தமிழக அரசியல் தலை வர்களும்- ஊடகத்தினரும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரத் தாக்குதலில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொல்லப்பட்டதை சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகை யில் வெளிப்படுத்தியிருப்பதன் அடிப்படையில் அறிக்கையும் செய்தியும் வெளியிட்டு வருகிறார்கள். இதனை அக்டோபர் 10ந் தேதியே ‘சாத்தான்குளம் கொடூரம்-அதிரவைக்கும் போஸ்ட்மார்ட்டம்- அம்பலப் படுத்திய சி.பி.ஐ.’ என முழு விவரத்துடன் தமிழக மக்களிடம் முதன் முதலில் கொண்டு சேர்த்தது நக்கீரன்தான்.
சாத்தான்குளம் இரட் டைக் கொலைவழக்கில் ஆரம்பத்திலிருந்தே நக்கீரன் புலனாய்வு மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருந்தது.
சாட்சி சொன்ன ரத்த மாதிரிகள்
சாத்தான்குளம் விவகாரத்தை நக்கீரன் வெளிக் கொண்டுவந்த 2020 ஜூன் 27-30 இதழிலேயே இருவரையும் லத்தியாலே கொடூரமாக அடித்ததும், ஆசனவாயில் லத்தி திணிக்கப்பட்டதும், அவர்களது ரெண்டு மூன்று வேட்டி ரத்தத்தால் நனையுமளவுக்கு ரத்தக் கறை படிந்திருப்பதையும் பென்னிக்ஸின் தாயார் செல்வராணி தன
தமிழக அரசியல் தலை வர்களும்- ஊடகத்தினரும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரத் தாக்குதலில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொல்லப்பட்டதை சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகை யில் வெளிப்படுத்தியிருப்பதன் அடிப்படையில் அறிக்கையும் செய்தியும் வெளியிட்டு வருகிறார்கள். இதனை அக்டோபர் 10ந் தேதியே ‘சாத்தான்குளம் கொடூரம்-அதிரவைக்கும் போஸ்ட்மார்ட்டம்- அம்பலப் படுத்திய சி.பி.ஐ.’ என முழு விவரத்துடன் தமிழக மக்களிடம் முதன் முதலில் கொண்டு சேர்த்தது நக்கீரன்தான்.
சாத்தான்குளம் இரட் டைக் கொலைவழக்கில் ஆரம்பத்திலிருந்தே நக்கீரன் புலனாய்வு மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருந்தது.
சாட்சி சொன்ன ரத்த மாதிரிகள்
சாத்தான்குளம் விவகாரத்தை நக்கீரன் வெளிக் கொண்டுவந்த 2020 ஜூன் 27-30 இதழிலேயே இருவரையும் லத்தியாலே கொடூரமாக அடித்ததும், ஆசனவாயில் லத்தி திணிக்கப்பட்டதும், அவர்களது ரெண்டு மூன்று வேட்டி ரத்தத்தால் நனையுமளவுக்கு ரத்தக் கறை படிந்திருப்பதையும் பென்னிக்ஸின் தாயார் செல்வராணி தனது கணவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது சாப்பாடு கொடுக்கணும் என வேண்டுகோள் விடுத்ததை நிராகரித்ததையும் நக்கீரன் வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையையும் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம். சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவரிலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ரத்த மாதிரியும் பென்னிக்ஸ், ஜெயராஜ் உடைகளிலிருந்த ரத்த மாதிரியும் பொருந்திப் போகின்றன. ஜெயராஜ் தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்ததை அடிவாங்கும்போது சொல்லிக் கெஞ்சியிருக்கிறார். இதன்மூலம் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்தது உறுதியாகிறது என்கிறது குற்றப்பத்திரிகை. இந்த குற்றப்பத்திரிகை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்க லான நிலையில், நக்கீரன் அதன் நகலை பிரத்யேகமாக வெளியிட்டிருந்தது.
