கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண விவகாரத்தில், சில புதிய கேள்விகளுக்கு விடைதேடி கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கனியாமூர் சென்றிருந்தனர் நக்கீரன் தலைமை முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷும், வீடியோகிராபர் அஜித்தும். ஆரம்பம் முதலே நக்கீரன் காட்டும் தீவிர ஆர்வத்தைத் தொந்தரவாக உணர்ந்த ஒரு தரப்பு, நக்கீரன் தலைமை நிருபர் மற்றும் வீடியோகிராபர் சென்ற காரை மறித்து கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. என்ன நடந்ததென பாதிக்கப்பட்டவர்களே தம் குரலில் விவரிக்கின்றனர்...
பிரகாஷ்: (முதன்மை சிறப்பு நிருபர்)
19-ஆம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு நானும் நக்கீரன் ஒளிப்பதிவாளர் அஜித்தும் இணைந்து கனியாமூர் சக்தி பள்ளி நிர்வாகம், கோர்ட் உத்தரவுப்படி கலெக்டரின் அனுமதிப்படி பள்ளியைச் சீரமைத்துக்கொண்டிருந்த பணிகளைப் படமாக்க அங்கு சென்றோம். அங்கு சென்றபோது அஜித்தை அங்கிருக்கக்கூடியவர்கள் பார்த்து விட்டார்கள். அதில் முக்கியமானவர் அருள் சுபாஷ். அவர் அங்கிருந்து மூவ் ஆவதை நான் பார்த்தேன். உடனே நாங்கள் கிளம்பி சின்ன சேலம் அருகிலுள்ள ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக காரில் சென்றோம். போகும் வழியில் சக்தி பள்ளிக்கு வெளியில் சேதமடைந்த குப்பைகளை எரித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் படமாக்கினோம்.
அப்போது அருள் சுபாஷ் ஒரு காரிலும், ஒரு பெரிய புல்லட்டில் கவுன்சிலர் ராஜசேகரன் என்பவரும் வந்தார்கள். அந்த புல்லட்டை என் காருக்கு முன்னால் பார்க் செய்தார்கள். அருள் சுபாஷ் சற்றுத் தூரமாக நிற்க, புல்லட்டில் வந்தவர்கள் அஜீத்தை காருக்குள் வைத்து அடிக்க முயன்றார்கள்.
"ஏன் அடிக்கிறீங்க...? என்ன பிரச்னை?'’என்று நான் கேட்கும் போது, "நல்லா எழுதுறீங்கடா நியூசு. மகாபாரதி மோகன், கவுன்சிலர் ராஜசேகரன், ரவிக்குமார் பத்தி நல்லாத்தாண்டா எழுதுறீங்க, உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் பேசணும்டா வாங்க'’என்று சொல்லி எங்களைக் காரோடு கடத்துவதன் ஒரு பகுதியாக புகைப்படக்காரர் அஜீத்தை அடிக்க ஆரம்பித் தார்கள். நிலைமை விபரீதமாகப் போகிறது என்பதை உணர்ந்து வண்டியை ரிவர்சில் எடுத்து நேராக வண்டியை செலுத்த ஆரம்பித்தேன்.
நான் சின்னசேலம் போவேன் என்று எதிர்பார்த்து அங்கு தயார் நிலையில் இருந்துள்ளார் கள். நான் சின்னசேலம் போகாமல் தலைவாசல் ஆத்தூர் நோக்கி வண்டியைச் செலுத்தினேன். ஒரு டீ சாப்பிடலாம் என்று எண்ணி வண்டியை நிறுத்தியபோது, பின்னால் வந்த ஒரு பைக்கிலிருந்து இறங்கிய ஆள், எங்கள் காரின் பின்பக்கம் ஏற முயற்சித்துக்கொண்டே, “"போ... போ... நான் சொல்லும் இடத்துக்குப் போ'’என்று உத்தரவிட ஆரம்பித்தார்.
நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக தலைவாசல் மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது காவல் தடுப்புக்கள் போடப்பட
கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண விவகாரத்தில், சில புதிய கேள்விகளுக்கு விடைதேடி கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கனியாமூர் சென்றிருந்தனர் நக்கீரன் தலைமை முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷும், வீடியோகிராபர் அஜித்தும். ஆரம்பம் முதலே நக்கீரன் காட்டும் தீவிர ஆர்வத்தைத் தொந்தரவாக உணர்ந்த ஒரு தரப்பு, நக்கீரன் தலைமை நிருபர் மற்றும் வீடியோகிராபர் சென்ற காரை மறித்து கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. என்ன நடந்ததென பாதிக்கப்பட்டவர்களே தம் குரலில் விவரிக்கின்றனர்...
பிரகாஷ்: (முதன்மை சிறப்பு நிருபர்)
19-ஆம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு நானும் நக்கீரன் ஒளிப்பதிவாளர் அஜித்தும் இணைந்து கனியாமூர் சக்தி பள்ளி நிர்வாகம், கோர்ட் உத்தரவுப்படி கலெக்டரின் அனுமதிப்படி பள்ளியைச் சீரமைத்துக்கொண்டிருந்த பணிகளைப் படமாக்க அங்கு சென்றோம். அங்கு சென்றபோது அஜித்தை அங்கிருக்கக்கூடியவர்கள் பார்த்து விட்டார்கள். அதில் முக்கியமானவர் அருள் சுபாஷ். அவர் அங்கிருந்து மூவ் ஆவதை நான் பார்த்தேன். உடனே நாங்கள் கிளம்பி சின்ன சேலம் அருகிலுள்ள ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக காரில் சென்றோம். போகும் வழியில் சக்தி பள்ளிக்கு வெளியில் சேதமடைந்த குப்பைகளை எரித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் படமாக்கினோம்.
அப்போது அருள் சுபாஷ் ஒரு காரிலும், ஒரு பெரிய புல்லட்டில் கவுன்சிலர் ராஜசேகரன் என்பவரும் வந்தார்கள். அந்த புல்லட்டை என் காருக்கு முன்னால் பார்க் செய்தார்கள். அருள் சுபாஷ் சற்றுத் தூரமாக நிற்க, புல்லட்டில் வந்தவர்கள் அஜீத்தை காருக்குள் வைத்து அடிக்க முயன்றார்கள்.
"ஏன் அடிக்கிறீங்க...? என்ன பிரச்னை?'’என்று நான் கேட்கும் போது, "நல்லா எழுதுறீங்கடா நியூசு. மகாபாரதி மோகன், கவுன்சிலர் ராஜசேகரன், ரவிக்குமார் பத்தி நல்லாத்தாண்டா எழுதுறீங்க, உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் பேசணும்டா வாங்க'’என்று சொல்லி எங்களைக் காரோடு கடத்துவதன் ஒரு பகுதியாக புகைப்படக்காரர் அஜீத்தை அடிக்க ஆரம்பித் தார்கள். நிலைமை விபரீதமாகப் போகிறது என்பதை உணர்ந்து வண்டியை ரிவர்சில் எடுத்து நேராக வண்டியை செலுத்த ஆரம்பித்தேன்.
நான் சின்னசேலம் போவேன் என்று எதிர்பார்த்து அங்கு தயார் நிலையில் இருந்துள்ளார் கள். நான் சின்னசேலம் போகாமல் தலைவாசல் ஆத்தூர் நோக்கி வண்டியைச் செலுத்தினேன். ஒரு டீ சாப்பிடலாம் என்று எண்ணி வண்டியை நிறுத்தியபோது, பின்னால் வந்த ஒரு பைக்கிலிருந்து இறங்கிய ஆள், எங்கள் காரின் பின்பக்கம் ஏற முயற்சித்துக்கொண்டே, “"போ... போ... நான் சொல்லும் இடத்துக்குப் போ'’என்று உத்தரவிட ஆரம்பித்தார்.
நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக தலைவாசல் மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது காவல் தடுப்புக்கள் போடப்பட்டிருந்தன. தடுப்புகளைத் தாண்டிப் போக முயற்சித்தபோது எங்கள் காரை முன்னும் பின்னும் மறித்தார்கள். போனில் நக்கீரன் கோபால் அண்ணன் “"எப்படியாவது காவல் நிலையத்துக்குள் சென்றுவிடுங்கள்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். காவல்நிலையத்துக்கு மிக அருகில் போவதற்குள் எங்களைத் துரத்தி வந்தவர்கள் காரை தடுத்து நிறுத்தி அஜீத்தைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். என்னையும் அடித்து வண்டியை விட்டு இறங்கச் சொன்னார்கள்.
