சி.ஏ.ஏ. சட்ட எதிர்ப்புப் போராட்டத் தாலும், வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தினாலும் இந்தியாவெங்கும் கவனத்தை ஈர்த்த டெல்லி, தற்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக்கூறி இஸ்லாமியர்களின் வீடு, கடைகளைக் குறிவைத்து இடித்துத் தள்ளிய டெல்லி மாநகராட்சியின் செயல்பாடுகளால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜஹாங்கிர்புரி பகுதியிலும் அனுமன் ஜெயந்தியின்போது இந்துத்துவா அமைப்பினருக்கும் இஸ்லாமியருக்குமிடையே மோதல் ஏற்பட்டதில் காவல்துறையினர் உள் ளிட்ட பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலை யில், ஜஹாங்கிர்புரி பகுதியிலுள்ள இஸ்லாமியர் கள்தான் கலவரத்துக்குக் காரணமென்றும், அவர்கள், சட்டத்துக்குப் புறம்பாக அங்கே வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி அவர்களின் வீடுகளை இடித்துத்தள்ள வேண்டு மென்று டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்பியதோடு, அதுகுறித்து கடந்த இரு நாட்களாகப் பிரச்சாரம் செய்துவந்தார்.
இந்நிலையில், வடக்கு டெல்லி மாநகராட்சி யைத் தன்வசம் வைத்துள்ள பா.ஜ.க., ஜஹாங்கிர் புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கப்போவ தாகக் கூறி, அதற்கான முறையான அறிவிப்போ, கால அவகாசமோ கொடுக்காமல் கடந்த 20-ம் தேதி புல்டோசருடன் களமிறங்கிவிட்டது. சட்டத்துக்குப் புறம்பாக முறையாக நோட்டீஸ் கூட கொடுக்காமல் கட்டிடங்கள் இடிக்கப்படு வதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவரோடு, இஸ்லாமிய அமைப்பின் சார்பாக கபில்சிபிலும் ஆஜராகி னார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, தற்காலிகத் தடை விதித்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைக்கவில்லை யென்றுகூறி, வீடுகளை இடித்துத்தள்ளும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தகவ லறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், கோர்ட் ஆர்டருடன் தனது காரில் சம்பவ இடத்துக்கு வந்தார். தன்னிடம் கோர்ட் ஆர்டர் இருப்பதாகவும், இடிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் கூறினார். அதற்கு செவிசாய்க்காத நிலை யில், புல்டோசரின் முன்பாக நின்று தடுத்தவர், தன்னிடமிருந்த கோர்ட் ஆர்டரை அதிகாரிகளிடம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னரே இடிப்பதைக் கைவிட்டனர்.
பின்னர், 21-ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதோடு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இப்படி புல்டோசரின் மூலம் அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்துத்தள்ளும் உத்தியை, ஏற்கனவே உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களும் பயன்படுத்தியுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய கபில்சிபில், டெல்லி வழக்கோடு இவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்துள்ளார். இவ்வளவு பிரச்சனைகள் தலைநகர் டெல்லியில் நடந்தும், இதுகுறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபின்னும் வீடுகளை இடித்துத்தள்ளிய டெல்லி பா.ஜ.க.வைப்போலவே, மதவெறிப் பேச்சுக்களுக்காகக் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இந்துத்துவ தலைவர்கள், டெல்லியிலுள்ள புராரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்ற 'இந்து மகா பஞ்சாயத்து' மாநாட்டில் மீண்டும் மதவெறிப் பேச்சில் ஈடுபட்டதும் சர்ச்சையாகியுள் ளது. 'சேவ் இந்தியா' அறக் கட்டளை நிறுவனர் ப்ரீத் சிங், இந்து ரக்சா தள் தலைவரான பிங்கி சவுத்ரி, காசியாபாத் கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த் ஆகியோர்தான் மதவெறிப் பேச்சுக்களைத் தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள்.
நீதிமன்ற உத்தரவையே மதிக்காத அதிகார வர்க்கத்தினரின் போக்கு குறித் தும், மதவெறிப் பிரச்சாரங்கள் அதிகரித்து வருவது குறித்தும் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமனிடம் கேட்டோம். "தற்போது இந்துத்துவ ஆதரவு அரசுதான் மேலிடத்தில் இருக்கிறது. எனவேதான் தைரிய மாக இப்படியெல்லாம் பேசு கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகளும் சில விஷயங்களில் அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாப் பிரச் சனையை எடுத்துக்கொண்டோ மானால், ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவு செல்லும் என்றது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென் றாலோ, ஹோலிப் பண்டிகைக்குப் பின்பே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தள்ளிவைத்து விட்டது.
அதேவேளை, அர்னாப் கோஸ்வாமி போன்றோர் மீதான வழக்குகளில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்படுகிறார் கள். தற்போதைய தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, 2016 ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்கு களை மறு எண்ணிக்கைக்கு உட் படுத்த கோரிய மனுவை விசாரிக்க ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்தார் கள். அதுகுறித்து, என் பெயர் 'அப்பாவு கோஸ்வாமி' என்றிருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ என்னவோ என்று வேதனையுடன் கூறினார். இப்படியான சூழல்தான் இந்துத்துவ அமைப்பினர் தைரியமாக மத வெறுப்பைத் தூண்டும் பேச்சுக் களை நீதிமன்ற உத்தரவையும் மீறிப் பேசுகிறார்கள்" என்றார்.
மின்சார உற்பத்திக்கான நிலக்கரி பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலையேற்றம், பொருளாதாரச் சரிவு எனப் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்ளும்போது, இப்படி மதவெறி அரசியலில் தீவிரம் காட்டுவது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்களும், ஒன்றிய தலைமையும் உணர வேண்டும்.