(24) பாசிசம் எனும் பேரழிவு!

பாசிச தன்மைகொண்ட ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றிட வெறித் தனத்தோடு வேலைசெய்து வருகின்றனர். இதில் அவர்கள் வெற்றிபெற்றால், விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வதற்காக ஹிட்லரின் பாசிசம், ஜெர்மனியில் ஏற்படுத்திய பேரழிவினைப் பற்றி விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

உலகம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் பாசிச ஹிட்லரின் படை, பல நாடுகளை ஆக்கிரமித் தது. பெரும் பகுதி ஐரோப்பிய நாடுகள் ஹிட்லரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பின் சோவியத் யூனியனையும் தாக்கி வெகுதூரம் சென்றது. சோவியத் யூனியனில் வாழ்ந்து வந்த 13 லட்சம் பேர் உள்ளிட்ட சுமார் 60 லட்சம் யூதர்கள் பாசிச படையினால் கொல்லப்பட்டனர். சோவியத் போர்க்கைதிகள் 30 லட்சம் பேரும் (50,000 யூத வீரர்கள் உள்ளிட்டு), யூதர் அல்லாத போலந்து குடிமக்கள் சுமார் 18 லட்சம் பேரும் கொல்லப்பட்டனர். கொலையான செர்பிய குடிமக்கள் (குரோஷியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோ வினா பிரதேசத்தில்) 3,12,000 பேர். இப் போரினால் பாதிக்கப் பட்டு மாற்றுத் திறனாளிகளாக மாறியவர் கள் 2,50,000. ரோமா (ஜிப்சிகள்) சுமார் 5 லட்சம் பேர். இவையும் கூட குறைவான மதிப்பீடுகளே.

Advertisment

gr

ஹிட்லர் படையின் கட்டுப்பாட்டில் இருந்த நெதர்லாந்தில் அன்னிபிராங்க் என்ற பள்ளி மாணவி 1942-ல் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யூத சிறுமியை பாசிச படையினர் கண்டுபிடித்து வதை முகாமில் அடைத்துக் கொன்றுவிட்டனர். அன்னிபிராங்க் தனது தலைமறைவு வாழ்க்கையின்போது எழுதி வந்த நாட்குறிப்பு நூலாக வெளியாகி உள்ளது.

"ஹிட்லரின் வன்முறையையும், தன்னை எதிர்ப்பவர்களை அழித்தொழிக்கும் கொடூரத்தை யும் எதிர்த்து நடைபெற்ற போராட்டம் ஒரு வீர வரலாறு. அதில் ஒரு அத்தியாயம் தான் “பாசிஸ்ட் நீதிமன்றத்தில் ஜார்ஜ் டிமிட்ரோவ் விசாரணை'’ (இவரே பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றியவர்).

1933-ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆட்சி பீடமான ரைஸ்டேக் பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஹிட்லரின் அரசு இதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் சதி வேலையே காரணம் என்று அறிவித்து அப்போது ஜெர்மனியில் இருந்த பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டிமிட் ரோவை கைது செய்து சிறையில் அடைத்தது. பாசிஸ்ட் அரசின் சதியை நீதிமன்றத்தில் துல்லியமாக அம்பலப்படுத்தி அவர் விடுதலை ஆனார். பொய் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற, ஹிட்லர் ஆட்சியில் மனிதவள அமைச்சரான கோயபல்ஸ் என்பவனை தன்னுடைய குறுக்கு விசாரணையில் டிமிட்ரோ நிலைகுலையச் செய்தார்.

அந்த நீதிமன்ற விசாரணையில் டிமிட்ரோ அளித்த வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்தது.

