பாலியல் துன்புறுத்தல்! கல்லூரிகள் மீது வில்லங்க புகார்கள்!

ss

ந்தக் கல்வி மாவட்டத்தின் பெயருக்கு ‘க்ளூ’ கொடுத்தால் ‘பளிச்’ என்று தெரிந்துவிடும். அந்த அளவுக்கு கல்வியில் சிறந்த மாவட்டமாகத் திகழ்ந்துவருகிறது. புகார்களோ வில்லங்கமானவை. இரண்டு கல்லூரிகளில் நடக்கும் ஒழுங்கீனங்கள் எனச் சொல்லப்பட்டாலும், தனி நபர் சம்பந்தப்பட்டவை என்பதால் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஐந்தெழுத்து இனிஷியலுடன் அழைக்கப்படும் அந்தத் தன்னாட்சிக் கல்லூரிக்கு இது பவள விழா ஆண்டாகும். அக்கல்லூரியின் செயலாளர், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர், பேராசிரியை மற்றும் மாணவிகளின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு, முன்னாள் மாணவிகளின் பெயரால் பாலியல் புகார் கிளம்பியிருக்கிறது. முதலமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், கல்லூரிக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், காவல்துறைத் தலைவர் (தென் மண்டலம்) ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தப் புகாரில் சுட்டிக் காட்டப்படும் விவகாரங்கள், ‘இப்படியெல்லாம் நடக்கிறதா?’ எனப் பதைபதைப்பு ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

aa

‘பெயரில் சீற்றத்தைக் கொண்ட ராஜனானவர்தான் கல்லூரி செயலாளர். கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரி யைகளிடம் செல்போனில் ‘கடலை’ போடுவதே, இவ ருடைய முழுநேரப் பணியாகும். கல்லூரி நிகழ்ச்சிகளுக்காக, கல்லூரி அலுவலகம் முன்பாக மாணவிகள் கோலம் போடும்போதெல்லாம், இவர் குஷியாகிவிடுவார். குறிப்பிட்ட பேரா சிரியைகள் மற்றும் மாணவிகளுடன் வாட்ஸ்-ஆப் சாட்டிங் செய்து வெளியில் அழைத்துச் செல்வதைப் பொழுதுபோக் காக வைத்துள்ளார். மாணவிகள் விடுதிக்குள் எந்த நேரத் திலும் சர்வ சாதாரண மாக நுழைந்து விடுவார். மாணவி களுடன் செல்பி எடுப்பதில் ஆர் வம் காட்டுவார்.

சுயநிதிப் பிரிவில் படித்துவந்த மாணவி ஒருவரிடம் காதல் வயப்பட்டு பழகின

ந்தக் கல்வி மாவட்டத்தின் பெயருக்கு ‘க்ளூ’ கொடுத்தால் ‘பளிச்’ என்று தெரிந்துவிடும். அந்த அளவுக்கு கல்வியில் சிறந்த மாவட்டமாகத் திகழ்ந்துவருகிறது. புகார்களோ வில்லங்கமானவை. இரண்டு கல்லூரிகளில் நடக்கும் ஒழுங்கீனங்கள் எனச் சொல்லப்பட்டாலும், தனி நபர் சம்பந்தப்பட்டவை என்பதால் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஐந்தெழுத்து இனிஷியலுடன் அழைக்கப்படும் அந்தத் தன்னாட்சிக் கல்லூரிக்கு இது பவள விழா ஆண்டாகும். அக்கல்லூரியின் செயலாளர், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர், பேராசிரியை மற்றும் மாணவிகளின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு, முன்னாள் மாணவிகளின் பெயரால் பாலியல் புகார் கிளம்பியிருக்கிறது. முதலமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், கல்லூரிக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், காவல்துறைத் தலைவர் (தென் மண்டலம்) ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தப் புகாரில் சுட்டிக் காட்டப்படும் விவகாரங்கள், ‘இப்படியெல்லாம் நடக்கிறதா?’ எனப் பதைபதைப்பு ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

aa

‘பெயரில் சீற்றத்தைக் கொண்ட ராஜனானவர்தான் கல்லூரி செயலாளர். கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரி யைகளிடம் செல்போனில் ‘கடலை’ போடுவதே, இவ ருடைய முழுநேரப் பணியாகும். கல்லூரி நிகழ்ச்சிகளுக்காக, கல்லூரி அலுவலகம் முன்பாக மாணவிகள் கோலம் போடும்போதெல்லாம், இவர் குஷியாகிவிடுவார். குறிப்பிட்ட பேரா சிரியைகள் மற்றும் மாணவிகளுடன் வாட்ஸ்-ஆப் சாட்டிங் செய்து வெளியில் அழைத்துச் செல்வதைப் பொழுதுபோக் காக வைத்துள்ளார். மாணவிகள் விடுதிக்குள் எந்த நேரத் திலும் சர்வ சாதாரண மாக நுழைந்து விடுவார். மாணவி களுடன் செல்பி எடுப்பதில் ஆர் வம் காட்டுவார்.

