"சர்வதேச அளவில் விளையாடி பதக்கம் பெற்றவர்களை ஒதுக்கிவிட்டு, தகுதியே இல்லாத வீரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்களை புறக்கணிக் கிறார்கள் தமிழ்நாடு வளைபந்து அசோசியேஷன் நிர்வாகிகள்' என குற்றம்சாட்டுகிறார் நான்காவது உலகக்கோப்பை வளையப்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருஞானம்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர், "எங்கள் கிராமம் விளையாட்டுப் போட்டிகளில் பல சர்வதேச வீரர்களை உருவாக்கிய கிராமம். நான் 2008-ஆம் ஆண்டு முதல் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாநிலங் களுக்கு இடையிலான போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை கலந்துக் கிட்டு விளையாடியிருக் கேன். 2018-ஆம் ஆண்டு பெலாரஸ் நாட்டில் நடை பெற்ற நான்காவது உலகக் கோப்பை போட்டி யில் கலந்துக்கிட்டு வெண்கலப் பதக்கம் பெற்றி ருக்கேன். தேசிய அணி யில் விளை யாடி தங்கப் பதக்கம் வாங்கி யிருக்கேன்.

ff

Advertisment

ஐந்தாவது உலகக்கோப்பைக் கான போட்டி தென் ஆப்பிரிக்கா நாட்டில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கான தகுதித் தேர்வு முகாம் கடந்த மாதம் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் என்னை கலந்துக்கவே விடல தமிழக வளையப்பந்து செயலாளர் சங்கர். ஏன் என்னை கலந்துக்க வைக்கலன்னு கேட்டால் பதில் இல்லை. என்னை பயிற்சியில் கலந்துகொள்ள வைக்கச்சொல்லி தமிழக தலைவர் வரதராஜன், பொருளாளர் அனந்தகிருஷ்ணன், இந்திய அணி பயிற்சி யாளர் முரளி போன்றவர்களிடம் முறை யிட்டபோது சரியான பதில் இல்லை. என்னை ஏன் செலக்சன் பயிற்சிக்கு கூப்பிட லைன்னு கேட்கப்போனபோது செக்யூரிட்டி கள் மூலமாக என்னையும், என்னோட கோச்சர் நாராயணசூர்யாவையும் வெளியே தள்ளிட்டாங்க. இதுபற்றி நேஷ்னல் செக்ரட்டரி யாதய்யாவிடம் முறையிட்ட போது, அவர் "உங்க மாநில கழகத்தில் தான் கேட்கனும், அவுங்க தர்ற பட்டியலைத்தானே நாங்க ஏத்துக்க முடியும்'னு சொல்லிட்டார்.

இந்திய அணிக்கு ஒவ் வொரு மாநிலத்திலிருந்தும் ஜுனியர், சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இருந்து தலா இரண்டு பேர் என 8 பேர் தேர்வு செய்வாங்க. தமிழ்நாட்டிலிருந்து அனுப்பிய பட்டியலை ஆல் இந்திய கமிட்டி ஓ.கே செய்து பட்டியல் வெளியிட்டிருக்கு. இதில் என்னைவிட தகுதி குறைவான அபினேஷ் என்கிற பிளேயரை தேர்வுசெய்திருக்காங்க. அபினேஷ் ஜூனியர் நேஷ னல் பிரிவில் சப்ஸ்டிடியூட்டாக தேர்வுசெய்யப் பட்டிருக்கார், அவர் இதுவரை எந்தப் பரிசும் பெற்றவரில்லை. அப்படிப்பட்டவரை இன்டர்நேஷ னல் லெவலில் விளையாட தேர்வுசெய்ததே விதி மீறல். விதிமுறைகளை மீறி செலக்ட் செய்யப்பட்ட தற்கான காரணம், அவர், இந்திய அணி பயிற்சியாளர் முரளி யின் மகன். தமிழ்நாடு செலக்சன் கமிட்டியில் சங்கர், முரளி இரு வரும் உள்ளனர். இவர்கள் நேஷனல் பிளேயர்ஸ் செலக்டிங் கமிட்டியிலும் உள்ள னர். மாநில அசோஸி யேஷன் செலக்ட் செய்து பயிற்சிப் பட்டி யலில் பெயர் சேர்த்து ஸ்டேட் கமிட்டி வழியாக இன்டர்நேஷ னலில் விளையாட முரளியின் மகனை தேர்வுசெய்திருக்காங்க. அவரை தேர்வுசெய்ய என்னை பலி தந்தி ருக்காங்க''’என்றார்.

