மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நிர்வாக வசதிக்காக தமிழகம் 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள், தாலுகாக்கள், வருவாய்க் கோட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அதே அடிப்படையில் தமிழகத்திலுள்ள பெரிய கிராம ஊராட்சி களை மக்கள்தொகை அடிப்படையில் வரை யறை செய்து, தனித்தனி ஊராட்சிகளாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது போராட்ட வடிவம் பெற்றுவருகிறது. இதை ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்ளாததால் தற்போது கிராம ஊராட்சியில் வாழும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிபாளையம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கடந்த புத்தாண்டு அன்று வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகம் அவர்களது கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது.
"எங்கள் கிராமம் சேமகோட்டை ஊராட்சியில் பாதியும் சிறுவாச்சூர் ஊராட்சியில் பாதியுமாக பிரிந்துகிடக்கின்றது. இதனால் எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப் பதை இரண்டு ஊராட்சி களும் கண்டுகொள்ளவில்லை. இதை ஒன்றிணைத்து எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி 10
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நிர்வாக வசதிக்காக தமிழகம் 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள், தாலுகாக்கள், வருவாய்க் கோட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அதே அடிப்படையில் தமிழகத்திலுள்ள பெரிய கிராம ஊராட்சி களை மக்கள்தொகை அடிப்படையில் வரை யறை செய்து, தனித்தனி ஊராட்சிகளாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது போராட்ட வடிவம் பெற்றுவருகிறது. இதை ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்ளாததால் தற்போது கிராம ஊராட்சியில் வாழும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிபாளையம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கடந்த புத்தாண்டு அன்று வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகம் அவர்களது கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது.
"எங்கள் கிராமம் சேமகோட்டை ஊராட்சியில் பாதியும் சிறுவாச்சூர் ஊராட்சியில் பாதியுமாக பிரிந்துகிடக்கின்றது. இதனால் எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப் பதை இரண்டு ஊராட்சி களும் கண்டுகொள்ளவில்லை. இதை ஒன்றிணைத்து எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். அரசு இதற்கு உரிய தீர்வு காணவேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது தீவிரமடையும்''” என்கிறார்கள் ஊர் மக்கள்.
"ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ளது எங்கள் தண்டக்காரங் குப்பம் கிராமம். இது ராமாபுரம் ஊராட்சியில் உள்ளது. இந்த ஊராட்சியில் கொல்லத்தங்குறிச்சி, ஆனியன் காலனி, செங்கமேடு, வாலிஸ்பேட்டை, தண்டக் காரங்குப்பம், பக்கிரிமானியம் ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது. இதில் சுமார் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். மக்கள்தொகை 5000 இருந்தாலே தனி ஊராட்சியாகப் பிரிக்கவேண்டும் என்பது அரசு விதி. எங்கள் கிராமமான தண்டகாரகுப்பத்திற்கும், ராமாபுரம் ஊராட்சிக்கும் 6 கிலோமீட்டர் தூரம் உள் ளது. தேர்தலின்போது நாங்கள் வாக்களிப் பதற்கு 6 கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டி யுள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு எங்கள் தண்டகாரங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாகப் பிரித்து அறிவிக்கவேண்டும்'' என்கிறார் விவசாயி சரவணன்.
வாலிஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், "அரசு அறிவிக்கும் திட்டங்களைப் பகிர்ந்துகொடுப்பதில் பாரபட்சம் உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் சாலைகள், தெருக்கள், சாக்கடை ஆகியவற்றை பராமரிக்க முடியவில்லை. அரசு இந்த ஊராட்சியை இரண்டாகப் பிரித்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்''’என்கிறார்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்த கிராமம் தொளார் ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி குடிக் காடு, திடீர் குப்பம், புத்தேரி, தொளார், கொல்லத்தங்குறிச்சி, பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. "எங்கள் கிராமத்திற்கும் தொளார் கிராமத்திற்கும் 5 கிலோமீட்டர் தூரம். எங்கள் ஊராட்சியில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 8000. (சில ஊராட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்). எங்கள் ஊராட்சிக்கு மட்டும் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவி. இதன்மூலம் எவ்வளவு பெரிய ஊராட்சி என்பதை அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும். இதனால் கிராமத்திற்கு தேவையான அடிப்படைத் தேவைகளையும், அரசுத் திட்டங்களையும் கொண்டுவந்து சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் செங்கமேடு கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்தவுள்ளோம்''’என்கிறார் செங்கமேடு வார்டு கவுன்சிலர் வேல்முருகன்.
"முதனை பெரிய ஊராட்சி. அரசு அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் எங்கள் கிராமத்திற்கு கிடைப்பது இல்லை. அதேபோல் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் எதுவும் எங்கள் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. இப்படி எல்லாவிதத்திலும் புறக்கணிக்கப்படும் எங்கள் கிராமத்தில் சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம்''’என்கிறார் விருத்தகிரிகுப்பம் செல்வகுமார். முதனை ஊராட்சியில் விருத்த கிரிகுப்பம், புது விருத்தகிரிகுப்பம், எடக்குப்பம், ஞானியார் குடியிருப்பு, வீரட்டிகுப்பம் ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன எனவே 5,000 மக்கள் தொகையுள்ள எடக்குப்பம், வீரட்டிகுப்பம், விருத்தகிரிகுப்பம் ஆகிய கிராமங்களை தனித் தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்
திண்டிவனம் அருகேயுள்ள நெடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் நீதிமன்றத்தின் கதவையே தட்டியுள்ளார். “"எங்கள் கிராமம் மயிலம் ஒன்றியத்தில் உள்ளது. மேழியனூர் ஊராட்சியில் எங்கள் கிராமம் அடங்கியுள்ளது. இரண்டு கிராமங்களுக்கும் இடையே 4 கிலோமீட்டர் தூரம். எங்கள் கிராமத்தில் சுமார் 5000 மக்கள், 2500 வாக்காளர்கள் உள்ளனர். எனவே எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை பல்வேறு மனுக்கள் அனுப்பியும், தீர்மானங்கள் இயற்றி அனுப்பியும் பிரிக்கப்பட வில்லை
இதையடுத்து 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி ஊராட்சியாக பிரித்து அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தோம். விசாரணை செய்த நீதிமன்றம், இரண்டு வார காலத்திற்குள் நெடி கிரா மத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தர விட்டது. ஆனால் இன்று வரை நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம்''’என்கிறார் வெங்கடேசன்.
கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழகத்திலுள்ள பெரிய வருவாய் கிராமங்களை இரண்டாகப் பிரிக்க அரசு, அரசாணை வெளியிட்டது. தனி ஊராட்சியாகப் பிரிப்பதற்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட்டன. புதிய வருவாய் கிராமம் பிரிப்பது சம்பந்தமாக ஆய்வுசெய்ய அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர், நில அளவை உதவி இயக்குனர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொண்ட குழு அமைக்க உத்தர விட்டது. இந்தக் குழு அளிக்கும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பெயரில் முன்மொழிவுகளை வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் அரசுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அந்த முன்மொழிவுகள் அடிப்படையில் தமிழகத்திலுள்ள பெரிய ஊராட்சிகள் பிரிக்கப்படும் என அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்தி லும் குழு அமைத்து பெரிய வருவாய் கிராமங்களை பிரிப்பது சம்பந்தமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அரசின் உத்தரவு கிடப்பில் போட்ட கல்லாகவே உள்ளது.
பெரிய கிராம ஊராட்சிகளை தனித் தனி ஊராட்சிகளாக பிரிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல் தமிழக அளவில் போராட்டங்கள் அதிகரிக்கும்.