குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகத்தான் போக்சோ, சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி ஒரு ஆண் (அ) பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால், பாதிப்பு ஏற்படுத்தியவர் வெளி நபராக இருந்தால் குறைந்தபட் சம் 7ஆண்டு சிறைத்தண்டனை யும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும். ஒருவேளை, பெற்றோர், கார்டி யன், ஆசிரியர், காவல்துறை உள்ளிட்ட 4 பிரிவினரால் பாதிக் கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப் படும். ஆனால் இந்த சட்டம் இயற்றப்பட்டும் குற்றங்கள் குறையாமல் தினமும் குழந்தை கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.

pp

இதுகுறித்து எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில், இந்தியாவில் சராசரியாக தினமும் 15 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மாதத்திற்கு 600 வழக்குகளும், வருடத்திற்கு 7,500 வழக்குகளும் இந்தியாவுக்குள் மட்டும் பதிவாகின்றன. நடப்பு ஆண்டில் திருச்சி மாவட் டத்தில், அக்டோபர் மாதம் வரை 100க்கும் மேற்பட்ட போக் சோ வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில், 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வழக்குகள் பலவற்றில் குற்றவாளிகள் தங்கள் செல்வாக்கால் தப்பிவிடுகிறார்கள். போக்சோ குற்றங்களைப் பொறுத்தவரை, நேரடியாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, பாலியல் சீண்டல்கள் செய்வது, பெற்றோர்களே 18 வயது நிரம்பாத குழந்தைக்கு பால்ய விவாகம் செய்துகொடுப்பது, காதலுக்காக 18 வயதாகுமுன்பே வீட்டைவிட்டு ஓடுவது, மாண வனை ஆசிரியை விரும்பி திருமணம் செய்வது, மாணவியை ஆசிரியர் திருமணம் செய்வ தெனப் பல வகைகள் இருக்கின்றன.

சமீபத்தில் திருச்சியில், போக்சோ வழக்குகளைக் கையாளும் மருத்துவர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்த கருத் தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் சொல் லப்பட்ட அதிர்ச்சிகர மான தகவல் என்ன வென்றால், பெண் குழந்தைகள் அதிகளவில் தங்களுடைய பெற்றோராலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்பதாகும். இதில், பெண் குழந்தையின் அம்மாவுக்கு தெரிந்தே நடக்கும் தவறுகளும் இருக்கின்றன. இப்படி வன்புணர்வுக்கு ஆளாகும் குழந்தை களில் சிலர் மட்டுமே வெளியே சொல்கிறார்கள். பல குழந்தைகள் வெளியே சொல்வதில்லை. உடல் உபாதையால் பாதிக்கப் பட்டோ அல்லது கர்ப்பம் அடைந்தோ மருத்துவமனை களில் சிகிச்சைக்காக செல்லும் போதுதான் விவகாரம் வெளியே தெரியவருகிறது. மருத்துவமனை நிர்வாகம் தரும் தகவலின்படி விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதியப்படுகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறைக்கப்பட வேண்டுமென்றால், பெற்றோர் களிலிருந்தே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

Advertisment