கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மனுவில், ‘விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அலெக்ஸாண்டர், அரசு விதிகளுக்குப் புறம்பாக தனது சொந்த விருப்பத்திற்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்துவருவதுடன், தனது சொந்த விருப்பத்திற்கு ஒத்துழைக்காத ஊழியர்களைப் பழிவாங்குவேன் என்று மிரட்டியும் வருகிறார். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அலெக்ஸாண்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'’எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், டாக்டர் அலெக்ஸாண்டர் மீதான புகார் குறித்து ஏற்கனவே விசாரணை நடந்தபோது ‘வட்டார மருத்துவ அலுவலர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? ஆம்/இல்லை’ என்று தட்டச்சு செய்த கடிதத்தில் பதில் கொடுக்குமாறு விசாரணையில் பங்கேற்ற ஊழியர்களிடம் கேட்டிருந்தனர். அப்போது, அலெக்ஸாண்டர் செய்த தவறுகளை சில ஊழியர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தனர். அவர்களிடம் விசாரணை அலுவலரும் நிர்வாக அலுவலருமான சந்திரதாஸ் மற்றும் ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் ஆகியோர் "வட்டார மருத்துவ அலுவலருக்கு எதிராக எதுவும் எழுதக்கூடாது. ஆதரவாக எழுதிக்கொடுக்கவேண்டும். மறுத்தால், நீங்கள் பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வுசெய்து 17இ குற்றக் குறிப்பாணை கொடுப்போம்'’என மிரட்டியுள்ளனர்.’ என்பதையும் அந்தப் புகாரில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைத்தலைவர் கண்ணன் நம்மிடம் “""இதுல கொடுமை என்னன்னா.. பாலியல் தொல்லை கொடுத்தவர் டாக்டர் அலெக்ஸாண்டர். அவர் உயர் அதிகாரி. பாலியல் த
கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மனுவில், ‘விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அலெக்ஸாண்டர், அரசு விதிகளுக்குப் புறம்பாக தனது சொந்த விருப்பத்திற்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்துவருவதுடன், தனது சொந்த விருப்பத்திற்கு ஒத்துழைக்காத ஊழியர்களைப் பழிவாங்குவேன் என்று மிரட்டியும் வருகிறார். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அலெக்ஸாண்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'’எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், டாக்டர் அலெக்ஸாண்டர் மீதான புகார் குறித்து ஏற்கனவே விசாரணை நடந்தபோது ‘வட்டார மருத்துவ அலுவலர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? ஆம்/இல்லை’ என்று தட்டச்சு செய்த கடிதத்தில் பதில் கொடுக்குமாறு விசாரணையில் பங்கேற்ற ஊழியர்களிடம் கேட்டிருந்தனர். அப்போது, அலெக்ஸாண்டர் செய்த தவறுகளை சில ஊழியர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தனர். அவர்களிடம் விசாரணை அலுவலரும் நிர்வாக அலுவலருமான சந்திரதாஸ் மற்றும் ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் ஆகியோர் "வட்டார மருத்துவ அலுவலருக்கு எதிராக எதுவும் எழுதக்கூடாது. ஆதரவாக எழுதிக்கொடுக்கவேண்டும். மறுத்தால், நீங்கள் பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வுசெய்து 17இ குற்றக் குறிப்பாணை கொடுப்போம்'’என மிரட்டியுள்ளனர்.’ என்பதையும் அந்தப் புகாரில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைத்தலைவர் கண்ணன் நம்மிடம் “""இதுல கொடுமை என்னன்னா.. பாலியல் தொல்லை கொடுத்தவர் டாக்டர் அலெக்ஸாண்டர். அவர் உயர் அதிகாரி. பாலியல் துன்பு றுத்தலுக்கு ஆளான சரவணன், அரசு மருத்துவ மனைப் பணியாளர். ஏழை சொல் அம்பலம் ஏறாதுன்னு பழமொழியே இருக்கு. பாலியல் பாதிப்புக்கு ஆளான சரவணன், சங்கம் மூலமா அலெக்ஸாண்டர் மேல கொடுத்த புகாரை டிபார்ட்மெண்ட் கண்டுக்கல. ஆனா.. பாலியல் தொல்லை கொடுத்த அலெக்ஸாண்டர், சரவணன் மேல கொடுத்த பொய்ப் புகாரை பெற்றுக்கொண்டு, மூணு பிரிவுகள்ல (294 (க்ஷ), 506 (1), 67 (ஒப ஆஸ்ரீற்)} சேத்தூர் காவல்நிலையம் வழக்கு பதிவு பண்ணிருக்கு. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைய சகிக்க முடியாம உயரதிகாரிய எதிர்த்ததுனால சரவணனுக்கு இந்த நெலம ஏற்பட்டிருக்கு''’’ என்றார் வேதனையுடன்.
