பத்து என்று தெரிந்தும் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் செவிலியர்கள் மீதே பாலியல் வேட்டையை அரங்கேற்றி இருக்கிறான் காமுகன் ஒருவன்.

mm

இதுதொடர்பாக, ""குடும்பச்சூழல் ஒருபுறம், கொரோனா பயம் மறுபுறம் என நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு, சூப்பர்வைசர் மோகன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தருகிறான்'' என்று மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும், டீன் சங்குமணியிடம் ஒப்பந்த செவிலியர்கள் பத்துபேர் கூட்டாக புகார் கடிதம் கொடுத்துள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் தகவலை அறிந்து, அங்குசென்று புகார் தந்த செவிலியர்களைச் சந்தித்தோம்.

ஆரம்பத்தில் பேசத் தயங்கிய செவிலியர்கள், ஒருவர் பின் ஒருவராக விவரித்தார்கள். முதலில் பேசிய செவிலியர் ஒருமையில் குமுறியதை அச்சு நாகரிகம் கருதி வெளியிடுகிறோம். ""பாரத் ஒப்பந்த நிறுவனத்தின் சூப்பர்வைசராக இருக்கும் மோகன், எங்களைப் போன்ற ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார். அவருக்கு வளைந்து கொடுக்கலைன்னா ஏகப் பட்ட கெடுபிடிகள் கொடுப்பார். அவரால் சீரழிந்த பெண்கள் ஏராளம். இதுபோக, தனியாக சிகிச்சைக்கு வரும் பெண்களிடமும் உதவுவதுபோல் பழகி, தன் வலையில் வீழ்த்துவார். இதைக் கவனித்து யாராவது எதிர்த்தால், அவர்கள் வேலையை விட்டுப்போக என்னென்ன செய்யமுடியுமோ, அவ்வளவும் செய்வார். இவருக்கு இணங்கும் பெண்களுக்கு எல்லா சலுகையும் கிடைக்கும். லன்ச் ரூமில் ட்ரீட் என்றாலே, யாரையோ மடக்கிட்டாருன்னு அர்த்தம்.

Advertisment

dd

யாருடைய பிறந்தநாளா இருந்தாலும், மோகன்தான் கேக் வெட்டி ஊட்டிவிடுவார். அப்ப எடுக்கிற செல்பியைக் காட்டி மிரட்டியே, தன்னுடைய ஆசையெல்லாம் தீர்த்துக் கொள்வார். இங்கு வேலைசெய்கிற செவிலியர்கள் பலர் வறுமையான குடும்பத்திலிருந்து வருகிறோம். இதையே தனக்கு சாதகமாக்கிக் கொள்வார். இவரால் நாசமாகிப்போன குடும்பங்கள் ஏராளம். இதுபற்றி யாரிடத்தில் புகார் கொடுத்தாலும், அடுத்த நிமிடமே மோகனுக்கு தகவல் போயிடும். ஒருமுறை மருத்துவக் கண்காணிப்பாளர் சுபா மேடத்திடம் சொல்லிட்டோம். அவங்க ஒப்புக்கு விசாரிச்சி அனுப்பி இருக்காங்க. அடுத்து அவங்க ரவுண்ட்ஸ் வர்றப்போ, மோகனும் கூடவே வர்றாருன்னா, பார்த்துக்கோங்க''’என்றார் மிரட்சியுடன்.

மற்றொரு செவிலியரோ, ""மதுரை அரசு கொரோனா சிறப்பு வார்டில், ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சூப்பர்வைசரான மோகன், தனக்கு இணக்கமாக நடக்கும் ஊழியர்களுக்கு குறைவாக வேலை கொடுப்பார். அடங்கிப்போகாத பெண்கள் கூடுதலாக பார்க்கவேண்டும். மறுத்தால் டிஸ்மிஸ் செய்வேன் என்று மிரட்டுவார். இதனால், பல பெண்களின் குடும்பத்தில் பிரச்சனையாகி வேலையை விட்டே நின்றுவிட்டார்கள். மேலும் பலர் மோகனின் செக்ஸ் டார்ச்சருக்கு பயந்தே வேலைக்கு வருவதில்லை. இதுபற்றி பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கிறோம். இங்கிருக்கும் அதிகாரிகள் எல்லோருக்கும் ஆல் இன் ஆலாக இருப்பதால், மோகன் மீது யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், டீனிடமே புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார் வேதனையான குரலில்.

Advertisment

mdu

""வறுமையான குடும்பச் சூழலினால், உயிருக்கு ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறோம். இந்த நெருக்கடியிலும் பாலியல் தொல்லைகள் கொடுப்பது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் மருத்துவ மனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை'' என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள் உடனிருந்த மற்ற செவிலியர்கள்.

இந்தப் புகார் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ""மோகன்மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், செவிலியர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது தொடர்பான புகார் தற்போதுதான் தன்னுடைய கவனத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, துறைரீதியில் நடவடிக்கை எடுப்போம்'' என்றும் உறுதியளித்தார். பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் மோகனிடம் விவரம்கேட்க நாம் அழைத்தபோது, அவரது நம்பர் சுவிட்ச்-ஆஃபில் இருந்தது.

-அண்ணல்