சுயநிதிப் பிரிவில் படித்துவந்த மாணவி ஒருவரிடம் காதல் வயப்பட்டு பழகினார். இந்த விஷயம் மற்ற மாணவிகளுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களில் ஒரு மாணவி சம்பந்தப்பட்ட மாணவியிடம் ""உன் வீட்டுக்காரர் (செயலாளர்) இன்னைக்கு கிளாஸுக்கு வந்தார். உன்னைத் தேடினார்''’என்று விடுதியில் வைத்து கிண்டல் செய்ய, அவமானத்தில் கூனிக்குறுகிய அந்த மாணவி, கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கப்பட்ட அந்த மாணவியை கல்லூரியிலிருந்து நீக்கிவிட்டனர். இது நடந்த போது, கல்லூரி செயலாளருக்கு உறுதுணையாக இருந்தார், அப்போது கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரமானவர். அதே முதல்வர், செயலாளரின் அற் பத் தேவைகளுக்காகவே, குளுகுளு கொடைக்கான லில் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பயிற்சி வகுப்பு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தினார். தமிழ் நாடு அரசு உயர் கல்வித்துறையும், கல்லூரிக் கல்வி இயக்குநரும், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் இதற்கெல்லாம் எவ்வாறு அனுமதி அளித்தார்கள் என்றே தெரியவில்லை.

அந்தத் துறையில் சீனியர் பேராசிரியர்கள் பலர் இருந்தும், தன் வலையில் விழுந்த பேராசிரி யைக்கு நிரந்தரப் பணியிடம் வழங்கப்போகிறார் செயலாளர். அனைத்துப் பேராசிரியர்களின் இ-மெயில், செல்போன் எண்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்ற நாட்களில் வாழ்த்துகிறேன் என்ற பெயரில் கெட்ட நோக்கத்தை வெளிப்படுத்துவார். தனது பேச்சுக்கு மயங்கிய மாணவிகளையும், பேராசிரியை களையும் வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வது அடிக்கடி நடக்கிறது. தகுதியுள்ள பேராசிரியர்கள் இருந்தும், தனது அந்தரங்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடந்தையாகத் துணை நிற்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை கல்லூரி முதல்வராக்கி ஆட்டம் போடுகிறார் செயலாளர்.

கல்லூரியின் முன்னாள் முதல்வருக்கு காரோட்டவும் செய்தார் பாண்டியனான பேராசிரியர். மாணவிகளுக்கு காதல் குறுஞ்செய்தி அனுப்புவதில் வல்லவரான இவர், தற்போதைய முதல்வருக்கும் காரோட்டுகிறார். இவர்தான் சில பேராசிரியைகளைத் தனது காரிலேற்றி செயலாளருக்கு சப்ளை செய்கிறார்.

கல்லூரி செயலாளரும் முதல்வரும் இப்படி யிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? அந்தத் துறையின் தலைவரான நாகமானவர், முதுகலை மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டார். அந்த மாணவியின் ப்ராஜக்ட் கைடு அவர் தான். ஆய்வறிக்கையைத் திருத்துவதாகச் சொல்லி, லேப்டாப்பை தன்பக்கம் திருப்பிவைத்துக் கொண்டு, மாணவியிடம் ஸ்க்ரீனைப் பார்க்க வற்புறுத்தியிருக்கிறார். மாணவி அவரருகில் வந்து லேப்டாப்பை பார்த்தபோது, மாணவியின் கழுத்தில் தொங்கிய ஐ.டி. கார்டைப் பிடித்து தன்பக்கம் இழுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கதறியழுதபடியே ஓடி, சக மாணவிகளிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார். துறைத்தலைவரின் பாலியல் அத்துமீறல் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததும், காவல்நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்தனர். அப்போது கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரமானவரும், இதே செயலாளரும், மாணவியையும் பெற்றோரையும் சமாதானப்படுத்தி தடுத்துவிட்டனர். துறைத்தலைவரை பெயரளவுக்கு கண்டித்ததோடு விட்டுவிட்டனர். அதனாலேயே, அதற்கடுத்த ஆண்டில் இன்னொரு துறையில் படித்த மாணவியிடம் அந்த துறைத்தலைவர் தனது வக்கிரபுத்தியைக் காட்டினார்.

மணியான இன்னொரு பேராசிரியர் என்.சி. சி. ஆசிரியராக இருக்கிறார். தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தண்டனை வழங்குவது போல் வயிற்றைக் கிள்ளுவது, முதுகில் தட்டுவது போன்ற சேட்டைகளைச் செய்கிறார். தனித்து ஒதுக்குப்புறமான இடத்தில் என்.சி.சி. பேரேடு நடப்பதால், அவரது பாலியல் துன்புறுத்தல்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன.

