"ஹலோ தலைவரே, நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பரபரப்பு தொற்றியிருக்கும் நேரத்தில், மீண்டும் விவசாயிகளின் போராட்ட மேகங்கள் டெல்லியைச் சூழ ஆரம்பித்திருக்கிறது.''”
"ஆமாம்பா, விவசாயிகள் கிளர்ந்தெழுந் தால் பா.ஜ.க. அரசுக்கு பெரும் நெருக்கடியாகிவிடுமே?''”
"ஆமாங்க தலைவரே, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு 2020-ல் குடும்பம் குடும்பமாக விவசாய அமைப்புகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசை திகைக்க வைத்தது. உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போராட்டத்திற்குப் பின்னரும், விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில் லையாம். அதனால் இந்திய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.''”
"ஆமாம்பா, இதற்கான கூட்டத்தை ஹரியானாவில் கூட்டி, போராட்டத்தை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வடிவமைத்திருக்கிறார்களே?''
"உண்மைதாங்க தலைவரே, நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப் பான பாரதிய கிஸான் மோர்ச்சா, தனது ஆலோசனைக் கூட்டத்தை ஹரியானாவில் கூட்டி, போராட்ட முன் னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறது. விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்றால் அது எவ்வளவு வீரியமானது என்பதை ஏற்கனவே பார்த்திருப்பதால், ரொம்பவே அரண்டுபோயிருக்கிறது டெல்லி. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணிகள் புறப்பட்டுவிடக் கூடாது என்று, எல்லைச் சாலைகளை மூட ஆரம்பித் திருக்கிறார்கள். அதேபோல் சமூக ஊடகங்கள் வழியாக விவசாயிகள் தங்கள் போராட் டத்தை கட்டமைத்துவிடக் கூடாது என்ற நோக்கில், அரியானாவின் பல மாவட் டங்களிலும் இணையதள இணைப்பையும் துண்டித்து வரு கிறதாம் டெல்லி. கடந்தமுறை போலவே இப் போதும் விவசாயி கள் பேரணியைத் தடுக்க சாலைகளில் ஆணிகளை அடித் தும், முள் வேலிகளை அமைத்தும் ஒன்றிய அரசு செய்துவரும் தடுப்பு வேலைகள் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு, பிரியங்கா காந்தி தற்போது பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.''”
"பா.ஜ.க.வுடன் எடப்பாடி கண்ணாமூச்சு ஆடிக்கொண்டு இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வின் சங்காத்தமே இனி வேண்டாம் என்று எடப்பாடி அதை உதறிவிட்டு ஓடிய நிலையில், அதை மீண்டும் வாரி அணைத்துக்கொள்ள படாதபாடு படுகிறது பா.ஜ.க. குறிப்பாக, அக்கட்சியைச் சேர்ந்த பொன்னார், வானதி சீனிவாசன், எச்.ராஜா போன்றவர் கள், ’நாம் சவாரி செய்ய அ.தி.மு.க. வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். அதேபோல அ.தி.மு.க. வைச் சார்ந்த மூத்த நிர்வாகிகளான மாஜி மந்திரிகள் வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரும் பா.ஜ.க. கூட்டணியை விரும்புகிறார்களாம். காரணம், தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா. போன்ற கட்சிகள் பா.ஜ.க.வின் பக்கம் சென்றுவிட்டால், அ.தி.மு.க. அணி
"ஹலோ தலைவரே, நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பரபரப்பு தொற்றியிருக்கும் நேரத்தில், மீண்டும் விவசாயிகளின் போராட்ட மேகங்கள் டெல்லியைச் சூழ ஆரம்பித்திருக்கிறது.''”
"ஆமாம்பா, விவசாயிகள் கிளர்ந்தெழுந் தால் பா.ஜ.க. அரசுக்கு பெரும் நெருக்கடியாகிவிடுமே?''”
"ஆமாங்க தலைவரே, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு 2020-ல் குடும்பம் குடும்பமாக விவசாய அமைப்புகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசை திகைக்க வைத்தது. உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போராட்டத்திற்குப் பின்னரும், விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில் லையாம். அதனால் இந்திய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.''”
"ஆமாம்பா, இதற்கான கூட்டத்தை ஹரியானாவில் கூட்டி, போராட்டத்தை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வடிவமைத்திருக்கிறார்களே?''
