பிரதமரின் ரோடு ஷோவில் கூட்டம் இல்லையே என எவரும் எண்ணிவிடக் கூடாதென, இரு பக்கத்திலும் கூட்டம் இருப்பதாகக் காண்பிக்க, பள்ளிச் சீருடையுடன் மாணவிகளை அழைத்து வந்து கூட்டத் தினைக் காண்பித்துள்ளனர் கோவை பா.ஜ.க.வினர். இது மோடிக்கு எதிராக சர்ச் சையை உருவாக்கியுள்ளது.
எப்போதும், கோவை யில் வழக்கமாக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள் ளும் மோடி, இந்த முறை பொதுக்கூட்டத்துக்கு பதில், ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்திக்கத் திட்டமிட்டார்.
முன்னதாக பிரதமர் வரு கையையொட்டி அவர் பங் கேற்கும் ‘ரோடு ஷோலிவுக்கு புதிதாகப் போடப்பட்ட சாலைகளில் துளைகள் போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது மக்களை முகம்சுளிக்க வைத்தது. பாது காப்புக் காரணங்களை முன் னிறுத்தி ரோடு ஷோவிற்கு மாநகர காவல்துறை தடை விதித்த நிலையில், நீதிமன்றம் சென்று தடையை உடைத் தனர் உள்ளூர் பா.ஜ.க.வினர். இதனால் வேறுவழியின்றி, கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்தது மாநகர காவல்துறை. குறிப் பாக, ரோடு ஷோ நடை பெறும் மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் பகுதி களில் ஐந்தடுக்கு பாது காப்பினை உறுதிசெய்தது.
ரோடு ஷோ நடை பெறும் நாளில், இதுதான் தருணமென சிந்தாமணி அருகே குஜராத் சமாஜ் முன்பாக அமைக்கப் பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த பா.ஜ.க.வினர் அந்த சிலையருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிந்தாமணி பெட்ரோல் பங்க் முன்பு சாலையை மறித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், சாய்பாபா காலனி பகுதியிலிருந்து வந்த அவசர ஊர்திக்கு வழிகொடுக்காமல் யோகாசனம் செய்து பொதுமக்களை வெறுப்படையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு தனி விமானத் தின் ம
பிரதமரின் ரோடு ஷோவில் கூட்டம் இல்லையே என எவரும் எண்ணிவிடக் கூடாதென, இரு பக்கத்திலும் கூட்டம் இருப்பதாகக் காண்பிக்க, பள்ளிச் சீருடையுடன் மாணவிகளை அழைத்து வந்து கூட்டத் தினைக் காண்பித்துள்ளனர் கோவை பா.ஜ.க.வினர். இது மோடிக்கு எதிராக சர்ச் சையை உருவாக்கியுள்ளது.
எப்போதும், கோவை யில் வழக்கமாக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள் ளும் மோடி, இந்த முறை பொதுக்கூட்டத்துக்கு பதில், ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்திக்கத் திட்டமிட்டார்.
முன்னதாக பிரதமர் வரு கையையொட்டி அவர் பங் கேற்கும் ‘ரோடு ஷோலிவுக்கு புதிதாகப் போடப்பட்ட சாலைகளில் துளைகள் போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது மக்களை முகம்சுளிக்க வைத்தது. பாது காப்புக் காரணங்களை முன் னிறுத்தி ரோடு ஷோவிற்கு மாநகர காவல்துறை தடை விதித்த நிலையில், நீதிமன்றம் சென்று தடையை உடைத் தனர் உள்ளூர் பா.ஜ.க.வினர். இதனால் வேறுவழியின்றி, கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்தது மாநகர காவல்துறை. குறிப் பாக, ரோடு ஷோ நடை பெறும் மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் பகுதி களில் ஐந்தடுக்கு பாது காப்பினை உறுதிசெய்தது.
ரோடு ஷோ நடை பெறும் நாளில், இதுதான் தருணமென சிந்தாமணி அருகே குஜராத் சமாஜ் முன்பாக அமைக்கப் பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த பா.ஜ.க.வினர் அந்த சிலையருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிந்தாமணி பெட்ரோல் பங்க் முன்பு சாலையை மறித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், சாய்பாபா காலனி பகுதியிலிருந்து வந்த அவசர ஊர்திக்கு வழிகொடுக்காமல் யோகாசனம் செய்து பொதுமக்களை வெறுப்படையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு தனி விமானத் தின் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் பிரதமர். கடந்த 17-ஆம் தேதியன்று இந்திய விமானப்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி ஆந்திர தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிகளை மீறி பிரதமர் மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனை நினைவில்கொண்டே தனிவிமானம் மூலம் கோவை வந்தார் மோடி.
சரியாக 6 மணியளவில் சாய்பாபா கோவில் சந்திப்பிலிருந்து ரோடு ஷோ துவங்கியது. இந்த ரோடு ஷோவின்போது பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மேளதாளங்கள் முழங்க, மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். ஆனால் எதிர்பார்த்த கூட்டம் அமையவில்லை. இதனால் மாணவிகளை நிறுத்தி கூட்டம் காண்பித்தனர் பா.ஜ.க.வினர்.
