கொரோனா காலத்திலும் திருச்சியில் பாலக் கரை, உறையூர், கண்டோன்மென்ட், திருவெறும்பூர், சோமரசம்பேட்டை, புத்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் புற நகரிலும் லாட்டரி வியாபாரம் படுஜோராக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது.
தினமும் டீ செலவுக்கு பணம் எடுத்து வைப்பது போல், கேரளா லாட்டரிக்கு பணத்தை எடுத்து வைக்கவும், அல்லது முந்தைய நாள் உழைத்த பணத்தில் இரவே எடுத்து வைக்கும் பழக்கத்தை இன்றும் பலர் கொண்டுள்ளனர். கள்ள லாட்டரி சந்தையால் பல குடும்பங்கள் அழிந்தாலும், இந்த சந்தையை மட்டும் அழியாமல் கவனமாகப் பார்த்துக் கொள் கின்றனர் காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள்.
மக்கள் மனதில் எந்த அளவுக்கு இந்த லாட்டரி புகுந் துள்ளது என்பதற்கு நாம் நேரில் கண்ட ஒரு பழைய சம்பவம்.
சோழர்களின் தலைநகர மாக இருந்த உறையூரில் உள்ள மார்க்கெட்டின் ஆட்டோ ஸ்டாண்ட்டில் உள்ள ஆட்டோக்களில் டிரைவரின் இருக்கைக்கு மேலே உள்ள கம்பியில் பள்ளி மாணவர்கள் பரீட்சைக்கு எடுத்துச் செல்லும் பிட்டு போல் சிறிய அளவிலான காகிதம் ஒன்று இருக்கும். சவாரி இல்லாத சமயத்தில் அதை கையில் வைத்து கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், ஏறுவரிசை இறங்கு வரிசை என கணிதத்தில் உள்ள அத்தனை முறைகளிலும் கணக் குப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது 6 வருடங் களுக்கு முந்தைய நிலை.
ஆட்டோ டிரைவர் என்ன கணக்கு போடுகிறார் எனப் புரியாதவர்கள் அது பற்றி விசாரித்தால், எல்லாம் லாட்டரி ரிசல்ட்தான். நாளைக்கு எப்படி இருக்கும்னு கணிச்சிட்டிருக்கேன் என்பார். என்னைக்கு விழும்னு கணிச்சி, அன்னைக்குத்தான் இப்படி கணக்கு போட்டு வாங்கு வீங்களா என்றால், தினமும் போட்டால்தான் என்றைக்காவது விழும். நட்டத்தைப் பார்த்தால் பெரிய லாபம் வராது என்பார்.
அதே நபர் 4 வருடத்திற்கு முன்னால், ஜியோ போன் அறிமுகம் ஆனா புதிதில், "இந்தா ஆளு இதுல கேரளா ரிசல்ட் என்னனு பாரு... இப்போ எல்லாம் நெட்லயே வந்துருது. அதான் புதுசா போன் வாங்குனேன்'' என்றார். கடந்த வாரம் அதே ஆட்டோ டிரைவர் ""இன்னக்கி சென்பக்ஸ் என்ன'' என்றார். ஒன்றும் புரியாமல் விழித்தபோது, ""அதுதான் சன் டி.வி. நியூஸ்ல கடைசியா சொல்லுவாங்களே பங்குச்சந்தை நிலவரம் அதுதான்'' என்றார். ""ஓ.. சென்செக்ஸை கேட்குறீங்களா? ஷேர் மார்க்கெட்டில் இன் வெஸ்ட் பண்ணியிருக்கீங்களா'' என்றதற்கு, ""அதெல்லாம் இல் லை, அதுல வர கடைசி மூணு நம்பர்தான் லாட்டரி ரிசல்ட். என்னோட செல்போனில் நெட் இல்ல.. உன் போனில் போட்டு அந்த நம்பர் சொல்லு'' என்றார்.
அன்றைய பங்குச்சந்தை நிலவரத்தைக் காட்டியதும், இந்த புள்ளிவிவரத்தில் கடைசி 3 நம்பர்தான் ரிசல்ட் என்றார். தூக்கி வாரி போட்டது. அவரோ, ""கொரோனாவால இப்ப கேரளாகாரன் வாரத்துக்கு மூணு நாள்தான் குலுக்கல்னு குறைச் சிட்டான். இங்கே லோக்கலில் லாட்டரிக்கு பெயர் போனா திருச்சி குரூப் ஒன்னு சொந்தமா ரிசல்ட் விட்டு விளையாட்டு காட்டுது. கொரோனாக்கு அப்புறம் திருச்சி முழுவதும் சென்செக்ஸ் ரிசல்ட்தான்... முன்னமாதிரி கணிக்க முடில... 4 மாசமா லாட்டரிக்கு செலவழிச்ச மொத்த பணமும் அவுட்தான்'' என்று சோகத்துடன் சென்றார்.
அந்த ஆட்டோ டிரை வரைப் போன்று, முதல் நாளே பணம் கட்டி சென்செக்ஸ் லாட்டரியில் இந்த கொரோனா காலத்தில் கிடைக்கின்ற வருமா னத்தை இழப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கிட்டத் தட்ட 7 வருடமாக நாளொன் றுக்கு ரூ.50 முதல் ரூ.500 வரையில் இத்தகைய லாட்டரிக்கு செலவிடும் ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்டி, மளிகை, டீக் கடைகாரர்கள் என பலரை பார்த்து வருகிறேன்.
திருச்சி மாநகரில் உச்ச கட்ட கள்ளலாட்டரியில் அதிகம் லஞ்சம் கிடைக்கும் ஸ்டேஷன் காந்திமார்க்கெட், அதற்கு அடுத்து கண்டோன்மென்ட், அடுத்து கோட்டை காவல்நிலையம். திருச்சி மாநகர ஆணையராக அருண் ஐ.பி.எஸ். இருக்கும் போது, திருச்சி மாநகரில் உள்ள கள்ள லாட்டரியின் மூடி சூடா மன்னன் எஸ்.வி.ஆர், உள்ளிட்ட 26 பேரை ஒரே நேரத்தில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தார். கிட்டத் தட்ட அத்தனை கள்ள லாட்டரி களையும் ஒழித்தார்.
இப்போதோ திருச்சியில் பிழைப்புக்காக அன்றாடம் வேலை செய்யும் சின்ன சின்ன ஆட்கள் மீது வழக்கு போட்டு கணக்கு காட்டுகிறது போலீஸ். ஆனால் பெரும் முதலாளிகள் ஆன திருச்சி எஸ்.வி.ஆர்., காந்தி மார்க்கெட் பாய், சென்னையில் இருந்து வந்துள்ள ஒரு குரூப், என 3 பெரும் முதலாளிகள் எல்லாம் போலீஸ் துணையோடு ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை சுரண்டி கோடிகளை குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கூரை வீட்டின் நடுவே தூணாக நிற்கும் மரத்தை கறையான் அரிப்பது போல, ஏழை களை அழிக்கிறது லாட்டரி கறையான்.
-ஜெ.டி.ஆர்.