நாலரை மணி நேரம் செலவிட்டு ஓ.டி.டி.யில் "கூச முனிசாமி வீரப்பன்' ஆவணத் தொடரைப் பார்த்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதனாலேயே இத்தொடர் உலக அளவில் ‘டிரெண்டிங்’ ஆகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சந்தனக் கடத்தல் வீரப்பனை யாருக்குத்தான் தெரியாது? இதற்கு முன் வீரப்பன் குறித்த எத்தனையோ தகவல்களைக் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம்; வீடியோ காட்சிகளாகப் பார்த்துமிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடருக்கு இந்த அளவுக்கு உச்சபட்ச வெற்றி கிடைத்திருப்பது ஏன்?
"கடவுளே.. ஆண்டவா.. முருகா..'” எனக் கும்பிட்ட படி திரையில் தோன்றி, "அதாவது..'’என்று ஆரம்பித்து, சந்தன மரம் வெட்டியதிலிருந்து, பழிவாங்கல் கொலைகள் வரை ஒன்றுவிடாமல், அத்தனை சுவாரஸ்யமாக, தன் வரலாறை, தன் வாயாலேயே விவரிக்கிறான் வீரப்பன். வார்த்தைக்கு வார்த்தை மக்கள் மீதான அக்கறையை வீரப்பன் வெளிப்படுத்தினாலும், சட்டத்தின் பார்வையில் அவன் நடத்தியவை குற்றச்செயல்களே. ஆனால், குற்றத்தின் பின்னணியை விளக்கி “"அதனால்தான் அப்படி செய்தேன்..'” என்று அவன் நியாயப்படுத்தும்போது, ‘வீரப்பன் சொல்வதி லும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது..’ என, திரைப்பட நாயகர்களை ஏற்றுக் கொள்ளும் வழக்கமான மனநிலைக்கு பார்வையாளர்கள் பலராலும் வந்துவிட முடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆவணத்தொடரின் நிஜ நாயகனான வீரப்பனுடன் பார்வையாளர்களால் இணைந்தே பயணிக்கமுடிகிறது.
இந்த ஆவணத் தொடரில் புனையப் பட்ட கதாபாத்திரங்கள் எதுவுமில்லை. தேர்ந்த நடிகர்கள் யாருமில்லை. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், அதிர
நாலரை மணி நேரம் செலவிட்டு ஓ.டி.டி.யில் "கூச முனிசாமி வீரப்பன்' ஆவணத் தொடரைப் பார்த்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதனாலேயே இத்தொடர் உலக அளவில் ‘டிரெண்டிங்’ ஆகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சந்தனக் கடத்தல் வீரப்பனை யாருக்குத்தான் தெரியாது? இதற்கு முன் வீரப்பன் குறித்த எத்தனையோ தகவல்களைக் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம்; வீடியோ காட்சிகளாகப் பார்த்துமிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடருக்கு இந்த அளவுக்கு உச்சபட்ச வெற்றி கிடைத்திருப்பது ஏன்?
"கடவுளே.. ஆண்டவா.. முருகா..'” எனக் கும்பிட்ட படி திரையில் தோன்றி, "அதாவது..'’என்று ஆரம்பித்து, சந்தன மரம் வெட்டியதிலிருந்து, பழிவாங்கல் கொலைகள் வரை ஒன்றுவிடாமல், அத்தனை சுவாரஸ்யமாக, தன் வரலாறை, தன் வாயாலேயே விவரிக்கிறான் வீரப்பன். வார்த்தைக்கு வார்த்தை மக்கள் மீதான அக்கறையை வீரப்பன் வெளிப்படுத்தினாலும், சட்டத்தின் பார்வையில் அவன் நடத்தியவை குற்றச்செயல்களே. ஆனால், குற்றத்தின் பின்னணியை விளக்கி “"அதனால்தான் அப்படி செய்தேன்..'” என்று அவன் நியாயப்படுத்தும்போது, ‘வீரப்பன் சொல்வதி லும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது..’ என, திரைப்பட நாயகர்களை ஏற்றுக் கொள்ளும் வழக்கமான மனநிலைக்கு பார்வையாளர்கள் பலராலும் வந்துவிட முடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆவணத்தொடரின் நிஜ நாயகனான வீரப்பனுடன் பார்வையாளர்களால் இணைந்தே பயணிக்கமுடிகிறது.
இந்த ஆவணத் தொடரில் புனையப் பட்ட கதாபாத்திரங்கள் எதுவுமில்லை. தேர்ந்த நடிகர்கள் யாருமில்லை. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், அதிரடிப்படையினரால் பாதிக்கப் பட்ட மக்களே நேரடி சாட்சியங்களாகி, தங்களது வலியையும், சோகத்தையும் வலிக்க வலிக்க விவரிக்கும்போது, கல்நெஞ்சத்தினரும் கரைந்துவிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பை எகிறவைத்து, பேட்டி களையும், ஆவணங்களையும், அதன் பின்னணியையும், பதைபதைக்கவைக்கும் சதீஷ் ரகுநாதனின் இசையுடன், எளிதில் புரியும் விதத்தில் காட்சிகளைக் கோர்வைப் படுத்தியிருக்கிறார் எடிட்டர் ராம் பாண்டியன்.
