ஒரே ஒரே ஒரு அறிக்கைதான் ஒட்டுமொத்த மலையாள திரைத் துறையையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. மல்லுவுட் என்கிற மலையாள சினிமா உலகில் நடிகைகள் எதிர்கொள்கிற பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள், துன்புறுத்தல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட புகார்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் அம்பலத்துக்கு வந்து, இந்திய சினிமா உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதையடுத்து மலையாள ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக நடிகைகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும், புகார்களும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இதனால், கதாநாயகர்களும், இயக்குநர்களும் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவர் மோகன்லால், துணைத் தலைவர்கள் ஜெகதீஸ், ஜெயன்சேர்த்தலா, பொருளாளர் உண்ணி முகுந்தன், இணைச்செயலாளர் பாபுராஜ், சங் கத்தின் உறுப்பினர்கள் சுரேஷ்கிருஷ்ணா, கலாபவன் ஷாஹோன், ஜோயி மேத்யூ, டொவினோ தாமஸ், அனன்யா, வினு மோகனன், அன்ஸிபா உட்பட 18 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
ஆன்லைனில் நடத்தப்பட்ட சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார் மோகன்லால். இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதால் கூண்டோடு ராஜினாமா நடந்திருக்கிறது. அதற்கு முன்பாக, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் விவாதித்திருக்கிறார் மோகன்லால். அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த விவாதத்தில், "மலையாள சினிமாவில் திரைமறைவில் நடக்கும் செக்ஸ் டார்ச்சர்கள் வெளியாவது இதோடு நின்றுவிடப்போவதில்லை. பெண் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைச் சொல்ல தைரியமாக வெளியே வருவார்கள். சங்கத்தில் உறுப்பினராகக் கூட படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது என நடிகர் சங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கி யுள்ளன. அதனால் தார்மீகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகுவதுதான் சரியாக இருக்கும்''’என்று அறிவுறுத்தியிருக்கிறார் மம்முட்டி. சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் பலர் மீதும் செக்ஸ் டார்ச்சர் குற்றச்சாட்டுகள் இருப்பதால் சங்கத்தை முழுமையாகக் கலைத்துவிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனையடுத்தே சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக ஆன்லை னில் கூட்டி, தனது ராஜினாமாவை தெரிவித்தார் மோகன்லால். தலைவரே ராஜினாமா செய்வதால், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வது என முடிவெடுக்கப்பட்டு அப்படியே நடந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சீனியர் நடிகருமான சித்திக் மீது பெங்காலி நடிகை ரேவதி சம்பத் கொடுத்த
ஒரே ஒரே ஒரு அறிக்கைதான் ஒட்டுமொத்த மலையாள திரைத் துறையையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. மல்லுவுட் என்கிற மலையாள சினிமா உலகில் நடிகைகள் எதிர்கொள்கிற பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள், துன்புறுத்தல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட புகார்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் அம்பலத்துக்கு வந்து, இந்திய சினிமா உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதையடுத்து மலையாள ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக நடிகைகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும், புகார்களும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இதனால், கதாநாயகர்களும், இயக்குநர்களும் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவர் மோகன்லால், துணைத் தலைவர்கள் ஜெகதீஸ், ஜெயன்சேர்த்தலா, பொருளாளர் உண்ணி முகுந்தன், இணைச்செயலாளர் பாபுராஜ், சங் கத்தின் உறுப்பினர்கள் சுரேஷ்கிருஷ்ணா, கலாபவன் ஷாஹோன், ஜோயி மேத்யூ, டொவினோ தாமஸ், அனன்யா, வினு மோகனன், அன்ஸிபா உட்பட 18 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
ஆன்லைனில் நடத்தப்பட்ட சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார் மோகன்லால். இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதால் கூண்டோடு ராஜினாமா நடந்திருக்கிறது. அதற்கு முன்பாக, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் விவாதித்திருக்கிறார் மோகன்லால். அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த விவாதத்தில், "மலையாள சினிமாவில் திரைமறைவில் நடக்கும் செக்ஸ் டார்ச்சர்கள் வெளியாவது இதோடு நின்றுவிடப்போவதில்லை. பெண் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைச் சொல்ல தைரியமாக வெளியே வருவார்கள். சங்கத்தில் உறுப்பினராகக் கூட படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது என நடிகர் சங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கி யுள்ளன. அதனால் தார்மீகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகுவதுதான் சரியாக இருக்கும்''’என்று அறிவுறுத்தியிருக்கிறார் மம்முட்டி. சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் பலர் மீதும் செக்ஸ் டார்ச்சர் குற்றச்சாட்டுகள் இருப்பதால் சங்கத்தை முழுமையாகக் கலைத்துவிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனையடுத்தே சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக ஆன்லை னில் கூட்டி, தனது ராஜினாமாவை தெரிவித்தார் மோகன்லால். தலைவரே ராஜினாமா செய்வதால், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வது என முடிவெடுக்கப்பட்டு அப்படியே நடந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சீனியர் நடிகருமான சித்திக் மீது பெங்காலி நடிகை ரேவதி சம்பத் கொடுத்த செக்ஸ் புகாரின் எதிரொலியாக பொதுச்செயலாளர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தார் சித்திக்.
மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந் திய சினிமாவில் பிரபலமான அந்த நடிகையை கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் மலையாள சினிமாவை அதிர்ச்சியடைய வைத்தது. நடிகையின் கார் டிரைவரின் துணையுடன் கற்பழிப்பு சம்பவத்தை நடத்தியது பிரபல நடிகர் திலீப் என்பது புலனாய்வில் தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில், கேரள அரசுக்கும் இந்த விவகாரம் நெருக்கடியை உரு வாக்கியது. இதனையடுத்து, மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வத்சலாகுமாரி, சீனியர் நடிகை சாரதா ஆகியோரைக் கொண்ட கமிட்டியை கடந்த 2017-ல் அமைத்தார் முத லமைச்சர் பினராயி விஜயன்.
மலையாள சினிமாவின் அனைத்துக் கோணங் களிலும் விசாரணை நடத்தியது இந்த கமிட்டி. நடிகைகள், துணை நடிகைகள், க்ரூப் டான்சர்கள், மேக்-அப் வுமன்கள் என பெண்கள் பங்கெடுக்கும் அனைத்துப் பிரிவுகளிலும் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகளை, தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடூரங்களை தங்களின் வாக்குமூலமாக கமிட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் நடிகை கள். இதனையடுத்து தங்களின் அறிக்கையை கடந்த 2019-ல் முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தது ஹேமா கமிட்டி. ஆனால், 4 ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. செக்ஸ் டார்ச்சர்களில் பிரபலமான சீனியர் நடிகர்கள், இயக்குநர்கள் பலரின் பெயர்கள் இருந்ததால் கேரள அரசும் அதிர்ச்சியடைந்தது.
ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இருக்கும் அதிர்ச்சியான உண்மைகளை அறிந்து கொண்ட கேரளா நடிகர் சங்கம், கேரளா அரசிடம் தங்களின் செல்வாக்கைச் செலுத்தியதால், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அறிக்கையை வெளியிடாமல் கிடப்பிலேயே வைத்திருந்தது அரசு.
இதனை விமர்சித்த நடிகை பார்வதி உள்பட பலரும், அறிக்கை மீது சந்தேகம் எழுப்பியிருந்தனர். தகவல் உரிமை பெறும் சட்டத்தின் அடிப்படையில் ஹேமா கமிட்டியின் அறிக்கையை கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் மனு செய்தபோது அதனை நிராகரித்திருக்கிறது அரசு. இதனையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அறிக்கையை வெளியிட வேண்டும் என உத்தர விட்டது தகவல் ஆணையம். அதனடிப்படையில், 296 பக்கம் கொண்ட அறிக்கையில் மிக மிக அதிக குற்றச்சாட்டுகள் கொண்ட 86 பக்கங்களைத் தவிர்த்து மீதி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அரசு. இதனையடுத்துதான் மலையாள சினிமாவின் செக்ஸ் டார்ச்சரின் கோர முகம் அம்பலமாகி உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றது.