ரோடு ஷோவின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியி லுள்ள தலைமை தபால் நிலையம் அருகே, 1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார். 7.20-க்கு நிறைவுற்ற ரோடு ஷோவின் தொடர்ச்சியாக கோவை ரேஸ் கோர்ஸிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி வி.ஐ.பி.க்களை சந்தித்தார்.
மோடி விசிட்டின்போது பள்ளி சீருடையுடன் மாணவிகள் கலந்துகொண்டது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட, தேர்தல் பிரச்சாரங்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடு குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. இது மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமாருக்கு தெரியவர, பிரதமர் மோடியின் ரோடு ஷோவில், மாணவிகள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, விளக்கம்கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
"பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு என்பதாலேயே அதனை பிரம்மாண்டமாகச் செய்யவேண்டுமென திட்ட மிட்டிருந் தார்கள் உள்ளூர் பா.ஜ.க.வினர். திருப்பூர் மாநாட்டிற்கு வந்த வடக்கர்கள்கூட, பேசியபடி தொகை கொடுக்கமாட்டார்கள் என இதற்கு வர மறுத்துவிட்டார்கள். வேறு வழியின்றி சின்மயா வித்யாலயா மாணவிகளை அழைத்துவர வேண்டிய தாயிற்று'' என்கிறார் பா.ஜ.க.வின் முன்னாள் மாவட்ட நிர்வாகி.
த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணனோ, "தேர்தல் பிரச்சாரங்களில் சிறார்களை பயன்படுத்தக்கூடாது என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய விதியாகும். அப்படி இருக்கையில், பிரதமர் மோடியின் வருகைக்கு பள்ளி மாணவர்களை பா.ஜ.க.வினர் அழைத்து வந்து கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் ரோடு ஷோ பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது அவர்களது தான்தோன் றித்தனத்தைக் காட்டுகின்றது. முதலில் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளுக்கு பயன்படுத்தியவர்கள், இப்பொழுது மாணாக்கர்களை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இது கண்டிக்கத் தக்கது. பள்ளி மீதும், இதற்கு உறுதுணை யாக இருந்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார்.
கோவையில் இப்படியென்றால், சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் மார்ச் 19-ஆம் தேதி தே.ஜ.கூ. வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார் மோடி. கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து அவர் தனி ஹெலிகாப்டரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு மதியம் 12:50 மணிக்கு வந்துசேர்ந்தார்..
பா.ஜ.க. மாநிலத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலை மையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 20,000-க்கும் மேற்பட்டோர் திரண்டி ருந்தனர்.
மேடையில் பிரதமருடன் பா.ஜ.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களான பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, த.மா.கா. ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோர் அமரவைக்கப்பட்டனர்.
தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்து, "பாரத அன்னை வாழ்க' என தமிழில் கூறி, பேசத்தொடங்கினார் மோடி.
"தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், எனக்கும் மக்கள் ஆதரவு அதிகரித்துவருகிறது. இதை நாடே ஆச்சரியமாகப் பார்க்கிறது. எங்களுக்கு பெருகும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. ஏப்ரல் 19-ஆம் தேதி பா.ஜ.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவது என தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்'' என ஆரம்பத்திலேயே மோடி டாப் கியரில் எகிறினார்.
"தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக் கிய நோக்கம். இந்து மதத்தை அழிப் பதற்காக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பரப்புரையைத் தொடங்கியிருக்கிறது.
இந்து மதத்தில் சக்தியை வழிபடு கிறோம். மாரியம்மனை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என்று சக்திமிக்க தெய்வங்களை எல்லாம் பெண் வடிவில் வழிபடுகிறோம். ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியோ சக்தியின் வடிவத்தை, ஆன்மிக வடிவத்தை, சனாதனத்தை அழித்துவிடுவோம் என்று கூறிவருகின்றன. இந்து தர்மத்தில் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாட்டினர் பாடம் புகட்டுவார்கள்''’என்றார்.
"தி.மு.க.வும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் ஊழல்; மற்றொரு பக்கம் குடும்ப ஆட்சி. இவ்விரு கட்சிகளும் குடும்ப ஆட்சியை நடத்துகின்றன. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டோம். தி.மு.க. அவர்களது ஐந்தா வது தலைமுறை யினரும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மத்திய அரசு நிதியை தி.மு.க. அரசு வீணடிக்கிறது.
நாட்டில் 2 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று, தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல நாடு முழுவதும் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில், தமிழ்நாட்டி லும் ஒரு ஜவுளிப் பூங்கா அமையவுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கையை எடுக்கப் போகிறோம். எனவே ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்'' என வழக்கமான டெம்ப்ளேட்டில் பேசிமுடித்தார் பிரதமர் மோடி.
ஜெயலலிதாவை இழிவுபடுத்தி யதாக அ.தி.மு.க. சொல்லிவருவதை மாற்றவும், அ.தி.மு.க. வாக்காளர்களை பா.ஜ.க. பக்கம் இழுக்கவுமே பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. புதிய திட்டங்கள், வாக்குறுதிகளை எதிர்பார்த்து வந்த கட்சியினருக்கும், மக்களுக்கும் பிரதமர் மோடியின் பேச்சு ஏமாற்றம்தான் என்கிறார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் நலன் கருதி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளதாக' புது விளக்கம் கொடுத்தார்.
தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காதது, ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளிக் காததும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது.
படங்கள்: விவேக்