கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு தனக்கும் அந்த பிரச்சனை இருந்தது என ஒவ்வொரு நடிகைகளாக சொல்லிவருகின்றனர். ஏன் கேரளாவுக்கு போறீங்க? தமிழ்நாட்டிலும் பாலியல் தொல்லை இருக்கிறது, அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினாதான் நடிக்க வாய்ப்பு எனச் சொல்வது இங்கேயும் தொடர்கிறது என்கின்றனர் நடிகைகள். இதுதொடர்பான விவாதங்கள் குறையாத நிலையில்... என்னதான் நடக்கிறது சினிமாவில் என நடிகை குட்டி பத்மினியை சந்தித்தோம்.
ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு பிரபல முன்னணி நடிகைகளில் இருந்து எல்லோரும் தொடக்க காலத்தில் இருந்தே இருக்கிறது என்கிறார்களே?
இல்லை. ஒத்துக்கொள்ள முடியாது. அந்த டைம்ல சினிமா தெய்வீகமாக மதிக்கப்பட்டது. அப்போது உள்ள நடிகைகள் தங்கள் கணவருடன் உள்ளே வந்தார்கள். அந்த டைம்ல இந்த தொல்லை இருந்தது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. இந்த பாலியல் தொல்லை 76, 78களில் ஆரம்பித்து, ஓகோவென வளர்ந்து இனிமேல் அதனை அழிக்க முடியாது என்கிற அளவுக்கு கேன்சர் மாதிரி வந்துவிட்டது.
என்ன இப்படி சொல்லிட்டீங்க? அழிக்கவே முடியாதா?
அழிக்கவே முடியாது.
தடுத்து நிறுத்தணும். கமிட்டி அமைக்கணும் எனச் சொல்கிறார்கள். நீங்க அழிக்கவே முடியாது என்று சொல்கிறீர்களே?
எனக்கு தெரிந்தவரைக்கும் இதனை அழிக்க முடி யாது. அழிக்கணும் என்றால் ஒவ்வொருத்தரும் திருந் தணும். தன் முன்னால் நடிப்பவர்கள் நடிப்புதான் அது, வேறு எதுவும் இல்லை என்று நினைக்கணும். முக்கியமாக இதற்கு ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது நடப்பதற்கு காரணம் மீடியேட் டர்ஸ்தான். என்னைப் பொறுத்த வரை அவர்கள்தான் ரொம்ப பிரைன் வாஷ் பண்ணி உன் வாழ்க்கை போய்விடும், கேரியர் போய் விடும், அங்க பார் அவுங்க நல்லா வந்துட்டாங்க, இவுங்க நல்லா வந்துட் டாங்க, இன்னைக்கு அவுங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்க பாரு, ஒரு படத்துக்கு 10 கோடி வாங்குறாங்க, 15 கோடி வாங்குறாங் கன்னு ஆசை வார்த்தை காட்டி சம்மதிக்க வைக்கிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால் பெரிய வாய்ப்பு வரும் என ஏமாந்த நடிகைகளும் இருக்கிறார்கள்.
இரண்டு பக்கமும் அந்த ஆசை இல்லை யென்றாலும் மீடியேட்டர்ஸ், இடைத்தரகர்கள் தூண்டுவார்கள் என்கிறீர்களா?
ஆமாம். நிறைய பேர் இருக்கிறார்கள். அதைத் தான் என்னிடம் சீரியலில் நடித்த நடிகைகள் சொன்னது. என்னுடைய சீரியலில் நிறைய 17, 18 வயது முடிந்த இளம்பெண்களை அறிமுகம் செய்தேன். எவ்வளவோ பெயர்களை சொல்லிக் கொண்டு போகலாம். ஷூட்டிங் நடக்கிறப்ப இவர்களெல்லாம் அம்மா, அப்பாவோட வருவார் கள். ஒரு பெண் நடத்துகிற புரொடக்ஷன் ஹவுஸ் என்பதால் எங்களிடம் நடிக்க வரும் பெண்களுக்கு நிறைய தைரியம் சொல்லுவோம். எது நடந்தாலும் தைரியமாக என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தவறாக பேசினார்கள் என்று புகார் வந்தால் மேனேஜர், டைரக்டர்களை வெளியே அனுப்பியிருக்கிறோம். ஆனால் நடிகைகளை வெளியே அனுப்பியது இல்லை.
