மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவு களில் மாணவ-மாணவிகள் படித்துவருகிறார் கள். கிராமிய சுகாதார மற்றும் துப்புரவுத் துறையில் பயிலும் முதுநிலை பட்டயப் படிப்பிற்கான துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (டஏஉநஒ) வகுப்பில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மனித உடலில் தொற்றுநோய் பரவுவதையும், அதை தடுப்பதைப் பற்றியும்தான் சுகாதார அலு வலரான டாக்டர் ரெங்கநாதன் பாடமெடுக்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறைகளை மறந்து சில அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் வகுப்பெடுத்துவருகிறார். அதோடு மாணவர்களுக்குள் ஒரு வாட்ஸப் குரூப்பை ஆரம்பித்த டாக்டர் ரெங்கநாதன், அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாகப் பதிவுசெய்து பாடமாக நடத்திவருகிறார்.
பட்டியலின சமூகத்தினர் மேல்படிப்பிற்கு வரக்கூடாது எனப் பேசிக்கொண்டு பாலியல்ரீதியாக மாணவிகளை டார்ச்சர்செய்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மனம்நொந்துபோன மாணவர்கள், துறைத்தலை வரான ஜான்சிராணியிடம் புகார் மனு கொடுத்து டாக்டர் ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்தியிருந்தனர். நிர்வாகமோ, ரெங்க நாதன் மீது எந்த வொரு நடவடிக் கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவ தால் மாணவர்கள் போராட் டத்தில் குதிக்கத் தயாராகிவருகிறார்கள்.
"அலுவலகப் பணியாளர்கள் சிலரோ, “இந்த பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த எஸ்.எம்.இராமசாமிதான் டாக்டர் ரெங்கநாதனை 2012-ல் சுகாதார அலுவல ராக நியமித்து, துப்புரவு ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்க வைத்தார். ஆனால் 2013-லேயே சில ம
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவு களில் மாணவ-மாணவிகள் படித்துவருகிறார் கள். கிராமிய சுகாதார மற்றும் துப்புரவுத் துறையில் பயிலும் முதுநிலை பட்டயப் படிப்பிற்கான துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (டஏஉநஒ) வகுப்பில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மனித உடலில் தொற்றுநோய் பரவுவதையும், அதை தடுப்பதைப் பற்றியும்தான் சுகாதார அலு வலரான டாக்டர் ரெங்கநாதன் பாடமெடுக்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறைகளை மறந்து சில அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் வகுப்பெடுத்துவருகிறார். அதோடு மாணவர்களுக்குள் ஒரு வாட்ஸப் குரூப்பை ஆரம்பித்த டாக்டர் ரெங்கநாதன், அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாகப் பதிவுசெய்து பாடமாக நடத்திவருகிறார்.
பட்டியலின சமூகத்தினர் மேல்படிப்பிற்கு வரக்கூடாது எனப் பேசிக்கொண்டு பாலியல்ரீதியாக மாணவிகளை டார்ச்சர்செய்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மனம்நொந்துபோன மாணவர்கள், துறைத்தலை வரான ஜான்சிராணியிடம் புகார் மனு கொடுத்து டாக்டர் ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்தியிருந்தனர். நிர்வாகமோ, ரெங்க நாதன் மீது எந்த வொரு நடவடிக் கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவ தால் மாணவர்கள் போராட் டத்தில் குதிக்கத் தயாராகிவருகிறார்கள்.
"அலுவலகப் பணியாளர்கள் சிலரோ, “இந்த பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த எஸ்.எம்.இராமசாமிதான் டாக்டர் ரெங்கநாதனை 2012-ல் சுகாதார அலுவல ராக நியமித்து, துப்புரவு ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்க வைத்தார். ஆனால் 2013-லேயே சில மாணவிகளுக்கு டாக்டர் ரெங்கநாதன் பாலியல் டார்ச்சர் செய்ய, மாணவர்கள் துறைத் தலைவர் ஜான்சிராணியிடம் புகார் கொடுத்ததன் பேரில் உண்மை கண்டறியும் குழு அமைக் கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணைசெய்து 3.7.2013-ல் அறிக்கை தாக்கல்செய்தது. விசாரணைக்குழுவும் நிர்வாகமும் 23.7.2013-ல், ஆசிரியராக பாடம் நடத்த தகுதியற்றவர் எனக் கண்டனம் தெரிவித்து, அப்போதைய பதிவாளர் நாராயணசாமி மூலம் டாக்டர் ரெங்கநாதனுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
அப்போதே இவர் துறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கவேண்டும். மாறாக, தொடர்ந்து பாடம் எடுத்துவந்தார். பட்டியலின சமூகத்தினர் மேல்படிப்பு படிக்கக்கூடாது. துப்புரவு பணிதான் செய்யவேண்டும் எனவும் வகுப்பில் கிளாஸ் எடுத்துவருகிறார். இதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாண வர்கள் மனம் நொந்து, டாக்டர் ரெங்கநாதன் மீது புகார் கொடுத் தனர். பதிவாளர் மற்றும் டீன் ஆகியோர் அவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் நிர்வாகத் தின் மீது அதிருப்தியில் இருந்துவருகிறார்கள்'' என்றனர்.
