ஸ்ரீமதி கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சக்தி பள்ளியில் கொலைகள் எப்படி நடக்கிறது, அதை ரவிக்குமாரும், சாந்தியும், ரவிக்குமாரின் தாயார் பார்வதி அம்மாளும் சேர்ந்து எப்படி மறைக்கிறார்கள் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சியம் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.

26.06.2004 அன்று சக்தி பள்ளியில் ராஜா என்கிற மாணவன் படுகொலை செய்யப்பட்டான். கோபிநாத் என்ற மாணவன் தன்னுடன் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவியான மணிமேகலைக்கு பள்ளியின் வட பகுதியில் உள்ள ஒரு வகுப்பறைக்குள் வைத்து முத்தம் கொடுக்க முயற்சித்த போது ராஜா அதைப் பார்த்து விட்டான். ராஜா தான் பார்த்ததை பள்ளி நிர்வாகி ரவிக்குமார் மற்றும் பார்வதி அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று கூற, கோபிநாத், ராஜாவின் காலை இடறிக் கீழே தள்ளி அவனது கழுத்தை நெரித்துக் கொலை செய்தான்.

sreemathi

Advertisment

இந்தக் கொலையை ரவிக்குமார் காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்தார் என சொல்கிறது குற்றப்பத்திரிகை.

இதில் சம்பந்தப்பட்ட கோபிநாத், ராமநாயக்கன் பாளையத்தில் உள்ள அவரது தாயார் சரோஜா, "மும்பை யில் படித்துக்கொண்டிருந்த என் மகன் கோபிநாத்தை இந்த சக்தி பள்ளியில் சேர்த்தோம். என் பிள்ளை இந்தக் கொலையை செய்யவில்லை''’என மறுத்தார். அவரது உறவினர்களோ நம்மிடம், "அவன் தப்பி ஓடினான். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த கோபிநாத்தை நாங்கள் கைது செய்தோம்''’என வழக்கை தவறாக ஜோடித்துள்ளது பள்ளி நிர்வாகம்” என்கிறார்கள்.

சின்ன சேலம் பகுதியில் அமைந்துள்ளது நைனார்பாளையம். அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரான செல்லப் பிள்ளை, மனைவி மணிமேகலை. மணிமேகலையின் தாய் சிவகாமி இந்த மூவரையும் நாம் சந்தித் தோம். கோபிநாத் முத்தமிட்ட தால்தான் ராஜா கொல்லப்பட்டார் என பழிக்கு ஆளான மணிமேகலை நம்மிடம், "எனக்கு கோபிநாத் யாரென்றே தெரியாது. அவனை போலீஸ் விசாரணையின் போதுதான் பார்த்தேன். இறந்து போன ராஜாவை நான் பார்த்ததே இல்லை. சம்பவம் நடந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதற்கு முந்தைய நாள் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த மாணவி களுக்கு வேண்டுமென்றே சினிமா படம் போட்டார்கள். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந் தோம். அன்று இரவு ராஜாவை பாத்ரூமில் வைத்து யாரோ கொலைசெய்து விட்டார்கள்.

Advertisment

sreemathi

மறுநாள் ‘பாத்ரூமில் யாரோ இறந்து கிடக்கிறார்கள்’ என ஒரு மாணவி வந்து சொன்னாள். அத்துடன் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். நாங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டோம். பத்துநாள் கழித்து ஒரு வருவாய் ஆய்வாளர் மூலம், என்னைப் பள்ளிக்கு வரச்சொன்னார்கள். அங்கே சென்றபோது அவர்களின் கையில் ஒரு கடிதம் இருந்தது. பள்ளிக்கு விடுமுறை விடவேண்டும் என்று நான் எழுதியதாக அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது. அதேபோல் என் கையெழுத்தில் கடிதம் எழுதச் சொன்னார்கள். நான், எதற்காக இப்படி கடிதம் எழுதச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். என் கையெழுத்தை சிறிதாகவும் பெரிதாகவும் எழுதி வாங்கிக்கொண்டார்கள். எனது ஆசிரியர்கள் இதற்காக எனக்கு ‘கோச்சிங்’ கொடுத்தார்கள். இந்த விவகாரத்தை பெற்றோர்களிடம் சொல்லக் கூடாது என்று சொன்னார்கள்.

