"அடிமைகளால் ஆதரிக்கப்படும் கட்சி பா.ஜ.க. அந்தக் கட்சியை எதிர்த்து யாராவது நின்றால் பின்னங்கால் பிடரியில் இடிபட புறமுதுகிட்டு ஓடிவிடும். நான் ஓடவில்லை. மீண்டும் வருவேன் என்கிற மிரட்டல் மட்டும் தொடர்ந்து அதன் தரப்பிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கும்''’என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் இன்கம்டாக்ஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என மத்திய அரசு ஏஜன்சிகள் தொடர்ந்து ரெய்டுகள் நடத்திவருகின்றன. கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனின் மனைவி மகள் மற்றும் அவரது குடும்பத்தாரை சுற்றி வளைத்து தங்கக் கடத்தல் வழக்கு என்ற ஒரு வழக்கை தொடுத்தது பா.ஜ.க.. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வளர்ப்பு மகன் மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களை குறிவைத்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. பீகாரில் லாலுவின் மகன்கள் குறிவைக்கப்பட்டனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு நெருக்கமான அமைச்சர் குறிவைக்கப் பட்டார். குறிவைக்கப்பட்ட அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இன்றைய நிலை என்னவென்று கேட்டால் பெரும்பாலானவற்றில் குற்றப்பத்திரிகை கூட பதிவு செய்யப்படவில்லை.
கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசின் ஏஜென்சிகளால் தொடரப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் என ஒருவர் கூட இல்லை. கடந்த ஐம்பது வருடங்களில் அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட வழக்குகள் ஐயாயிரத்து முப்பத்தி ஆறு. அதில் தண்டனை பெற்றவர்கள் வெறும் இருபத்தி ஐந்து பேர்கள்தான் என மத்திய அரசு ஏஜென்சிகளின் விசாரணைத் திறமையை மதிப்பிடுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதேபோல் பா.ஜ.க. அரசின் அதிகாரம் முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றது. மூன்று மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதன்பிறகு மத்திய அரசால் தனது ஏஜென்சிகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் கர்நாடக தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டைக் குறிவைத்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை களம் இறங்கியது பா.ஜ.க.வின் மோடி அரசு.
வருமானவரித்துறை மட்டும் மொத்தம் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. திரைப்பட நிறுவனமான லைக்கா, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதை தாண்டும். ரெய்டுகளில் என்ன கிடைத்தது என்பதைப் பற்றி வருமானவரித்துறை மூச்சு கூட விடவில்லை. செந்தில் பாலாஜியின் உறவினர் வீட்டில் மூன்றரைக் கோடி ரூபாய் கிடைத்ததாக வதந்திகள் வந்தது. கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி கட்டிவரும் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ‘வீட்டின் தரையில் மார்பிள் கற்கள்’ இருந்தது. அதை பினாமி ஒருவர் மூலம் செந்தில்பாலாஜி இறக்குமதி செய்தார் என்று கூறப்பட்டது. அத்துடன் பாலாஜி வீட்டில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அதில் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என எழுதி வைத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
மதுவிலக்குத் துறையில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஏகப்பட்ட ஊழல் செய்கிறார், அரசுக்கு வரவேண்டிய தொகைகளை குறுக்குவழியில் கொள்ளை யடிக்கிறார், அந்தப் பணங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார் என பா.ஜ.க.வாலும், அ.தி.மு.க.வினராலும் பல புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில் அவருடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் ரெய்டுக்குள்ளாக் கப் பட்டனர். வருமானவரித்துறை ஒன்பது நாட்கள் தொடர்ந்து ரெய்டு நடத்தியது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை களத்தில் இறங்கியது. வருமானவரித்துறை தொடாத செந்தில்பாலாஜியின் அமைச்சர் இல்லம் மற்றும் கோட்டையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறை ஆகியவை ரெய்டுக்குள்ளாக்கப்பட்டன.
அமைச்சரின் இல்லத்தில் ரெய்டு நடந்தபோது ஒரு மூலையில் அமர வைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. துப்பாக்கி ஏந்திய பத்து காவலர்கள் மாறி, மாறி வந்து அவரை பயமுறுத்தினார்கள். ரெய்டு தொடர்பாகவும் கைது தொடர்பாகவும் உத்தரவுகளை அவருக்கு கொடுத்தனர். அதை எதையும் செந்தில்பாலாஜி வாங்க மறுத்தார். உடனே அந்த உத்தரவுகளை அவரது மனைவிக்கும் அவரது தம்பிக்கும் கொடுத்தனர். அவர்களும் அவற்றை வாங்க மறுத்துவிட்டார்கள். உடனே அந்த உத்தரவுகளை செல்போன் மெசேஜ்களாக்கி அமலாக்கத்துறை அனுப்பியது. மூவரும் தங்களது செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டனர்.