நான் இறங்கி அங்கிருந்த வேன் டிரைவர் களிடம், "சக்தி பள்ளி நிர்வாகிகள் எங்களைக் கொல்ல ஆள் அனுப்பி ரவுடித்தனம் செய்கிறார் கள் காருடன் கடத்த முயற்சிக்கிறார்கள்'’என்று கூறி னேன். நக்கீரனை பொதுமக்களுக்கு தெரிந்திருந்த தால் வேன் டிரைவர்களும், அப்பகுதியின் விடுதலைச் சிறுத்தை தோழர்களும் வந்தவுடன் நிலைமை மாறியது. எங்களை அடித்தவர்களோ, “தலைவாசல் காவல் நிலையத்தில் கனியாமூர் அருகில் நாங்கள் யாரையோ இடித்துவிட்டு வந்ததாக,’முதலில் ஒரு கதை சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட தலைவாசல் போலீஸ், “"சின்ன சேலம் காவல்நிலையத்தில் போய் புகார் கொடுங்கள்'’என்று அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
நாங்கள் நடந்த உண்மையையும் சக்தி பள்ளி விவகாரத்தையும் சொன்னோம். அதன்பின்னர் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. எங்களைத் தாக்கியவர்கள் சின்னசேலத்தில் புகார் கொடுத்து அட்மிட் ஆன நிலையில், 307-வது பிரிவின்கீழ் அவர்கள் மீது தலைவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்டப் படியான கைது நடவடிக்கை என்பது மிகச்சரியாக அமைந்திருந்தது.
அஜித்: (வீடியோகிராபர்)
செப்டம்பர் 19-ஆம் தேதி திங்கள் கிழமை நானும் பிரகாஷ் சாரும் கனியாமூர்ல இருக்கிற சக்தி ஸ்கூல்ல திரும்ப ரெனவேசன் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு ஒரு நியூஸ் கேள்விப்பட்டு ஒரு வீடியோ எடுக்கலாமுன்னு போனோம். மாலை மணி அஞ்சரை இருக்கும். அந்த ஸ்கூல வீடியோ எடுத்திட்டு நாங்க கிளம்பறோம். அப்பவே உள்ள அருள் சுபாஷ் இருக்கறதை பிரகாஷ் சார் என்கிட்ட காட்டுறாரு. “"இது வேணாண்டா. நாம உடனே கிளம்பிறலாம்'’அப்பிடீன்னு சொல்லிட்டுக் கிளம்புறாரு. ஏன்னா அருள் சுபாஷுக்கு எங்கள நல்லா அடையாளம் தெரியும். இதுக்கு முந்துன வாட்டி போனப்பவே, அவங்க ஆல்ரெடி எங்கள அடிக்கிற பிளான்லதான் இருந்தாங்க. நாங்க அதுலருந்து தப்பிச்சு வந்தோம்.
அதனால இந்தவாட்டியும் அதுமாதிரி நடக்க வாய்ப்பு இருக்குன்னுட்டு நாங்க கௌம்புனோம். அங்கருந்து. கிளம்பி ஒரு இருபது முப்பது மீட்டர்தான் போயிருப்போம். ஸ்கூலுக்கு கொஞ்ச தூரத்துல, அதாவது... சின்ன சேலம் போற ரூட்ல பாத்தா அங்க ரெனவேசன் பண்ணுறதால வெளிலயே அந்த எரிஞ்ச பொருள்கள், வேஸ்ட் எல்லாம் இருக்கும்ல, அதெல்லாம் ரோட்ல கொட்டி, லெப்ட் ஹேண்ட் சைடுலயே எரிச்சுக்கிட்டு இருந்தாங்க. பிரகாஷ் சார் அதெல்லாம் காட்டி வீடியோ எடுக்கச் சொல்லுறாரு. காருக்குள்ளயே உக்காந்துதான் எடுக்கிறேன். ஒரு பைக் ஒண்ணு ரைட்ல ஏறிவந்து நடுவுல நாங்க வந்து வண்டிய எடுக்கவே முடியாத அளவுக்கு மறிச்சு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி எங்கள அசிங்க அசிங்கமா திட்டி, "டேய்... கீழ எறங்குடா. நீ வந்து பெரிய இதா... மகாபாரதி மோகனப் பத்தியெல்லாம் எழுதற. தப்புத் தப்பா எழுதுவியா? ம்.. எங்க அண்ணன் அருள் சுபாஷ வீடியோ எடுத் துப் போடுற... நீ என்ன பெரிய இதுவா... உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு'’அப்பிடீன்னுட்டு அடிக்க வர்றாங்க. அட்டாக் பண்ண வர்றாங்கன்னு, லெப்ட் ஹேண்ட் சைடுல விண்டோவ எறக்கி வச்சிருக்கேன்ல அத ஏத்த ட்ரை பண்ணுறேன். அதுக்குள்ளே லெப்ட் சைடுல வந்து பைக் நின்னுடுச்சு. அவங்க கைய காருக்குள்ள விட்டு சட்டையப் பிடிச்சு இழுத்துக் கிழிக்குறாங்க. அதுல பாத்தீங்கன்னா ஒரு பச்சை சட்ட போட்டவரு புல்லட்ல வந்துருப்பாரு. அவருதான் வந்து என்னையப் சட்டை யெல்லாம் பிடிச்சுக் கிழிச்சு அடிக்கிறார்.
