்துக் காண்பித்தபோது அதெல்லாம் உண்மைதான்’என்பதுபோல கண்கலங்கியபடி தலையசைத்திருக்கிறாள். பொதுவாகவே, பாலியல் வன்புணர்வு புகார்களின்போது பெண்களுக்குத் ‘திரை’ பரிசோதனையும் செய்யப்படும். திரை நன்றாக இருந்தால் கொடூரமான பாலியல் வன்புணர்வு (Sexual penetration) நடக்கவில்லை என்று சொல்வோம். இதற்கு, "ஹைமென்இண்டேக்ட்' என்று மருத்துவ ரீதியாக சொல்வார்கள். அதுவே, 12 வயது குழந்தை நிர்பயாவை பரிசோதித்தபோது Virginity – hymen not intact என்று இருந்தது. அப்படியென்றால், "ரேப்' நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். திரையில்லாமல் போக வேறு சில காரணங்களும் மருத்துவ ரீதியாக உண்டு. அதனால் சிறுமியை யார் யார் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். சிறுமிகளை பாலியல் நோக்கத்துடன் தொடுதலே சட்டப்படி குற்றம்தான். அதனால், சிறுமியின் வாக்குமூலமும் டி.என்.ஏ. பரிசோதனையும்தான் கொடூரன்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும்'' என்கிறார்கள் ரௌத்திரத்துடன்.

நாம் மேலும் விசாரித்தபோது, ""சிறுமிக்கு காது சரியாக கேட்காது. நல்ல மனநலம் கொண்டவர். மிகவும் கலகலப்பானவர். வெள்ளந்தியாக பேசக்கூடியவர். இதைத்தான் ஏற்கனவே காமக்கொடூர மிருகனாக இருந்த லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்'' என்கிறார்கள்.

child

இதுகுறித்து, காவல்துறையினரிடம் நாம் கேட்டபோது, “""அப்பா சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்ல கடை வெச்சிருக்கிறதால காலையில போனா ஈவ்னிங்தான் வருவார். அம்மா ஹவுஸ் வைஃப். பெரிய பொண்ணு வெளியூர்ல காலேஜ் படிச்சிக்கிட்டிருந்திருக்கா. லீவுல வந்த அக்காவோ சிறுமி நிர்பயாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை பார்த்துருக்கா. குறிப்பா, அங்க இருக்கிற செக்யூரிட்டிஸ், ப்ளம்பர்ஸ் உள்ளிட்ட வேலையாட்கள் சிறுமிகிட்ட ரொம்ப சகஜமா பழகுறதை நோட் பண்ணிருக்கா. சிறுமியோ ஏதோ ஒரு சோகத்துல இருக்கிறதையும் நோட் பண்ணிருக்கா.

ஒரு கட்டத்துல டவுட் வந்து சிறுமிகிட்ட கேட்கும்போதுதான் அப்யூஸ் பண்ணப்படுறதை லைட்டா சொல்லியிருக்கா சிறுமி. ஷாக்கான அக்காவோ அம்மா அப்பாகிட்ட சொல்ல… அப்புறம்தான், கொஞ்சம் கொஞ்சமா விஷயம் தெரிஞ்சிருக்கு. கொடுமை என்னன்னா… ஆபாச வீடியோக்களை அந்தச் சிறுமிக்கு காண்பித்து கொடுமைப்படுத்தியிருக்கானுங்க பாவிங்க. ஒரு கட்டத்துல அந்தச் சிறுமியை போதைக்கும் தங்களோட வெறிக்கும் "அடிக்ட்'டாவே மாத்தியிருக்கானுங்க. பதறிப்போன சிறுமியின் அப்பா தனக்கு தெரிஞ்ச ஹையர் அஃபிஷியல் மூலமா அயனாவரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்ததால அத்தனை பேரையும் தூக்கினோம்.