"உண்மைதாங்க தலைவரே, நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப் பான பாரதிய கிஸான் மோர்ச்சா, தனது ஆலோசனைக் கூட்டத்தை ஹரியானாவில் கூட்டி, போராட்ட முன் னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறது. விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்றால் அது எவ்வளவு வீரியமானது என்பதை ஏற்கனவே பார்த்திருப்பதால், ரொம்பவே அரண்டுபோயிருக்கிறது டெல்லி. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணிகள் புறப்பட்டுவிடக் கூடாது என்று, எல்லைச் சாலைகளை மூட ஆரம்பித் திருக்கிறார்கள். அதேபோல் சமூக ஊடகங்கள் வழியாக விவசாயிகள் தங்கள் போராட் டத்தை கட்டமைத்துவிடக் கூடாது என்ற நோக்கில், அரியானாவின் பல மாவட் டங்களிலும் இணையதள இணைப்பையும் துண்டித்து வரு கிறதாம் டெல்லி. கடந்தமுறை போலவே இப் போதும் விவசாயி கள் பேரணியைத் தடுக்க சாலைகளில் ஆணிகளை அடித் தும், முள் வேலிகளை அமைத்தும் ஒன்றிய அரசு செய்துவரும் தடுப்பு வேலைகள் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு, பிரியங்கா காந்தி தற்போது பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.''”
"பா.ஜ.க.வுடன் எடப்பாடி கண்ணாமூச்சு ஆடிக்கொண்டு இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வின் சங்காத்தமே இனி வேண்டாம் என்று எடப்பாடி அதை உதறிவிட்டு ஓடிய நிலையில், அதை மீண்டும் வாரி அணைத்துக்கொள்ள படாதபாடு படுகிறது பா.ஜ.க. குறிப்பாக, அக்கட்சியைச் சேர்ந்த பொன்னார், வானதி சீனிவாசன், எச்.ராஜா போன்றவர் கள், ’நாம் சவாரி செய்ய அ.தி.மு.க. வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். அதேபோல அ.தி.மு.க. வைச் சார்ந்த மூத்த நிர்வாகிகளான மாஜி மந்திரிகள் வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரும் பா.ஜ.க. கூட்டணியை விரும்புகிறார்களாம். காரணம், தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா. போன்ற கட்சிகள் பா.ஜ.க.வின் பக்கம் சென்றுவிட்டால், அ.தி.மு.க. அணி பலவீனமாகிவிடும். அது தி.மு.க.விற்கு மேலும் சாதகமாக மாறிவிடும் என்றும் கருதுகிறார் களாம். தி.மு.க. கூட்டணியோ, 40லிலும் வெற்றி என்ற எண்ணத் துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை ஆதங்கத்தோடு பார்க்கும் பா.ஜ.க. சீனியர்கள், அ.தி.மு.க.வை நழுவ விட்டுவிடாதீர்கள் என்று அமித்ஷாவிடம் சொல்லவே, அவர் சிலர் மூலம் எடப்பாடி யிடம் பேச முற்படுகிறா ராம். ஆனால் எடப் பாடியோ நழுவி ஓடிய படியே பா.ஜ.க.வுடன் கண்ணாமூச்சு ஆடி வருகிறார்.''”
"பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவின் தமிழக வருகை, அக்கட்சியின ருக்கு திருப்தியைத் தரவில்லை என்கிறார் களே?''”
"ஆமாங்க தலை வரே, 11ஆம் தேதி காலையே ஜே.பி.நட்டா சென்னை வருவார் என்றும், அவர் பா.ஜ.க. வின் பூத் கமிட்டி கூட் டத்தில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. அதேபோல் அவர், முறுக்கிக்கொண்டிருக்கும் எடப்பாடியை சந்திப்பார் என்றும், அவரை சமாதானப்படுத்தி, கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பும் தமிழக பா.ஜ.க.வினரிடம் இருந்தது. ஆனால், நட்டாவோ, சென்னையில் நடந்த காலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்துவிட் டாராம். அதேபோல் ’இறங்கி வராத எடப்பாடியுடன் நான் போய், என் கௌரவத்தை விட்டுப் பேச முடியாது’ என்று கூறி, கூட்டணி முயற்சியிலும் அவர் இறங்க மறுத்துவிட்டாராம். மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மட்டும் நட்டா கலந்துகொண்டு விட்டுப் புறப்பட்டுவிட்டாராம். அவர் ஓ.பி.எஸ்.சையும் கூட சந்திக்க மறுத்துவிட்டாராம். இதெல்லாம் தமிழக பா.ஜ.க. தரப்பிற்கு பலத்த அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறதாம்.''”