பிரகாஷ் சார், "அஜீத் பிரச்னை வேற மாதிரி ஆகப்போகுது...' அப்பிடீன்னு சொல்லி வண்டிய எடுக்க ட்ரை பண்ணுறாரு. "வீடியோ எடுக்காத... வீடியோ எடுக்காத...' அப்பிடீன்னு சொல்லி அவங்க போனைப் புடுங்க ட்ரை பண்ணுறாங்க. நான் போனை ஒரு ஓரமா வச்சுட்டு என்னைத் தற்காத்துக்க முயற்சி பண்ணுறேன். அப்ப கார் கண்ணாடியப் போட்டு குத்துறாங்க. அவங்க கையில என்னமோ இருக்கு. குத்துன ஒடன அந்தக் கண்ணாடி உடையுது. முன்னாடி நான் ஒக்காந்து இருக்கிற எடத்துல ஒடையுது. பிரகாஷ் சார் எப்பிடியாவது அங்கருந்து தப்பிச்சு வரணும்னு உடனே வண்டிய ரிவர்ஸ்ல வந்து ப்ரண்ட்ல போறாரு. ரைட்ல ஏறிப் போனாரு. அப்ப அந்தப் பச்சை சட்டை போட்ட புல்லட்ல வர்றவரு, “வா... வா...அப்பிடின்னு சொல்லிக்கிட்டே லெப்ட் சைடு, சைடு மிரர்ல அடிக்கிறாரு. அவர் அட்டாக்ல சைடு மிரர் கொஞ்சம் உள்ள வந்துருச்சு.
எங்களுக்கு ஒருமாதிரி வேர்த்து விறுவிறுத்துப் போயிருச்சு. நாங்க அங்கருந்து தப்பிச்சு ஒரு பத்துப் பன்னிரண்டு கிலோமீட்டர் தள்ளி கார்ல தண்ணி இல்லாததுனால லெப்ட்ல ஒரு டீக்கடையா பாத்து நிப்பாட்டுறோம். பின்னாடி ஒரே பைக்ல ரெண்டு பேரு வர்றாங்க. அத நான் பாத்துர்றேன். பாத்த ஒடனே எறங்குன நாங்க திரும்ப காருல ஏறுறோம். நாங்க ஏறுன செகண்டுல லெப்ட் சைடு கார் கதவைத் திறந்து ஒருத்தர் வண்டில ஏறப் பாக்குறாரு. அவரு சொல்லுறாரு, “"வா... வா... வா... நான் ஒன்னைய ஒரு எடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். நீங்க ரெண்டு பேரும் என்ன ஆகுறீங்க பாரு. இன்னைக்கி ஒங்கள என்ன பண்ணுறேன் பாரு. இதுக்கப்புறம் எவனுமே சக்தி ஸ்கூல் பக்கம் வரக்கூடாது'’அப்பிடீன்னு சொல்றாரு.