பல கம்பெனிகளில் இதுபோன்ற பிரச்சனை கள் வந்தால், நடிகைகளை வெளியே அனுப்பி விடு கிறார்கள். நடிகைகளை சீண்டியவர்களை உள்ளே வைத்துக்கொள்கிறார்கள். பல நல்ல புரொடக்ஷன்ஸ் கம்பெனிகள் இருக்கிறது. இல்லை என்று சொல்ல வில்லை. டிவி சீரியலை தாண்டி சினிமாவில் நிறைய நடக்கிறது. மெயின் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். ரொம்ப பிரபலமாகி முக்கிய இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தொல்லை வர வாய்ப்பு இல்லை. அவர்களிடம் வாலாட்ட முடியாது. பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத, முதல் தடவை வாய்ப்பு கேட்டு வருபவர்களுக்கு இந்த பிரச்சனை வர வாய்ப்பு அதிகம்.
ஹிந்தியிலும் நீங்கள் பணியாற்றியிருக் கிறீர்கள்... அங்கு எப்படி?
எல்லா இடத்திலும் இருக்கிறது. பாம்பே சினிமான்னு எடுத்துக்கொண்டால், இது தப்பே இல்லை என்று நினைக்கக்கூடிய பெண்கள் நிறைய வந்துட்டாங்க. இதை ஒரு குறையாக நினைக்கக் கூடிய பெண்கள் குறைந்துவிட்டார்கள். இன் னொரு பக்கம் பார்த்தால் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்களின் வாரிசுகள் நடிக்க வந்துவிட்டார்கள். அவர்களிடம் யாரும் அவ்வளவு சீக்கிரம் வாலாட்ட முடியாது. அந்த வாரிசுகளுக்கு நட்புரீதியாக சிலர் வரலாம். பாய் ப்ரண்ட்டோட நிறைய பேர் வராங்க. அவர்கள் பின்னாளில் திருமணம்கூட செய்துகொள்கிறார்கள்.
அங்கு டிவி சீரியலிலும் பெரிய தொந்தரவு இல்லை. நடிப்பவர்களிடம் காதல் வருகிறது. அந்த ஹீரோவோட தொடர்ந்து நடிப்பதாலேயோ, அந்த டைரக்டர் அல்லது அந்த குரூப்பில் உள்ளவர்களு டன் முதலில் நட்பு, அடுத்து காதலாகி பின்னர் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள். ஒரு சீரியல் முடிந்து இன்னொரு சீரியலுக்கு இரண்டு பேரும் போய்விடுவார்கள். அப்போது அவருக்கு வேறொரு விருப்பம் வந்துவிடுகிறது. ஆனால் இந்த பொண்ணு அவரோட நிறைய நாள் வாழ்ந்ததால் இரண்டு, மூணு அபார்ஷன் பண்ணியிருக்கும். என்னென்னவோ செஞ்சிருக்கும். அவர் பிரிந்து போனதை தாங்கிக்கொள்ள முடியாமல் நடிகைகள் தற்கொலை செய்துகொள்வார்கள். "மீ டூ' வந்ததால் மும்பை டி.வி. சீரியல் கடந்த 6 வருடமாக பாலியல் தொல்லை இல்லை. ஆனால் முன்னுக்கு வரணும் என்பதற்காக எதுக்காக இருந்தாலும் நான் ரெடி என நிறையபேர் அங்க இருக்காங்க. அவுங்களோட இன்ஸ்டாகிராமை பார்த்தாலே தெரியும். விதவிதமாக போஸ், ஆடைகளை கம்மி பண்ணி போஸ் என அந்த மாதிரியான செட் ஆஃப் நடிகைகளும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் டிவி சீரியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
ஒரு காலகட்டத்தில் பாதுகாப்பாக இருந்தது. இப்போது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. "கிருஷ்ணதாசி' சீரியல் நாங்க பண்ணிய போது, பக்கத்து செட்டில் இரண்டு மிகப்பெரிய டைரக்டர்கள். கிருஷ்ண தாசி சீரியலுக்கு ஈகுவலாக போன சீரியல் டைரக்டர்கள் மிகப்பெரிய அளவுக்கு தொந்தரவு கொடுத்தாக நடிகைகள் சொன்னார்கள். புரொடியூசரிடம் போய் சொல்லுங்கன்னு சொன்னதற்கு, சொன்னால் என்னை சீரியலில் இருந்து தூக்கிவிடுவார்கள் என பயந்தார்கள்.
ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு மோகன்லால் ராஜினாமா செய்திருக்கிறார். அவர் செய்தது சரியா?
ராஜினாமா செய்திருக்கக்கூடாது. அந்த பொறுப்பிலிருந்து பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.
கேரவனில் கேமரா இருந்ததாக ராதிகா சொல்லியிருக்கிறாரே?
ராதிகா மேடம் அதனை உடனே வெளியே சொல்லியிருந்தால், பலபேர் உஷாராகி இருப்பார்கள். எத்தனை பேர் அந்த கேரவனில் உடை மாற்றியிருப்பார்கள். எத்தனை பேருக்கு தொடர்ந்து நடந்திருக்கலாம். ராதிகா இதனை முன்பே சொல்லியிருக்கலாம்.
ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர் சில நடிகைகள் கூறும் புகார்களில் உண்மை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அது வெறும் ஒரு ஷோ என்றே கருதுகிறேன் என ஹேமா கமிட்டியில் இடம்பெற்றிருந்த நடிகை சாரதா கூறியிருக்கிறார். அதனைப் பற்றி...
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியே வராமல் போய்விடுமோ என்று புகார் அளித்தவர்கள் பயந்தார் கள். இப்போது வந்துள்ளது. இந்த அறிக்கை வந்த பிறகுதான் தங்களுக்கு நேர்ந்ததை சொல்வதற்கு தைரியம் வந்திருப்பதாக நினைக்கிறேன்.
வாய்ப்பு கிடைக்கும்போது ஒப்புக்கொண்டுவிட்டு, வாய்ப்பு கிடைக்காத காலத்தில் வயதான பிறகு இப்போது புகார் சொல்கிறார்கள் என்ற விமர்சனம் வருகிறதே?
அதுவும் சரிதான். இது ரேப் கிடை யாது. ரேப்புக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது கம்பல்சன். பணிந்தால் தான் உனக்கு வாழ்க்கை என மெண்ட லாக பிரைன் வாஷ் பண்ணி அனுப்புறாங்க.
இந்த வாய்ப்பே வேணாம் என வர முடியாதா?
வரலாம். வந்திருக்க முடியும். எத்தனை பேர் அப்படி வந்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் மறுத்து வருபவர் களுக்கு சினிமாவில் மீண் டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. முன்னுக்கு வரவே முடியாது. நான் எழுதிக்கொடுக்கிறேன். குட்டி பத்மினி என கையெழுத்து போட்டுக் கொடுக்கிறேன்.
அப்படியென்றால் இதற்கு என்னதான் முடிவு?
சரியான தண்டனை கொடுத்தால் ஒழிக்க முடி யும். அரசுதான் அதற்கான முடிவுகளை எடுக்கணும். உரிய தண்டனை கொடுத் தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுங்கன்னு சொல்வ தற்கே பயப்படுவார்கள். கைது நடவடிக்கை இருந் தாலே 50 சதவீதம் கன்ட்ரோல் ஆக வாய்ப்பு உள்ளது. மீடியேட்டர்ஸ் குறைவார்கள்.
நடிகைகள் வேண்டு மென்றே சொல்கிறார்கள் என்ற வாதமும் வைக்கப்படுகிறதே?
அந்த வாதமும் வைக்கப்படுகிறது. இப் போது நிறைய பேர் புகார் சொல்ல ஆரம்பித்திருக் கிறார்கள். கர்நாடகாவிலும், தெலுங்கிலும் நடிகைகள் புகார் சொல்கின்றனர். தெலுங்கில் இந்த பிரச்சனை பெரியதாக இருக்கிறது என்கிறார்கள். துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னுடன் நடுத்தர வயதுடைய ஒரு தெலுங்கு நடிகை வந்தார். அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களைக் கூட அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றார். கேட்கவே கஷ்டமாக இருந்தது.