பண இழப்பு - பெரிய இழப்பல்ல,

மரியாதை இழப்பு - பெரும் இழப்பு

மன உறுதி இழப்பு - எல்லாம் இழப்பு”

ஜெர்மனியில் யூதர்களை பாசிஸ்ட்டுகள் கொன்று குவித்தபோது அந்நாட்டு குடிமகனாக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அந்நாட்டை விட்டு தப்பித்து அமெரிக்காவுக்கு குடியேறினார். பின்னாளில் அவரது அறிவியல் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு பெற்றார். ஜெர்மனியிலிருந்து அவர் தப்பிக்கவில்லை என்றால் தலைசிறந்த ஒரு விஞ்ஞானியை உலகம் இழந்திருக்கும். அவரது அறிவியல் ஆய்வும் நடந்திருக்காது.

Advertisment

gr

அந்தக் காலத்தில், பேரழிவை ஏற்படுத்தும் பாசிசத்தை எப்படி முறியடிப்பது, எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி உலகளவில் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பண்பாட் டுச் செயல்பாட் டாளர்கள் கூடி விவாதித்தார்கள். உலகம் முழுவதும் பாசிச கருத்தியலுக்கு எதிராகவும், பாசிச இன அழிப்பிற்கு எதி ராகவும் பல இலக்கிய படைப்புகளும், பல திரைப் படங்களும் வெளியாகின. அத்தகைய புகழ்மிக்க, போற்றிப் பாராட்டப்பட்ட படம்தான் சார்லி சாப் ளின் நடித்து உருவாக்கிய "தி கிரேட் டிக்டேட்டர்'.

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஹிட்லரையும், பாசிசத்தையும் நையாண்டி செய்து, கடுமையாக விமர்சித்தார் சார்லி சாப்ளின். அப்படத்தில் உச்சகட்ட சாப்ளின் வசனம் (உரை) முக்கியத்துவம் வாய்ந்தது.

"நான் யாரையும் ஆட்சி செய்யவோ அல்லது வெற்றி பெறவோ நினைக்கவில்லை. முடிந்தால் நான் அனைவருக்கும் உதவ நினைக்கிறேன் -அது யூதர், ஜென்டைல், கருப்பர், வெள்ளையர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நினைக்கிறோம். மனிதப் பிறவிகள் அப்படித்தான். நாம் ஒருவரை யொருவர் வெறுக்கவோ, இகழவோ விரும்பவில்லை

grr

இந்த உலகத்தில் அனைவருக்கும் இடம் இருக்கிறது. இந்த நல்ல பூமி செழிப்பானது, அனை வருக்கும் தேவையானதை கொடுக்க அதனால் முடியும். வாழ்க்கைப் பாதை சுதந்திரமானதாகவும், அழகானதாகவும் இருக்க முடியும்; ஆனால் நாம் அந்த பாதையை தொலைத்துவிட்டோம். உலகை வெறுப்பு எனும் தடுப்பு பிரித்துவிட்டது. நம் கால்களை விறைப்பாக்கி நடக்க வைத்து துயரத்திலும் ரத்தச் சகதியிலும் தள்ளிவிட்டது.

பண்புகள் இல்லையெனில் வாழ்க்கை வன்முறையாகிவிடும்; தொலைந்துபோய்விடும். உலகளாவிய சகோதரத்துவம் நம் அனைவரின் ஒற்றுமைக்கான கூக்குரல்தான். அப்பாவிகளை சித்ரவதை செய்து சிறைப்படுத்தும் ஒரு அமைப்பிற்கு பலி யானவர்கள் இவர்கள். விரக்தி அடையாதவர்கள். மனிதர்களின் வெறுப்பு கடந்து போய்விடும்.

சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள். மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களுக்கே திரும்பி வரும். மனிதர்கள் இறக்கும்வரை சுதந்திரம் அழியவே அழியாது. எனவே, ஜனநாயகத்தின் பெயரால் அந்த சக்தியைப் பயன் படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். கண்ணியமான உலகத்திற்கு போராடுவோம்.

பகுத்தறிவினால் ஆன உலகத்திற்காகவும், அனைத்து மனிதர்களின் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அறிவியல் உலகத்திற்காகவும் போராடுவோம். வீரர்களே ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்றிணைவோம்.''”