இந்த ஊரில் கல்லூரி நடத்தும் மெஜாரிட்டி சாதியினர் என்பதால், லோக்கல் போலீஸ் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், காவல்துறையின் பலம் வாய்ந்த வேறு அமைப்புகள் விசாரணை நடத்தவேண்டும்’என்கிற ரீதியில் அந்தப் புகாரில் பல்வேறு சம்பவங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

ராஜனான கல்லூரி செயலாளரைத் தொடர்புகொண்டோம். ""காலேஜ்ல போஸ்டிங் (நிரந்தரப் பணியிடம்) போடுற நேரத்துல, இங்கே வேலை பார்க்குறவங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர், இந்தமாதிரி புகார்களை எழுதிட்டே இருப்பாங்க. வருஷா வருஷம் இது நடக்கிறதுதான். போஸ்டிங் போட்டு முடிஞ்சதும் புகார் அனுப்புறத நிறுத்திரு வாங்க. என்னைப் பத்தி, நான் அப்படி இப்ப டின்னு சும்மா சொல்லிறலாம். மாணவிகள் ஹாஸ்டலுக்குள் போறதுக்கு எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்கு. லேடி வைஸ் பிரசிடென்ட் கூட வராம யாரும் ஹாஸ் டலுக்குள் போகமுடியாது. முறையாக தெரிவித்துவிட்டுத்தான் போகமுடியும். மற்றபடி, எந்த மாணவியையும் தனியாகப்போய் பார்க்கமுடியாது. அதெல்லாம் நடக்கவே நடக்காது. சும்மா எதையாவது வம்பு இழுக்கணும்னு யாரு மேலயும் பழியைத் தூக்கிப் போடறாங்க. அவங்க புகார் சொல்லுற துறைத்தலைவர் வயசாகி ரிட்டயர்ட் ஆகப்போறாரு. அவரைப் பத்தி வாய் கூசாம பேசுறாங்க. யார் யாரு மேல புகார் சொல்லுறாங்களோ, அதுக்கெல்லாம் உள்நோக்கம் இருக்கு. மாணவிகளுக்கு தெரிஞ்சே இவ்வளவும் நடக்குமா? அப்படி நடந்துச்சுன்னா, பெண் பிள்ளைகள் இங்கே படிப்பாங்களா? பெற்றோர்தான் படிக்க ஒத்துக்குவாங்களா? நிறைய விஷயங்களை யோசிக்க ணும். போஸ்டிங் யாருக்கு கிடைக்கப்போகுது? எனக்கு கிடைக் காத போஸ்டிங் இன்னொருத்தருக்கா? இந்தமாதிரி யோசிச் சுத்தான் பாலியல் புகார் கிளப்புறாங்க. அந்த பேராசிரியைக்கு நிரந்தரப் பணியிடம் இன்னும் கிடைக்கல. அதுவரைக்கும் கன்னாபின்னான்னு புகார் வரத்தான் செய்யும். அந்த என்.சி.சி. ஆபீஸர் நல்ல மனுஷன். அவரையும் விட்டுவைக்கல. இந்த புகாரை கையில வச்சிக்கிட்டு, கவர்மென்ட் சைடுல இருந்து தனித்தனியா வந்து விசாரிச்சாங்க. எங்ககிட்ட எழுதி வாங்கிட்டுப் போயிட்டாங்க''’என்று பெருமூச்சுவிட்டார். இதுகுறித்து அந்தக் கல்லூரி மாணவர்கள் சிலரிடம் விசாரித்தபோது வாய் திறக்க மறுத்தனர்.

மூன்றெழுத்து இனிஷியலுள்ள வளர்ந்துவரும் அந்தப் பொறியியல் கல்லூரி மீதான புகாரில் ‘உதவிப் பேராசிரியர் ஒருவரால் ஆண் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். கல்லூரி முதல்வரும் துறைத்தலைவர் ஒரு வரும் சரியில்லை. மூன்று பேரும் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. மாணவிகள் மிரட்டப்படுகிறார்கள். பட்டியலின மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டுகிறார்கள்’ என நான்காமாண்டு சிவில் மாணவர்கள் பெயரில் குமுறல் வெளிப்பட்டுள்ளது.

அந்தக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர் களை நாம் சந்தித்தபோது, ஒரேயொரு குற்றச்சாட்டைத் தவிர மற்றவை பொய்யானவை என்று அடித்துச்சொல்ல, பொறியியல் கல்லூரி முதல்வர் சேகரமானவரிடம் பேசினோம்.

""அந்த உதவிப் பேராசிரியரை பணியிலிருந்து அப்போதே நீக்கிவிட்டோம். பட்டியலின மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது அபாண்டமான குற்றச்சாட்டு. என்னையும் துறைத்தலைவரான பெண்ணையும் இணைத்துப் பேசுவது கொடுமையானது. கல்லூரியின் வளர்ச்சி பிடிக்காத யாரோ வெளியிலிருந்து தூண்டிவிட்டு இதெல்லாம் நடக்கிறது''’என்றார் வேதனையுடன்.

எது உண்மை? எது பொய்? புகார் அனுப்பியவர்களுக்கே வெளிச்சம்!

nkn251123
இதையும் படியுங்கள்
Subscribe