பிரகாஷ் சார் வண்டிய எடுக்கறாரு. போற ஸ்பீடுலயே கார் கதவு அதுவா மூடிக்குது. பின்னாடி ஒரு பைக் வந்ததுபோக, இப்ப அஞ்சாறு பைக்ல துரத்தி வர்றாங்க. நாங்க எங்க எம்.டி. கோபால் சாருக்கு போன்பண்ணிச் சொல்றோம். "சார் இந்த மாதிரி எங்கள அட்டாக் பண்ணிட்டாங்க. துரத்திக்கிட்டு சேஸ் பண்ணி வர்றாங்க'’அப்படீன்னு சொன்னோம். "நீங்க இப்ப எங்க இருக்கீங்க?'ன்னு’கேக்குறாரு. "நாங்க கனியாமூர்ல இருந்து ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தள்ளிப் போய்க் கிட்டுருக்கோம் சார்' அப்பிடீன்னு சொல்ல... "சரி நீங்க தலைவாசல் போலீஸ் ஸ்டேஷன் இல்ல... ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் போயிடுங்க. எந்தப் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல கிடைக்குதோ அங்க முதல்ல போயிடுங்க'’அப்பிடீன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கிட்டே இருந்தாங்க. நாங்க ஹைவேல போய்க்கிட்டே இருக்கோம்.
இவங்க எங்கள பயங்கரமா சேஸ் பண்ணிட்டு வர்றாங்க. புல்லட்டு அப்புறம் நெறைய பைக்குல துரத்திட்டு வர்றாங்க. அவங் களுக்குப் பின்னாடியே ஒரு காரும் வருது. ஒரு டோல் கேட் வருது. டோல்கேட் டையும் தாண்டிப் போறோம். தலைவாசல் மார்க்கெட் ஜங்சன்ல வந்து எங்கள பிடிச்சுர்றாங்க. எங்க காரைச் சுத்தி நாலு பக்கமும் பைக்கு கள நிறுத்தி பெல்ட் கவர் பண்ணிட்டாங்க. அதனால எங்களால எறங்க முடியாது.
எங்க வண்டியும் ஆப் ஆகிடுச்சு. வண்டி ஆப் ஆனதுனால டோர் வந்து அன்லாக் ஆகிடுச்சு. கதவைத் தெறந்து எங்கள அடிக்க ஆரம்பிக்கிறாங்க. ஆல்ரெடி சட்டையெல்லாம் கிழிஞ்சுருச்சு. திரும்ப சட்டையப் போட்டுக் கிழிக்குறாங்க. இருங்க இருங்க இருங்க அப்பிடீன்னு சொல்றேன். திரும்பவும் போன எல்லாம் புடுங்க ட்ரை பண்ணுறாங்க. நான் எப்பிடியாவது அந்த போனை மட்டும் காப்பாத்திரணும் அப்பிடீன்னு நெனைச்சேன். ஏன்னா அவங்க நம்மள பண்ண எல்லா வீடியோ வையுமே எடுத்திருக்கேன். போனை சேப் பண்ணிக்கிட்டுருக்கேன். அப்ப வந்து என்னைப் பயங்கரமா அடிக்கிறாங்க. போனை நான் விடவே இல்லை. ஏற்கனவே காருக்குள்ள வச்சு ‘பொக்கு பொக்கு’ன்னு முகத்துல குத்துனதுலயே என் பல்லு ஒடைஞ்சிருச்சு. கார்ல இருந்து தப்பிச்சு அடி வாங்கிக்கிட்டே ஓடுனேன். ஒரு பேக்கரி கிட்ட போயி இந்த மாதிரி "நான் பிரஸ்ங்க... நக்கீரன். எங்க பிரகாஷ் சாரை போட்டு அடிக்கிறாங்க. சக்தி ஸ்கூல்கார ஆளுங்க எங்கள அடிக்கிறாங்க' அப்பிடீன்னு அங்க இருந்த மக்கள்கிட்ட சொன்னேன். பிரகாஷ் சாரு யூ-டியூப்ல பலமுறை பேசிப் பழகிய முகம்கிறதால வி.சி.க. தோழர்கள் கொஞ்சம் பேரு மக்களோட சேந்து வந்து சாரையும் என்னையும் சேஃப் பண்ணப் பாக்குறாங்க.
ஆனா அப்பவும் எங்கள அட்டாக் பண்ணுற மோட்டிவ்லயேதான் அவங்க இருக்காங்க. அப்ப மக்கள் வந்து, "ஏய்... ஏய்...'னு அவங்கள தடுத்து எங்கள சேஃப் பண்ணுறாங்க. வேன் டிரைவர்ஸ்லாம் வந்து எங்கள மேற்கொண்டு அந்த ரவுடிங்க அடிக்கவிடாம சேஃப் செய்யுறாங்க.
