"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டின் முக்கியமான பெரும்புள்ளிகள் ஒரே நேரத்தில் டெல்லிக்குச் செல்வது அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கு.''”
"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, ஆளுநர் ரவி ஆகியோர் ஒரே சமயத்தில் டெல்லியில் முகாமிடுகிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று அதிரடித் தீர்மானத் தை சட்ட சபையில் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க. ஆட்சி செய்யாத மற்ற மாநில அரசுகளையும், இது போன்ற தீர்மானத்தை நிறை வேற்றும்படி கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த அதிரடித் தீர்மானத்திற்கு, கேரளத்தின் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முதல் வர்கள் ஆதரவும் வரவேற்பும் கொடுத்திருக் கிறார்கள். இதெல்லாம் டெல்லியைத் திகைக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து, கவர்னர் தொடர்பான அந்தத் தீர்மானத்தில் கையெ ழுத்திட வலியுறுத்துவதற்காக வும், சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைக்கவும், முதல்வர் ஸ்டாலின் 27ஆம் தேதி இரவு டெல்லி செல்கிறார்.''”
"கவர்னரும் ஒருவித பதட்டத்தோடு டெல்லி போயிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, டெல்லியின் அவசர அழைப்பின் பேரில் 26ஆம் தேதி காலை டெல்லிக்குப் பறந்திருக்கிறார் ஆளுநர் ரவி. மூன்று நாள் டெல்லியில் முகாமிடும் அவர், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்திக்க இருக்கிறார். சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளும் திட்டம் இருக்கிறதாம். சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானம், குடியரசுத்தலைவ ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆளுநரிடம் டெல்லி சில அறிவுறுத்தல் களை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கவர்னர் பற்றி நிறைய புகார்கள் டெல்லிக்குப் போயி ருப்பதால் கவர்னரும் பதட்டத் துடனும், குழப்பமான மன நிலையிலும்தான் அங்கே சென்றிருக்கிறார் என்கிறது ராஜ்பவன் தரப்பு.''”
"டெல்லி உத்தர விட்டபடி ஆளுநர் சில அறிக்கைகளை அனுப் பாததால் தான் இந்த அழைப்பு என்றும் தகவல் வருதே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, மாதா மாதம் இங்குள்ள தி,மு.க. அரசைப் பற்றி ஆளுந ரிடம் ஏற்கனவே ரிப்போர்ட் கேட்டிருக்கிறது டெல்லி. அந்த வகையில் மார்ச் மாதம் அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்டையே கவர்னர் ரவி இன் னும் அனுப்பவில்லையாம். அது குறித்து டெல்லியில் இருந்து காரசாரமாகக் கேள்வி எழுப்பப்பட்டி ருக்கிறதாம். எனவேதான் கோப்பும் கையுமாக ஆளுநர் டெல்லிக்குப் பறந்திருக்கிறார் என்கிறார் கள். குறிப்பாக, மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதிவரை நடந்து முடிந்த நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரில், தி.மு.க. அரசால் நிறை வேற்றப்பட்ட 17 சட்ட மசோதாக்கள் குறித்து, கவர் னர் கனமான ஒரு ரிப்போர்ட்டையும் தயாரித்துக் கூடவே எடுத்துச் சென்றிருக்கிறாராம். மேலும், கடந்த காலங்களில் ஆளுநர் மாளிகையின் செலவினங்களுக்காக தி.மு.க. அரசு கொடுத்த 5 கோடி ரூபாயில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். எழுப்பிய குற்றச் சாட்டுகள் குறித்த, தன்னிலை விளக்க அறிக்கையை யும் கவர்னர் டெல்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறாராம்.''
"டெல்லியில் அமித்ஷா நடத்திய சீக்ரெட் பஞ்சாயத்தில் எடப்பாடியும் கலந்துக்கிட்டு இருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, அந்தப் பஞ்சாயத்து பற்றி அப்புறம் வர்றேன். எடப்பாடியின் இந்தப் பயண நோக்கம் வேறு. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அவர் தரப்புக்கு இரட்டை இலையையும் ஒதுக்கிய நிலையில், அதற்கெல்லாம் அமித்ஷாவுக்கு நேரில் நன்றி சொல்ல ஆசைப் பட்ட எடப்பாடி, அதற்காக அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தார். அமித்ஷாவும் 26ஆம் தேதி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி இருந்தார். அவருடன் தம்பிதுரையும் சேர்ந்து செல்வதாக இருந்தார். ஆனால் திடீரென்று அவரை முன்னதாகவே டெல்லி சென்று, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனபிறகு, முதல் முறையாக டெல்லி செல்லும் தனக்கு வரவேற்பை ஏற்பாடு செய்யும்படி அனுப்பிவைத்தார். அமித்ஷா உடனான சந்திப்பின் போதே, கூட்டணி குறித்தும் பா.ஜ.க.வுடன் முடிவெடுக்கும் நோக்கத்திலும் இந்த சந்திப்பு இருந்ததால், தன்னுடன் தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் எடப்பாடி அழைத்துச் சென்றார். அதுபோல் டெல்லி செல்வதற்கு முன்பாகவே ஒரு ரிப்போர்ட் டையும் அமித்ஷாவுக்கு அனுப்பிவிட்டுத்தான் எடப்பாடி சென்றாராம்.''”
"தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ரிப்போர்ட்டா?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, அண்ணா மலை பற்றிய அந்த புகார் ரிப்போர்ட்டில், அண்ணாமலை எப்படி எப்படி எல்லாம் அ.தி. மு.க.வை விமர்சித்தார் என்றும், அவரது கட்சிப் பிரமுகர்களையெல்லாம் எப்படி தனக்கு எதிராகத் தூண்டிவிட்டார் என்றும். அவரது ஆதரவாளர்கள் தன் உருவ பொம்மையை எரித்தனர் என்றும், தன் எதிரியாக இருக்கும் ஓ.பி.எஸ்.சை. கரி சனத்தோடு தேடிப்போய் சந்தித்தார் என்றும் புகார்களை அடுக்கி இருந்த எடப்பாடி, தி.மு.க. அமைச்சர்களின் சொத்துக் குவிப்புப் பட்டியலை அறிவித்த அன்றே, தங்கள் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களையும் அம்பலப்படுத்த இருப்பதாகச் சொல்லி, தங்கள் இமேஜை டேமேஜ் ஆக்கிவிட் டார் என்றும் அதில் எடப்பாடி மூக்கைச் சிந்தி இருந்தார். அதோடு இப்படிப்பட்ட அண்ணா மலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தால் எப்படி நம் கூட்டணி வலுப்படும் என்றும் அவர் முறையிட்டிருந்தாராம்.''
"இதனால்தான் அந்தப் பஞ்சாயத்தா?''”
"அதேதாங்க தலைவரே, எடப்பாடியின் இந்தப் புகார்க் கடிதத்தைப் பார்த்த அமித்ஷா, கர்நாடகத் தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை, அவசரமாக லைனில் பிடித்து, எடப்பாடி டெல்லி வரும் நேரத்தில் நீங்களும் இங்கே இருந்தாக வேண்டும் என்று நேரடி விசாரணைக்கு அழைத் திருக்கிறார். அதன்படி எடப்பாடி தரப்பும் அண்ணா மலையும் அமித்ஷா வீட்டில் 26 ஆம் தேதி ஆஜராகி இருக் கிறார்கள். அங்கே அண்ணாமலை தீவிரக் குரலில் விசாரிக்கப் பட்டிருக்கிறார். இந்தப் பஞ்சாயத்தில் பா.ஜ.க. வின் தேசியத் தலைவ ரான ஜே.பி. நட்டாவும் கலந்துக்கிட்டாராம். இரு தரப்பும் இணைந்து செல்லும்படி அங்கே அறிவுறுத்தப்பட்டிருக் கிறது. கடைசியாக அங்கே, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலை யில் அண்ணாமலையும் எடப்பாடி யும் கைகுலுக்கிக் கொண்ட தாகவும் சொல்கிறார்கள். இதன்பின் தேர்தல் உடன்பாடு குறித்தும் பேசி, ஒரு முடிவை எட்டி யிருக்கிறார்கள்.. சமாதானப் படலம் நடந்த போதும், எடப்பாடி ரெஸ்ட்லெஸ்ஸாகவே இருந் தார் என்கிறார்கள். அமித்ஷாவிடம் விடைபெறும் முன் எடப்பாடி, அந்த ஓ.பி.எஸ். தி.மு.க.வின் சப்போர்ட்டில்தான் ஆட்டம் போடுகிறார் என்றும் புகார் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.''”
"கொடநாடு விவகாரத்தில் ஒரு ஜோதிடரும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறாரே?”
"ஆமாங்க தலைவரே, விசாரணை டீமுக்குக் கிடைத்திருக்கும் தகவலின்படி பார்த்தால், கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் அனைத்தும் சேலம் இளங்கோவனுக்கும் எடப்பாடிக்கும் நெருக்கமான ஒரு ஜோதிடர் மூலம்தான் எடப்பாடி கைக்கு வந்திருக்கிறது. அதில் இருந்த தன் ஆவணங்களை எடுத்துக்கொண்ட எடப்பாடி, ஐவரணியின் மீதமுள்ள மற்றவர்களின் ஆவணங்களை அவரவரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டாராம். மேலும் எஞ்சியிருந்த ஆவணங்கள் எல்லாம் சசிகலாவுக்குச் சொந்தமானதாம். அதை சசியிடம் கொடுப்பதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் எடப்பாடி பாதுகாப்பாக வைத்திருந்தாராம். இதற்கிடையே எடப்பாடிக்கும் சசிக்கும் முட்டல் மோதல்கள் ஏற்பட்டதால், அந்த ஆவணங்கள் குறித்து எடப்பாடி தரப்பு வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறதாம். இப்படியாகக் கதை, கண்ட திசைகளிலும் சுவா ரஸ்யமாக நீள்கிறது. எனவே இந்த விவகாரத்தின் படி, ஆவணங்களை கொடநாட்டில் இருந்து எடப்பாடி கையில் சேர்த்த அந்த ஜோதிடரும் இப்போது விசாரணையில் அகப்பட்டிருக்கிறார்.''”