இதுகுறித்து கோச்சர்கள் தரப்பில் விசாரித்தபோது, "நேஷனல் லெவலில் விளையாடி பதக்கம்பெற்ற பெண்கள் பிரிவு பிளேயரிடம், அடுத்து செலக்ட் செய்ய ணும்னா பணம் வேணும்னு கேட்டு பணம் தராததால் அவரை செலக்ட் செய்யல. திருஞானத் திடம் விளையாடி பரிசுபெற்ற தொகையில் பங்கு கேட்டு இவர் தரலன்னதும் உன்னை அடுத்தமுறை எப்படி செலக்ட் செய்யறாங்கன்னு பார்த்துட றேன்னு சொல்லியிருக்காங்க, சொன்னதுபோலவே செய்துட்டாங்க. அதுமட்டுமில்லை, பணம் வாங்கிக்கிட்டு ஸ்டேட் லெவலில் விளையாட மற்றொரு ப்ளேயரை செலக்ட் செய்ய திருஞானத் தை வலியுறுத்தி விட்டுத்தர வச்சிருக்காங்க. அதேபோல் மாவட்டங்களில் அசோசியேஷன் பதிவிலும் சிக்கலை உருவாக்கறாங்க. பணம் வசூல்செய்து தர்றவங்களை அங்கீகரிக்கறாங்க'' என்றார்கள்.

vv

Advertisment

குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு வளையப் பந்து சங்க செயலாளர் சங்கரிடம் கேட்டபோது, “"லாஸ்ட் இயர் பர்பாமென்ஸ் வைத்து செலக்ட் செய்து தேர்வுக்கான பட்டியலை ஆல்இந்தியா கமிட்டி ஸ்டேட்டுக்கு அனுப்பிவைக்கும். அதிலிருப்பவர்களை அழைத்து நாங்கள் தேர்வு செய் வோம். இந்த பையன் லாஸ்ட் இயர் விளையாடி மூன்றாவது இடத்தில் வந்திருக்கான். சிங்கிள்ஸ் விளையாட வில்லை, அதனால் பட்டியலில் பெயர் வரவில்லை. நாங் கள் எந்த இடத் திலும் விதிமுறை களை மீறவில் லை. ஜூனியர் பிளேயர் கேட்டகரியில் தான் அபினவ் வை செலக்ட் செய்திருக்காங்க. எங்கள் மீது வாய்வார்த்தையாக குற்றம்சாட்ட லாம், என்ன ஆதாரம் உள்ளது?, வேலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு அசோசியேஷன் செயல்பட்டுவருகிறது, அது பல நேஷனல் ப்ளேயர்களை உருவாக்கி யிருக்கு. வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் உருவான பின் அங்கே இரு தரப்பா பிரிஞ்சி அசோசியேஷன்கள் பதிவுசெய்திருக்காங்க. இதில் எங்கள் மீது குற்றம்சாட்டுபவர்கள், மாநில அசோசியேஷன் பர்மிஷன் வாங்காம இவுங்களா அசோசியேஷன் ஆரம்பித்தால் நாங்க எப்படி அங்கீகரிக்க முடியும்''’என்றார்.

தமிழ்நாடு வளைபந்து சங்கத்தில் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு புகார் அனுப்பி வைத்துள்ளனர்.