"டேய் ஆடு திருடி கோபாலகிருஷ்ணா, நீ சரியான ஆம்பளையா இருந்தா சொரக்கா மடு வாடா, நீயா நானா பாத்துக்கலாம்'’ என்று துணியில் எழுதி தொங்கவிட்டு, அதிரடிப்படை எஸ்.பி. கோபாலகிருஷ்ண னுக்கு வீரப்பன் சவால்விடும் ஓபனிங்கில் இருந்து, “"நான் நடத்தப்போறது பெரிய போராக இருக்கும்... நடத்தப்போறது உறுதி'’ என எச்சரிக்கும் ஆறாவது பாகம்வரை, முதல் சீசனை பரபரப்புடன் இயக்கியிருக்கிறார் சரத்ஜோதி.
வில்லத்தனமோ, ஹீரோத்தனமோ, வீரப்பனின் சாகசங்கள் ஒருபுறம் மலைக்க வைத்தாலும், மறுபுறம் எந்நேரமும் அவனை விழிப்புடன் வைத்திருந்த ஆன்மிகமும் வியக்க வைக்கிறது. ஒரு இடத்தில் அவனே சொல் கிறான் "வீரப்பன் -சர்வசாதாரணமான ஒரு மனிதன்.. 2 செட் போலீஸ் படையும்.. மிலிட்டரியும்.. இவ்வளவுக்கும் தப்பிச்சிட்டு.. அவனே எதிர்த்துட்டு அடிச்சிட்டு போயிட றான்.. அப்படின்னா அவன்கிட்ட என்னடா இருக்குன்னு புரிஞ்சிக்கிறான்.. நீ பலகோடி செலவு பண்ணலாம்.. அதை நீ கத்துக்க முடியாது.. உங்களுக்கு அது கிடைக்காது.. அந்த அளவுக்கு நீங்க ஜபம் பண்ணமுடியாது.. தவமும் இருக்கமுடியாது. அத கடவுளா பார்த்து எனக்கு கொடுத்திருக்காரு.. நீ என்கிட்ட ஜெயிக்க முடியாது. சரணாகதி அடைஞ்சிட்டு போயிருவீங்க..''’என்று தனது மாயாவித்தனத்தை மெச்சுகிறான்.
கர்நாடகாவில் தமிழ்ப்பெண்ணின் ஒருபக்க மார்பகத்தை அறுத்தெறிந்த மொழி வெறியர்கள் குறித்துப் பேசும்போது வீரப்பனிடமிருந்து வெளிப்படும் ஆவேசமாகட்டும், தன்னால் சுடப்பட்ட போலீஸ் அதிகாரி எப்படி விழுந்து துடித்து செத்தான் என்று நடித்துக் காட்டுவதி லாகட்டும், "நீ பண்ணுன பாவத்துக்கு இந்த ஃபாரஸ்ட்டுக்கு காவல் இருன்னு தலையை வெட்டி வச்சிட்டேன்''’என்று வனத்துறை அதிகாரியைக் கொலை செய்த சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்வதிலாகட்டும், யானை, பறவை, குரங்கின் சத்தங்களை மிமிக்ரி பண்ணுவதிலாகட்டும், துப்பாக்கியும் கையுமாக சுறுசுறுப்பை வெளிப் படுத்துவதிலாகட்டும், குழந்தைத்தனமாக சிரிப்பதிலாகட்டும், ஒரிஜினல் நவரசம் வீரப்பனிடமிருந்து மாறி, மாறி வெளிப்படுவதால் இந்த ஆவணத்தொடர் பலரையும் அவனது ரசிகர்களாக்கிவிட்டது.
இந்த ஆவணத்தொடரின் பலமே, வீரப்பனின் பார்வையில் மட்டுமல்லாது, அனைத்து கோணங் களிலும் அலசி ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர் களைப் பேச வைத்திருப்பதுதான். அதிரடிப்படை எஸ்.பி. கோபாலகிருஷ்ணனின் டிரைவரான சுகுமார் "வீரப்பனின் கண்ணிவெடி தாக்குதலுக்குப் பலியானதையும், கடவுளே இல்லை உலகத் துல..''’என்று அவருடைய சகோதரி கலைச்செல்வி கலங்குவதையும், மனைவி ஜான்ஸிராணி “"வீரப்பனை பிடிச்சிட்டு வெற்றியோடு வர்றேன்னு சொல்லிட்டுப்போனார், ஆனா.. இறந்துட்டார். இன்னும் அவர் என்னுடன்தான் வாழ்ந்துக் கிட்டிருக்காரு..''’என்று புலம்புவதையும், மகள் சுஜா, "வீரப்பன் என் அப்பாவ கொல்லுற அளவுக்கு போயிருக்கத் தேவையில்ல. ஏன் அப்படி பண்ணு னாரு?'” என்று விரக்தியில் கேட்பதையும், வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி, தன் தந்தை செய்த தவறை உணர்ந்து, “"போலீஸ்காரர் சுகுமார் குடும்பத்தினர் என் மன்னிப்பை ஏத்துக்குவாங்களா, இல்லையான்னு தெரியல. அவங்ககிட்ட மனசாரவே மன்னிப்பு கேட்டுக் கிறேன்''’என்று உள்ளக் குமுறலைக் கொட்டுவதையும், மிக நேர்மையாகப் பதிவு செய்துள்ளனர்.