நள்ளிரவில் அவரை கைது செய்து அழைத்துச்செல்ல முடிவு செய்தனர். அதற்கு இரண்டு மணி நேரம் முன்பே செந்தில் பாலாஜி இதயத்தில் ஏற்பட்ட வலியால் துடித்தார். அதற்கு சிகிச்சை அளிக்க அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை அழைத்து வர அமலாக்கத் துறையினர் மறுத்து விட்டனர். கைது செய்து பாலாஜியை டெல்லிக்கு அழைத்துச்சென்று திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் அமலாக்கத்துறை யினரின் திட்டம்.
நெஞ்சுவலியால் துடித்த பாலாஜியை ஆம்புலன்சில் ஏற்றாமல் காரிலேயே கொண்டு வந்தார்கள். ஓமந்தூரார் மருத்துவமனை வாசலிலேயே வெகுநேரம் எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் போட்டு வைக்க முடிவு செய்தார்கள். மருத்துவர்கள் கோபத்துடன் திட்டியதால் பாலாஜியை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதித்தார்கள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த உதயநிதியை பாலாஜியைப் பார்க்க அனுமதிக்கவில்லை. “"ஒழுங்காக என்னை உள்ளேவிடுங்கள். உங்கள் துப்பாக்கிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஐநூறு பேருடன் வந்து மருத்துவமனைக்குள் நுழைவேன்''’என உதயநிதி சொல்ல... வேறு வழியின்றி அவரை அனுமதித்தார்கள். அதன்பிறகு தான் முதல்வர் உட்பட அனைவரும் சென்று பாலாஜியைப் பார்த்தார்கள். உடனடியாக தி.மு.க., ‘சட்ட விரோத கைது’ என ஹைகோர்ட்டில் நீதிபதி சுந்தர், சக்திவேல் அடங்கிய அமர்வில் ‘ஆட்கொணர்வு மனு’ போட்டது. மதியம் விசாரணைக்கு வரவிருந்த அந்த வழக்கிலிருந்து நீதிபதி சக்திவேல் விலகினார்.
இரண்டேகால் மணிக்கு செஷன்ஸ் நீதிபதி அல்லியை அணுகிய அமலாக்கத்துறை, அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவர் செந்தில் பாலாஜியின் கைதை சட்டப் பூர்வமாக்கி னார். அதன்பிறகு செஷன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி எதற்காக கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை விளக்கியது. இத்தனை நாள் ரெய்டு நடத்தியும் தலைமைச்செயலகம் வரை பாய்ந்தும் பாலாஜி ஊழல் செய்தார் என்றோ, ஊழல் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கினார் என்றோ ஒரு சிறு விவரத்தைக் கூட அமலாக்கத்துறையால் சொல்ல முடியவில்லை. செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை அவர்களின் லாக்கர்களை குடைந்து சோதனையிட்ட வருமான வரித்துறையாலும், அமலாக்கத்துறையாலும் சிறிய அளவிலான ஊழலையோ, பணத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
“2014-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக்குவ ரத்துத்துறை அமைச்சராக பாலாஜி இருந்தபோது வேலை நியமனத்தில் அவர் ஊழல் செய்தார் என அன்றைய தி.மு.க. எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போது தினகரன் அணிக்கு மாறிய பாலாஜி மேல் எடப்பாடி வழக்கு போட்டார். அந்த வழக்கில்தான் இப்பொழுது நாங்கள் கைது செய்கிறோம்” என அமலாக்கத்துறை கோர்ட் டில் அறிவித்தபோது, கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது. எல்லோரும் சிரித்துவிட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே பாலாஜி பெயில் வாங்கி விட்டார். 2021 ஆம் ஆண்டு எடப்பாடி அரசால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் “பாலாஜி ஊழல் பணத்தை மொரீசியசில் பதுக்கினார்’என ஒரு வார்த்தை குறிப்பிடப்பட் டிருந்தது. அந்த வார்த்தையை வைத்து எடப்பாடி தூண்டுதலின் பேரில் உள்ளே நுழைந்த அமலாக்கத்துறையை இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ.க் களுக்கான சிறப்பு நீதிமன்றம் துரத்தியடித்தது. அதை எதிர்த்து ஹைகோர்ட் போன அமலாக்கத் துறையை உயர் நீதிமன்றமும் துரத்தியடித்தது. பணம் கொடுத் தவர்கள், அதை வாங்கியவர்கள் சமரசமாக போகும்நிலையில், இருந்த அந்த வழக்கை எடுத்து அமலாக்கத்துறை, சுப்ரீம் கோர்ட் சென்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதியளித் தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை வைத்து பாலாஜிமேல், மத்திய அரசு பாய்ந்தது. இதைத்தான் அண்ணாமலை தனது பேட்டி யில், "ஜெ.வின் ஆட்சியை ஊழல் ஆட்சி'”என சொல்ல... அது களேபரமானது.
இப்படி பலமாகத் திட்ட மிட்டுத் தாக்கியும் ஒன்றும் கிடைக்காமல் பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுத்து புஸ் என அசடு வழிய பாலாஜி கைது விசயத்தில் நிற்கிறது அமலாக்கத்துறை.