"ஹலோ தலைவரே, முதல்வர் இல்லாத நேரத்தில் சீனியர் அமைச்சர்கள் சிலர் எந்தக் கவலையும் இல்லாமல் விட்டேத்தியாக இருக்கிறார்கள்.''”
"ஆமாம்பா, சீனியர்களில் ஒருவரான துரைமுருகனும் தன் பங்குக்கு சிங்கப்பூருக்குக் கிளம்பிட்டாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலினை அனுப்பி வைத்துவிட்டு காட்பாடிக்குச் சென்ற துரைமுருகன், சனிக்கிழமை மீண்டும் சென்னைக்கு வந்தார். பிறகு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை "எனக்கும் சிங்கப்பூரில் வேலை இருக்கு'’என்றபடி, திடீரென ப்ளைட் ஏறிவிட்டார். 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்ப இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. அவர் அமெரிக்கா செல்லும்முன் அரசு நிர் வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதற்கான முயற்சி நடந்தது. எனினும் அது தொடர்பாக எந்த அரசாணையும் போடப்படவில்லை. இந்த நிலையில் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு முன்பாகவே துரை முருகனும் சிங்கப்பூர் சென்றிருப்பது அதிகாரிகள் தரப்பை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. முதல்வர் ஊரில் இல்லாத நிலையில் அவசர முடிவெடுக்க வேண்டுமெனில் யார் தலைமையில் ஆலோசனை நடத்துவது? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இவரைப் போலவே, மற்ற சீனியர் அமைச்சர்களும் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்தவித கவலையும் இன்றி விட்டேத்தியாக இருந்து வருகிறார்கள் என்று கோட்டைத் தரப்பு சொல்கிறது.''”
"முதல்வரின் அமெரிக்கப் பயணம் பெரும் வெற்றியைத் தந்துவருவதாக செய்திகள் வருகிறதே?''”
“"உண்மைதாங்க தலைவரே, அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரபல ஆப்பிள் நிறுவனத் துடம் மிகப்பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கி இருக்கிறாராம். அது தொடர்பான செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் திரும்பிவந்த பிறகு அவரே அதை அறிவிப்பார் என்கிறார்கள். இதேபோல் பிரபல கூகுள் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.''
"இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுந்தர்பிச்சை, தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார் ஸ்டாலின். மிகவும் நேர நெருக்கடியில் இருக்கும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. அதற்க
"ஹலோ தலைவரே, முதல்வர் இல்லாத நேரத்தில் சீனியர் அமைச்சர்கள் சிலர் எந்தக் கவலையும் இல்லாமல் விட்டேத்தியாக இருக்கிறார்கள்.''”
"ஆமாம்பா, சீனியர்களில் ஒருவரான துரைமுருகனும் தன் பங்குக்கு சிங்கப்பூருக்குக் கிளம்பிட்டாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலினை அனுப்பி வைத்துவிட்டு காட்பாடிக்குச் சென்ற துரைமுருகன், சனிக்கிழமை மீண்டும் சென்னைக்கு வந்தார். பிறகு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை "எனக்கும் சிங்கப்பூரில் வேலை இருக்கு'’என்றபடி, திடீரென ப்ளைட் ஏறிவிட்டார். 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்ப இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. அவர் அமெரிக்கா செல்லும்முன் அரசு நிர் வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதற்கான முயற்சி நடந்தது. எனினும் அது தொடர்பாக எந்த அரசாணையும் போடப்படவில்லை. இந்த நிலையில் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு முன்பாகவே துரை முருகனும் சிங்கப்பூர் சென்றிருப்பது அதிகாரிகள் தரப்பை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. முதல்வர் ஊரில் இல்லாத நிலையில் அவசர முடிவெடுக்க வேண்டுமெனில் யார் தலைமையில் ஆலோசனை நடத்துவது? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இவரைப் போலவே, மற்ற சீனியர் அமைச்சர்களும் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்தவித கவலையும் இன்றி விட்டேத்தியாக இருந்து வருகிறார்கள் என்று கோட்டைத் தரப்பு சொல்கிறது.''”
