நந்திதாவின் சென்டிமெண்ட்!
பொங்கலுக்கு ரிலீசான சிம்புவின் "ஈஸ்வரன்' படத்தில் தனது நடிப்பு பங்களிப்பு குறித்து ஹேப்பியாக இருக்கும் நந்திதாவுக்கு இரண்டாவது ஹேப்பியாக இந்த மாதம் தைப்பூச தினமான 28-ஆம் தேதி, சிபிராஜுடன் ஜோடி போட்ட "கபடதாரி'’ ரிலீஸ் ஆகிறது. கன்னடப் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தனஞ்செயன் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதி, டைரக்டர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தியின் சுமையைக் குறைத்திருக்காராம்.
நடித்த பல படங்கள் காலை வாரியதால், இப்போது ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் இருக்கும் ஹீரோ சிபிராஜுக்கு ‘"கபட தாரி'’ கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு சிபிராஜைவிட, அவரது தந்தையான சத்ய ராஜுக்குத்தான் அதிகம் இருக்கிறது. கடந்தவாரம் நடந்த ‘"கபடதாரி'’ ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய தனஞ்செயன்,’’‘""இந்தக் கதைய வச்சுக்கிட்டு பல ஹீரோக்களைத் தேடி அலையறதவிட, சிபிராஜே பெட்டர்னு முடிவு பண்ணி கமிட் பண்ணினேன். கண்டிப்பா இந்தப் படம் அவருக்கு ஹிட் கொடுக்கும்''’என்றார்.
அதேவிழாவில் பேசிய ஹீரோயின் நந்திதாவோ,’""பொதுவாகவே எனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள படங்களைத்தான் செலக்ட் பண்ணுவேன். அந்த மாதிரி கிடைச்சதுதான் இந்தப் படம். ஹீரோ சிபிராஜுக்கும் எனக்குமிடையே இருக்கும் கெமிஸ்ட்ரியைவிட, ஜெயப்பிரகாஷ் சாருக்கும் எனக்குமிடையேதான் நல்ல கெமிஸ்ட்ரி. எனக்கு அப்பாவாக பல படங்களில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் சாரை, நான் எப்போதுமே அப்பான்னுதான் கூப்பிடுவேன்''’ என சென்டிமெண்டாக டச்பண்ணிப் பேசினார்.
சங்கடத்தில் இருக்காரா சசிகுமார்?
மெகா ஃபைனான்சியர் மதுரை அன்புவின் டார்ச்சரால் தனது மச்சினன் அசோக்குமார் தற் கொலை செய்துகொண்டதிலிருந்து சில மாதங்கள் சினிமா வாசனையே இல்லாமல் இருந்தார் டைரக்டரும் தயாரிப்பாளருமான சசிகுமார். சென்னையில் இருக்கும் சில கோடிகள் பெறுமான சொத்துக்களை விற்றும் சசிகுமாரின் சங்கடமும் கடன் பிரச்சனையும் தீரவில்லை. இதனால் வெளிக் கம்பெனி படங்களான ‘"ராஜவம்சம்'’, சரத்குமா ருடன் இணைந்து நடிக் கும் ‘"நா'’, சமீபத்தில் அனீஸ் டைரக்ஷனில் ‘"பகைவனுக்கு அருள்வாய்'’, லேட்டஸ்டாக ‘"க/பெ ரணசிங்கம்'’ டைரக்டர் விருமாண்டியின் அடுத்த படம் என வரிசையாக கமிட்டாகியுள்ளார். இத்தனை படங்களுக்கு மத்தியில் தனது கம்பெனி தயாரிப்பில் பொன்ராம் டைரக்ஷனில் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் ‘"எம்.ஜி.ஆர் .மகன்'’ படத்தை ரொம்பவே நம்பியிருக்கார் சசிகுமார்.
முக்கால்வாசிப் படங்களில் வேட்டி-சட்டை, உருமாக்கட்டுன்னு கிராமத்து ஸ்டைல்ல பின்னிப் பெட லெடுக்கும் சசிகுமார், போட்டோ ஷூட்டுன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு செம சிட்டி ஸ்டைலில் தூள் கிளப்பிருக்காரு.
டைரக்டரின் கச்சத்தீவு கப்சா!
"அப்ப சன்னிலியோன், இப்ப மல்லிகா ஷெராவத்! பலே கூட்டணியின் பாம்பாட்டம்!'’ என்ற தலைப்பில் 2020 டிச. 19-22 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் டைரக்டர் வி.சி.வடிவுடையானின் திருவிளையாடல்களையும் டிச.26-29 இதழில் "பாம்பாட்டம்'’ படத்தின் தயாரிப்பாளர் பழனிவேலின் பழைய வில்லங்கத் தையும் எழுதியிருந்தோம்.
இப்ப என்னடான்னா, வேற டிசைனில் வந்திருக்கார் வடிவுடையான். அதாவது, 2020 ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டாராம் வடிவுடையான் (நல்லா கவனிங்க, இணைத்துக் கொண்டார்). கட்சியில் இணைத்துக் கொண்ட மூன்று மாதம் கழித்து, அதாவது 2020 அக்டோபர் மாதம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, கச்சத்தீவை மீட்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
இப்ப வடிவுடையானுக்கு வந்த லேட்டஸ்ட் தகவல் என்னன்னா... கச்சத்தீவை மீட்பதற்கான அறிகுறிகள் டெல்லியில் ஆரம்பமாகிருச்சாம். இதையும் வடிவுடையானே சொல்லியிருப்பதுதான் கச்சத்தீவு மேட்டரின் ஹைலட்.