இதுசம்பந்தமாக மாணவ-மாணவிகள் சிலரிடம் பேசியபோது, "அவருடைய வாட்ஸப் குரூப்பில் இங்கு படிக்கக்கூடிய 35 மாணவ- மாணவிகளையும் சேர்த்திருக்கிறார். இங்கு மாணவர்களைவிட மாணவிகள் அதிகமாக படிக்கிறார்கள். தினசரி ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவி இவருக்கு போன் செய்து காலை 4.30 மணிக்கு எழுப்பிவிடவேண்டும். அதைத் தொடர்ந்து இரவு வரை அவரைத் தொடர்பு கொண்டு "சாப்டாச்சா, கிளாஸ் எடுத்தாச்சா, எங்க இருக்கீங்க' என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதோடு இரவு 9 மணிக்கு சம்பந்தப்பட்ட மாணவ- மாணவியரின் அம்மாவிடம் அவரைப் பேச வைத்தால் 2 மார்க் போட்டுவிடுவார்.
அதுபோலதான் ஒரு மாணவியின் அம்மாவிடம் பேசியிருக்கிறார். மறுநாள் வகுப்பில் அந்த மாணவியின் தாயின் பெயரைச் சொல்லி நலமா என்று விசாரித்திருக்கிறார். அதைக்கண்ட மற்ற மாணவர்கள் அந்த மாணவியை ஒருமாதிரியாகப் பார்த்திருக் கிறார்கள். இதனால் அந்த மாணவி மனம் நொந்துபோய் துறைத்தலைவரிடம் புகார் கொடுத்தார். அதேபோல் ஒரு மாணவி யிடம் "கல்யாணம் ஆகி மூன்றரை வருட மாகியும் உனக்கு குழந்தை இல்லையா. நான் உனக்கு குழந்தை பிறப்பதற் கான டெக்னிக்குகளை சொல்லித் தரு கிறேன்' என்று பேசியிருக்கிறார்.
மாணவிகளி டம் பாலியல் ரீதியாகப் பேசுவார். மாணவிகளை தனியாக அவர் அறைக்கு வரச்சொல்லி கொச்சையாகப் பேசுவார். அதுபோல் வகுப்பறையில் ஆண், பெண் பிறப்புறுப்பு களைப் பற்றி படம் வரையச் சொல்லி பாலியல்ரீதியாக கிளாஸ் எடுத்துவருகிறார். இப் படி எங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாதவற்றை பாடமாக எடுத்துக்கொண்டு எங்களை மனரீதியாகத் துன்புறுத்திவருகிறார். இப்படிப்பட்டவர் தொடர்ந்து எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது. இவரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று அனைத்து மாணவ- மாணவிகளும் துறைத் தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகிறோம்''’ என்று கூறினார்கள்.
"சுகாதார அலுவலரான ரெங்கநாதன் மீது மாணவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே புகார் கொடுத்துக்கொண்டுதான் வந்தனர். ஆனால் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக எடுத்ததில்லை. எங்களுடைய டீன் டாக்டர் பாலகிருஷ்ணன் கிளாஸுக்கு வந்து மாணவர் களிடம் தனித்தனியாக விசாரித்ததில் மாணவர் கள், ரெங்கநாதனைப் பற்றி பல புகார்களையும் கூறி, பாலியல்ரீதியாக தொடர்ந்து மாணவிகளை டார்ச்சர் செய்துவருகிறார் என்றும் கூறினார் கள். அதை எழுத்துப்பூர்வமாகவே எழுதியும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார் துறைத் தலைவரான ஜான்சிராணி.
