பாலியல் புகார்! கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!

kk

லாஷேத்ரா அறக்கட்டளையின்கீழ் சென்னை திருவான்மியூரில் ருக்மணிதேவி நுண்கலை கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு நடனம் மற்றும் இசைசார்ந்த பட்டப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றது. இந்தக் கல்லூரி உலக அளவில் புகழ்பெற்றது. அங்கு பணிசெய்யும் பேராசிரியர்களால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல்ரீதியில் துன்புறுத்தல்கள் நடந்துவருவதாக கடந்த வருடம் புகார் எழுந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்புக்கு இங்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி மாணவிகள் புகாரனுப்பியிருந்தனர். அந்த தனியார் அமைப்பு இந்திய மகளிர் ஆணையத்திற்கு அந்த புகாரை அனுப்பியிருந்தது. அதன்பேரில் தேசிய மகளிர் ஆணை யம் அப்போதைய தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந் திரபாபுவுக்கு புகாரை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது.

kk

கலாஷேத்ராவில் எந்த ஒரு பாலியல் துன்புறுத்தலும் இல்லையென்று அப்போதைய கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் டி.ஜி.பி.யிடம் பதில் கடிதம்

லாஷேத்ரா அறக்கட்டளையின்கீழ் சென்னை திருவான்மியூரில் ருக்மணிதேவி நுண்கலை கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு நடனம் மற்றும் இசைசார்ந்த பட்டப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றது. இந்தக் கல்லூரி உலக அளவில் புகழ்பெற்றது. அங்கு பணிசெய்யும் பேராசிரியர்களால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல்ரீதியில் துன்புறுத்தல்கள் நடந்துவருவதாக கடந்த வருடம் புகார் எழுந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்புக்கு இங்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி மாணவிகள் புகாரனுப்பியிருந்தனர். அந்த தனியார் அமைப்பு இந்திய மகளிர் ஆணையத்திற்கு அந்த புகாரை அனுப்பியிருந்தது. அதன்பேரில் தேசிய மகளிர் ஆணை யம் அப்போதைய தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந் திரபாபுவுக்கு புகாரை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது.

kk

கலாஷேத்ராவில் எந்த ஒரு பாலியல் துன்புறுத்தலும் இல்லையென்று அப்போதைய கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் டி.ஜி.பி.யிடம் பதில் கடிதம் அளித்திருந்தார். அதேசமயம் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம், விசாரணை என்ற பெயரில் மாணவிகளை மிரட்டி பாலியல் புகாரை மறைக்கப் பார்த்தது.

அங்கு மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பது உண்மை என்று கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது தவறான புகார் என்று ரேவதி ராமச்சந்திரன் மறுக்க, இடையில் என்ன நடந்ததோ லீலா சாம்சன் சமூக வலைத்தளத்தில் இட்ட தன் பதிவை நீக்கிவிட்டார்.

அப்போது களத்தில் இறங்கிய நக்கீரன், பாலியல்ரீதியில் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி அளித்த சாட்சி யத்தை முதன்முதலில் பதிவுசெய்தது. மேலும், அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் நட வடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த மார்ச் 29-ஆம் தேதி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். பின்னர் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியில் துன்புறுத்தல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பேராசிரியர் ஹரிபத்மன், துணைப் பேராசிரியர் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித்லால், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேரை போலீசார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் மேலும் இரண்டு மாணவிகள், மற்றொரு பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணன் மீது புகாரளித்திருந்தனர். ஆனால் போலீஸ் தரப்பு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு மாணவிகளின் புகாரை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. அதன்பெயரில் ஆய்வாளர் ராஜலட்சுமி பாதிக்கப்பட்ட இரு மாணவிகளிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் புகாரைப் பெற்றார். அதற்கான ஆதாரங்களையும் மாணவிகள் கொடுத்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மாணவிக்கு, அவர் படித்த 1995-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஸ்ரீஜித் கிருஷ்ணன் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறி தனியாக அழைத்து, பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் நிர்வாணப் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதை வெளியிடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து 12 ஆண்டுகளாக அந்த மாணவியை சீரழித்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணன் தொடர்ந்து மிரட்டி தன் காம இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததால், பயந்துபோன அந்தப் பெண் தன் குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இந்தியரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திவந்துள்ளார்.

vv

இந்த நிலையில் கடந்த ஆண்டு கலா ஷேத்ரா மீது புகார் எழவே, தன் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் தைரியமாக முன்வந்து புகார் கொடுத்துள்ளார். விசாரணை மேற்கொண்ட நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் விசாரணையில் ஸ்ரீஜித் கிருஷ்ணன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.பி.சி. செக்சன் 376-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து, சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு மாணவி அளித்த புகாருக்கான தகுந்த ஆதாரங்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை என்றாலும் பேராசிரியர் ஸ்ரீஜித்தை விசாரித்தால் மேலும் உண்மைகள் வெளியே வரும் என்ற முடிவில் போலீசார் உள்ளனர்.

தற்போது ஸ்ரீஜித், கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. கோவளத்தை அடுத்த முட்டுக்காடு பகுதியில் தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். முன்னாள் மாணவிகள் புகாரால் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்.

சுமார் 17 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தனக்கு நடந்த அநியாயத்துக்கு நீதி தேடி துணிந்து வழக்குக் கொடுத்த மாணவிகளை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். புகார் தொடர்பாக நம்மிடம் பேசிய ஆய்வாளர் ராஜேஸ்வரி, "இது பாலியல் வழக்கு என்பதால் தற்போது எந்த ஒரு விவரமும் வெளியில் சொல்லமுடியாது''’என்று தெரிவித்தார்.

nkn270424
இதையும் படியுங்கள்
Subscribe