ஹேமா கமிட்டியின் அந்த அறிக்கையில், ”சினிமாவில் வாய்ப்புத் தேடும் போதும், வாய்ப்பு கள் கிடைத்த பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட்கள், காம்ப்ரமைஸ் ஆகிய 2 வார்த்தைகளை தொடர்ச்சி யாக பெண்கள் எதிர்கொள்கின்றனர். அந்த வார்த் தைகளைக் கேட்டாலே பெண்கள் பயப்படுகிறார் கள். ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள், புரொடக்ஷன் மற்றும் ஹீரோக் களின் மேனேஜர்கள் ஆகியோரின் படுக்கைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நடிகைகள் தங்கும் ஹோட்டல் அறைகள் இரவு நேரத்தில் தட்டப்படும் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது... நடந்துகொண்டும் இருக்கிறது. கதவு திறக்கப்படாவிட்டால் கதவுகளை உடைத்துவிட்டு உள்ளே வந்துவிடுவார்கள் என்கிற பயத்துடனேயே இரவு முழுக்க நடிகைகள் இருந்துள்ளனர். நடிகைகள் மட்டுமல்லாது அவர்களின் பாதுகாப்புக்காக வரும் அம்மாக்களும் ஹீரோக்களின் செக்ஸ் டார்ச்சர் களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
படுக்கையை பகிர்ந்துகொள்ளாத பெண்களுக்கு எந்த வாய்ப்பும் தரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளையும் விட்டு வைப்ப தில்லை. ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் பி.ஆர்.ஓ.க்கள்தான் ப்ரோக்கர்களாக இருக்கின்றனர். அவர்கள்தான் நடிகைகளிடம் ஹீரோக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி பேரம் பேசுகின்றனர் என்கிறார்கள்.
புகார் கொடுத்த நடிகை ராஜேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "கேரள தலைமைச் செயலகத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஷாட் முடிந்ததும் கழிவறைக்கு சென்று வந்தேன். அப்படி வெளியே வரும்போது, படத்தின் பிரபல நடிகர் என்னை பின்புறத்தில் கட்டிப்பிடித்து அணைத்து முத்தமிட்டார். அவரை வேகமாக தள்ளிவிட்டு ஓடிவந்தேன். யாரிடமும் என்னால் இதனை சொல்ல முடியவில்லை. மனதுக்குள் அழுதுகொண்டேயிருந்தேன்.
அதேபோல, மற்றொரு பிரபல நடிகர், என் முகத்துக்கு நேராக வந்து, எனக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறார்கள். ஆனால், நீ தங்கியுள்ள இந்த ஹோட்டலில் ரூம் போடச் சொல்லி வந்துள்ளேன். இரவு 11 மணிக்கு உன் ரூமுக்கு வருவேன். கதவை தாழ்ப்பாள் போடா மல் திறந்து வை என கட்டளையிட்டார். இதற்கு நான் உடன்படாததால் மறுநாள் ஷூட்டிங்கின் போது என்னிடம் எரிச்சல்பட்டார். இயக்குநரிடம் எனக்கு எதிராக புகார் கொடுத்தார்”என்று தனக்கேற்பட்ட பாலியல் தொந்தரவுகளைக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நடிகை.
மற்றொரு நடிகை கொடுத்த புகாரில், "நடிகர் சங்கத்தில் உறுப்பினராகிவிட்டால் இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்களை சந்திக்கமாட்டோம் என நினைத்து உறுப்பினராக முயற்சித்தேன். ஆனால், உறுப்பினராவதற்கே நான் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சங்கத்தின் பொறுப்பிலுள்ள நடிகர்கள் சொன்னது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ''’என்று சொல்லியுள்ளார். புகார்களில் பெயர்கள் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருந்தாலும் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட ஹீரோக்களின் பெயர்களை வெளியிட கேரள போலீஸ் மறுத்து வருகிறது.
மூத்த நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் புகார் கொடுத்ததும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார். தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சித்திக், "அந்த நடிகை 8 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோ ருடன் என்னை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிடுகிற மாதிரி எந்த சம்பவமும் நடக்க வில்லை. எனக்கும் நடிகர் சங்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்ததும் முயற்சி இது''’என்கிறார்.
