விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறை பொறுப்பாளராக வும், தலைவர் பிரபாகர னின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் இருந்தவர் பொட்டுஅம்மான். ஈழப் பெண் போராளியான அவ ரது தங்கை மகள், தற்போது சீமான் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி முக்தார் அகமதுவுக்கு, "மை இந்தியா' யுடியூப் சேனலில் அளித்த ஆடியோ பேட்டி...
சீமான் சொல்றதுக்கும், ஈழத் தமிழ் மக்கள் நினைக்கிறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? சீமான் சொல்றதெல்லாம் கரெக்ட்டா? ஈழத்துப் போராளிங்க எப்படி ஃபீல் பண்றாங்க சீமானைப் பத்தி?
அந்த ஆளு ஒரு ஃப்ராடு. யாருமே சீமான் கூட கிடை யாது. தலைவர்கிட்ட இருந்து பிரிஞ்சவங்க இருக் காங்கள்ல அவங்கதான் கூடுதலா இதுல இன்வால்வ் ஆகியிருக்காங்களேயொழிய...
அதாவது மாவீரன் பிரபாகரனுடன் இணைந்து பயணித்து துரோகம் செய்தவர் கள்தான் இப்போ சீமானுடன் இருக்காங்க... அந்த துரோகிகள்தான் இருக்காங்க...
நிச்சயமா... ஆமா. அவருக்கு விசுவாசமா இருக்கிற யாரும் சீமானோட கிடையாது. தலைவரப் பத்தி தப்பாபேசுற யாரும் ஆம் பள கிடையாது. அதுபத்தி பேசாதீங்கன்னு சொல்லிருவேன் நான்.
மாவீரன் பிரபாகரன் எங்கள்ட்டத்தான் ஒப்படைச்சாரு, அடுத்தகட்ட ஈழப் போராட்டத்த அப்படீன்னு...?
ஒரு கடுகு அளவு கூட உண்மை கிடையாது. அதாவது, அவர் இருக்கும்போது, அவருக்குக் கீழ் இருந்த நிறைய போராளிகள் இருக்கினும், அவியள்ட்ட கொண்டுபோய் குடுக்காமல் இங்கே இருக்க சீமான், பேரு தெரியாத, ப்ராப்பர் அட்ரஸ் தெரியாத ஒரு சீமான்கிட்ட கொண்டுபோய் குடுப்பாங்களா... சொல்லுங்க. ஒரு படத்த எடுக்குறாங்க.... அதுவும் பொய்ப் படம் அப்படியென்று நெறைய பேர் சொல்றாங்க கிரா
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறை பொறுப்பாளராக வும், தலைவர் பிரபாகர னின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் இருந்தவர் பொட்டுஅம்மான். ஈழப் பெண் போராளியான அவ ரது தங்கை மகள், தற்போது சீமான் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி முக்தார் அகமதுவுக்கு, "மை இந்தியா' யுடியூப் சேனலில் அளித்த ஆடியோ பேட்டி...
சீமான் சொல்றதுக்கும், ஈழத் தமிழ் மக்கள் நினைக்கிறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? சீமான் சொல்றதெல்லாம் கரெக்ட்டா? ஈழத்துப் போராளிங்க எப்படி ஃபீல் பண்றாங்க சீமானைப் பத்தி?
அந்த ஆளு ஒரு ஃப்ராடு. யாருமே சீமான் கூட கிடை யாது. தலைவர்கிட்ட இருந்து பிரிஞ்சவங்க இருக் காங்கள்ல அவங்கதான் கூடுதலா இதுல இன்வால்வ் ஆகியிருக்காங்களேயொழிய...
அதாவது மாவீரன் பிரபாகரனுடன் இணைந்து பயணித்து துரோகம் செய்தவர் கள்தான் இப்போ சீமானுடன் இருக்காங்க... அந்த துரோகிகள்தான் இருக்காங்க...
நிச்சயமா... ஆமா. அவருக்கு விசுவாசமா இருக்கிற யாரும் சீமானோட கிடையாது. தலைவரப் பத்தி தப்பாபேசுற யாரும் ஆம் பள கிடையாது. அதுபத்தி பேசாதீங்கன்னு சொல்லிருவேன் நான்.