தலைமறைவாக இருந்த சரவணனைத் தொடர்புகொண்டோம். ""2018ல மீனாட்சிபுரம் பிரைமரி ஹெல்த் சென்டர்ல தினக்கூலி அடிப்படைல பல்நோக்கு மருத்துவப் பணியாளரா சேர்ந்தேன். 5 வருஷமா அங்கதான் வேலை பார்த்தேன். 2023ல பெயின்ட் அடிக்கணும்னு என்னையும் கூட வேலை பார்க்கிற மாற்றுத் திறனாளி மாடசாமியையும் ஜமீன் கொல்லங் கொண்டான் பி.எச்.சுக்கு வரச்சொன்னாங்க. சொன்ன வேலைய பார்த்தோம். பார்ட்டி வைக்கிறேன்னு கூப்பிட்டு பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு டாக்டர் அலெக்ஸாண்டர். அடுத்து அவரோட வீட்டுக்கு வெள்ளையடிக்க என்னை தனியா வரச்சொனாரு. மாட்டேன்னு சொல்லியும் வற்புறுத்தினாரு. வீட்டுக்குப் போனதும் செல்போனை ஸ்விட்ச்-ஆப் பண்ணச் சொல்லிட்டு தப்பான இடத்துல கை வச்சாரு. என்ன சார் இப்படி பண்ணுறீங்க? நீங்க இப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்துருக்கமாட் டேன்னு சொன்னேன். எனக்கு இதுல ண்ய்ற்ங்ழ்ங்ள்ற் இல்ல. நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். மறுபடியும் போன் போட்டு கூப்பிட்டாரு. நான் சொன்னத நீ கேட்கலன்னா உன் வேலைய காலி பண்ணிருவேன்னு மிரட்டு னாரு. வேற வழியில்லாம அவரு ஆசைப்பட்ட மாதிரி நடந்தேன். இது நடந்தது 2023ல.
அப்புறம் 2024ல டாக்டர் அலெக்ஸாண்டர் ஜமீன் கொல்லங்கொண்டான் பி.எச்.சுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்புக்கு வந்துட்டாரு. அவருக்கு வசதியா இருக்கும்னு என்னை மீனாட்சிபுரம் பி.எச்.ல இருந்து ஜமீன் கொல்லங்கொண்டானுக்கு டெபுடேசன் போட்டாரு. அங்க அவருக்கு மசாஜ் பண்ண வச்சாரு. தோள்பட்டைல.. கையில.. விரல்ல.. ஒரு இடம் விடாம மசாஜ் பண்ணு னேன். கால் அமுக்கிவிட் டேன். இந்த வேலைய நானும் இன்னொரு ஹாஸ்பிடல் ஒர்க்கரும் மாறி மாறி பண்ணுனோம். இதெல்லாம் பி.எச்.ல வச்சே நடந்துச்சு. இதுக்கு முன்னால லேப்ல ஒருத்தர இந்தமாதிரி பண்ணிருக்காரு. பணம் எல்லாம் கொடுத்து பண்ணிருக்காரு. இன்னொருத்தர் ஆபீஸ்ல ஒர்க் பண்றாரு. அவரையும் போன் போட்டு அமிழ் ஓட்டல்ல ரூம் போட்ருக்கேன்னு வரவச்சு பண்ணிருக்காரு. அவங்க யாரும் அப்ப புகார் பண்ணல. ஒருகட்டத்துல அவர என்னால சமாளிக்க முடியல. அப்ப என் வீட்டம்மா கன்சீவா இருந்தாங்க. ரொம்ப சிரமமா இருக்கு. உங்களுக்கு வெல்விஷரா இருப்பேன். என்னைய திரும்பவும் மீனாட்சிபுரத்துக்கு மாத்துங்கன்னு கேட்டேன். இந்த தினக்கூலி வேலை கிடைக் கிறதுக்கு நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என்னோட குடும்ப கஷ்டத்த நினைச்சுத்தான் வேற வழியில்லாம டாக்டரோட பாலியல் சீண்டலுக்கு ஒத்துப்போனேன். இது என் மனநிலைய, உடல்நிலைய ரொம்பவும் பாதிச்சது. அதனாலதான்.. டாக்டரோட வற்புறுத்தலுக்கு ஒத்துக்க மறுத்தேன். அப்பவும் டாக்டர்.. என் வீட்டுக்கு பக்கத்துல உனக்கு வீடு பார்த்து கொடுக்கிறேன். லீவு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை நேரம் போக மீதி நேரங்கள்ல என் வீட்டுல வேலை பாரு. அதுக்கு தனியா ஏதாவது பணம் தர்றேன்னு சொன்னாரு. நான் முடியாதுன்னு சொன்னேன். நான் அவர அவாய்ட் பண்றேன்னு டென்ஷன் ஆயிட்டாரு.