"முதல்வரின் அமெரிக்கப் பயணம் பெரும் வெற்றியைத் தந்துவருவதாக செய்திகள் வருகிறதே?''”
“"உண்மைதாங்க தலைவரே, அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரபல ஆப்பிள் நிறுவனத் துடம் மிகப்பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கி இருக்கிறாராம். அது தொடர்பான செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் திரும்பிவந்த பிறகு அவரே அதை அறிவிப்பார் என்கிறார்கள். இதேபோல் பிரபல கூகுள் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.''
"இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுந்தர்பிச்சை, தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார் ஸ்டாலின். மிகவும் நேர நெருக்கடியில் இருக்கும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் கூகுள் காம்பஸுக்கு ஸ்டாலின் சென்றபோது, சுந்தர்பிச்சையின் ஆர்வத்தால் தமிழிலேயே பாடல்கள் பாடி ஸ்டாலினை வரவேற்றிருக் கிறார்கள்.''
"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க டூரை வடிவமைத்துவரும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. ஐ.டி. விங்கையும் நிர்வகித்து வருவதால், முதல்வரின் பாசிட்டிவான அமெரிக்க விசிட் தொடர்பான செய்திகளை அவரது டீம் உடனுக்குடன் தமிழகத்துக்கு உற்சாகமாகத் தந்துவருகிறது.''”
"உதயநிதி முன்னெடுத்திருக்கும் ஃபார்முலா-4 சர்வதேச கார் பந்தயம் அரசியலில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கே?''”
"தெற்காசியாவில் முதன்முதலாக அமைச்சர் உதயநிதியால் முன்னெடுக் கப்பட்டிருக்கும் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை எதிர்த்து பிரசாத் என்கிற பா.ஜ.க. நிர்வாகி வழக்கு போட்டிருந்தார். அதேநேரம் அலிஷா அப்துல்லா என்கிற மாநில பா.ஜ.க. செயலாளர், அந்த கார் பந்தயத்திலும் அதற்கான ஏற்பாடுகளிலும் உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டி ருக்கிறார். இது தொடரபாக அலிஷா கொடுத்த பேட்டிகளை, தமிழக அரசே பெரிதாக எடுத்துப்போட்டு ஃபிளாஷ் செய்தது. அதேநேரம் ரேஸுக்கு எதிரான செய்திகளை அ.தி.மு.க.வில் ஐ.டி. விங் பிரமுகரான சி.டி.ஆர். நிர்மல்குமார் என்பவர் பெரிதாகக் கையில் எடுத்து விளம்பரம் செய்தார். இப்படியாக இந்த ஃபார்முலா-4, அரசியல் களத்தில் அதிரடி வாண வேடிக்கைகளை அரங்கேற்றியிருக் கிறது.''”
"முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் சென்னைக்கு வந்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை வந்த அஜித்தோவல், கவர்னர் ரவியை சந்தித்து 1 மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்துவிட்டு டெல்லி சென்றிருக்கிறார். இவர்களின் சந்திப்பு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு தொடர்பான விவாதங்களே நடந்தன என்று ராஜ்பவன் தரப்பு சொன்னாலும், அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது என்கிறது அதிகாரிகள் தரப்பு. குறிப்பாக, வங்கதேச அகதிகள் அசாம் வழியாகவும், இலங்கை வழியாகவும் தென்னிந்தியாவுக்குள் ஊடுருவு கிறார்கள். அதிலும் அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாக மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறதாம். அதுகுறித்து கவர்னருடன் அஜித்தோவல் விவாதித்ததாகத் தெரிகிறது.''