உலக நாடுகள் மீது பாசிச ஹிட்லர் படை தொடுத்த தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, 1940-ஆம் ஆண்டு "தி கிரேட் டிக்டேட்டர்'’படம் வெளியானது. பாசிசத்தை எதிர்த்து போராடுபவர் களுக்கு இத்திரைப்படம் உற்சாகமளித்தது. இதனால் சார்லி சாப்ளின் ஹிட்லரின் கோபத்திற்கு ஆளானார். அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஸ்பெயின் தேசம் பாசிச படையின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது. ஹிட்லரின் கூட்டாளி பிராங்கோ, ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரி ஆனார். அங்கு பாசிச நர வேட்டையை எதிர்த்து நடந்த போராட்டத்திலும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய முத்திரையை பதித்திருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் கோர்னிகா என்ற கிராமத்தை பாசிசப் படைகள் முற்றாக அழித்தபோது, அந்த பேரழிவை விளக்கக்கூடிய பாசிசத்திற்கு எதிரான ஒரு ஓவியத்தை பிகாசோ தீட்டினார். அது உலகப் புகழ் பெற்ற ஓவியமானது. அந்த ஓவியத்திற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

1932-ஆம் ஆண்டு பல நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில் “"தாய்' நாவல்’எழுதி அழியாப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கலந்துகொண்டார். பாசிசத்தை வீழ்த்துவதில் எழுத்தாளர்களும், கலைஞர்களும் முக்கிய பங்காற்ற வேண்டுமென்று பலரும் சூளுரைத்தார்கள். அக்கூட்டத்தில் பாசிசத்தை எதிர்கொள்வதற்கு பல ஆலோசனைகளை கூறிய மாக்சிம் கார்க்கி -எழுத்தாளர்கள், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு முன்னால் ஒரு கேள்வியை வைத்தார். "நீங்கள் யார் பக்கம்? பாசிசத்தின் பக்கமா? பாசிசத்தை எதிர்த்து போராடுபவர்கள் பக்கமா?'

90 ஆண்டுகளுக்கு முன்னதாக மாக்சிம் கார்க்கி எழுப்பிய அந்த கேள்வியைத்தான் இன்று இந்தியாவில் எழுப்ப வேண்டியுள்ளது.

எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரோ, கவுரி லங்கேஷ் ஆகியோர் பாசிச வாரிசு பரிவாரத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நமது நாட்டிலும் எழுத் தாளர்கள், கலைத்துறை படைப் பாளிகள், ஓவியர்கள் உள்ளிட்ட பண்பாட்டுச் செயல்பாட்டாளர் கள் இத்தகைய கேள்வியை எழுப் பக்கூடிய கருத்தியலை மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். உதாரண மாக, ஆனந்த் பட்வர்தன் என்ற குறும்பட இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சங் பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக கோபம் கொப்பளிக்க பேசியிருக்கிறார்.

"ஜனநாயகத்தின் தூண்கள் எல்லாம் தாக்குத லுக்கு உள்ளாகி உள்ளன. ஒரு திரைப்பட இயக்குநர் இனியும் அமைதியாக இருப்பது ஒரு தீர்வாகாது. வெளிப்படையாகப் பேசுவது, செயல்படுவது ஆபத்தை வரவழைக்கலாம். ஆனால், பேசாமல் இருப்பது நமது ஆன்மாவைக் கொன்றுவிடும்.''”

கடந்த காலத்தில் மதச்சார்பின்மைக்காக, மத நல்லிணக்கத்திற்காக, ஜனநாயகத்திற்காக, மனித உரிமைக்காக பல குறும்படங்களை இயக்கி வெளியிட்டவர்தான் ஆனந்த் பட்வர்தன்.

மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை, ஜனநாயகத்தை, மதச்சார்பற்ற இந்திய குடியரசைப் பாதுகாக்க பண்பாட்டுச் செயல்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

(தொடரும்)