sreemathiசிறிதுநாள் கழித்து போலீசார் வந்தார்கள். அவர்கள் கதையையே மாற்றிவிட்டார்கள். போலீஸ் விசாரணையில் கடிதம் இடம் பெறவில்லை. நான் எனது பெரியம்மா பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடப்பதால் விடுமுறை வேண்டுமென்று கேட்டிருந்தேன். எனக்கு பதினாலு வயதுதான் ஆகிறது. நான் பூப்படைந்து ரெண்டு மாதம்தான் ஆயிற்று. என் கண்முன்னே கோபிநாத்தைக் கொண்டுவந்து போலீசார் நிறுத்தினார்கள். அந்தப் பள்ளியில் மாணவிகள் மாணவர்களோடு பேசக்கூடாது என்ற கண்டிஷன் இருக்கிறது. அந்தப் பையனை என் கண்முன்னே நிறுத்தி, அந்தப் பையனிடம் "நீ மணிமேகலைக்கு முத்தம் கொடுத்தாயா?'’என்று கேட்டார்கள். நான் பார்த்தே இராத அந்தப் பையனிடம் இந்தக் கேள்வியை போலீசார் கேட்டார்கள். நான் அந்தப் பள்ளியில் சேர்ந்து ரெண்டு மாதம்தான் ஆகின்றது. ஹாஸ்டலில் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. அதற் குள் நான் பூப்பெய்திய ரெண்டு மாத காலத்துக்குள் ‘காதல், முத்தம்’என்றெல்லாம் பள்ளி நிர்வாகம் ஜோடித்திருந்தது. எனது தந்தையாரும் பத்திரிகைகளில் வந்த அந்த செய்தியைப் பார்த்து என்னிடம் கேட்டார். இந்தப் பையனை சத்தியமாக எனக்குத் தெரி யாது என நான் மறுத்தேன். முதலில் நான் லீவு கேட்டேன் என லீவை மையமாக வைத்தவர் கள், பிறகு கதையை மாற்றி ஜோடித்தார்கள்.

உண்மையில் என்ன நடந்தது என நான் எனது பள்ளித் தோழிகளிடம் விசாரித்தேன். “"அந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை ஒருவரிடம் ரவிக்குமார் செக்ஸ் லீலைகள் செய்து கொண்டிருந்தார். அதை ராஜா என்கிற மாணவன் பார்த்துவிட்டான். அவனை அடித்து கொலை செய்து பாத்ரூமில் போட்டுவிட்டு, அந்தப் பழியை மும்பையில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவர் கோபிநாத் மீது போட்டுவிட்டார் கள்'” என்று எனது தோழிகள் என்னிடம் சொன்னார்கள்.

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. ரவிக்குமார் என்னிடம் வந்தார். "என்னைத் தெரியாது என்று கோர்ட்டில் சொல்'’என்றார். வழக்கறிஞரான என் உறவினர் "இப்படியெல் லாம் நீ அந்தப் பெண்ணிடம் பேசக்கூடாது' என ரவிக்குமாரை எச்சரித்து அனுப்பினார். நான் நீதிமன்றத்தில் "கோபிநாத்தை எனக்குத் தெரியாது, ராஜாவையும் தெரியாது' என பதிவு செய்தேன். அந்த வழக்கில் ரவிக்குமார், கோபி நாத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு நடந்த கள்ளக்குறிச்சி நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துவிட்டது.

ss

இந்தக் கொலைவழக்கில் ராஜா எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில், "பள்ளிக்கு லீவு விட வேண்டும்; இல்லையேல் வெடிகுண்டுகள் வெடிக்கும்'’என எழுதப் பட்டிருந்தது. ராஜாவிடம் இருந்ததுபோல பள்ளிக்கு லீவு விட வேண்டும் என ஒரு கடிதம் மணிமேகலையிடமும் பள்ளியில் நிர்வாகத் தினர் எழுதி வாங்கி இருக்கிறார்கள். ராஜாவின் மரணம், பள்ளிக்கு லீவு விடவேண்டும் என்கிற காரணத்திற்காக நடத்தப்பட்டது” என முதலில் சித்தரித்த பள்ளி நிர்வாகம், அடுத்து கொலையை “வட இந்திய வாலிபர், ஒரு அப்பாவி தமிழ்ப்பெண் காதல் விவகாரம்”என மாற்றிவிட்டது. எனது தந்தை படிக்காதவர். அவர் கிராமத்து ஆளைப் போல பள்ளிக்கு வருவார். நான் யாரிடமும் அதிகம் பேசாத குணத்தைக் கொண்டவள். இதையெல்லாம் சக்தி பள்ளி நிர்வாகிகள் பயன்படுத்திக் கொண்டார்கள்''’என்றார் மணிமேகலை.

sre

இதே வழக்கில் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவர் ராமலிங்கம். பெரிய சிறுவாத்தூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த இவர் நம்மிடம் பேசுகையில், "ராஜாவின் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை''’என்றார்.

ஸ்ரீமதி கொலையைப் போலவே ராஜாவின் கொலையும் போலீசாருக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. போலீசார் வருவதற்கு முன்பே ராஜாவின் உடலை, ஸ்ரீமதியின் உடலை எப்படி டிஸ்போஸ் செய்தார்களோ அதேபோல தாளாளர் ரவிக்குமார் டிஸ்போஸ் செய்திருக்கிறார். அந்தக் குற்றத்திற்காக ராஜா கொலை வழக்கில் ரவிக்குமார் கைது செய்யப்பட்டு ஒரேநாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரீமதி கொலையிலும் ஒரு தற்கொலைக் கடிதம், ராஜாவின் கொலையில் தயாரிக்கப்பட்டது போலவே பள்ளி நிர்வாகத்தால் தயா ரிக்கப்பட்டது என்பதை மணிமேகலையின் சாட்சியம் உறுதிப் படுத்துகிறது.