"மேலும், வங்கதேச அகதிகள் என்ற போர்வையில் இலங்கைத் தமிழர்களும் தஞ்சமடைந்து வருகிறார்களாம். இதுதவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வழியாக தமிழகத் துக்குள் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், இது தொடர்பான விவகாரங்களில் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாநில அரசு போதிய ஒத்துழைப்புத் தருவதில்லை எனவும் ஒன்றிய அரசு அதிருப்தியில் இருக்கிறதாம். இது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்தார்கள் என்கிறார்கள். இது குறித்தெல்லாம் மாநில உளவுத்துறை விசாரித்து வருகிறதாம்.''”
"கவர்னரை பா.ஜ.க. ஹெச்.ராஜாவும் சந்தித்திருக்கிறாரே?''”
"பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி படிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதால், தற்போது கட்சிப்பணிகளை நிர்வகிக்க, பா.ஜ.க.வின் சீனியரும் சர்ச்சை நாயகருமான ஹெச்.ராஜா தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்திருக்கிறது அக்கட்சியின் டெல்லி மேலிடம். இந்தப் புதிய பொறுப்பு கிடைத்த கெத்தோடு ஹெச்.ராஜா கவர்னரை சந்திக்க விரும்பினார். காரணம், ராஜாவும் கவர்னர் ரவியும் ஏற்கனவே நல்ல நட்பில் இருப்பவர்கள். எனவே எந்த புரோட்டோகாலையும் பார்க்காமல் அவர் ராஜ்பவன் சென்று கவர்னர் ரவியை சந்தித்து அளவளாவி இருக்கிறார். இதைப்பார்த்த பா.ஜ.க. சீனியர்கள் பலரும், ராஜாவுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது நிரந்தரம் இல்லாத இடைக்காலப் பதவிதானே, அப்படியிருக்க, இதற்கே இந்த அலப் பறையா?’என கடுகடுக்கிறார்கள்.''”
"போதைப்பொருள் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் களே?''”
"ஆமாங்க தலைவரே, இதன் பின்னணி யில் பெரும் அரசியல் இருக்கிறது. அண்மை யில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை 908 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை பா.ஜ.க. தரப்பு உற்சாகமாகக் கொண்டாடியது. குறிப்பாக பா.ஜ.க. கூட் டணியில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி நிறுவனரும் கல்வி நிறுவனங்களின் அதிபருமான பாரிவேந்தர் பச்சமுத்து தரப்பின் செய்தி ஊடகத்தில் இந்த செய்தி அதிகமாக ஃப்ளாஷ் செய்யப்பட்டது. இதில் கடுப்பான ஜெகத் ரட்சகன், இது குறித்து மேலிடங்களில் முறையிட்டார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய போலீஸ் டீம், சென்னை அருகே பொத்தேரியில் உள்ள பாரிவேந்தருக்குச் சொந்தமான கல்லூரியில் போதைப்பொருள் அதிகம் புழங்குவதாகக் கூறி, அந்தக் கல்லூரி யைச் சுற்றிலும் மாணவர்கள் தங்கியியுள்ள 688 குடியிருப்புகளில் அதிரடி சோதனைகளை நடத்தியது. அதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து 19 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்து பாரிவேந்தர் தரப்பைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது போலீஸ். பின்னர் அந்த மாணவர்கள், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பாரிவேந்தர் -ஜெகத்துக்கு இடையிலான மோதல் இப்படி வேறுவிதமாக வெடித்திருப்பதை பா.ஜ.க. தரப்பே அதிர்ச்சியோடு பார்க்கிறது.''”
"மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 1கிலோ தங்கம் கிடைத்ததாகச் செய்தி வருதே என்ன விஷயம்?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, 525 கோடி நிதி நிறுவன மோசடிப் புகாரில் மயிலாப்பூர் நிரந்தர நிதி நிறுவன அதிபர் தேவநாதனை போலீசார் கைது செஞ்சாங்க. அவருக்கு உடந்தையா இருந்ததா குணசீலன், மகிமைநாதனையும் கைது செஞ்சிருந்தாங்க. அப்போதே அந்நிறு வனத்தின் தலைமை மற்றும் கிளை நிறுவனங் களுக்கு போலீசார் சீல் வைச்சிருந்தாங்க. இதற் கிடையில் தேவநாதனை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தலைமை அலுவலகம் உள்பட கிளை அலுவலகங்களுக்கு தேவ நாதனை போலீசார் அழைச்சுவந்தாங்க. அப் போ நடந்த சோதனையில் தலைமை அலுவலகத்தில் 2 கிலோ தங்கமும், 33 கிலோ வெள்ளியும் பல முக்கிய ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கி யிருக்கு. அதுபோல கிளை அலுவலகங்களில் நடந்த சோதனையில் 1 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்திருக்கு. இவற்றை யெல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மாவட்ட வருவாய் அதிகாரிகளின் பொறுப்புக்கு அந்த சொத்தை மாற்றும் வேலைகள் மும்முரமா நடக்குதாம்.''”
"செய்தித்துறை அதிகாரிகள், துறை அமைச்சரை டென்சன் ஆக்கியிருக்கிறார்களே?''”
"தமிழக செய்தித் துறையின் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை துறை அமைச்சரான சாமிநாதன், சமீபத்தில் கலைவாணர் அரங்க வளாகத்தில் நடத்தினார். இதில் துறையின் செயலாளர் ராஜாராமன் ஐ.ஏ.எஸ், இயக்குநர் வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ். ஆகிய உயரதிகாரிகளும் கலந்துகொண் டனர். இவர்களோடு, நினை வகங்களைப் பராமரிக்கும் தலைமைப் பொறியாளரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு மண்டல இணை இயக்குநர்கள் 6 பேரில் 3 பேரும், தலைமைப் பொறியாளர் உட்பட சிலரும் ஆப்செண்ட் ஆகியிருக்கிறார்கள். இதனால் செம கடுப்பாகி விட்டாராம் அமைச்சர். மேலும், துறையின் பணிகள் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறியிருக்கிறார்கள். இதனால் மேலும் டென்சனான அமைச்சர், கூட்டத்தை கேன்சல் பண்ணி விட்டு பாதியிலேயே கோபமாக வெளியேறிவிட்டாராம். கோட்டையில் அவரை சந்தித்து விளக்கமளிக்க கூடுதல் இயக்குநர்கள் இரண்டு பேர் முயற்சித்தும், அவர்களை அமைச்சர் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிலையில், மறுநாள், செய்தித்துறையை கவனிக்கும் முதல்வரின் இரண்டாவது செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்., அந்த கூட்டத்தை பெயரளவுக்கு நடத்தி முடித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தை அலட்சியப் படுத்திப் புறக்கணித்த மண்டல இணை இயக்குநர்களுக்கு துறையின் செயலாளர் ராஜாராமன், மெமோ கொடுக்க இருக்கிறாராம்.''”
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு சிவில் சப்ளையின் உளவுத்துறை இன்ஸ்பெக்ட ராக இருப்பவர் ரவிவர்மன். மேற்கு மண்டலத்தில் இவரது அராஜகம் தாங்க முடியாமல் சிவில் சப்ளை போலீசார் பரிதவிக்கிறார்களாம். தனக்கு கீழுள்ள எஸ்.ஐ.களிடம் மாத மாமூல் வசூலித்துத் தரும்படி அவர் டார்ச்சர் தருகிறாராம். மாமூல் தர மறுப் பவர்களை, உயரதிகாரியிடம் ’போட்டுக்கொடுத்து தொலைதூர மாவட்டங்களுக்கு அவர்களை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் அடாவடி களையும் அரங்கேற்றுகிறாராம். இதனால், ரவிவர்மன் பெயரைக் கேட்டாலே, மேற்கு மண்டல சிவில் சப்ளை உளவுத்துறையினர் அலறு கிறார்களாம்.''