மாவீரன் பிரபாகரன் எங்கள்ட்டத்தான் ஒப்படைச்சாரு, அடுத்தகட்ட ஈழப் போராட்டத்த அப்படீன்னு...?
ஒரு கடுகு அளவு கூட உண்மை கிடையாது. அதாவது, அவர் இருக்கும்போது, அவருக்குக் கீழ் இருந்த நிறைய போராளிகள் இருக்கினும், அவியள்ட்ட கொண்டுபோய் குடுக்காமல் இங்கே இருக்க சீமான், பேரு தெரியாத, ப்ராப்பர் அட்ரஸ் தெரியாத ஒரு சீமான்கிட்ட கொண்டுபோய் குடுப்பாங்களா... சொல்லுங்க. ஒரு படத்த எடுக்குறாங்க.... அதுவும் பொய்ப் படம் அப்படியென்று நெறைய பேர் சொல்றாங்க கிராஃபிக்ஸ பண்ணி யிருக்காங்கன்னு. அப்படிப்பட்ட ஒரு பெர்ஸன்கிட்ட அவர் எப்படிக் குடுக்க முடியும்?
அவரு அப்படித் தான சொல்றாரு... அப்படித்தான் முன்னி லைப்படுத்துறாரு...
நாட்டுக்காக தியாகம் பண்ணுன குடும்பங்கள் எவ்வளவோ இருக்குது.
அவரு, பொட்டம்மனப் பத்தி திட்டு னத பாத்தீங்களா... கேட்டீங்களா அந்த ஆடியோ?
இல்ல... அத உங்க ஓடியோலதான் நான் பாத்தேன். நான் பாக்கயில்ல.
அவரு அரசியல் விமர்சனங்களயெல்லாம் வைக்கிறாரு, அத நான் பொறுத்துக்கொண்டேன். ஆனா, அவரு போராளி பொட்டம்மன பாத்து மசுருன்னு பேசுறதுல்லாம் ஏத்துக்கொள்ளவே முடியாது. பொட்டம்மன் உங்க மாமாவா?
ஆமா...! பொட்டம்மன் எங்க மாமா. அதாவது ஒவ்வொ ருத்தருக்கும் ஒவ்வொரு அஜெண்டா இருக்கும். வெளி யில தெரியாது நமக்கு. அது ஃபுல்பில் ஆகயில்லன்ன உடனேதான அந்தக் கோபம் வெளிப்படுறது. அதனால சீமானப் பத்தி எந்த விஷயத்தையும் நான் காது குடுத்து கேக்குறது இல்ல... அவர ஒரு பொருட்டாவே மதிக்கிறது கிடையாது. அதுதான் உண்மை. ஆமைக் கறி சாப்பிட் டேன்னு சொன்னத நெனைச்சி எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.
ஆனா பிரபாகரனுடைய படத்த பயன்படுத்துறாரே...?
பிரபாகரன் இருக்கும்வரைக்கும் அவர்தான் தலைவனா இருந்தாரு. அதுக்கப்புறம் யாருமே க்ளைம் பண்ணிக்கல. நம்மளும் அதுக்கப்புறம் டைரக்ட்டா இதுபண்ணிக்க முடியல. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் என்ன சொல்வேன்னா... சூரியனப் பாத்து நாய் குலைக்கிறதுனால சூரியன் கீழிறங்கப் போறதில்ல. இவர் குலைக்கிறதுனால எங்க பெயர் கெடப்போறது கிடையாது. உண்மை எல்லாருக்கும் தெரியும். சிலபேர் வேணுமென்று கதைக்கலாம். கண்ண மூடிக்கிட்டு பூனை பால் குடிக்குதுன்னா, பூலோகமே இருண்டதுன்னு அர்த்தம் இல்லை இல்லியா?