childஅபார்ட்மெண்டிலுள்ள அத்தனை வேலையாட்களையும் அழைத்து நிற்கவைத்து கேட்டபோது, யார் யாரெல்லாம் அப்யூஸ் பண்ணினாங்கன்னு சிறுமி காண்பிச்சிருக்கா. அந்த அடிப்படையிலதான் அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணினோம். குறிப்பா, 6 பேர்தான் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் கொடூரம் செய்ததா வாக்குமூலம் கொடுத்திருக்கானுங்க. எந்தெந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்பதை அபார்ட்மெண்டிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்துக்கொண்டிருக்கிறோம். கேமரா இல்லாத பகுதிகள், ஆள் இல்லாத வீடுகள் இங்கெல்லாம் சிறுமியை அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். ரவிக்குமார் ஏற்கனவே மருத்துவமனையில் வேலை பார்த்ததால், வலி தெரியாத மருந்துகள் எதையேனும் பயன்படுத்தி சிறுமியைக் குதறியிருக்கிறார்களா என்பதையும் விசாரிக்கிறோம். குறிப்பாக, சிறுமியின் தாயிடமும் நாங்கள் நிறைய விவரம் பெற வேண்டியுள்ளது.

பொதுவாக, பள்ளிக்குச்செல்லும் பெண் பிள்ளைகள் வீடு வந்து சேரும்வரை தாயின் கவனமெல்லாம் அதிலேயேதான் இருக்கும். ஆனா, 12 வயது பெண்குழந்தைக்கு இத்தனை கொடூரம் நடக்கும்வரை அவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. ஊருக்குப்போன அக்கா வந்த ஒரு சில நாட்களிலேயே சிறுமியின் மாற்றத்தை தெரிஞ்சுக்கிற அளவுக்கு இருக்கும்போது, கூடவே இருக்குற தாயால ஏன் கவனிக்க முடியாமல் போனது? அவருக்கும் ஏதாவது மிரட்டல் இருந்ததான்னு விசாரிச்சுக்கிட்டிருக்கோம். ப்ளாக்மெயில் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்காங்களாங்கிற கோணத்திலும் விசாரிக்கிறோம். சம்பந்தப்பட்ட அக்யூஸ்டுகளை தப்புவிக்கும் கட்டப்பஞ்சாயத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் நமக்கு தெரிந்த காக்கி.

இதுகுறித்து நம்மிடம் பேசும் குழந்தைகள் நலக்குழுமத்தின் சென்னை மாவட்ட இயக்குநர் ஷீலாவோ, ""குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலே அதுகுறித்து காவல்துறைக்கு புகார் வந்தவுடன் குழந்தைகள் நலக்குழுமத்திற்குத்தான் தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால், எங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் எந்த நீதிபதியிடம் அழைத்துசெல்ல வேண்டும் என்ற குழப்பம் போலீஸுக்கு வந்துவிட்டது. உங்களுக்கு தெரியாமல் இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தது எப்படின்னு கேட்டா, பதில் சொல்லாம அழுதுக்கிட்டே இருக்காங்க சிறுமியோட அம்மா. மேலும், குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது எங்களது கடமை. ஆனால், ‘எங்கள் குழந்தையை நாங்களே பார்த்துக்குறோம்’ என்று சொல்லிவிட்டார்கள்'' என்றார்.

child

66 வயது ரவிக்குமார், 54 வயது முருகேஷ், 60 வயது பரமசிவம், 23 வயது ஜெய்கணேஷ், 36 வயது பாபு, 50 வயது தீனதயாளன், 23 வயது அபிஷேக், 60 வயது சுகுமாறன், 58 வயது இறால் பிரகாஷ், 32 வயது ராஜா, 23 வயது சூர்யா, 32 வயது சுரேஷ், 26 வயது ஜெயராமன், 40 வயது ராஜசேகர், 55 வயது குணசேகர், 42 வயது உமாபதி உள்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டு கொலைமுயற்சி, அச்சுறுத்தல், போதை மருந்து கொடுத்து காயம் ஏற்படுத்துதல், குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் என மரண தண்டனை கொடுக்கும் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சைதாப்பேட்டையிலுள்ள நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட…-சிறுமியை சீரழித்த கொடூரன்களை விடக்கூடாது என சட்டக்கல்லூரி மாணவர்களும் வழக்கறிஞர்களும் அவர்களை கொடூரமாக தாக்க ஆரம்பித்தார்கள். காவல்துறையால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்மூடித்தனமான தாக்குதலால் அந்த இடமே அதிர்ந்துபோனது. குறிப்பாக, அந்த கொடூரன்களின் பிறப்புறுப்பில் தாக்கியதால் "அய்யோ அம்மா' என்ற அலறல் சப்தத்தால் அந்த இடமே அலறியது. சிறுமியை சீரழித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயரதிகாரிகள் சொன்னபோதும் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்தளவுக்கு இந்தக் கொடூர நிகழ்வு தமிழகத்தை உணர்வு ரீதியாக உலுக்கியுள்ளது.

