தி.மு.க.வை சீமான் விமர்சிப்பது பல வருடங்களாக நடந்துவந்தாலும் தி.மு.க. அதை பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. ஆனால் கலைஞர் பற்றி அ.தி.மு.க. மூலம் வெளிவந்த ஒரு பிரச்சாரப் பாடலை சீமான் தொடர்ந்து பாடுவது இந்த மோதலை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. சீமான் மீது வழக்குகள் தொடரப்படும், அவர் கைது செய்யப்படுவார் என்கிற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

seeman

சீமான் கலைஞர் குறித்துப் பாடும் ஒரு பிரச்சாரப் பாடல் பட்டியலின மக்களை அவமதிக்கிறது என்ற ஒரு புகார் பட்டாபிராம் காவல் நிலையத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரால் கொடுக்கப்பட்டது. அதே பாடலை முதலில் மேடையில் பாடி தி.மு.க.வை விமர்சித்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கெதி ராக புகார் கொடுத்தவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழு ஆண்டுகளுக்குள் தண்டனை பெறும் குற்றத்திற்கு கைது நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை சிறைக்கு அனுப்ப மறுத்தது.

இம்முறை சீமான் அந்தப் பாடலை பாடுவதால் எங்கள் உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது என ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த பட்டபிராம் காவல் நிலைய ஆய்வாளர், இந்தப் புகார் சைபர் கிரைம் குற்றத்தில் வருகிறது என அதை விசாரிக்க மறுத்து விட்டார். புகார் கொடுத்தவர் தாழ்த்தப்பட்டோர் நல வாரியத்தில் முறையிட, அந்த ஆய்வாளரை விசாரித்த தாழ்த்தப் பட்டோர் நல வாரியம் "ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?' என நோட்டீஸ் அனுப்பிவிட்டது.

Advertisment

இந்நிலையில் திருச்சி புறநகரைச் சேர்ந்த காவல்துறை எஸ்.பி. வருண் குமார் ஐ.பி.எஸ். திருச்சி தில்லை நகர் காவல்நிலைய ஆய்வாளர் ரத்தினவள்ளி யிடம்.. சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்தி உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 22 பேர் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். என் மனைவியையும் எனது தாயையும் இணையத்தில் ஆபாச வார்த்தைகளால் பதிவிட்டது தொடர்பான புகார் என கொடுக்கப்பட்ட அந்த புகார் மனுவில், "நான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறேன். எனது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் அவர்களை புகாரின் அடிப்படையில் கைது செய்தோம். இது பற்றி பேசிய நா.த.க. தலைவர் சீமான், ‘வருண் எங்க ஊர்க்காரரு.. உரப்புளிக்காரர், ரொம்ப அதிகமான விளையாட்டு.. தேவரு, நாடார், கோனார், தேவேந்திரர் யாரையுமே அவருக்கு பிடிக்கமாட்டேங்குது. பிறப்பு வெறுப்பு அவருக்கு. இவங்க மேல எல்லாம் குண்டாஸில் வழக்குப் போடறாரு' என்கிறார்.

இதை எதிர்த்து நான் எக்ஸ் தளத்தில் "இதுபோல பொதுவெளியில் பேசுவதை பொதுமக்கள் ஏற்கமாட் டார்கள்'’என்று பதிவு செய்தேன். உடனே பலர் என்னைப்பற்றியும், என் குடும்பத்தாரைப் பற்றியும் அரு வருக்கத்தக்க வகையில் பதிவுகளை பதிலாகப் போட்டார்கள். அதில் கண்ணன் என்பவர், “"சாரே.. நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் முன்னரே தயவுசெய்து இறந்துவிடுங்கள். எங்கள் அண்ணா சொன்னாலும் கேட்க மாட்டோம். நீங்கள் தவறினாலும் அதன் பலனை உங்கள் சந்ததிகள் சந்திக்கும்.. உலகில் எந்த மூலையில் இருந்தாலும்...'’என கொலை மிரட்டல் விடுத்தார் என ஒரு புகாரை பதிவு செய்தார் வருண்குமார் ஐ.பி.எஸ்.

ss

Advertisment

தி.மு.க. ஆட்சியில் பாக்ஸ்கான் கம்பெனியில் எட்டு பெண்கள் இறந்துவிட்டார்கள் என சாட்டை துரைமுருகன் ஒரு புரளியைக் கிளப்பியபோது அதற்காக அப்போது திருவள்ளூர் எஸ்.பி.யாக இருந்த வருண்குமாரால் கைது செய்யப் பட்டார். இதே சாட்டை துரை முருகனை வேறு ஒரு வழக்கில் திருச்சியில் வருண்குமார் கைது செய் தார். சாட்டை துரைமுருகனும் சீமானும் பேசும் ஆடியோக்கள் பல இணைய தளத்தில் வெளியாகியது. இதை வெளியிட்டது வருண்குமார்தான் என சாட்டை துரைமுருகனும் சீமானும் குற்றம் சாட்டினார்கள். ஆனால், வெளியான ஆடியோ எதையும் சீமான் மறுக்கவில்லை. ஆனால், வருண்குமாரை குற்றம் சுமத்தி சீமான் பேச ஆரம்பித்தார். அவரைப் பின்பற்றி நாம் தமிழர் கட்சியினர் வருண் குமாரையும், வருண்குமார் குடும்பத்தையும் ஆபாச அர்ச்சனைகள் செய்து இணைய தளத்தை நிறைத்தார்கள். அதை எதிர்த்து காவல்துறை எஸ்.பி.யாகவே காவல் நிலையத்தில் நேரடியாகப் புகார் கொடுத்திருக்கிறார் வருண்குமார். அவர் தனிப்பட்ட முறையில் புகார் கொடுத்திருந் தாலும் சீமானுக்கு எதிரான இந்த புகார் சீரியஸ் ஆனது. இந்த புகாரிலும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமானுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட கலைஞருக்கு எதிரான பாடல் தொடர்பான புகாரிலும், சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘"நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் ஆபாச மாக யாரையும் எழுதக்கூடாது’ என உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சீமான். அவர் அ.தி.மு.க. பக்கம் செல்லவிருக்கிறார். அவரது உறவினர்கள் அவரை அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு வலியுறுத்துகிறார் கள். அதனால்தான் முன்பைவிட அதிகமாக தி.மு.க.வை எதிர்த்து சீமான் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடமுடியாது என தி.மு.க. அரசு முடிவெடுக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார் சீமான். இதில் சீமான் மட்டும் கைதாகப்போவதில்லை. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 24 பேரை வருண்குமார் ஐ.பி.எஸ். கொடுத்த புகாரில் கைது செய்ய போலீசார் ஆலோசனை செய்கிறார்கள். இதனிடையே, சமூக வலைத் தளங்களில் அவதூறான கருத்தைப் பதிவிட்டதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன், மதுரையைச் சேர்ந்த திருப்பதியை தில்லைநகர் போலீசார் கைது செய் துள்ளனர்.

-தாமோதரன் பிரகாஷ், துரை.மகேஷ்