எனக்கு என்ன வருத்தம்னா... பிரபாகரனுடைய மகன், மகன்னு சொல்லிட்டு... பெண்கள் விஷயத்துல, பாலியல் ரீதியான விஷயத்துல, வார்த்தையில, நடைமுறையில... எதுலயுமே ஒரு மனுஷன் சுத்தமாவே இல்ல. அவ்வளவு அசுத்தமா இருக்கிறான். இவருபோயி பிரபாகரனுடைய மகன்னு சொல்லலாமா?
எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கெண்டால்... ஈழத் தமிழர்கள விட்டுருங்களேன்... இந்தியாவுல இருக்கிற தமிழர்கள் எப்படி இவரை சும்மா விட்டுட்டு இருக்காங்க. இப்படியெல்லாம் பொய், பொய்யா லேடிஸ்ஸ குறையா பேசுறது, வல்கரா வெளியில பேசுறது... இவருக்கு அகென்ஸ்ட்டா கேஸே போடமாட்டாங்களான்னு நான் யோசிக்கிறது.
இவரு பா.ஜ.க.வோட இணக்கமா இருக்காருபோல இருக்கு. அந்த அடிப்படையில பாக்கும்போது அவரு என்ன பேசுனாலும், அவருக்கு எந்த தடையும் இல்ல. சட்டமும் சரி, காவல்துறையும் சரி... எல்லாருமே வேடிக்கை பாக்கறாங்க. அது எனக்குப் புரியமாட்டேங்குது. ஒரு பொதுத்தளத் துல உக்காந்துக்கிட்டு ராஜீவ்காந்திய நான்தான் கொன்னேன்ங்கிறாரு. இது எவ்வளவு பெரிய அவலம்.
உண்மைதான்...! அதாவது டைகர்ஸுக்கு கெட்ட பெயர் கொண்டுவர வேணும். தமிழ் ஆட்களுக்கு கெட்ட பெயர் கொண்டு வரணும். எப்பவுமே தமிழ் மக்கள் எல்லாருக்கும் ஒரு அலர்ட் கொடுத்துட்டு இருக்க ணும்ங்கிறது இவரோட அஜெண்டா.
அஜெண்டா மட்டுமில்ல... ஈழத்தினுடைய அந்த அமைப்புக்கு தடை இருக்கு. அந்தத் தடையை விலக்கவேண்டும் என்று எல்லாரும் கோரிக்கை வைக்கிறாங்க. இந்த சமயத்துல பாத்து அவரு சொல்றாரு... "ராஜீவ்காந்திய கொன்றது நான்தான்... நாங்கதான்' அப்படீன்னு சொல்றாரு.
நாங்கதான்னா அப்ப இவர புடிச்சு உள்ள போட வேண்டியதுதானே? கவர் மெண்ட் பாத்துட்டு என்ன செய்துக்கிட்டிருக்கு.
அதுதான்... இவரு யாருக்கோ கைக்கூலியா செயல்படுறாரு, ஆனா அப்பாவி மக்கள், அப்பாவி இளைஞர்கள் எல்லாருமே மூளைச்சலவை செய்யப்பட்டதால எல்லாரும் அவருகூட துணைக்குப் போறாங்க. ரொம்ப வேதனையா இருக்கு. யாருமே தெளிவடையல.
அதாவது ரொம்ப நாளைக்கு உண்மை தூங் கிக்கிட்டிருக்கும். ரெண் டொரு நாள்ல வெளிப்படும் போது இதெல்லாம் அழிஞ் சிரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்குது. ஏனென்றால் பிரபா கரனா இருக்கட்டும்... சரி, போ ராளிகளா இருக்கட்டும்... சரி, எல்லாருமே மண்ணுக்காக ரொம்ப மனசார, ஆத்மார்த்தமா எல்லாரும் பாடுபட்டாங்க, போராடுனாங்க, உயிரைத் தியா கம் பண்ணுனாங்க. உண்மை யாவே தியாகம் பண்ணுன ஆட்கள் நெறைய பேரு இருக்கினு. இப்ப பாருங்க ஸ்ரீலங்கால ஓரளவு சுமூகமான நிலை வந்துட்டு இருக்கு. அதை குழப்போணும்னு கூட இப்படி நினைக்கலாம். இப்படித் தப்புத் தப்பா பேசி, இன்னும் இருக்கிற சிச்சுவேஷன வொர்ஸ்ட் பண்றதுக்காகக்கூட இருக்கலாம். அஜெண்டா என்னன்னு தெரியாது.