இதுசம்பந்தமாக டாக்டர் டீன் பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது..."மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பதிவாளர் ஒரு குழு அமைத்து விசாரணை அமைப்பார். அந்த விசா ரணையின்பேரில்தான் நடவடிக்கை எடுக்கப் படுமே தவிர, இப் போதைக்கு அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இருந்தாலும் மாணவர் களுக்கு தற்போது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே வகுப்புகள் நடைபெற்று வருவதால் எந்த பிரச்சனையும் இல்லை'' என்று சமாளித்தார். இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி கிராம சுகாதார அலுவலரான டாக்டர் ரெங்கநாதனிடம் செல் 96008..... மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது... "நிர்வாக அனுமதியில்லா மல் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது. நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் என்னைப் பற்றி எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை. நான் வழக்கம்போல் தான் செயல்பட்டுவருகிறேன்'' என்று எதுவுமே நடக்காததுபோல் பதில் கூறினார்.
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தத்திடம் இந்தக் குற்றச்சாட்டைக் கொண்டுபோனபோது, "மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நிர்வாகம் உடனடியாக அந்த சுகாதார அலுவலரான டாக்டர் ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறினால் எங்கள் மாணவ அமைப்புகள் மூலம் பேசி ஒரு மிகப்பெரிய போராட்டத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார் உறுதியாக! பழனி சட்டமன்ற உறுப்பினரும் கி. மா.செ.வுமான ஐ.பி.செந்தில்குமார், காந்தி கிராம பல்கலைக் கழக பதிவாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்ததுடன், சம்பந்தப்பட்ட ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிடில் மாணவர் களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என எச்சரித்திருக்கிறார்.
மாணவர்கள் சிலர் நம்மிடம் பேசும் போது, "வகுப்பில் கிளாஸ் எடுக்கும்போதே மாணவிகளாகிய நீங்கள் வீட்டில்போய் யோகா பயிற்சி செய்யவேண்டும். யோகா பயிற்சிசெய் வதை வீடியோ எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தால் உங்களுக்கு இரண்டு மார்க் போடுகிறேன். அப்படி நீங்கள் யோகா பயிற்சி வீடியோ எடுக்கவில்லையென்றால் கிளாசில் யோகா பயிற்சி செய்யச் சொல்லி அதை வீடியோ எடுப்பேன். அதுபோல் உங்க அம்மா வீட்டில் கோலம் போடுவதை படமெடுத்து அனுப்பினால் அதற்கு இரண்டு மார்க் போடு கிறேன் என்று வகுப்பறையில் வெளிப்படை யாகவே கூறினார்.
செமஸ்டர் தேர்வு வருவதையொட்டி, இன்டெர்னல் டெஸ்ட் வைப்பது வழக்கம். அதில் திராவிட ஆட்சியைப் பற்றி கொச்சையாக எழுதவேண்டும். திராவிட நாடு குடிகாரர்கள் நாடு. திராவிடம் என்பது கற்பனை என்று ஒவ்வொருவரும் எழுதணும். அப்படி எழுதினால் ஒவ்வொருவருக்கும் 2 மார்க் அவசியம் போடுவேன் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அவர் சொன்னதுபோலவே எழுதி யிருக்கிறோம். தற்போது பிரச்சனை வந்திருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அலுவலகத்திற்கு வந்தவர் நாங்கள் எழுதிய ஹால் டிக்கெட், ஆன்சர் பேப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்விட்டார்.
ஒவ்வொரு ஜாதியினரும் என்னென்ன வேலைகள் பார்க்கவேண்டும் என்பதைப் பேசுவ தோடு, இன்னொரு சமுதாயத்தை திருட்டு சமுதாயம் என்பார். வகுப்புகளிலும் ஜாதியைப் பற்றிதான் பேசிவருவார். திராவிட மாடல் என் பது ஒருவனுக்கு பல பெண்கள் என்பதுபோல. சனாதனம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி கொள் கை எனவும் பாடம்நடத்துகிறார்'' என்றனர்.
காந்தி கிராமத்தில் இப்படியொரு விஷக் காளானா? அதை உடனே அகற்றவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
-சக்தி