சிக்கலில் செபி... அதானி...மோடி! வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்!

ss

லுவான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் நுழைந்துள்ள காங்கிரஸ், முதன்முறையாக நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பதவி விலகக்கோரி, வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹிண்டர்பர்க் -செபி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு விட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, பிரதமர் மோடிக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

sebi

அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனம், கடந்தமுறை அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பங்குச்சந்தையில் நடத்திய மோசடிகள் குறித்தும் நிறைய ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது. அதுகுறித்து 80 கேள்விகளையும் எழுப்பியிருந்தது. அப்போது இவ் விவகாரம் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பியதற்கு இறுதிவரை பிர

லுவான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் நுழைந்துள்ள காங்கிரஸ், முதன்முறையாக நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பதவி விலகக்கோரி, வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹிண்டர்பர்க் -செபி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு விட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, பிரதமர் மோடிக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

sebi

அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனம், கடந்தமுறை அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பங்குச்சந்தையில் நடத்திய மோசடிகள் குறித்தும் நிறைய ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது. அதுகுறித்து 80 கேள்விகளையும் எழுப்பியிருந்தது. அப்போது இவ் விவகாரம் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பியதற்கு இறுதிவரை பிரதமர் மோடி மவுனம் சாதித்தார். ராகுல் காந்தியை குறிவைத்து அவரது எம்.பி. பதவியை பறிப்பது வரை பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்கியது. அப்போது தடாலடியாக சரிந்த அதானி குழும பங்குகளைத் தூக்கி நிறுத்துவதற்காக அவ் விவகாரத்தை செபி விசாரிக்குமெனக்கூறி, செபியோ, அப்படியெல்லாம் தவறு எதுவுமே நடக்கவில்லையென்று அதானிக்கு நற்சான்றிதழ் வழங்கியது.

இப்போது மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்துக்கும், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச்சுக்கு மான தொடர்பு குறித்து சந்தேகமெழுப்பி யுள்ளது. ஏற்கெனவே அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமாக பெர்முடா நாட்டிலுள்ள குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டிலுள்ள ஐ.பி.இ. பிளஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, அங்கிருந்து இந்தியாவி லுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்தது. குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் நிறுவனமானது, இந்திய பங்குச்சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தும் மோசடியில் ஈடுபட்டதாக முன்பே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனங்களில், இந்திய செபி அமைப்பின் தலைவரான மாதபி புச் முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், 2017 ஏப்ரலில் மாதபி புச், செபி அமைப்பின் உறுப்பினராகச் சேரும் சூழலில், அவசர அவசரமாக மார்ச் மாதமே தனது முதலீடுகளை யெல்லாம் கணவர் தவல் புச்சின் பெயருக்கு மாற்றி யுள்ளார். அதன்பின் 2022-ல் செபி அமைப்புக்கே தலைவராகத் தேர்வாகிறார். ஆக, செபி அமைப்பின் தலைவரான மாதபி புச், அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த காரணத்தால், அந்நிறுவனத்தின் மொரீசியஸ் முதலீடுகள் குறித்து சரியாக விசாரிக்கவேயில்லை என்று ஹிண்டர்பர்க் குற்றம் சாட்டுகிறது.

sebi

இதில், அதானி குழும நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த செபி தலைவர், அந்நிறுவனத்தை விசாரித்த செபி குழுவில் இருந்தாரா என்ற கேள்வி எழுப்பப் பட்டது. ஆனால் அதற்கு செபி தரப்பில் பதில் தரப்படவில்லை. எனினும், செபி தலைவரும் அந்த விசாரணைக்குழுவில் இருந்தாரென்றே கண்டறியப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனத்தோடு தொடர்புடைய நிலையில், அந்த விசாரணைக்குழுவில் இடம்பெறுவதை செபி தலைவர் தவிர்த்திருக்க வேண்டுமென்று ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டுகிறது.

அதேபோல், அகோரா அட்வைசரி லிமிடேட் என்ற நிறுவனத்தை மாதபி புச் நடத்திவந்த நிலையில், செபி தலைவராக 2022ஆம் ஆண்டில் பொறுப்பேற்குமுன்பாக அந்நிறுவனத்தை தனது கணவரின் பெயருக்கு அவர் மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக மாதவி புச்சின் கணவர் இருந்தபோதும், அதன் 99% பங்குகள் மாதபி புச்சின் பெயரிலேயே இருப்பதாக ஹிண்டர்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. இது செபியின் விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

செபி தலைவராக மாதபி புச் நியமிக்கப்பட்ட தையும் ஹிண்டர்பர்க் கேள்வியெழுப்பி யுள்ளது. செபி அமைப்பின் தலைவராக நியமிக்க ஐ.ஏ.எஸ்.கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.ஏ.எஸ். இல்லாத மாதபி புச் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளதை கேள்விக்குள்ளாக்கியது.

rr

தற்போது இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பங்குச் சந்தையை ஒழுங்கு படுத்தும் ஆணையமான செபி மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பு ஆபத்திலிருப்பதால் இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் செபி தலைவர் மாதபி ஏன் ராஜினாமா செய்யவில்லை? பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள், செபி தலைவரா? பிர தமர் நரேந்திர மோடியா? அல்லது அதானியா? இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா?'' என பல்வேறு கேள்வி களை எழுப்பியதோடு, "இவ்விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டு மென்றால் ஏன் மோடி பயப்படுகிறார்?'' என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "மாதபி யின் தலைமையில் அதானி மீது செபி நடத்தும் எந்த விசாரணையையும் நம்ப முடியாது. இதில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கேட்டுள்ளார்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காகவாவது செபி தலைவரை பதவியிலிருந்து நீக்கியாக வேண்டும். ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா?

nkn210824
இதையும் படியுங்கள்
Subscribe