"இது பற்றி எல்லாம் முன்பே விசாரணை டீம்கள் கண்டறியவில்லையா?''”
"அது ஒரு தனிக் கதைங்க தலைவரே, இந்த விவகாரத்தை முதலில் விசாரித்த ஐ.ஜி. சுதாகர், ஜெ.வின் முன்னாள் டிரைவர் கனகராஜ் கொலை விவகாரத்தைத் தனி வழக்காக்கி விசாரிக்க முனைந்தாராம். ஆனால் அதற்கு அப்போது, உளவுத்துறை அதிகாரியான டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தடை போட்டுவிட்டாராம். ஆனால் இப்போது அந்த கனகராஜ் கொலை வழக்குதான் கொடநாடு விவகாரத்தில் மைய அச்சாகச் சுழல்கிறதாம். அதேபோல் சசிகலாவை ஐ.ஜி. சுதாகர் கொடநாடு க்ரைம் பற்றி விசாரித்தபோது, எனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்று அப்போது சொல்லி இருந்தார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணையில் சுதாகர் ஈடுபட முனைந்த தருவாயில்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் வந்திருக்கிறது. இப்போது, விசாரணையில் ஏறத்தாழ 90 சதம் எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்டதாம். இந்த நிலையில், தன்னை முற்றுகையிட்டிருக்கும் இந்த நெருக்கடி பற்றி எடப்பாடிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் அவர் தனது டெல்லி விசிட்டுக்கு முன்பாக சேலத்தில் உள்ள தன் வீட்டில் சிறப்பு யாக பூஜை ஒன்றை நடத்தி இருக்கிறார். கொட நாடு கொலைலி கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிர்மறையாக எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாக பூஜையாம்.''”
"இதற்கு மத்தியில் பா.ஜ.க. அண்ணாமலை ஒரு பக்கம் பரபரப்பான வியூகங்களில் இருக்கிறாரே?''
"உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதித்துவிட்டதாகவும், இதெல்லாம் எங்குபோய் முடியப்போகிறதோ? என்றும் பி.டி.ஆர். பேசியதாக வெளியான ஆடியோ குறித்து புகாரை, சி.பி.ஐ.யிடம் கொடுக்க அண்ணா மலை தயாராகி வருகிறாராம். இது குறித்து தயாரிக்கப்பட்ட புகார் மனுவை பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு அவர் அனுப்பி வைத்திருக்கிறாராம். அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுப்பார் என்று கமலாலயத் தரப்பு சொல்கிறது. அ.தி.மு.க. சார்பிலும் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுக்க முயற்சி நடக்கிறது. இந்த சூழலில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களில் ஒருவரும், எடப் பாடியின் ஆதரவாளருமான பாபு முருகவேல், பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரத்தில் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மண்டல மத்திய விஜிலென்ஸ் துறையின் இயக்குநருக்கும், தமிழ்நாடு விஜிலென்ஸ் இயக்குநருக்கும் புகார் கடிதம் கொடுத்திருக்கிறார். இதேபோல். டெல்லி சென்ற எடப்பாடியும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. .யின் விசாரணை வேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தி இருக்கிறாராம்.''”
"அமைச்சர் ஒருவரின் பி.ஏ. பற்றியும் ஒரு செய்தி வருதே?''”
"ஆமாங்க தலைவரே... அமைச்சர் முத்து சாமி, எம்.ஜி.ஆரிடம் தயாரானவர். அதனால் அவரைப் போலவே வாரி வழங்கும் வள்ளல் குணமும் அவருக்கு உண்டு என்பார்கள். இப்போது அவர் பெயரை அவர் பி.ஏ. ஒருவரே டேமேஜ் செய்கிறாராம். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என்று அமைச்சர் கொடுக்கச் சொன்னால் அவர்களிடம் 500, 1000-ஐக் கொடுத்துவிட்டு மிச்சத்தைத் தன் பையில் வைத்துக் கொண்டு வருகிறவர்களை வெறுப்பேற்று கிறாராம். அமைச்சர் சேகரித்து வைத்திருக்கும் நல்ல பெயரை எல்லாம் சேகர் என்ற அந்த உதவியாளர் இப்படி ஸ்வாஹா செய்யலாமா? என ஈரோடு உடன்பிறப்புக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான கந்தசாமி ஐ.பி.எஸ். இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். அதனால் அந்தப் பதவியைக் கைப்பற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் இப்போதே விறுவிறு ரேஸ் ஆரம்பமாகிவிட்டது என்கிறது காவல்துறைத் தரப்பு.''”