"ஜே.பி.நட்டாவோட விசிட்ல பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட தங்கசாலை மீட்டிங் சொதப்பிடுச்சாமே?''
"ஆமாங்க தலைவரே, சென்னை வந்த ஜே.பி.நட்டா, சென்னை தங்கசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத் தில் கலந்துகொண்டார். ஏற்கெனவே அமைந்த கரையில் நடத்துவதாகத் திட்டமிட்டிருந்த மீட்டிங்கை, திடீர்னு தங்கசாலைக்கு மாத்தியிருக்காங்க. அந்த மீட்டிங்கில் 50,000 பேர்வரை திரளுவார்கள்னு பா.ஜ.க. தலைவர் சொல்லியிருந்தார். அதுவும் சென்னை பெருங்கோட்டத்தில் மட்டுமே பா.ஜ.க.வுக்கு 8,000 நிர்வாகிகள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அந்த மீட்டிங்குக்கு 2,500 பேர் மட்டுமே வந்திருந்ததால் பா.ஜ.க. தலைவருக்கே அதிர்ச்சியாம். கட்சி நிர்வாகிகளிடம் பணத்தைக் கொடுத்து கூட்டச் செலவுகளைக் கவனிக்கச் சொன்னால் நிறைய தவறுகள் நடக்குதுன்னு புகார்கள் வருவதால் இம்முறை இந்த கூட்டத்தோட செலவுகளை நேரடியாக, தானே கவனித்துக்கொண்டாராம் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம். அப்படியும் சொதப்பியிருக்கு. இந்த கூட்டத்துல, அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனனோட மச்சான் ஜெயப்பிரகாஷ் என்பவர் பா.ஜ.க.வில் இணைஞ் சிருக்கார். இவர், முன் னாள் ஒன்றிய அமைச் சரின் மனைவியும் மூத்த வழக்கறிஞருமான ஒருவருக்கு ஈ.சி.ஆர். பகுதியில் இடம் வாங்கிக் கொடுத்ததில் பிரச்சினை ஆகியிருக்கு. அதுல ஒன்றிய அரசோட நெருக் கடிக்குப் பயந்து பா.ஜ.க.வில் அடைக்கலமாகிட்டதா சொல்லப்படுது. இவர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளது, தி.மு.க. அமைச்சர் ஒருவருக்கு ரொம்ப வருத்தமாம்!''
"அ.தி.மு.க.வைக் குறிவைத்து அமலாக்கத்துறை ஏவி விடப்பட்டி ருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வோடு கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத அ.தி.மு.கமீது, டெல்லியின் கோபம் பாயத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சென்னை மத்திய மாவட்ட செயலாளராக இருந்தவர் பாலகங்கா. இவர் முன்னாள் எம்.பி.யும் கூட. இப்போது இவரைக் குறிவைத்து, இவரது ஆடிட்டர் வீட்டில்தான் முதற்கட்டமாக அம லாக்கத்துறை பாய்ந்திருக்கிறதாம். வடசென்னை பின்னி மில் வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ’லேண்ட் மார்க்’ என்ற நிறுவனமும், கே.எல்.பி. என்ற நிறுவனமும் இணைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியது. இதைக் கட்டுவதற் காக, அப்போது அதிகாரிகள் தொடங்கி அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க. பிரமுகர்கள் வரை 48 பேருக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை, இப்போது அமலாக்கத்துறை கையில் எடுத்திருக் கிறது. இந்த வழக்கில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாலகங்கா, வெங்கடேஷ்பாபு உள்ளிட்டவர்களுக்கு அந்த பில்டர்கள் லஞ்சம் கொடுத்ததாகத்தான் வழக்கு. இதில் இப்போதைய தி.மு.க. அமைச்சர் ஒருவரும் இருக்கிறாராம். அமைச்சர் பெயரை எஃப்.ஐ.ஆரில் திட்டமிட்டே சேர்த்திருக்கிறார் களாம். ஆடிட்டர் வீட்டில் நடந்த ரெய்டால் அ.தி.மு.க. தரப்பு வெடவெடத்துப் போயிருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலேயே ரெய்டு நடக்கும் என்கிறார்கள்.''”