எங்கள எங்க அடிச்சாங்களோ அங்கருந்து பத்து மீட்டர் தூரத்துலதான் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. எங்கள சேஃப்பா கூட்டிட்டுப் போறாங்க. நான் எல்லாத்தையுமே வீடியோவா எடுத்துக்கிட்டு இருக்கேன். எங்க காரை ஒருத்தரு சாவியைப் போட்டு ஓட்டிக்கிட்டு வருவாரு. அவரும் சக்தி ஸ்கூல் ஆளுதான். அதை யும் நான் வீடியோ பண்ணிருக்கேன். வி.சி.க. தோழர்கள் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறாங்க. அடிச்சு முடிச்சுட்டு தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயும் வர்றாங்க. உள்ள வந்து அவங்களே மாத்தி மாத்திப் பேசுனாங்க. முதல்ல என்ன சொன்னாங்கன்னா இவங்க ஹிட் அண்ட் ரன் பண்ணிட்டு ஓடி வர்றாங்கன்னு. அப்ப நாங்க சொல்றோம், "இவங்க சக்தி ஸ்கூல் ஆளுங்க அடிக்க வர்றாங்க' அப்பிடீன்னு. அதுக்கப்புறம்தான் எல்லாம் மாறுது.
அப்புறம் பாத்தீங்கன்னா “இந்த மாதிரி எங்க ஸ்கூலப் பத்தி தப்புத் தப்பா எழுதுறாங்க சார் இவங்க. அதனாலதான் சார் துரத்திக்கிட்டு வந்தோம்” அப்பிடீன்னு அவங்களே உளறினாங்க. அதுவும் வீடியோவுல இருக்கு. அங்க இருக்கிற போலீஸ்கிட்ட நாங்க எக்ஸ்பிளைன் பண்ணுறோம். அதுக்குள்ளே சின்னசேலத்துல போயி கம்ப்ளைண்ட் குடுத்துக்கிடுறோம் அப்பிடீன்னு சொல்ல போலீசும் அவங்கள விட்டுடுறாங்க. எங்கள அடிச்ச சக்தி ஸ்கூல்காரங்க தப்பிச்சுப் போயிட்டாங்க.
அதுக்கப்புறம் போலீஸ் கேஸ் எடுத்து நைட்டுக்குள்ள அவங்களைப் பிடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. எங்களை போலீசே சேஃப்டியா ஒரு ஆம்னி வேன் போட்டு ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஆத்தூர்ல போயி நாங்க அட்மிட் ஆகுறோம். அப்ப நைட் பன்னிரண்டரை, ஒரு மணி இருக்கும். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து அந்த அஞ்சு பேரு போட்டோவையும் காட்டி இவங்கதானா பாருங்க அப்பிடீன்னு கேட்டாங்க. என் வீடியோல வந்த அந்த அஞ்சு பேத்த மட்டுமே காமிச்சாங்க. அவங்க பின்னாடியே ஒரு காரும் வந்துச்சு. அதுல வந்தவங்க போட்டோவெல்லாம் காமிக்கல. வீடியோல இருக்கிற அஞ்சு பேரை மட்டும்தான் அரெஸ்ட் பண்ணிருக்காங்க. அவங்க போட்டோ வைக் காண்பிச்சப்ப "ஆமாமா இவங்கதான் எங்களை அடிச்சாங்க. அந்தப் பச்சை சட்டை போட்டவருதான் என்னைய அடிச்சுப் பல்லை ஒடைச்சாரு' அப்பிடீன்னு அடையாளம் காண் பிச்சேன். "சரி' அப்பிடீன்னு சொல்லிய இன்ஸ் பெக்டர், "சரி நீங்க ரெஸ்ட் எடுங்க' அப்பிடீன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அங்க அந்த அளவுக்கு மருத்துவ சிகிச்சை வசதி இல்லாதது னால எங்க சொந்த ஊரான சென்னை வந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி பல் ஆபரேசன் பண்ணிமுடிச்சாங்க.
-தொகுப்பு: சிவலிங்கம்
படங்கள் : குமரேஷ்