இதுவரை பன்றியால் பயிர்கள்தான் சேதமானது. இப்பொழுது தங்களது உயிர்களும், உடமைகளும் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்துள்ளனர் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர்.
மக்காச்சோளம் பயிரிட்ட நிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு ஈரப்பதம் எப்படி யுள்ளது? என்பதை சுற்றிப் பார்க்க, ஊருக்கு வடக்கே யுள்ள தனது தோட்டத்திற்குச் சென்றிருக்கின்றார் தூத்துக் குடி மாவட்டம் அயன்கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். அங்கு பன்றிக் கூட்டம் பயிர்களை சேதப் படுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தவர், பன்றிகளை விரட்டப் போராடியிருக்கின்றார். துளியும் அசைந்துகொடுப்பதாக இல்லை.
அருகிலுள்ள வயல்வாசிகளான சண்முக ராஜ், ராமசாமியிடம் உதவி கேட்டிருக்கின்றார். மூவரும் சேர்ந்து பன்றிகளை விரட்ட, சண்முக ராஜ் மற்றும் ராமசாமியை கை, கால் மற்றும் உடம்பெங்கும் கடித்து காயங்களை ஏற்படுத்தி யுள்ளன பன்றிகள். தற்பொழுது மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதூர் அருகே கம்பத்துபட்டி கிராமத் தைச் சேர்ந்த அய்யரப் பன் என்ற விவசாயி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நிலத் தில் பன்றி கடித்ததில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அயன் வட மலாபுரம் வரதராஜ னோ, "பன்றிகள் தொல்லை விவசாய நிலங்களில் நாளுக்கு நாள் அதிகமாக உள் ளது. விவசாய விளை நிலங்களில் ஊடுருவியுள்ள பன்றிகளை வனத் துறை பிடித்து அழிக்கவேண்டும். அரசு நிர்வா கம் எங்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறதே தவிர ஒரு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறது. வனத்துறையும் தூக்கத்தில் உள்ளது. பன்றி களால் சேதமடையும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு, நிவாரணம் என எதுவும் கிடையாது. பன்றிகள் தாக்குதலால் காயம்பட்ட நபர்களுக் குக்கூட எந்த நிவாரணமும் வழங்கப்படுவ தில்லை. 2019-ஆம் ஆண்டிலிருந்து காட்டுப் பன்றிகள் தொல்லை தொடங்கியது. குறிப்பாக பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரண மாக பன்றிகளை வளர்க்க முடியாமல் வெளி யேற்றிவிட்டனர். இதன்காரணமாக பன்றிகள் ஆங்காங்கே இடம்பெயர்ந்து இனப் பெருக் கம் செய்து பல்கிப் பெருகிவிட்டது'' என்கிறார் அவர். முன்னதாக "இதனைச் சேதப்படுத்துவது வளர்ப்புப் பன்றிகளே! காட்டுப்பன்றிகள் இல்லை' என அறிவிப்பு செய்தது வனத்துறை. காட்டுப்பன்றி விரட்டி என ஒரு வாசனை லிக் யூட்டை அறிமுகப்படுத்தியுள்ளது வேளாண் துறை. ஆனால் அது நிரந்தரத் தீர்வாக இல்லை. அந்த லிக்யூடை பயன்படுத்தினால் அந்த குமட் டல் வாசனைக்கு பன்றிகள் ஓரிரு நாட்களுக்கு மட்டும்தான் வராமல் உள்ளது. அதே நேரத் தில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்துவிட் டால் அந்த வாசனை லிக்யூடு அன்றைய தினமே செயலிழந்து விடுகின்றது. தினசரி வாசனை லிக் யூட்டை விவசாயிகளால் விளைநிலங்களில் அடிக்க முடியாது. ஒரு லிட்டர் லிக்யூட் 900 ரூபாய் என்பது கூடுதல் செலவினம் விவசாயிகளுக்கு.
"தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றி கள் தொல்லையில்லாத கிராமமே இல்லை என்ற அளவுக்கு நிலைமை உள்ளது. விவசாயி கள் தெரிவிக்கக்கூடிய கருத்துக்களை மாவட்ட நிர்வாகம் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் காட்டுப் பன்றி இல்லை, சாதாரண பன்றிதான் என்று விளக்கம் கொடுக்கக்கூடிய நிலையில் தான் உள்ளார்கள். பன்றிகளை விரட்டியடிப் பதற்கு விவசாயிகள் எந்த நடவடிக்கை எடுத் தாலும் வனத்துறை எந்தவித வழக்கோ அல் லது நெருக்கடிகளோ தராது என்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பன்றிகளை விவசாயி களால் விரட்டி அடிக்கமுடியாது என்பதுதான் கள எதார்த்தம். அய்யரப்பன் என்பவரை பன்றிகள் கடித்துக் காயப்படுத்தின. அவரால் இன்னும் மூன்றாண்டு காலத்துக்கு இயல்பாக நடமாட முடியாது. அவருடைய கால்கள், கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வனத்துறை மூலம் பயிற்சிபெற்ற குழுக்களை அமைத்து பன்றிகளை ஒழிப்பதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கின்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி.
விவசாயிகளை காக்கவேண்டியது அரசின் கடமை!
படங்கள்: மூர்த்தி