"எடப்பாடியை பா.ம.க. அன்புமணி ரகசியமாக சந்தித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''”
"ஒரு பக்கம் பா.ஜ.க.வோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவரும் பா.ம.க. அன்புமணி, அந்தத் தரப்புக்குத் தெரியாமல் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டிற்கே சென்று அ.தி.மு.க.வுட னும் கூட்டணி குறித்து விவாதித்திருக்கிறாராம். இதேபோல் தே.மு.தி.க. தரப்பும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். பிரேமலதாவுக் காக அக்கட்சி ராஜ்யசபா சீட்டையும் அ.தி.மு.க. விடம் எதிர்பார்க்கிறதாம். இதற்கு, பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி. தங்களை நிராகரிக்கும் அ.தி.மு.க., தங்களை விட்டுவிட்டு அது தனியே ஒரு கூட்டணியை அமைக்கக்கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறதாம். அதனால் அதற்குத் தெரியாமல் ரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்துகிறாராம் எடப்பாடி. இதற்கிடையே சசி கலாவோ, தன்னை பா.ஜ.க. முயற்சி எடுத்து அ.தி. மு.க.வில் இணைக்கும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாராம். ஆனால், பா.ஜ.க. தரப்போ அவரை அலட்சியப்படுத்தியே வருகிறதாம்.''”
"அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கிடம் எடப்பாடி காட்டத்தைக் காட்டியதாகச் சொல்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்காக தி.மு.க.வின் ஐ.டி.விங்க் ஒரு புறமும், "பென்' எனும் அமைப்பின் மூலம் சபரீசன் டீம் ஒருபுறமும் தகவல் தொழில்நுட்ப வித்தைகளை சமூக ஊடகங்களில் காட்டத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள், நிறை வேற்றப்பட்ட வாக்குறுதிகள் போன்றவற்றை இந்த டீம்கள், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலைகளையும் வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டன. இதைக்கண்ட அ.தி. மு.க.வின் சீனியர்கள், எடப்பாடியிடம் சென்று, தி.மு.க. தரப்பிற்கு ஈடுகொடுக்க நம்மால் முடியவில்லையா? என்று ஆதங்கப்பட்டார்களாம். இதையடுத்து அ.தி. மு.க.வின் தொழில் நுட்ப அணி நிர் வாகிகளை அழைத்த எடப்பாடி, ’இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?’என்று காட்டத்தைக் காட்டியதோடு, அ.தி.மு.க. ஆட்சிக்கால சாதனை களையும், தி.மு.க. மறந்துபோன வாக்குறுதிகளையும் முதலில் தொகுத்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற உத்தரவையும் அவர்களுக்குப் பிறப்பித்திருக்கிறாராம். இதைத் தொடர்ந்து சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியிருக்கிறதாம் அ.தி.மு.க. ஐ.டி. விங்க்.''”
"இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதே?''”
"கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், அவர்களை மீட்க ஒன்றிய மோடி அரசு நடவடிக்கை எடுக்காததை யும் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போராட்டத்தை அண்மையில் நடத்தியிருக்கின்றன. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதும், அதற்கு ஈடாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதும் நடந்து வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்து ரகசிய விசாரணையில் இறங்கிய அவர்களுக்கு, பல ஆதாரங்கள் கிடைத்திருக்கிறதாம். இந்த ஆதாரங்களை அவர்கள் தற்போது என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்திருக்கிறார்களாம். எனவே, விரைவில் ராமேஸ்வரத்தில் அதிரடி வேட்டையில் இறங்கவுள்ளதாம் என்.ஐ.ஏ. சமீபத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் என்.ஐ.ஏ. காட்டிய அதிரடி சோதனை பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. ராமேஸ்வரத்தில் நடத்தப்போகும் சோதனை இதைவிட பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும் என்கிறார்கள் உளவுத் துறையினர்.''”
"செய்தித்துறையில் சலசலப்பு கேட்கிறதே?''”