17 பேரை கைது செய்திருந்தாலும் முக்கியமான 6 பேரின் விந்தணுவை பரிசோதனை செய்ய இருக்கிறது காவல்துறை. மீண்டும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட இருக்கிறார் சிறுமி. இந்த கொடூரன்கள் மட்டுமே அச்சிறுமியை குதறியிருக்கிறார்களா மேலும் பல மிருகங்களும் இருக்கிறதா என விசாரிக்கிறது காவல்துறை.

சென்னையில் சிறுமி என்றால் திருவண்ணாமலையில் வெளிநாட்டுப் பெண்ணை போதை மயக்கத்தில் சீரழித்துள்ளனர். இத்தகைய விஷ கலாச்சாரம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வேகமாகப் பரவி அதிர வைக்கிறது.

-மனோசௌந்தர், ஜீவபாரதி

________________

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண்!

ரஷ்யாவைச் சேர்ந்த அலினா, கடந்த ஜூன் 12-ஆம் தேதி திருவண்ணாமலை வந்திறங்கினார். விசிறி சாமியார் ஆசிரமம் அருகே, தனியார் விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்கினார். அவரது அறை இரண்டு நாட்களாகத் திறக்காமல் போகவே... போலீஸுக்குத் தகவல்போய் அறை திறக்கப்பட்டது. அப்போது அவர் அரைகுறை ஆடையில் மயக்க நிலையில் கிடந்தார். அறையில் கிடந்த சிகரெட் துண்டுகள், ஆணுறை போன்றவை சந்தேகத்தை எழுப்பின.

russia-women

அலினா விவகாரத்தில் போதுமான விளக்கங்கள் கிடைக்காத நிலையில், நமக்குத் தெரிந்த நியாயமான அதிகாரிகளிடம் என்னதான் நடந்ததென விசாரித்தோம். “""பேரடைஸ்ங்கிற அந்த விடுதி மலேசியாவில் உள்ள ஒருவருக்குச் சொந்தமானது. அதனை கீழ்ப்பென்னாத்தூர் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிங்கிற இளைஞர் லீஸுக்கு எடுத்து நடத்துகிறார். அவரது அண்ணன் நீலகண்டன் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.

ஐந்து அறைகள் கொண்ட விடுதியில் ஆன்லைன் மூலம் அறை பதிவுசெய்து தங்கியுள்ளார் அலினா. கடந்த 14-ஆம் தேதி இரவுதான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது. மணிகண்டன் என்பவரது பிறந்தநாளை பாரதி, நீலகண்டன், டிரைவர் வெங்கடேசன், அவரது நண்பர் சிவா ஆகியோர் சரக்கு சாப்பிட்டுக் கொண்டாடியுள்ளனர். அதோடு வேறு போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளனர். மிதமிஞ்சிய போதையில், அலினாவின் அறைக்கதவைத் தட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலையிலும் நினைவு திரும்பாமலிருந்த அலினாவை, சபலத்தில் மீண்டும் ரேப் செய்துள்ளனர்.

பின்பும் அலினா எழாமல் போகவே... பயத்தில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலாத்காரம் நடந்திருப்பதைப் புரிந்துகொண்டு போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நீதிபதி மகிழேந்தி கடந்த 17-ஆம் தேதி மாலை மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்துவிட்டு, “""திருவண்ணாமலையில் இதுபோல் நடப்பது வேதனையாக உள்ளது. பதிவு செய்யாத, முறையற்ற விடுதிகள் குறித்து காவல்துறை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்''’என்றார். ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரி டேவிசனும் நேரில் வந்து விசாரித்துள்ளார்.

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களைக் குறிவைத்து கஞ்சா, ஹெராயின் போதை வஸ்துகள் விற்பனை நடக்கிறது. இது போலீசுக்கும் தெரியும். முறையாக மாமூல் போவதால் கண்டுகொள்வதில்லை''’என்கிறார் ஒரு சமூக சேவகர்.

19-ஆம் தேதி அலினா கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன், பாரதி, நீலகண்டன், வெங்கடேசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளது போலீஸ்.

-து.ராஜா

nkn24-7-2018
இதையும் படியுங்கள்
Subscribe