அஜெண்டா இல்லாம சீமான் செயல்படமாட்டாரு இல்லியா? அஜெண்டா இல்லாம சீமான் பேசமாட்டாருல்ல...
நிச்சயமா... நிச்சயமா! ஏதோ ஒரு ஹிட்டன் அஜெண்டா இருக்கு.
சீமான் அவர்கள், மாவீரன் பிரபாகரன் அவர்களை மிகவும் அசிங்கமா பச்சையா திட்டியிருக்காரு. ஆனா அந்த ஆடியோவ பயன்படுத்தி, அவர (தலைவர) களங்கப்படுத்த விரும்பல. அதனால அந்த ஆடியோவ ரிலீஸ் பண்ணல. ஆனா, அவ்வளவு பச்சையா பேசியிருக்காரு. பொட்டம்மன மசுருன்னு சொன்னாரு. அதுக்கே நீங்க கோபப்படுறீங்க. இன்னும் தலைவர என்னென்ன பேசியிருக்காரு தெரியுங்களா? அதையெல்லாம் கேட்டீங்கன்னா...?
அதனாலதான் நான் சொல்றேன்... சூரியனப் பாத்து நாய் குலைக்கிறதுனால சூரியன் கீழ இறங்க போறதில்ல. இவரு திட்டுறதுனால அவரோட புகழ் குறையப் போறது கிடையாது. அதுதான் உண்மை!
தமிழக மக்கள்தான் புரிஞ்சுக்கணும். ஏன்னா அவங்க, ஒட்டுமொத்த ஈழ மக்களும் சீமானுக்கு ஆதரவா இருக்காங்கன்னு நினைக்கிறாங்க...
நிச்சயமா இல்ல.... ஒருபோதும் கிடையாது. ஒரு திருடனுக்கு, ஒரு வுமனைஸருக்கு எப்படி மக்கள் துணையா இருப்பாங்க? அதுவும் பிரபாகரன்ட வழியில வந்தவங்க யாருமே துணையா நிக்கப்போறது கிடையாது. அவர உண்மையா நேசிக்கிற யாருமே துணை நிக்கப்போறது இல்ல. இது சும்மா ஒவ்வொருத்தரோட ஹிடன் அஜெண்டா... நமக்குத் தெரியாது, சும்மா ஒரு புரளிய கிளப்பி விடுறது.
சம்பந்தமே இல்லாம பிரபாகரன் -பெரியார்னு முன்னிலைப் படுத்துறாரு? தேவையில்லாத வேலை... அவசியமில்லாத வேலை. இதனால ஈழ மக்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கப் போகுதா? இருக்கக்கூடிய உறவுகளையெல்லாம் வெட்டிடணும்ங் கிறாரு.. எந்த உறவுகளும் ஈழ மக்களுக்கு உதவக்கூடாதுன்னு சொல்றாரு.
உண்மைய நான் சொல்றேன். உறவு, ஆத்மார்த்தமான உறவு இருக்குமாயிருந்தா... எந்த கெட்ட சக்தியினாலயும் அதை அழிச்சிட முடியாது, அதை பிரிக்க முடியாது. அதுல எங்களுக்கு 100% நம்பிக்கை இருக்கு. என்ன சொல்றது... எதோ சொல்லுவாங்களே, குறை குடம் தளும்பும் நிறைகுடம் தளும்பாது அப்படீன்னு சொல்லுறது மாதிரி அவங்கள்லாம் குறை குடங்க... அப்படித்தான் பேசிக்கிட்டிருக்குங்க. நாங்க அப்படியே பாத்துட்டு ஓ.கே. சாக்கடையில கல்லெறிஞ்சா அது நம்ம மேலதான் படும். அதனால இவர ஒதுக்கி வைக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது.
-கீரன்