"செய்தித்துறையில் அரியலூர், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழரசு ஆகிய 2 அலுவலகங் களிலும் பணிபுரியும் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 7 பேருக்கு மக்கள் தொடர்பு அலுவலராக தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அவர்களை இடமாற்றல் கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறார்களாம். இது தவிர, விழுப்புரம், தர்மபுரி, வேலூர், ஈரோடு, கரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர்களும், அவர்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனராம். இப்படி பதவி உயர்வையும் இடமாறுதலையும் பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர், அ.தி.மு.க.வின் பின்புலம் கொண்டவர்கள் என்கிறார்கள் துறையில் உள்ளவர்களே. அந்த அளவிற்கு அ.தி.மு.க. செல்வாக்கு அங்கே கொடி கட்டிப் பறக்கிறதாம். அதேசமயம் தி.மு.க.வைச் சேர்ந்த பி.ஆர்.ஓ.க்கள் விசயத்தில் எதுவும் நடப்பதில்லை என்ற முனகலும் அங்கே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, இந்த பதவி உயர்வுகள் மற்றும் இடமாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் வைட்டமின் "ப'’ தாராளமாக விளையாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.இந்த விவகாரம் இப்போது கோட்டை வரை புகைகிறதாம்.''”
"செங்கல்பட்டு பகுதி தி.மு.க.வில் பெரும் சலசலப்பு கேட்கிறதே?''”
"செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளரான 70 வயது தமிழ்மணியின் செயல்படாத தன்மையும், அ.தி.மு.க. மா.செ.வுடன் சேர்ந்துகொண்டு அவர் தி.மு.க.வினரை அடக்கி ஒடுக்கி வருவதும் உடன்பிறப்பு களை ரொம்பவே கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதையறிந்த பா.ஜ.க. தரப்பு, அதிருப்தியுள்ள தி.மு.க.வினரை தங்கள் பக்கம் வளைத்துவருகின்றனர். குறிப்பாக, திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் துணைச்செயலாளரும், பேரூராட்சியின் கவுன்சிலருமான தி.மு.க.வைச் சேர்ந்த தௌலத்பீவி, தி.மு.க. வட்டச் செயலாளர் ஷெரீப் ஆகிய தம்பதிகளின் மகன் ஃபாரூக், பேரூராட்சியின் இளைஞரணி துணைச் செயலாளராக இருந்தார். அவரையும் தற்போது பா.ஜ.க. வளைத்துவிட்டது. மேலும், கடந்த 8 ஆம் தேதி இந்தப் பகுதியைச் சேர்ந்த 150 இஸ்லாமிய தி.மு.க. இளைஞர்களும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் அங்கே இணைந்துள்ளனர். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, ஃபாரூக்கின் தாயாரான கவுன்சிலர் தௌலத்பீவி தலைமையில் சுமார் 100 தி.மு.க.வினர் பா.ஜ.க. மாநில செயலாளர் வினோ பி.செல்வம் முன்னிலையில் 11ஆம் தேதி பா.ஜ.க.வில் இணைவதற்கு திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், தௌலத்பீவியை சமாதானப்படுத்தி, கடைசி நேரத்தில் அவரைத் தடுத்திருக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். நமது நக்கீரனின் கடந்த இதழில் ‘"எல்காட்டை திவாலாக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!'’ எனும் தலைப்பில் கடந்த இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. இது கோட் டையில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது குறித்து சில விளக்கங்களை நமக்குத் தந்துள்ள குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., ‘’எல்காட் நிறுவன அலுவலகத்தில் இடப்பற்றாக்குறையால்தான் அங்கிருந்து நகராட்சி நிர்வாகத் துறைக்கு சொந்தமான கட்டடத்துக்கு எல்காட் மாற்றப் படுகிறது. இது அரசு கட்டடம்தான். எல்காட் இருக்கும் நந்தனம் அலு வலக கட்டடம், ஜி.எஸ்.டி. அலுவலகத்துக்கு அதிகபட்ச வாடகைக்கு விடப்படுகிறது’என்று விளக்கம் தந்திருக்கிறார். நமது செய்தியின் சாராம்சம் என்பது, இடப்பற்றாக்குறைதான் பிரச் சனையெனில், எல்காட்டுக்கு சொந்தமான கட்டிடம் இருக்கும்போது அங்கு மாறலாம். அதைத் தவிர்த்து வாடகை கட்டிடத்துக்கு ஏன் செல்லவேண்டும் என்பதுதான். அதிலும் மாத வாடகையாக 10,80,000 ரூபாயும், மெயிண்டெனன்ஸ் தொகையாக மாதம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும் இதற்கு எல்காட் வாடகையாகக் கொடுக்க வேண்டுமாம். இது விரயச் செலவுதானே என்று அங்கு பணிபுரியும் ஊழியர்களே கேட்கிறார்கள்.''