"வீரப்பன் தேடு தல் வேட்டை' என்ற பெயரில் அப்பாவி மக்களை இழுத்து வந்து ‘ஒர்க்ஷாப்’ என்ற பெயரில் அடைத்துவைத்த அதிரடிப்படையினர், பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததும், கூட்டுப் பாலியல் கொடு மைகளை இழைத்ததும், ஆண் -பெண் பாகு பாடின்றி பிறப்புறுப்பு களில் ‘ஷாக்’கொடுத்த தும், அடித்தே கொலை செய்ததும், கேமரா முன் னால் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் அம்பலப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய சதாசிவம் ஆணையத்தாலும் பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதியோ, உரிய நிவாரணமோ கிடைக்க வில்லை என்பதை வலியுடன் ஆவணப்படுத்தி யுள்ளனர்.
சமூக சேவகரான மோகன்குமார், "நக்கீரன் ரெண்டு பெரிய வேலையை பண்ணிருக்கு. வீரப்பன் யாருன்னு உல கத்துக்கு நக்கீரன்தான் காட்டுச்சு. அதிரடிப் படையினரோட அத்து மீறலையும் நக்கீரன்தான் வெளிய கொண்டுவந் துச்சு. ஒர்க்ஷாப்ல என்னென்ன கொடுமை நடந்துச்சுன்னு அந்த மக்கள்கிட்ட கேட்டு தெரிஞ்சதுக்கப்புறம், பத்து நாளா என்னால சாப்பிட முடியல; தூங்க முடியல''’என்கிறார். வழக்கறிஞர் தமயந்தியும் "அந்தப் பகுதிக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் ஒரு மாதம் என்னால இயல்பான வாழ்க்கையை வாழ முடியல''’என்று பரிதவிக்கிறார். “"பண்ணிருக்கலாம், யாரு பார்த்தா?''’என்று முன்னாள் டி.ஜி.பி. அலெக் சாண்டர் அதிரடிப்படையினருக்கு ஆதரவாகப் பேசுவதையும் இத்தொடரில் பதிவு செய்துள்ளனர்.
அதிரடிப்படையினரால் வன்புணர்வுக்கு ஆளான பெண் ஒருவர், "சித்ரவதை பண்ணுன போலீஸ்காரங்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க மாட்டேங்கிறாங்க?''’என விரக்தியுடன் கேட்கிறார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழக சிறப்பு அதிரடிப்படையினரையும், வனத்துறையினரையும் பாராட்டி பரிசுகள் வழங்கி விழாவே நடத்தினார் என்ப தைக் குறிப்பிடும் ஆசிரியர் நக்கீரன் கோபால், "பாதிக்கப் பட்ட மக்கள் இன்னும் உசுரோட இருக்காங்கள்ல. அவங்களுக்குத்தானே நிவாரணம் கொடுக்கணும். கொடுக்கலியே? அப்படின்னா என்ன அரசாங்கம்? ஆட்சி மாறி மாறி வந்திருச்சு. இன்னும் அது பெண்டிங்லதான் இருக்கு. அதனால, போலீஸுக்கு தைரி யம். யாரும் நம்மள ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு..''” என்று நீதி கேட்கிறார்.
நடிகையும் சமூக செயற் பாட்டாளருமான ரோகிணி, "பாதிக்கப்பட்ட ஒவ் வொரு பெண்ணும்.. ஒவ்வொரு குழந்தை யும் சேர்ந்ததுதான் நம்ம நாடு.. அப்ப டின்னா எந்த மக்களை நாம பாதுகாக்கிறோம்? இதெல்லாம் பண் ணிட்டு அவங்க வந்து மெடல்ஸ் எல்லாம் வாங்கிட்டு.. வீட்டுக்கு போயி தன்னோட குடும்பத்தோட, தன்னுடைய பெண் குழந்தை களோட, இருக்கிறாங்க. இத எல்லாம் நாம் கண் கூடா பார்த்துட்டுதானே இருக்கோம்..''’என்கிறார் வேதனையுடன். நெஞ்சை உறையவைக்கும் உண்மைக் காட்சிகள் நிறைந்த இந்த ஆவணத்தொடர், பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில், ஜெயச்சந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் கூட்டு முயற்சியில் தரமான தயாரிப்பாக வெளி வந்துள்ளது. கூடவே அரசியல் சர்ச்சைகளையும் சிக்கலான பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.