இவ்விவகாரம் குறித்து பிரபல நடிகை ஊர்வசி, "எனக்கு முன்னோடியாக இருந்த சில நடிகைகள் இந்த மாதிரியான பாலியல் தொல்லை பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. எல்லா மாநிலங்களிலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் இருக்கின்றன. கேரளாவில்தான் பெண்கள் துணிச்சலாக எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.
சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன்தான் வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்புகளில் தான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடங்களில் நடத்தவேண்டும். தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ வரமுடியாது எனச் சொல்ல வேண்டும். அதை விதிமுறையாகவே கொண்டு வரவேண்டும்'' என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
மலையாள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது நடிகை மினு முனீர் அளித்துள்ள பாலியல் புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் வீட்டிற்கு இவர் சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட் டார் என குறிப்பிட்டுள்ளார். அதை மறுத்துள்ள முகேஷ், "தன்னிடம் மினிமுனீரும் அவரது கணவரும் பண உதவி கேட்டதாகவும், அதை தராததால் தன்மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து பிளாக்மெயில் செய்வதாகவும், இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்' என்றும் கூறியுள்ளார்.
சினிமா அகாடமியின் தலைவர் ரஞ்சித் மீது நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் தெரிவிக்க, தனது தலைவர் பதவியை துறந்துள்ளார் ரஞ்சித்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் விவகாரங்கள் குறித்து தனது சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகை குஷ்பு, "தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துண்புறுத்தல்களை முன்வந்து கூறிய பெண்களுக்கு வாழ்த்துகள். பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முறியடிக்க ஹேமா கமிட்டி தேவைதான். ஆனால், முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். ஆனால், அதிகம் சுமப்பது பெண்கள் மட்டும்தான்.
என் தந்தை எனக்கு கொடுத்த பாலியல் தொல்லை பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன்? என்று என்னை கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு நடந்தது என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் இல்லை. நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்கள் உண்டு என நான் நினைத்த கைகளில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஆண்கள் காட்ட வேண்டும்'' என்று ஆழமாகச் சொல்லியிருக்கிறார் குஷ்பு.
பாலியல் துன்புறுத்தல்களுக்கான ஆளான பலரின் வாக்குமூலங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையில் அடையாளத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கமிட்டியின் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளியிடப்பட வேண்டும். ஹீரோக்களின் உண்மை முகம் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற குரல்கள் வேகமான ஒலித்து வருகின்றன.
இதற்கிடையே கமிட்டியின் முழுமையான அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்ட நிலையில், முழு அறிக்கையையும் சீலிடப் பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். நீதிமன்றம் உத்தரவிட்டிருப்ப தால் மலையாளத்தின் பிரபல ஹீரோக்கள் கிலியில் இருக்கின்றனர். அறிக்கையில் தங்கள் பெயர்கள் இடம்பெற்ற பக்கங்களை எடுத்துவிட்டு மற்றதை தாக்கல் செய்யுமாறு கேரள அரசின் தலைமையிடம் கெஞ்சிகொண்டிருக் கிறார்கள் ஹீரோக்கள்.
மலையாள சினிமாவில் மட்டுமல்ல அதைவிட அதிகமான செக்ஸ் டார்ச்சர் கள் தமிழ்ச் சினிமாவில் நடந்துகொண்டி ருக்கிறது. நடிகைகள் ஷகிலா, விசித்ரா உள்ளிட்ட பலரும் வெளிப்படையாக சொல்லத் தொடங்கி யுள்ளனர். தமிழ்ச் சினிமாவில் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாலியல் தொல்லைகள் வெளியாகும்போது நீங்கள் யாரெல்லாம் ஹீரோக்கள் என உச்சத்தில் வைத்து கொண் டாடுகிறீர்களோ அவர்களின் உண்மையான, குரூரமான முகம் கிழிந்து தொங்கும். விரைவில் இது நடக்கும். மலையாளத்துக்கு கிடைத்த ஹேமா கமிட்டி போல, தமிழ் சினிமாவின் பெண்கள் குறித்து ஆராய்வதற்கும் ஒரு கமிட்டி தேவைப்படுகிறது என்கிறார்கள் தமிழ்ச் சினிமாவின் முன்னாள் நடிகைகள்.