2024 ஆகஸ்ட்ல நிறைமாத கர்ப்பிணியா இருந்த என் மனைவியை டாக்டர் அலெக் ஸாண்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். திரும்பவும் மீனாட்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் பண்ணுங்கன்னு ரெண்டு பேரும் டாக்டர் கால்ல விழுந்து கெஞ்சினோம். அவருக்கு என்னை அனுப்புறதுக்கு மனசு வரல. அப்புறம்தான்.. ஓபனா பேசுங்க. எதுன்னாலும் பண்றேன். மனம்விட்டுப் பேசுவோம். இருக்கது ஒரு லைஃப். சந்தோஷமா இருக்கணும்னு மெசேஜ் பண்ணேன். இப்ப என்னை டெர்மினேட் பண்ணிட்டாரு. கொன்னுருவேன்னு மிரட்டினேனாம். ஆபாசப் படம் அனுப்புனேனாம். கேஸ் கொடுத் திருக்காரு. முன்ஜாமீன் எடுக்கிறதுக்காக தலைமறைவா இருக்கேன்..''’என்றார் பரிதாபமாக.
ஜமீன் கொல்லங்கொண்டான் வட்டார மருத்துவ அலுவலர் அலெக்ஸாண்டரை தொடர்பு கொண்டோம். நாம் ""ஹலோ சார்..''’என்று கூறியதும், ""நான் ஒரு திருநங்கை. என்ன அம்மான்னு கூப்பிடுங்க, இல்லைன்னா மேடம்னு சொல்லுங்க. திருநங்கைன்னு ஐ.டி. கார்ட் வாங்கல. நான் ஆண்ங்கிறத என் அம்மா, அப்பாவுக்காக மாத்திக்கல. எல்லாருக்குமே நான் திருநங்கைன்னு தெரியும். திருநங்கைகளோட லைஃப்ல இந்த மாதிரி தூற்றுவது எல்லாம் பழகிப்போன விஷயம். ஒரு திருநங்கையா இருந்துட்டு, மெடிக்கல் ஃபீல்ட்ல மேல வர்றதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப் பேன்னு எல்லாருக்கும் தெரியும். நான் ஒரு ங.இ.இ.ந. டாக்டர். காய்ச்ச மரத்துல கல்லடி விழத்தானே செய்யும். ராஜபாளையத்துல எனக்கு கீழ 154 பேரு வேலை பார்க்கிறாங்க. ஒரு அஞ்சு பேர தவிர மத்த எல்லாருமே எனக்கு சப்போர்ட்டா இருக் காங்க. அரசு ஊழியர் சங்கத்துக்கும் எனக்கும் வேற ஒரு பிரச்சினை இருந்துச்சு. சங்கத்துல இருக்கவங்க சரவணனை தண்ணியடிக்க வச்சு எனக்கெதிரா தூண்டிவிட்டு வேடிக்கை பார்க் கிறாங்க. அவங்களோட கடைசி ஆயுதம் பாலியல். சரவணனைக் கையில வச்சிக்கிட்டு அசிங்க அசிங்கமா பெட்டிஷன் எழுதுறாங்க. கலெக்டர் வரைக்கும் கம்ப்ளைண்ட் பண் ணாங்க. நான் ஒரு தெய்வப் பிறப்பு. சாதாரண மனிதர்கள்தான் அசிங்கப்படுவாங்க. திருநங் கைக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடை யாது. இவங்ககூட நான் ஃபைட் பண்ண.. எனக்கு என்ன குடும்பமா இருக்கு? மீனாட்சி புரம் ஆரம்ப சுகாதார நிலையத்துல சரவண னுக்கு ஸ்வீப்பர் வேலை. டாக்டரா இருக்கிற எனக்கு ஒரு ஸ்வீப்பரை போயி பயன்படுத்த ணும்கிற அவசியம் இல்ல. சரவணன் சொல்லுறது பொய்ன்னு நிரூபிக்க நான் என்ன கேமரா எவிடென்ஸா காட்டமுடியும்? ஐஒய-ன்னா என்னன்னு எனக்கு நல்லா தெரியும். பாலியல் தொழில் பண்ணனும்கிற அவசியம் எனக்கு இல்ல''’என்றார் உறுதியுடன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சரவணன் முன்ஜாமீன் கோரிய வழக்கில், "விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும், 14-3-2025க்கு வழக்கைத் தள்ளிவைப்பதாகவும், அதுவரை சரவணனை கைது செய்யக்கூடாதென்றும்' இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற் காக, தன்னை மிரட்டி அடிபணிய வைத்து, பாலியல் உறவில் ஈடுபட்ட டாக்டர் அலெக்ஸாண்டர் மீது ஒடஈ சட்டப் பிரிவு 376 ஈ, ஒடஈ சட்டப் பிரிவு 377 (இயற்கைக்கு முர ணான உறவு) மற்றும் சட்டப் பிரிவுகள் 506 & 420 (கொலை மிரட்டல் மற்றும் ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் சரவணன்.
-ராம்கி