காக்கி உடையில் அட்டாக் பாண்டிகள்
ஜூலை 1-3 இதழில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸின் உடற்கூராய்வு தடய அறிவியல்துறை பேராசிரியர்களை வைத்து மேற்கொள்ளப்படாமல் அத்துறையில் முதுகலை படிக்கும் மாணவரை வைத்து மேற்கொள்ளப்பட்டி ருப்பதையும், உடற்கூராய்வு அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவலை மருத்துவர் கருணாநிதியிடம் காட்டி, பின்தொடை, ஆசனவாயில் சதைகிழிந்து காயங்கள் ஏற்பட்டிருந்ததையும், ரத்தக்கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் ஏற்பட்டிருந்ததையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம். சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்ட நகலையும் வெளியிட்டிருந்தோம்.
இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதால் இறந்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை உறுதிப்படுத்துகிறது.
காட்டிக்கொடுத்த ஆவணங்கள்
ஜூலை 4-7 இதழில் சாத் தான்குளம் விவகாரத்தில் கோவில் பட்டி முதலாவது குற்றவியல் நீதிபதி பாரதிதாசன் விசாரித்ததையும், அவருக்கு சாத்தான்குளம் காவலர் கள் ஒத்துழைக்க மறுத்ததையும் விவரித்திருந்தோம். இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதியின் வாக்கு மூலம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தந்தை- மகன் இருவரை யும் காவலர்கள் விடிய விடிய தாக்கியதையும், அடித்த லத்திகளையும், மேஜையையும் கைப்பற்றவேண்டு மென சாட்சியமளித்ததும் ரேவதி பதற்றத்துடன் இருந்ததும் விரிவாக படம்பிடிக்கப்பட்டிருந்தது. பென்னிக்ஸின் கடைக்கு வந்துபோகும் போலீசாரின் சி.சி.டி.வி. காட்சி, அவர்கள் மீதான மோசடி எஃப்.ஐ.ஆர். உள்ளிட்ட அனைத்தையும் நக்கீரன் தோலுரித்திருந்தது.
அரசு ஆஸ்பத்திரியிலுள்ள தொடக்கப் பதிவேடு, மருத்துவப் பரிசோதனை அறிக்கை, கோவில்பட்டி சிறையில் அடைத்தது தொடர்பான ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் இருப்பதாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விட்டு விடும்படி போலீஸ் காலில் விழுந்து பென்னிக்ஸ் கெஞ்சியபோதும், போலீஸ் நிலைய மாடியில் வைத்து ரத்தம் சிந்தச் சிந்த அடித்ததுடன், கறைகளை அவரையே துடைக்கும்படி கூறியதையும் வாக்குமூலமாக அளித்துள்ளார் ரேவதி.
ஜூலை 8-10 இதழ் இருவரையும் அடிக்க உதவிய ரத்தக்கறைகளுடனான லத்தி, இரும்புக் குழாய்கள் கைப்பற்றப் பட்டதையும், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் விசாரிக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் மாஜிஸ்திரேட் பாரதிதாசனால் பதிவுசெய்யப்பட்டதையும் பதிவுசெய்திருந்தோம். சி.பி.ஐ.யும் காவலர் ரேவதி உள்ளிட்ட இதர காவலர்களின் வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகையில் பிரதானமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகஸ்டு 1-4 இதழில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல் மீது போலீஸ் ஆடிய கதகளிக்கு வேறு ஆதாரமே தேவையில்லை என்பதுபோல் அவர்களது போஸ்ட்மார்ட்டம் புகைப்படங்களை பிரத்யேகமாக வெளிப்படுத்தியிருந்தது நக்கீரன். பென்னிக்ஸின் பின்புறம் தோல் உரிந்து சதை தெரியுமளவுக்கு காயம் ஏற்பட்டதை அப்பட்டமாகக் காட்டும் புகைப்படங்களை வாசகர் களுக்கு வெளிப்படுத்தியிருந்தது. தற்போது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையிலும் அதுவே உறுதியாகியுள்ளது.
பொள்ளாச்சியாக இருந்தாலும் சாத்தான்குளமாக இருந்தாலும் ஆளுந் தரப்பு-காவல்துறையின் அநீதிகளை ஆதாரங்களுடன் முதலில் தோலுரிப்பது உங்கள் நக்கீரன்தான்.
-நமது நிருபர்