பெண்கள் பணிபுரியும் எல்லா இடங்களி லும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது. சினிமா நடிகைகளுக்கு மட்டும் இந்த பிரச்சனை வந்தால் பெரிய அளவில் பேசப்படுகிறது ஏன்?
நடிகைகள் என்பதால் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். யூடியூப் சேனல்களில் பெரிய அளவில் வியூஸ் போகிறது என்பதால் பெரிதாக்கு கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு எப்படி தமிழ்நாடே திரண்டு நின்று போராடியதோ, அப்படி கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட விசயத்திற்கு இந்தியாவே அந்த பெண்ணுக்காக நின்றிருக்க வேண்டும். ஏதோ அந்த ஊர்ல அது அரசியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்ம தமிழ்நாட்டுல ஸ்ரீமதி உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களை சொல்லிக் கொண்டே போகலாம். செய்திகளை பார்க்கிறோம். பின்னர் நம்ம பிழைப்பைப் பார்த்து போய்விடு கிறோம். பெண்கள் பணிபுரியும் இடங்களில் மட்டுமல்ல, இப்போது பள்ளி, கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருக்கிறது. பத்மசேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாண நிலையில் பாடம் எடுப்பதாக மாணவிகள் புகார் அளித்ததை பார்த்தோம். கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்ததை பார்த்தோம். ஆனால் அந்த வழக்குகள் என்ன ஆனது என்று தெரிய வில்லை. அந்த ஆசிரி யர்கள் அந்த இடங் களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மல்யுத்த வீராங்கணை கள் தங்க ளுக்கு பதக் கங்களே வேண்டாம், கங்கையில் தூக்கி வீசுவோம் என்ற நிலைக்கு போனார் கள். எல்லா இடத் திலும் பாலியல் தொல்லை இருக்கிறது. அரசுதான் கடுமை யான நடவடிக்கை களை எடுக்கணும்.
டிவி, சினிமா இரண்டிலும் நீண்ட அனுபவம் கொண் டவர் நீங்கள். பெரிய கனவுகளோடு வரும் இளம்பெண்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?
நல்லா படிங்க, நல்ல வேலைக்கு போய் சம்பாதியுங்கள். சினிமாவில் வர காச நல்லா படிச்சி வேலைக்கு போயும் சம்பாதிக்கலாம். சினிமாவுக்கு வராதீங்கன்னுதான் சொல்வேன்.
பணம் சம்பாதிக்க சிலர் வருவாங்க அது வேறு. கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் சினிமாவுக்கு வரணும் என்று நினைப்பார்களே?
சொந்தப் படம் நீங்களே தயாரித்து, நீங்களே நடித்து, நீங்களே ரிலீஸ் பண்ணுங்க. சொந்தப் படம் எடுக்கிற அளவுக்கு உங்களிடம் வசதி இருந் தால் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது.
இதுதான் தீர்வா?
நான் முன்பே சொன்னதுதான். மீடியேட் டர்ஸ்தான் இதற்கு காரணம். எந்த ஒரு ஹீரோவும் வெளிப்படையாக நேராக வந்து கேட்கமாட்டார் கள். அவர்களுக்கு என்று பெயர், புகழ் இருக் கிறது. அந்த பெயரை, புகழை கெடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அதேநேரத்தில் இரண்டு பேரும் ஒத்துக்கொண்டு போகிறார்கள் என்றால் யாரும் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
பெரிய முன்னணி நடிகர்களெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கும் நடிகைககளுக்கு குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் வருகிறதே?
நடிகர் சங்கத்தில் சம்பள விவகாரம் தொடர் பாக கூட்டம் நடந்தது. அப்போது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்தால் தைரியமாக புகார் கொடுங்கள் என்று விஷால், கார்த்திக் பூச்சி முருகன் ஆகியோர் சொன்னார்கள். நடிகர்கள் பலர் குரல் கொடுக்கணும். குரல் கொடுக்காததற்கு காரணம் 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்பார்கள். குறுகுறுக்குதோ என்னவோ...
சந்திப்பு: வேல்
படங்கள்: நவீன்